ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
தருஸ்மனும் ஜெனிவாக் களத்தில்!; பிரேரணையை நிறைவேற்ற ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சு ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாகக் குதித்து சூறாவளிப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலைவர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையி…
-
- 0 replies
- 792 views
-
-
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள எண்; ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இலத்திரனியல் அடையாள அட்டையை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து உள்ள அனைத்து தகவல்களும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையில் உ…
-
- 0 replies
- 434 views
-
-
ரணில் 26 மாதங்களில் 24 நாடுகளுக்கு பயணம்! செய்திகள் ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதி…
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கை அரசு தங்களுடன் இணைந்து செயற்படும் மனோநிலையில் இல்லை : வியட்னாம் தூதுவர் இலங்கை அரசாங்கம் தங்களுடன் நடந்து கொள்வதில் தாமதத்தையும், இணைந்து முன்னேற வேண்டிய மனோநிலையிலும் அவர்கள் இல்லை என வியட்னாம் தூதுவர் வடக்கு முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். யாழ். விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் பான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வியட்னாம் தூதுவரின் வருகை தொடர்பில் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வியட்னாம் தூதுவரின் பயணம் வடமாகாணத்திற்கான முதற் பயணமாக உள்ளது.அரசியல் காரணங்களுக்காகவும், வடமாகாணத்திற்கு வருகை தந்த…
-
- 0 replies
- 343 views
-
-
(நேர்காணல் - நா.தனுஜா) சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகித்து 2 முஸ்லிம் வர்த்தகர்கள் மீது சிறிலங்கா அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் இரு வர்த்தகர்களும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 764 views
-
-
Sri Lanka warns India of Kashmir repercussions’ UN vote on rights abuse ‘may set a precedent' olombo: Sri Lanka yesterday warned India of possible repercussions over Kashmir after it voted for a US resolution in Geneva on rights abuses during its war on the Tamil Tigers. Government spokesman Lakshman Yapa Abeywardena said some countries or groups might use the vote on Sri Lanka as a precedent to bring a similar resolution on India over the Kashmir dispute, Xinhua reported. Sri Lanka was, however, mindful that India acted as a result of immense pressure from Tamil political parties, Abeywardena, the acting media minister, said. Much to the disappointment…
-
- 1 reply
- 1.2k views
-
-
திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.தற்பொழுது அமைச்சர் திலக் மாரப்பனவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் க…
-
- 0 replies
- 288 views
-
-
கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
-
- 72 replies
- 5.1k views
- 2 followers
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 887 views
-
-
மனிதஉரிமைகள் விடயத்தில் இஸ்ரேலுக்கு ஒரு கொள்கை, சிறிலங்காவுக்கு ஒரு கொள்கை என்று அமெரிக்கா இரட்டைவேடம் போடுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில், பேசியபோதே பதில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். “பாலஸ்தீனர்களின் மனிதஉரிமைகளை பாதிக்கும் குடியிருப்புகள் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை அனுப்புவதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது. அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மட்டுமே எதிர்த்தது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான தூதுவரை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிப்பதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனான உறவை முறித்துக் கொள்ளப் போவதாகவும்…
-
- 2 replies
- 691 views
-
-
8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 35 கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 7 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிர…
-
- 0 replies
- 406 views
-
-
புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்? ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்…
-
- 1 reply
- 775 views
-
-
தள்ளாடி புனித அந்தோனயார் ஆலயம் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் அதுபற்றி கத்தோலிக்ககுருமார் கண்டன அறிக்கை வெசளியிடவில்லையென ஆளும் கட்சியின் பிரதான கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் கத்தோலிக்க ஆலயங்களுக்கருகில் எத்தகைய சிறு சம்பவங்கள் நடந்தாலும் அதுபற்றி ஆயர்க்ள அறிக்கi வெளியிடுவார்கள். ரோமன் கத்தோலக்க திருச்சபைக்கும் இது பற்றி அறிவிப்பார்க்ள. கத்தோலிக்க திருவச்சபையின் சார்பினல் அல்லது பாப்பரசா சார்பில் இச்சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவிததோ, கண்டனம் தெரிவித்தோ எத்தகைய அறிக்கையும் வெளியிடப்படவில்லை. தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்தை புலிகள் தாகக…
