ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010-ம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்தால் அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதன்படி, விரலில் மை பூச வேண்டிய அவசியம் இல்லை அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே விரல் வண்ணம் பயன்படுத்தப்பட்டது தனி நபர்களின் பதிவை கணினிமயமாக்கி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒர…
-
-
- 3 replies
- 438 views
- 1 follower
-
-
மாற்றத்தின் குரல் - பிரித்தானியா
-
- 8 replies
- 586 views
-
-
அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு…
-
- 11 replies
- 716 views
-
-
அடுத்த நகர்வுகள் தொடர்பாக மஹிந்தவுக்கு ஆலோசனை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து ஆலோசனைகளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) விசேட சந்திப்பொன்ற நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளாவது, “அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும். மேலும் மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். …
-
- 2 replies
- 712 views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டி? [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:53 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டியிடவுள்ளார் என்று அவரது கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லண்டனில் தனது சிறைவாசத்தை நிறைவுசெய்து கொண்டு சிறிலங்காவுக்கு திரும்பிய கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்தித்துப் பேசினார். கொழும்பில் நடைபெற்ற ஐந்து மணி நேர சந்திப்பில் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து, மட்டக்களப்புக்கு சென்ற கருணா அங்கு தனது பழைய கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் கொழும்பில் கருத்து தெரிவித்த அவர், தனது உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்திலும், காவல…
-
- 9 replies
- 1.5k views
-
-
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரசுடன் கூட்டணி அமைக்காது என முடிவு. No tie-up with Congress for 2014, says Karunanidhi: sources All India | Reported by Sam Daniel, Edited by Mala Das | Updated: December 16, 2013 00:43 IST inShare PTI photo DMK Chief M Karunanidhi along with his son MK Stalin at the party's General Council meeting at Kalaignar Arangam in Chennai on Sunday Chennai: DMK chief M Karunanidhi has reportedly ruled out an alliance with the Congress for the Lok Sabha elections that are due in May next year. Mr Karunanidhi, sources say, said this at a meeting of the General Council, the party's top decision-making body, i…
-
- 2 replies
- 732 views
-
-
அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து JAN 24, 2015 | 12:14 by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ். மாவட்டத்துக்கு 7 நாடாள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பா.ம.க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் கருணாநிதி [ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:55.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார். இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக தி.மு.க நடவடிக்கைகள் எடுத்ததைப் போல பா.ம.கவும் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார். பா.ம.க நிறுவனர் டொக்டர் ராமதாஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ஈழத்தமிழர் பிரச்சனை திசை திருப்பப்பட்டு விட்…
-
- 10 replies
- 2.1k views
-
-
அடுத்த நான்கு வருடத்தில் இலங்கையின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்- சம்பிக்க ரணவக்க கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக அடுத்த நான்கு வருடங்களில் இலங்கையின் கடன் 28 டிரில்லியனாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதால் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களிடமிருந்து தரவுகளை மறைக்காமல் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும் என சம்பிக்க ரணவக்க வேண்டுகோ…
-
- 0 replies
- 327 views
-
-
2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என அவர் கூறியுள்ளார். சமகால பிரதமர் ரணில…
-
- 1 reply
- 363 views
-
-
அடுத்த பட்ஜெட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரி – விஜித ஹேரத் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி முதல் சொத்து வரி மற்றும் Inheritance Tax போன்ற புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கான பொது முன்மொழிவுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது வழமை என்றாலும் இவ்வருடம் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ச…
-
- 2 replies
- 667 views
- 1 follower
-
-
இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் …
-
- 6 replies
- 1.4k views
-
-
அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் ! நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் காரணமாக இயற்கை உரங்கள் தொடர்பாக நெற்பயிர்ச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை இயற்கை உரத்தை விவசாயிகள் மறுத்த…
-
- 0 replies
- 324 views
-
-
பூசா முகாமிலிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை - கே.பி.மோகன் - காலி பூசா முகாமிலிருந்த தடுப்பு காவல் கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை 28 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் பம்பலப்பிட்டியை சேர்ந்த பஸீர் பாபு (வயது 28) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளவராவார். மலசல கூடத்திற்குள்ளேயே இவரின் சடலம் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக ரத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அருணலால் தெரிவித்தார். தனது விடுதலைக்காக காத்திருந்த இவர் மனம் தளர்ந்த நிலையில் காணப்பட்டிருந்தாரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தற்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். http://www.thinakkural…
