ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
மே 18 2009 இல் முற்றுப் பெற்ற இன ஒழிப்பு யுத்தத்தின் ஓராண்டு நிறையையொட்டி, ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இது. மே 18 இல் முடிவு பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் கனத்த, நீண்ட ஓராண்டு இது. இழந்தவற்றிற்காக கவலைப்படுவதா, உள்ளேயிருப்பவர்கள் பற்றி வேதனைப்படுவதா, அல்லது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்த காலம் இது. நாம் ஏன் இப்படித் தோற்றுப் போனோம் என்று யோசித்து இன்னமும் விடைகாண முடியாமல் தமது நித்திரையை தொலைத்துவிட்டவர்கள் பலர். இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், ம…
-
- 19 replies
- 1.9k views
-
-
கொழும்பு நகரில் நேற்றிரவு நடந்த துவக்கு சூடுகளில் 4 பேர் படுகாயம் [17 - November - 2007] கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 10.20 மணியளவிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு-14 சிறிமாவோ பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுகததாச ஹோட்டலுக்கருகில் சம்பவமொன்றும் ஆமர் வீதி சந்திக்கருகில் ஒரு சம்பவமும் மற்றும் ஆமர் வீதி கிராண்ட்பாஸ் சந்திக்கருகில் ஒரு சம்பவமும் என மொத்தமாக 3 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. எனினும், சம்பவம் பற்றிய பூரண தகவல்கள் எதுவும் கிடைக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 5 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் காலாவதியாகி விட்டது. எமது சமூகம் தற்போது மாற்றமடைந்து வருகின்றது. நெருக்கமாக இருந்த சமூகக் கட்டமைப்பு உடைக்கப்பட்டதனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகப் பலராலும் கருத்துக் கூறப்பட்டு வருகின்றது. அதாவது இளவயதுக் கர்ப்பம், இளைஞர்களின் மதுபானப் பாவனை, ரவுடித்தனம் என்பன யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் அதிஉச்ச நிலை கண்டுள்ளது. அதேநேரம் இளவயதுத் திருமணங்கள். இத் திருமணங்களினால் குழந்தைகளுடன் நடுத்தெருவில் விடப்படும் இளம் குடும்பப் பெண்கள் என நீண்டு செல்கின்றது எமது கலாசாரத்தின் சோகம். தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் நாதியற்றவர்களாக நடுவீதியில் இருக்கின்றது தமிழினம். இவ்வாறான சம்பவங்களை விட யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கலாசாரம் உரு…
-
- 23 replies
- 1.9k views
-
-
கிழக்கை முழுமையாக கைப்பற்றிய பின்னர் பிரபாவை கைது செய்வதா? அல்லது பேச்சை ஆரம்பிப்பதா ? ஜ சனிக்கிழமைஇ 7 யூலை 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றியதன் பின்னர் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கின்றோம். தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா? என்று அரசாங்கம் மக்களுக்கு கூறவேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று முன்…
-
- 3 replies
- 1.9k views
-
-
நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்! தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் …
-
- 28 replies
- 1.9k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது .
-
- 1 reply
- 1.9k views
-
-
நாட்டை பிரித்தாவது இனப்பிரச்சினையை தீர்க்குமாறு சர்வதேசம் கூறும் நிலை உருவாகும்: ரணில் எச்சரிக்கை. இலங்கையின் இன்றைய நிலைமைகளை அவதானிக்கும்போது சர்வதேசம் வெறுப் படையும் போக்கே காணமுடிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் எமக்கு எதிர்காலம் இல்லாத நிலை உருவாகலாமெனத் தெரிவித் திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போகிற போக்கைப் பார்த்தால் ஒருநாள் சர்வதேசம் நாட்டை பிரித்துக் கொடுத்தேனும் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கட்டாயப் படுத்தப்படலாமெனவும் சுட்டிக்காட்டி யுள்ளார். எதியோப்பியா, யூகோஸ்லாவியா, இந்தோனேசியாவின் திமோர் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை எமது நாட்டுக் கும் ஏற்படக்கூடிய அபாய அச்சுறுத் தல் உருவாகலாமெனவும் ரணில் விக்கிரமசிங்க எச்ச…
-
- 2 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/thayagam/1n0qnzhljhf9
-
- 24 replies
- 1.9k views
-
-
அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: இந்திய பெண்களிடம் புளுகிய மகிந்த இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார். தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது: அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா? நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…
-
- 18 replies
- 1.9k views
-
-
