ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
வெலியமுனவினவின் வீட்டின் மீதான குண்டுத் தாக்குதல் - கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சமூகச் செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும், ரான்ஸ்பரன்ஸி இன்ரநசனல் எனும் அமைப்பின்பணிப்பாளருமான ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதைக் கண்டித்து இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பத்து அமைப்புக்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் ஜே.சி.வெலியமுனவின் வீட்டின் மீது செப்டம்பர் 27ம் ஆம் திகதி கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் காலத்திற்குக் காலம் இலங்கைச் சம…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலின் இணையத்தள ஒலிபரப்பின் மூலமும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வைகோவுக்கு நிதியுதவி அளித்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) இத்தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் புலிகள் வைக்கோவுக்கு நிதியுதவி வழங்கியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம். (முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. செட்டிகுளம் ஆனந்தகு…
-
- 23 replies
- 1.8k views
-
-
இலங்கை யுத்தம் பொய்களாலும், போலித்தனங்களாலும் நிறைந்ததொன்றென பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் டெலிகிராம் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரிச்சர்ட் நிக்சன் தெரிவித்துள்ளார். சீன ஆயுதங்கள், இந்திய புலனாய்வுத் தகவல்கள், இராணுவப் படைவீரர்கள் மற்றும் சிங்கள இனவாத தலைவர்களின் உதவியுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களது சொந்தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நினைத்து மிகவும் வேதனையடைவதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னியில் சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டுள்ளதாகவும் மரண தேவதையின் ஒளிக்கீற்றுக்களினால் முழு வன்னிப் பிரதேசமே மூழ்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழவேந்தனின் இடத்துக்கு இமாம் தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் தமிழ்க் கூட்டமைப்பில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஈழவேந்தன் அப் பதவியை இழந்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழ்த் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக முஸ்லிமான சட்டத்தரணி ரஸீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார
-
- 5 replies
- 1.8k views
-
-
இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் ஜவெள்ளிக்கிழமைஇ 13 ஒக்ரொபர் 2006இ 14:29 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிறிலங்கா இராணுவம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையிலேயே இராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகக்கொடுரமானதாக இருந்தததாக தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த முறியடிப்புத்தாக்குதல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கம் போல் புளுகு…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வீதி வலையமைப்பு ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமால் குமாரகே தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டில், பேக்குவரத்தினூடாக பிராந்திய நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தல் எனும் தீர்மானத்திற்கமைய, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில், இந்தியாவிடம் இது தொடர்பான திட்டவரைபினை இலங்கை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். "இரு நாடுகளுக்குமிடையில் படகு சேவையினை ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஏற்கனவே முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதுகுறித்தும், இருநாடுகளினதும் அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தியக் கனவு கலைந்து சீனாவை நோக்கி..அரசியல் சமூக ஆய்வு: தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில், இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில், இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
* மல்வத்த மகாநாயக்கரிடம் இராணுவத் தளபதி தெரிவிப்பு கிழக்கில் புலிகளின் பலம் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அவர்களது பலத்தை மேலும் பெருமளவில் கட்டுப்படுத்தி அப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்தவும் நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளோம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மல்வத்த மகா நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டின் புதிய பிறப்பையடுத்து இராணுவத் தளபதி நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டி ஷ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிப்பட்டதுடன் தியவதன நிலமேயுடனும் உரையாடினார். பின்னர் இராணுவத் தளபதி கண்டி மல்வத்த பௌத்த பீடத்திற்கு சென்று மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த ஷ்ரீ சுமங…