-
- 0 replies
- 1.1k views
-
-
அடுத்த பாய்ச்சலுக்கு மஹிந்த தயார் எம்.சி.நஜிமுதீன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதானமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகியுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி நுகேகொடயில் பேரணி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அப்பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட…
-
- 0 replies
- 218 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் எதிர்வுகூறினார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார். அவர் பாராளுமன்றத்திற்கு வரும் நிலையில் எதிர்க்கட்சியில் இருந்து 15 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற க…
-
- 4 replies
- 716 views
-
-
நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பதிவிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரி ஆட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட்டதும் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. “அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்டுப் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தற்போது வெளியிடும் கருத்துக்களினூடாக இந்த விடயத்தை ஓ…
-
- 8 replies
- 1k views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான வேலைத்திட்டங்களை அடுத்த பாராளுமன்றத்தில் முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன என்றும் அதற்கு எவ்வாறான அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வினவியதற்கு பதி…
-
- 10 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்காக இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் முன்னின்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. [/size] [size=4]பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் இது சம்பந்தமான இணைப்பாளராக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பசில் ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமிக்க தற்போது,விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக பல ரகசிய பேச்சுவார்த்தைகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் நடைபெற்றுள்ளன. ஹில்டன் விடுதியின் தலைவர் திருகுமார் நடேசன் என்பது குறிப்பிடதக்கது.[/size] [size=4]…
-
- 2 replies
- 750 views
-
-
அடுத்த பிரதமர் மைத்திரிபால? திங்கட்கிழமை, 13 ஒக்டோபர் 2014 10:01 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, அரசியர் நிபுணர்கள், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவியை, மிகவும் பொறுப்பு வாய்ந்த மற்றும் செயற்திறன் மிக்கதொரு அமைச்சர் பொறுப்பேற்பதானது, தேர்தல் காலத்துக்கு மிகவும் அவசியமானது எனவும் அந்நிபுணர்கள் சுட்;டிக்காட்டியுள்ளனர். இதன்பிரகாரம், நாட்;டின் அடுத்த பிரதமராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படலாம் என்றும் அவரின் பெயர் அப்பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பிரதமர் பதவியை…
-
- 0 replies
- 347 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக்கு வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேனவும் நிமல் சிறிபால டி சில்வாவும் தம்மையே பிரதமராக்க வேண்டும் என்ற பிடிவாத்துடன் இருக்கும் நிலையில், இவர்கள் இருவரையும் தவிர்த்து ஜீ. எல் பீரிஸையே பிரதமராக்கும் நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்தையர் கொண்டுள்ளார் எனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கோ அல்லது நிமல் சிறிபால டி சில்வாவுக்கோ பிரதமர் பதவியை வழங்கினால் அதனைத் தமது குடும்பத்தினரால் (மஹிந்தையர் குடும்பம்) மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டு விடும் என்ற காரணத்தினாலே ஜீ. எல்…
-
- 1 reply
- 615 views
-
-
அடுத்த பிரபாகரனனைப் போல மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயல்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=11829
-
- 1 reply
- 535 views
-
-
அடுத்த பிரிட்டிஸ் கம்பனியான பிஎம்பி லீகசி (http://www.pmplegacy.com/) எனும் கம்பனிக்கு 336 மில்லியன் ரூபாவினை சிறிலங்கா அரசு கொட்டியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு பிரச்சாரத்திற்காகவும் காமன் வெல்த்விளையாட்டினை புறக்கணிக்கப்பதற்காக அனைத்துலக மட்டத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ளவுமே இந்த 336 மில்லியன் ரூபா செலவு என சிறிலங்கா விளையாட்டுத்துறை கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 877 views
-
-
அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக, இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமெரிக்க வெளிவிவகாரங்களைக் கையாளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரையும், சிவில் சமூகத்தினரையும் சந்தித்தனர். அதன் பின்னர் நேற்றிரவு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், த…
-
- 0 replies
- 358 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாண சபைக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என வெளியான தகவல்களை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, அடுத்த பொதுத் தேர்தலிலேயே அவர் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "நடைபெறவிருக்கும் தென்மாகாண சபைக்கான தேர்தலில் அரச தலைவரின் மகன் போட்டியிடமாட்டார். ஏனெனில் அதில் போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றது. பொதுத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கின்றது. பெல…
-
- 0 replies
- 488 views
-