ஒவ்வோரு தடவையும் நான் வெளியே செல்லும் போது எனது அடையாள அட்டையை பார்வையிடும் பொலிஸார் அதிகளவுக்கு கேள்வி கேட்கின்றனர். திரும்பிப் போகுமாறு அடிக்கடி கூறுகின்றனர். நாங்கள் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் புலிகள் என்று அவர்கள் சொல்கின்றனர். 54 வயதுடைய வடபகுதியைச் சோந்த லக்ஷ்மி வள்ளியம்மா என்ற பெண் தெரிவித்தார். குறைந்த கட்டணம் அறவிடும் வெள்ளவத்தைப் பகுதி விடுதியொன்றில் வள்ளியம்மா தங்கியிருக்கிறார். தனது மகனுடன் 18 மாதங்களுக்கு முன்னர் இப் பெண் கொழும்புக்கு வந்துள்ளார். வடக்கின் யுத்த சூழ்நிலையால் தென்பகுதிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கானோரில் வள்ளியம்;மாவும் ஒருவராவார். கொழும்பில் சாதராண தமிழ் மக்களின் வாழ்க்கை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ். கிளைமோர் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் பலி [புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 19:03 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கிளேமார் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து பண்ணைப் பாலத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வெடித்தது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த நால்வரும் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
-
- 8 replies
- 1.9k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற் கொண்டுள்ள தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங் கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல் களை…
-
- 9 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! [புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்: தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர். நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரி…
-
- 5 replies
- 1.9k views
-
-
நோர்வேயில் வெடிக்கப்பட்ட இரு குண்டுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களால் செய்யப்பட்டது. குண்டுகளை தயாரித்தவரும் , உடயா என்ற தீவில் 84 பேரை சுட்டுக்கொன்றவரும் ஒரே நபர் எனவும் தெரிய வந்துள்ளது. . இவர் ஒரு வலதுசாரி தீவிரவாதி அதுமட்டுமன்றி கொலையாளி ஒரு கத்தோலிக்கர். விவசாய பண்ணை ஒன்றை நடத்தப்போவதாக போலியாக ஒரு கிராமத்தில் பண்ணை ஒன்றை செய்து அதற்காக உரங்களை கொள்வனவு செய்திருக்கின்றார். அதன் பின்னர் நோர்வேயில் குண்டை வெடிக்க வைத்துவிட்டு உடயோ என்ற தீவில் நடந்து கொண்டிருந்த இளைஞர்கள் முகாமிற்கு சென்ற கொலையாளி அங்கு இருந்த இளைஞர்களை தாறுமாறாக சுட்டுள்ளார். இதன் போது 84 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். தப்புவதற்காக செத்தவர்கள் போல் நடித்து தரையில் படுத்திருந்தோரை தலையில் ச…
-
- 11 replies
- 1.9k views
-
-
சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும…
-
- 13 replies
- 1.9k views
-
-
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். …
-
- 19 replies
- 1.9k views
-
-
படைத்தாக்குதல்களிலிருந்து காக்க காப்பகழிகளை அமைக்குக திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப் படையினரது தாக்குதல்களிலிருந்து மக்கள் தம்மைக் காக்க காப்பகழிகளை அமைக்குமாறும் தமிழீழ அரசியல்த்துறை வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவித்தலில், எம் பாசத்திற்குரிய மக்களே இனவெறிபிடித்த சிறிலங்காப் படைகள் எமது மக்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றை நடத்தி எமது மக்களை கொன்றொழிக்கலாம் என கங்கணம் கட்டி நிற்கின்றன. எமது மக்களை இந்தக் கொடிய செயலில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. ஆகவே தயவு செய்து ஒவ்வொருவரும் தமது வாழ்விடங்களிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் காப்பகழிகளை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மி…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கிளிநொச்சி மாவட்டம் இன்னும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டு விடும் என்ற விமல் வீரவன்சவின் நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும்; இப்போதே தயாராகி விட்ட போஸ்டரையே படத்தில் காண்கிறீர்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினருக்கு தேசத்தின் நன்றியும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியே இதனை வெளியிட்டுள்ளது. போஷ்டரை பார்க்க......... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.9k views
-
-
வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 1. வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள்ளு விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்கவைக்கும் திட்டம் ஆகியவற்றை கையூட்டுப் பெறும் நோக்கத்துக்காக நிராகரித்தமை. 2. கண்காட்சிகள், பொங்கல் விழா, உழவர் விழா எனப் பல விழாக்களை பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து நடத்தியதன் மூலம் மாகாண சபையின் பெருமளவிலான நிதியை வீண் விரயம் செய்தமை. 3. மாகாண சபை உறுப்பினர்களினதும், மாகாண சபை ஆலோசனைக் குழுக்களின தும் ஆலோசனைகளைப் பெறாமல் திட்டங்களை முன்னெடுத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து October 23, 2021 இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது. இலங்கைய…
-
- 29 replies
- 1.9k views
- 1 follower
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை…
-
- 3 replies
- 1.9k views
-