ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கைக்கூலி கேபி இருக்கும் வீட்டருகே மக்கள் நடமாடத் தடை; தலைவரின் வீட்டிலும் அலுவலகம் அமைக்க அனுமதி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:13 சிறிலங்கா அரசினால் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் கிளிநொச்சி வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கும் தற்போது சிறிலங்கா அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் கைக்கூலியான கே.பி, தற்போது தமிழ்ச்செல்வனின் வீட்டில் குடியேறியுள்ளமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்துள்ள கா…
-
- 0 replies
- 514 views
-
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கிறார். இதேவேளை வடக்கில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு அதிகம் உட்படும் இரண்டாவது மாவட்டமான முல்லைத்தீவிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவும் சிங்கள மக்கள் அதிகம் வச…
-
- 4 replies
- 633 views
-
-
தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு! மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில பெற்றுக்கொடுக்கக்கூடியது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாண சபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையே. இதனை வலியுறுத்த தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படாது. இந்தியா அதுபற்றிப் பேசவில்லை எனக் கூறுவது மடமையே. இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா? இல்லையா? என்று முதலில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பே…
-
- 1 reply
- 180 views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
27 Nov, 2025 | 11:48 AM அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று புதன்கிழமை (26) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…
-
- 3 replies
- 2.5k views
-
-
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்! 08 Dec, 2025 | 01:15 PM கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக …
-
- 0 replies
- 114 views
-
-
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு மாற்று வழியில் மத்திய அரசு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம், இலங்கை எம்.பி.,க்கள் நான்கு பேர் நேற்று வலியுறுத்தினர். இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், காந்தா ஆகியோர் நேற்று, சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுவை சந்தித்து பேசினர். அவர்களின் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த எம்.பி.,க்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கைத் தமிழர்கள் படுகிற துயரங்களையும், துன்பங்களையும் அனைத்துக் கட்சி தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தங்கபாலுவை சந்தித்து எங்க…
-
- 0 replies
- 871 views
-
-
எம்.வீ. சன் சீ கப்பலின் மாலுமியை பிணையில் விடுதலை செய்ய உள்ளதாக கனடிய நீதிமன்று அறிவித்துள்ளனர். வன்கூவரின் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் குறித்த கப்பல் மாலுமியை பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டில் சன் சீ கப்பல் மூலம் குறித்த மாலுமி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் 492 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தனர். லெஸ்லி ஜனா இமானுவல் என்வரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பேரில், ஜனா இமானுவல் மூன்றாவதாக பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஜனா இமானுவெல் 45000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஏன…
-
- 2 replies
- 461 views
-
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நல்லாட்சி அரசாங்கம் என பிரகடனம் செய்யப்பட்ட போதிலும், உள்ளக அரசியல் ரீதியாக பல கோணங்களில் முறுகல் நிலைகள் தீவிரமடைந்துள்ளன. இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்தும் நோக்கில் மும்முனைகளில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் …
-
- 0 replies
- 291 views
-
-
மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது… May 2, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமை…
-
- 48 replies
- 3.2k views
-
-
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்! Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 10:37 AM யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை…
-
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன் ஒற்றுமை என்பது, ஒரு குடும்பத்தின் / சமுதாயத்தின் / இனத்தில் வாழும் அங்கத்தவரினது கூட்டு முயற்சி. முதலாவதாக, ஒற்றுமை என்ற எண்ணம் / பார்வை, குடும்பத்திலிருந்துதான் உதிக்கவேண்டும். பிள்ளைகளை பெற்றோர் சரியாக வளர்த்தாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல் நிலைகள் அவர்களைப் பாதிக்கலாம். ஒற்றுமையின்மை என்பது ஒரு இனத்தின் அங்கத்தவரிடம் எப்படி உருவாகின்றது / உதிக்கின்றது. இவைகளை அடையாளம் கண்டு, அப்படியான காரணங்களை எமது எண்ணத்திலிருந்து அழித்துவிட்டால், எமது எண்ணத்தில், எமது பழக்க வழக்கங்களிலிருந்து ஒற்றுமையின்மை என்ற குணாதிசியங்கள் முற்றாக அழிந்து விடும். தொழில் நுட்ப குறைகளை, மூலக் காரண ஆராய்வு செய்து, அவைகளை நிவிர்த்தி …
-
- 0 replies
- 1k views
-
-
காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார Published By: Vishnu 28 Dec, 2025 | 09:26 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மே…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
மனிதச் சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். மனிதச் சங்கிலி அணிவகுப்பில் அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மாவட்ட …
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=2] [size=5]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா மீண்டும் ஆதரிக்கும்: நாராயணசாமி[/size][/size] [size=2] [size=4]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என சென்னை விமான நிலையத்தில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=86209[/size][/size]
-
- 5 replies
- 1.1k views
-
-
பொதுமக்கள் மீது க்ளாஸ்டர் குண்டுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார்!! ஜெரா இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் – க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் கார்டியன் இணையதளம் வெளியிட்ட செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போர் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் சர்தேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் குறித்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறுதிப் போரின்போது க்ளாஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 388 views
-
-
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு by : Dhackshala கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு…
-
- 0 replies
- 441 views
-
-
இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி வீரகேசரி நாளேடு 10/27/2008 8:10:09 PM - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவி…
-
- 0 replies
- 806 views
-
-
அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனப் போக்கை பின்பற்றுகின்றது – ஐ.சீ.ஜீ. 21 நவம்பர் 2012 அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாக சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மெய்யாகவே தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க அரசாங்கம் காட்டி வரும் தயக்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தடையாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 375 views
-
-
அஞ்சவில்லை :ஜெனிவாவில் மங்கள (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கையானது நீதிப்பொறிமுறை விடயத்தில் சர் வதேச பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அஞ்சவில்லை. கடந்தகாலங்களில் பல விடயங்களில் சர்வதேச பங்களிப்பினை பெற்றுள்ளோம். சர்வதேச பங்களிப்பில் பல தன்மைகள் காணப்படுகின்றன. ஆனால் இவை குறித்து ஆலோசனை செயற்பாட்டிலேயே தீர்மானிக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். எவ்வாறெனினும் நீதிப்பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்கான பாதை சவாலாகவுள்ளது. ஆனால் அது நல்லிணக்கத்தையும் இலக்கையும்…
-
- 2 replies
- 578 views
-
-
தடுக்க முடியாது போகும் புலிகளின் விமானத் தாக்குதல் [02 - November - 2008] விதுரன் கிளிநொச்சி மற்றும் பூநகரிக்கான இறுதிப் போரைத் தொடங்கப் போவதாக படைத்தரப்பு கூறுகின்றது. இந்தப் பகுதிகளுக்கான படை நகர்வைத் தடுப்பதற்காக புலிகளால் இதுவரை போடப்பட்டிருந்த தடைகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டுவிட்டதால
-
- 0 replies
- 799 views
-
-
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் செல்வநாயகம் கபிலன் 'யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தற்போது நிலவும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை வெகு விரைவில் நிவர்த்தி செய்யப்படும்' என்று யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண, தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'கடந்த மாதம் மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையேற்ற பின்னர், தற்போது அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகிறேன். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை தொடர்…
-
- 0 replies
- 206 views
-
-
சென்னை பாமக நிறுவனர் ராமதாசை, திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மீண்டும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடந்ததாக, பாமக வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலன் விஷயத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வேண்டும் என்று ராமதாஸை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குற…
-
-
- 3 replies
- 313 views
-