ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது adminDecember 19, 2024 இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக…
-
-
- 8 replies
- 677 views
- 1 follower
-
-
பிரபாகரன், பொட்டம்மான் தலைமறைவு - விசாரணையை இந்திய நீதிமன்றம் தள்ளிவைப்பு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை இந்திய நீதிமன்றம் மே மாத்திற்கு தள்ளி வைத்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது…
-
- 8 replies
- 2k views
-
-
டி.ஏ.ராஜபக்சவின்... உருவச்சிலை, உடைக்கப்பட்டது! தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று(செவ்வாய்கிழமை) சேதமாக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281202
-
- 8 replies
- 674 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.
-
- 8 replies
- 3.5k views
-
-
குடாநாட்டில் சில்லறைகளுக்கு தட்டுப்பாடு : ஜெயசேகரம் சுட்டிக்காட்டு பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடைகள்,மற்றும் பேருந்துகளில் மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்களால் குற்றஞ்சாட்டப்படுவது உண்மை .ஏனென்றால…
-
- 8 replies
- 489 views
-
-
புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு! புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்: குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்ல…
-
- 8 replies
- 1.2k views
-
-
யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-
-
கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமென நான் நம்புகிறேன் எம்.கே.நாராயணன் கூறுகிறார் கச்சதீவு ஒப்பந்தம் உறுதிசெய்த தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரச தயாராக இருக்கிறது என்று தான் நம்புவதாக இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்றுச் சென்னையில் சந்தித்த பின்னர் நாராயணன் செய்தியாளர்களுடன் கலந்துரையாடியபோதே இந்தத் தகவலைக் கூறினார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் நாராயணன் சொன்னார். இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டவை வருமாறு: கொழும்பில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செ…
-
- 8 replies
- 1.4k views
-
-
சிங்கள பௌத்த மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் மட்டுமே வடக்குத் தமிழர்களுக்கு நீதியின் வாசல் திறக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டை கூறுபோடும் நோக்கில் ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடி எடுத்துவைக்குமானால், இங்கு நல்லிணக்கத்துக்கான கதவு இழுத்து மூடப்படும் என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவாவுக்குச் சென்று ஓரங்க கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வடக்கு, கிழக்கு நிலைவரங்களை தெளிவுபடுத்தவுள்ள நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ் தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்.. தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை அனுட்டிப்பது தொடர்பாக இன்று மாலை ஆராய்ந்துள்ள நிலையில் குறித்த கூட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் சிலர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இந்தச் செயற்பாட்டிற்கு தமது கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றனர். குறிப்பாக யாரையும் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்து வைக்க முடியாது. கஜேந்திரன்களின் உறுதியான தீர்மானம் என்ன என்பதை அறியுங்கள். அவர்களுக்காக…
-
- 8 replies
- 912 views
-
-
யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக…
-
- 8 replies
- 775 views
-
-
கடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானது அல்ல : கப்பல் பணியாளர்கள் இலங்கையர்கள் - இலங்கை கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை கடற்படை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17781
-
- 8 replies
- 823 views
-
-
யாழ் அச்சுவேலிப் பகுதியில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்மணியின் பெற்றோர் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தவேளையில் தங்க நகைகளை கொள்ளையிடும் முகமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய ரவீந்திரதாஸ் கலைச்செல்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். யாழ் குடாநாட்டில் அண்மைகாலமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=71079 தொடர்ந்து பலகொலைகள் / தற்கொலைகள்! யாழில் உள்ள சிங்கள பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம்? திட்டமிட்ட இன அழிப்பு?
