ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இனவெறிக் கொடூரத்தை கண்டித்தும் ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க அனைத்துலக சமூகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் நேற்று அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார். உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களுக்கு மேலாக நீடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான மோதல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இலங்கையின் 61வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள், கனரக இராணு…
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கை செல்கிறார். அப்போது மீண்டும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் இலங்கை சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை செல்கிறார். பிரணாப் இலங்கை சென்று வந்த இரண்டு தினங்களில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.நிரந்தர போர் நிறுத்தம் கோரி தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை மீண்டும் வலியுறூத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்…
-
- 3 replies
- 1.4k views
-
-
நேற்று லண்டன் நேரம் இரவு 10.00 க்கு சி.என் [cnn]யில் ஜரோப்பிய செய்தியில் தயா இடைக்காடரின் பேட்டி போனது.யாரவது பார்த்தீர்களா? நான் இடையில் இருந்து தான் பார்த்தேன்.யாரவது பார்த்திருந்தால் கானொலி இனைக்க இயலும் என்றால் இனைக்கவும். அதில் பேட்டி கண்ட பெண் கேட்கிறா தமிழ் மக்கள் அனைவரும் புலியை ஆதரிக்கினமா என? இவர் ஆமாம் இல்லாவிடின் புலிக்கு ஏங்காலே காசு ஆயுதம் வாங்க என கேட்கிறார்.மேலும் தமிழ் மக்கள் அனைவரும் புலியைத் தான் நம்பி இருக்கின்றனர் என சொன்னார்.அப் பெண் உடனே சொன்னா புலி மக்களின் நம்பிக்கை படி செயற்படவில்லை தானே என்று உடனே இடைக்காடர் சொன்னார் இடங்களை கைப்பற்றல் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது புலிகள் அரசியல் நோக்கத்தை அடிப்படயாக கொண்டு செய…
-
- 11 replies
- 2.2k views
-
-
எமெர்ஜன்சி திட்டம் இலங்கையின் இறுதி ஆயுதம் -------------------------------------------------------------------------------- கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல் களைக் கண்டித்துஇ உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன. ஆனால்இ இதற்கெல்லாம் கொஞ்ச மும் செவிசாய்க்காத சிங்கள அரசோஇ 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகுஇ போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே…
-
- 11 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜெயம், மார்கன், இனிய பாரதி மற்றும் மங்களம் ஆகியோரும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதாக கருணா குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்…
-
- 17 replies
- 1.9k views
-
-
இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ”தேச எல்லைகள் என்பவை சர்வதேசப்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (05.02.2009) மாலை சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. ஈழத்தமிழர்களை காக்க நடைபெறும் கறுப்புக்கொடி ஊர்வலத்தின் போது ஆதரவாளர்கள் எடுக்கவேண்டிய சூளுரைகளை இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டார். வரும் 7ஆம் தேதி இவ்வியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருப்புக்கொடி பேரணியில் கீழ் காணும் 5 சூளுரைகளையும் எடுக்க வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார். 1. இலங்கை சிங்கள அரசின் கொலைவெறி ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்பில் துடிக்கிற நமது தொப்புள் கொடி உறவுகளை, ஈழத்தமிழ்மக்களை பாதுகாக்க வீறு கொண்டு எழுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம். …
-
- 1 reply
- 865 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதேவேளை மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் உடனடியாக மோதல் தவிர்ப்பினை அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்க படைகள் பலமான நிலையில் இருப்பதால் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை களைந்து அமைதிப் பேச்சுவார்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 1.2k views
-
-
"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்" "எமக்கு தேவை சமாதானம் மட்டுமே" "மக்களை மக்களாக நடத்துங்கள்" என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணி அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளனர். கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உண்ணாவிரதம் நடை பெறுகின்ற இடத்திற்கு வருகை தந்து, எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தி எமது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என சுதந்திர மாணவர் முன்னணியினர் அறிவித்துள்ளனர். சர்வதேச சமுகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்களினதும் ஆதரவையும் எதிர்பார்த்து காத…
-
- 0 replies
- 969 views
-
-
யுத்த குற்றங்கள் மற்றறொரு தரப்பின் யுத்த குற்றங்களினால் மூடி மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்பெயர தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்த பிரதேச மக்கள் சுதந்திரமாக இடம்பெயர எவ்வித தடையும் இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்த போதிலும், யதார்த்தத்தில் அவ்வாறான சுதந்திரம் காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களது உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முன்னெடுப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு …
-
- 1 reply
- 780 views
-
-
ஈழத்தமிழர் அவலத்திற்கு அதிமுக மௌனம் தொண்டர் ஆவேசம் ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றுக் கூறி அ.தி.மு.க கரை வேட்டியை தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக தொண்டர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 40. அ.தி.மு.க தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அ.தி.மு.க கட்சி வேட்டியை அவிழ்த்து …
-
- 3 replies
- 1.5k views
-
-
சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படு…
-
- 5 replies
- 2.3k views
-
-
EU passes resolution on Sri Lanka Civilians caught in deadly crossfire between the Sri Lankan Government and LTTE, the persecution of the Rohingya people of Burma, and the refusal to extradite convicted murderer Cesare Battisti by the Brazilian authorities, were the subjects of three resolutions on democracy and human rights adopted at the end of this week's EU Parliament plenary session today. The resolution on Sri Lanka said the capture of rebel strongholds by the Sri Lankan army "may constitute a turning point in the crisis" and could pave the way for peace and stability, but warns that a political solution needs to be found and the humanitarian crisis ad…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.4k views
-
-
இன்றைய லு பரிசியன் பத்திரிகையில் வந்த செய்தி நன்றி :- எம் இளையவர்களுக்கு http://img514.imageshack.us/my.php?image=leparisienyk4.jpg ttp://img8.imageshack.us/my.php?image=leparisiencd1.pdf
-
- 10 replies
- 2.1k views
-
-
-
அமெரிக்காவில் புலிகள் மீதான தடையை விலக்கக் கோரி ஹிலாரிக்கு தமிழர்கள் கோரிக்கை [ வியாழக்கிழமை, 05 பெப்ரவரி 2009, 01:39.52 PM GMT +05:30 ] விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு, அமெரிக்க தமிழர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. இலங்கையில் இராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து ஹிலாரி கிளிண்டன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவரும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட்டும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு இன்று நிராகரித்…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
-
- 15 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசால் தமிழ் மக்களின் மேல் பாவிக்கப்படும் கொத்தணி குண்டு பற்றி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கண்டனம் Use of Cluster Bombs by Sri lanka Government on innocent Wanni Tamil civilian condemed by UK MPs
-
- 0 replies
- 860 views
-
-
Hi Folks,Today in the morning session of the CBC, between 7:00 and 7:30 am, on 99.1, in talking about the Sri Lanka crisis, the reporter had said that in talking to some people it had been suggested that although not all Tamils are Tigers the Tamils were being forced to attend these rallies in Toronto. Please call CBC at 416 205 4636 (Cathy) to tell them how you feel about the accusation that the tamils are being forced to attend rallies. Invite them to attend today's rally infront of the SL consulate office between 5:30 and 7:30 to see for themselves. Please ask them to come and talk to any Tamil there at the vigil. If you are unable to get through call their general nu…
-
- 4 replies
- 1.3k views
-
-
emergency debate at canadian parliment....
-
- 18 replies
- 3.3k views
-
-
இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு கி.வீரமணி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பூரணநலம் (என்ன வருத்தம்) பெறுவதற்காக ஒத்த கருத்துகளுடைய கட்சிகள்,அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க தி.மு.க செயற்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர். உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிரு…
-
- 9 replies
- 1.4k views
-