-
- 2 replies
- 2k views
-
-
35வருட தண்டணைபெற்ற இலங்கேஸ்வரன் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார் கடந்த 12வருடங்களாக சிறையிருக்கும் சக்திவேல் இலங்கேஸ்வரன் அவர்களும் அவரது காதலி சுதர்ஜினியும் 05.04.2012 அன்று பதிவுத்திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கேஸ்வரன் மீது திருமதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 35வருட சிறைதண்டனை வழங்கப்பட்டது. இலங்கேஸ்வரனின் மேன்முறையீட்டு வழக்கிற்கு 60ஆயிரம் ரூபாவும் பதிவுத்திருமணத்திற்கு 30ஆயிரம் ரூபாவும் உதவி வேண்டி நேசக்கரத்திடம் விண்ணப்பித்திருந்தார். இலங்கேஸ்வரனின் வேண்டுகோளை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் கொண்டு வந்தது. மனிதநேயம் கொண்ட உறவுகள் இலங்கேஸ்வரனுக்கான பண உதவியினைத் வழங்கியுதவியுள்ளனர். தனது காதலனை பத…
-
- 0 replies
- 795 views
-
-
கிளிநொச்சி, உமையாள்புரம் கால் ஏக்கர் பகுதியில் கசிப்புக் காய்ச்சல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் சிறுவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் இருந்து வருபவர்கள், இந்தப் பகுதிக்கு வந்து கசிப்பை நுகர்வதால் பல்வேறு குற்றச் செயல்களும் இடம்பெற்று வருகின்றன. 18 வயதுக்கு குறைந்தவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், தர்மபுரம் பகுதியிலிருந்து கசிப்பு எடுத்துவரப்பட்டு இப்பகுதியிலே காணப்படுகின்ற ஆட்கள் குடியிருக்காத 19 வரையான காணித்துண்டுகளில் கசிப்பு விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. கிராம அலுவலர், மாதர் அபிவிருத…
-
- 0 replies
- 493 views
-
-
August 29, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மங்கள வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக…
-
- 0 replies
- 382 views
-
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடித் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப்…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயரும் ஆபத்து நேரலாம்! இப்படி ஐ.நா. மதிப்பீடு இலங்கையின் தற்போதைய மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது இவ்வருடம் மேலும் மூன்று லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தயார்ப் படுத்தியும் வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கைக்கான பொதுவான மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டம் குறித்த அறிக்கையிலேயே இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008இல் இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் மோசமடையலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது எவ்பிஐ Sep 05, 2019 | 2:31by கார்வண்ணன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சமர்ப்பித்த பி அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகள் அமெரிக்காவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, எவ்பிஐ அதிகாரிகளால் அவற்றின் உள்ளக தரவுகள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 777 views
-
-
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் பஸ் நிலையம் மற்றும் பொது மலசலகூடம் என்பவற்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதி மாங்குளம்; சந்திப்பகுதியானது, வடமாகாணத்தின் முக்கிய இடமாகக் காணப்படுவதுடன் முல்லைத்;தீவு மன்னார், ஆகிய பகுதிகளை இணைக்கின்ற பிரதான சந்தியாகவும் தினமும் 4,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற இடமாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக மன்னார், வெள்ளாங்குளம் தொடக்கம் மாங்குளம் வரைக்குமான வீதியிலுள்ள வெள்ளாங்குளம், கல்விளான், துணுக்காய், மல்லாவி, ஒட்டறுத்தகுளம், வன்னிவிளாங்குளம், உள்ளிட்ட கிராம மக்களும் இதேபோன்று மாங்குளம் தொடக்கம் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வரையான வீதியில் அமைந்துள்ள கிராம மக்களும்; இந்த மா…
-
- 0 replies
- 765 views
-
-
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayannews #todaynews #breking …
-
- 2 replies
- 743 views
- 1 follower
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிரிவினரே’ இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வள…
-
- 0 replies
- 665 views
-
-
சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் …
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி, உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான் சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொல…
-
- 0 replies
- 479 views
-