-
- 8 replies
- 1.4k views
-
-
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இராணுவ தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்காது, அமெரிக்க தூதுவரை சந்தித்தது அடிப்படை குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை இரண்டாவது குறற்ச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அனுராதபுரத்தில் உள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலை பாதுகாக்க தவறியமை தொடர்பாகவும் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பாதுகாப்பு வழங்காமை தொடர்பாக பல இராணுவ அதிகாரிகள…
-
- 8 replies
- 709 views
-
-
யாழ்.சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் தன்னை பெண்ணொருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி செய்தி தளங்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பிவிட்டு இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீர்வேலியை சேர்ந்த நிரூபன் நவரட்ணம் (வயது 23) என்னும் இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். குறித்த இளைஞன் வீட்டில் யாருமில்லாத நேரம் பாரத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காலை 9.05 மணிக்கு செய்தி தளங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றியதாகவும் அந்த பெண்ணின் சுயவிபரத்தையும் எழுதி அந்த பெண்ணை என்ன செய்யலாம் என கேட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேவேளை நேற்றிரவு தனது முகனூலில் குறித்த பெண்ணின் 188 படங்களையும…
-
- 8 replies
- 3.3k views
-
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு. யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது. உணர்வார்கள் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1393781
-
-
- 8 replies
- 698 views
- 1 follower
-
-
[size=4]By General 2012-11-19 22:24:12[/size] [size=4]ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இடம்பெற்ற டெசோ கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டுள்ளது. டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆ…
-
- 8 replies
- 771 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை: உலகம் முழுதும் ஐநா அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை ஐ.நா. தடுக்கத் தவறியதைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அலுவலகங்களை எதிர்வரும் 12ம் திகதி முற்றுகையிடப் போவதாக தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பு இலங்கை தமிழர் முருகதாசன் போரை நிறுத்த கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதன் நினைவாக இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவினர், தங்களது அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்தது. …
-
- 8 replies
- 538 views
-
-
ஜெனீவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெனீவா விஜயம், தென்னாபிரிக்க விஜயம் தொடர்பிலான விளக்கம், வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஜெனீவாவுக்கு செல்வதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தநிலையில் இராஜதந்திரிகளின் கூற்றின் பிரகாரம் …
-
- 8 replies
- 509 views
-
-
பலாலியில் 300 படையினருக்கு பரசூட் தரையிறங்கித் தாக்கும் சிறப்புப் பயிற்சிகள். பலாலி படைத்தளத்தில் சிறீலங்காவின் சிறப்புப் படையணிகளுக்கு பரசூட் தரையிறக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கனரக உலங்குவானூர்த்திகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை 300 சிறீலங்காப் படையினர் பெற்றுவருகின்றனர். இப்பயிற்சியில் தீடிரென கடலில் தரையிறங்குதல், காட்டுப் புறங்களில் தரையிறங்குதல், அதிரடிப் தாக்குதலுக்கான தரையிறக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பதிவு.
-
- 8 replies
- 2.6k views
-
-
சர்வ தேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு! By kugen ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந. சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு: இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானிய ஏகாதிப…
-
- 8 replies
- 1.3k views
-
-
நிமிடம் 9:36 இலிருந்து பாருங்கள். http://youtu.be/nr9UAibdM6A
-
- 8 replies
- 815 views
- 1 follower
-
-
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூறியுள்ளார். யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது - அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 'சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது' தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஐநா தமது ஆணைக…
-
- 8 replies
- 1.1k views
-
-
எதிர்க் கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை : பத்தரமுல்லை சீலரத்தின தேரர் கேள்வி (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட எதிர்க் கட்சித்தலைவர் ஏன் சந்தை தொகுதிக்கு வரவில்லை என பத்தரமுல்லை சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். இன்று கிளிநொச்சி சந்தைத்தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நான், இனவாதம் பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசு…
-
- 8 replies
- 552 views
-
-
இந்தியா இம்முறை ஜெனீவாவில் இலங்கையை கைவிடாது! அமைச்சர் அதீத நம்பிக்கை எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா சென்றுள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன திருவானந்தபுரம் பகுதியில் இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை விடயத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா இந்த விடயத்தில் மாறுபட்ட இடத்தில் சிந்திக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வடகிழ…
-
- 8 replies
- 799 views
-