Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 26-01-2008 12:24 மணி தமிழீழம் [மகான்] ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் மீது தாக்குதல் ரூபவாஹினி செய்திக் கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் இனம் தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனம் தெரியாத குழு தாக்கியதோடு இவருக்கு வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. http://naathamnews.com/?p=4598 சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அ…

    • 9 replies
    • 1.1k views
  3. என்னை கைது செய்யப் போவதாக அறியக் கிடைத்துள்ளது: கம்மன்பில பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாக, அறியக் கிடைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவில் அதிகமாக உள்ளவர்கள் அன்னத் தரப்பினருக்கு கடைக்குச் சென்றவர்களே எனவும், நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொரும் அதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் உதய கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார். கடந்த ஆட்ச…

  4. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்…

  5. மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 794 views
  6. தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…

    • 27 replies
    • 3.1k views
  7. குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலியா தலையிடாது முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்யாது என இலங்கை;கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் வீசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நோயல் முதலிகே எனப்படும் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடப் போவதில்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானித்தள்ளது. அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக குமார் குணரட்னம் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை குடியுரிமையை…

  8. 25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…

  9. ஜப்பானின் நறீற்ரா விமான நிலையம் சிறிலங்காவுக்கு திறந்து விடப்பட்டது! By naatham On 29 Mar, 2012 At 10:14 AM | சிறிலங்காவுக்கான கொடையாளி நாடுகளில் ஜப்பான் வகித்திருந்த முதன்மை இடத்தினை சீனா கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் சிறிலஙஇகாவுடனான உறவினை சீர்படுத்த ஜப்பான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இதனொரு அங்கமாக ஜப்பானிக் நறீற்ரா விமான நிலையத்தினை சிறிலங்காவின் விமான சேவைக்கு முழுமையாக ஜப்பானிய அரசாங்கம் திறந்து விட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதல் இது சிறிலங்காவின் பாவனைக்கு வரவுள்ளது. இதேவேளை சிறிலங்காவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி 2ஆம் கட்ட செயற்றிட்டத்திற்கு 45 பில்லியன் ரூபாயினை ஜப்பான் இலகுகடனாக வழங்கியுள்ளது. http://naathamnews.co…

    • 0 replies
    • 688 views
  10. கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை! கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவையில் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையின் ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த படகு சேவை அனைத்துவித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி…

  11. விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் சிங்களவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் [18 - February - 2008] * அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயற்படும் பொலிஸாரும், படை அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புத்தளம் கச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; `இரத்தினபுரிப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு சிங்கள மக்களே உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது விடுதலைப…

  12. தமிழீழ விடுதலைப்பு லி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. புலி உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் ஊடுறுவியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாக வெளியான செய்திகள் வெறும் ஊகங்களே என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியதாக மக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் கிடைக்கவில்லை என காவல்துறை ஊடகப் பே…

    • 1 reply
    • 797 views
  13. http://www.newsalai.com/2012/04/blog-post_9375.html டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! Written By Admin on சனி, 7 ஏப்ரல், 2012 | 4:59 PM டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! பிரபல Time இதழின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி ம…

  14. நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏற்றுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொலிஸாரை வலியுத்தியுள்ளார். “மாவீரர் வாரம்“ அனுஷ்டிக்கப்படுவதாலேயே தான் இந்த விடயத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசாங்கம் புலிகளை நினைவுகூர்வதற்கோ, அவர்களது கொடிகளை ஏற்றுவதற்கோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஒருசில அமைப்புகள் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் புலி உறுப்பினர்களின் நினைவு நாளை அனுஷ்டிக்க தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கில் சிலர் இந்த வாரத்தின் முக்…

  15. ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை – கபீர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிகமானவர்கள் ஊடகங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியீடுவதாகவும் தமது எதிராளிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையாகவும் ஜனநாயக முறையிலும் தீர்மானம் மேற்கொள்ளும் கட்சி என தெரிவித்த அமைச்சர் கபீர் ஹஷீம், கட்ச…