-
- 4 replies
- 1.8k views
-
-
"எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல" எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணித் தளபதி வெற்றிக்குமரன், "தலைமையின் உத்தரவுக்காகவே தாம் காத்திருப்பதாகவும்" தெரிவித்திருக்கின்றார். "யாழ். குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48 மணி நேரத்துக்குள் படையினரிடம் சரணடைய வேண்டும்" என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, "எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார். இது …
-
- 2 replies
- 1.8k views
-
-
ஊடக செய்தி- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். வணக்கம், தென்சூடான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் வழங்கிய கருத்துரையை இங்கு இணைத்துள்ளோம். இதனை காணொளியாக இணைத்துள்ளோம். My link உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர். இவர்களு…
-
- 16 replies
- 1.8k views
-
-
எலோரும் கேட்கவேண்டிய கவிதை. அதில் சில வரிகள்: மானாட மயிலாடுகிறது தமிழகம் தான் வாழ போராடுகிறது தமிழீழம் கவிஞர் புலம்பெயர் தமிழனை குறிப்பிடவில்லையாயினும், புலம்பெயர்ந்த எமக்கும் அது பொருந்தும். இங்கு மானாட மயிலாட மட்டுமா?.. இன்னும் எத்தனை எத்தனை கூத்துக்கள்.... இதோ கவிதை: http://www.tamilnaatham.com/audio/2008/sep...du_20080922.m3u
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி கையகப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவ…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
12/04/2009, 00:53 [] ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள் - வேல்ஸிலிருந்து அருஷ் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதி ருப்தி அடைந்துள்ளது. இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னி யில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
கனடா சிற்றி நியூஸ் வாக்கெடுப்பு..வாக்களியுங்கள் .. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று.. முதலாவது தெரிவை தெரிவு செய்யுங்கள்.. Link : http://www.citynews.ca/
-
- 4 replies
- 1.8k views
-
-
அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…
-
- 8 replies
- 1.8k views
-
-
சார்க்” மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள்ää அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. “சார்க்” நாடுகளின் மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்த போதும். அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்கப்படையினர் வன்னியில் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முகமாலையில் படையினர் நேற்று தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமுனைத்தளபதி கேனல் தீபன், வன்னிக்களமுனைக்கு அழைக்கப்பட்டதாக சிங்கள செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்தே படையினர் எறிகனைகளை வீசியும் துப்பாக்கி வேட்டுக்களை தீhத்தும் தமது சந்தோசத்தை ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
வன்னியின் வைத்திய சேவைகள் மீது இறுகி வரும் பிடி http://www.nesohr.org/files/Siege_on_healt...es_in_Vanni.pdf வன்னியில் இடம்பெயர்ந்துள்ளோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது http://www.nesohr.org/files/Needs_of_IDPs.pdf வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் ஏனைய அறிக்கைகள் http://www.nesohr.org/hrr/
-
- 3 replies
- 1.8k views
-
-
சர்வமத குழுவிற்கு கருத்துத் தெரிவித்த மதகுரு மீது கழிவுநீரால் தாக்குதல்! தீவகத்தில் சம்பவம்! Posted by admin On April 3rd, 2011 at 4:17 pm / யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் சர்வமதகுழுவிடம் தெரிவித்த மதகுரு ஒருவருக்கு அடையாளம் தெரியாதோரால் கழிவு நீரை ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரது உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. கடந்த 30-03-2011 அன்று சர்வமத குரு மார் ஒன்றியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். அதன் போது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் மதகுருக்களால் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் தொட…
-
- 1 reply
- 1.8k views
-
-
அரசியலமைப்பு சபையில் சம்பந்தன், சுமந்திரன் – ராதிகாவுக்கும் வாய்ப்பு?SEP 10, 2015 | 1:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
மன்னாரில் மோதல் 14 படையினர் பலி : 40 பேர் காயம் செவ்வாய்கிழமை (08-01-08) காலை மன்னார் முள்ளிக்குளம் பகுதியுயூடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி கடுமையான 3 மணிநேர சமரையடுத்து விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் மோதலின்போது 14 படையினர் கொல்லப்பட்டும் 40 படையினர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மோதலின்போது கடுமையான பல்குழல் எறிகணை வீச்சுகளையும் ஆட்டிலறி சூட்டாதரவையும் கிபிர் விமானங்களின் துணையையும் சிறீலங்கா படையினர் உபயோகித்து முன்னேற்ற ம…
-
- 1 reply
- 1.8k views
-