    • 2 replies
    • 488 views
  16. 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் கொழும்பு பஸ்ஸில் இருவர் கைது சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லவிருந்த பஸ்ஸொன்றில், 7.5 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிருந்து கொழும்புக்குச் செல்லவிருந்த தனியார் பஸ்ஸில் இருந்தவர்களே இவ்வாறு சனிக்கிழமை (28) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னர், குறித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்விருவரும் கொழும்பை வசிப்பிடமாக…

  17. 'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா? -சேனாதி- ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டு 2052 ஆண்டுகளும், சிறிலங்காப் படைகள் மடுவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு ஆண்டும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியோடு முடிவடைகின்றன. 2007 மார்ச் 15 காலை 9:00 மணியளவில் இரணைஇலுப்பங்குளம் பீரங்கித் தளத்தில் இருந்து முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய ஊர்களின் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு புதிய களமொன்றை நோக்கி சிறிலங்காப் படைகள் அடியெடுத்து வைத்தன. சமகாலத்தில் புளியங்ககுளத்தை நோக்கியும் பூவரசங்குளத்தில் இருந்து கணைகள் வீசப்பட்டன. மாலையில் பாலைமோட்டைக்கு மேற்காக இருக்கும் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முன்னேறிவந்த படையின…

    • 1 reply
    • 2k views
  18. வவுனியா – கந்தரா வீதி, உந்தளக்குளம் பகுதி கிணற்றில் இருந்து 25 வயது நிரம்பிய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்று (17) காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – திருநெல்வெளி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மரியகந்தாஸ் வவிஜியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியாவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வேளை, நேற்று (16) மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=15977

    • 3 replies
    • 1.1k views
  19. பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல் எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளைத் தைத்து மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாடசாலை சீருடைகளை தைப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகளை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் மற்றும் விரயத்தைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  20. வவுனியாவிலிருந்து கொழும்பு வந்த ரயிலில் பயணித்த இரு புலி உறுப்பினர்கள் கைது [14 - March - 2008] * பொலிஸார் தெரிவிப்பு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்த இரு விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவில் சேவையாற்றி வரும் செட்டிகுளத்தைச்சேர்ந்த ராமச்சந்திரன் சுரேந்திரன் (வயது 18) என்ற இளைஞனும் முதலியார்குளத்தைச் சேர்ந்த பீ.ஜயந்தினி (வயது 25) என்ற யுவதியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இரவு 11.40 க்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்…

  21. சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது. 1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர். 1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் …

    • 3 replies
    • 844 views
  22. தமிழர்தாயகத்தை அபரிக்க வடகிழக்கில் தீவரமாகும் காடழிப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: 09 டிசம்பர் 2015 கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்போது மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. அண்மைய காலத்தில் 16ஆயிரத்து 500 ஏக்கர் காட்டுப் பகுதி குடியிருப்பாக மாறியிருப்பதாக சுற்றாடல் பாதுகாப்பு ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்தக் காடழிப்பின் நோக்கம் எதற்கானது என்பதையும் அது தடுத்து நிறுத்தப்படாமல் இருப்பது எதற்கானது என்பதையும் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம். இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுற்றாடல்துறை சார்ந்த அமைச்சை பெறுப்பில் வைத்திருக்கிற…

  23. கதிர்காமம் ஆலயம் அருகில் வெள்ளை நாகபாம்பு [19 - March - 2008] கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு அருகில் கடந்த சில தினங்களாக நடமாடும் வெள்ளை நாகபாம்பு தொடர்பாக இப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. இந்தப்பாம்பு வந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும் கதிர்காமத்துக்கு பொதுமக்களும் உல்லாசப் பயணிகளும் வருவது குறைந்துள்ளது எனவும் இங்குள்ள சோதிடர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு தற்போது அரும்பொருள் காட்சியகம் அமைக்க இரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டிடம் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மறைக்கும் விதமாகவும் ஆலய கட்டிடத்தை விட உயர்ந்து…

    • 31 replies
    • 4.9k views
  24. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இருநடதாலும் அவரது சட்டவாளர்களால் அவரைப் பிணையில் விடுவிக்கும் முயற்சிகள் கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து இதற்கு எதிர்ப்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள…

  25. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் - விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு தலைவர்களுக்கும் யாழ்ப்பாணத் தலைவர்களுக்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலிருந்தும் தமிழர் பிரச்சினை வௌ;வேறு விதமாக நோக்கப்படுகி;றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.