ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2025 | 03:27 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனம் (SLIDA) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு 1,500 இலங்கை சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது. இலங்கை அரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் அழைப்பின் பேரில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்த, இந்திய…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
யாழ்.குடநாட்டிற்கு இரணைமடு குளத்து நீரை கொண்டுவருவதற்கான முழு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்றை தினம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இரணைமடு குளத்து நீரை யாழுக்கு கொண்டுவருவது பற்றிய மாநாட்டின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரச அதிபர், இரணமடு குளத்து நீரைப் பாதுகாத்து வழங்குவதற்குரிய நீர்தாங்கிகளை அமைப்பதற்காக காணிகளை கொள்வனவு செய்வதற்கு நடவகை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச செயலளர்கள் பிரிவில் உள்ள காணிகளில் நீர்த்தாங்கிகள் அமைப்பதற்கு முறையாக காணிகளை சுவிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுள்ளது. அத்தோடு நிலத்தடி நீர்வளம், நீர்ப்பாசன முறைகள் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவ…
-
- 0 replies
- 571 views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் அமைச்சர் பசில் மீது விசாரணை ஆரம்பம்! [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 04:26.27 AM GMT ] சுற்றுலாத்துறை அமைச்சிலிருந்து 4.7 மில்லியன் ரூபா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊவா மாகாண அபிவிருத்திக்கான பணத்தை தேர்தல் பிரசாரத்துக்காக ஒதுக்க பசில் ராஜபக்ஸ உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyBRYSWho6I.…
-
- 0 replies
- 320 views
-
-
கொழும்பில் நால்வருக்கு மரண தண்டனை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட நால்வருக்குக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கினார். 1996 ஜூலை 31 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து கபில பெரேரா என்பவரைக் கொலை செய்தனர் என அறுவர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை எதிர்கொண்ட நால்வருக்கு எதிராக நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (உ) http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய-பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்வதாகவும், போருக்குப்பிறகு ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் நல்வாழ்வு பெற…
-
- 0 replies
- 647 views
-
-
(ஆர்.யசி) புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எனினும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தங்களை முழுமையாக பிரயோகிப்போம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலைங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போ…
-
- 5 replies
- 636 views
-
-
Published By: DIGITAL DESK 2 15 MAR, 2025 | 05:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி …
-
-
- 5 replies
- 423 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கும், அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக அனைத்து சிறார்களுக…
-
- 3 replies
- 643 views
-
-
“ஏனைய தமிழ் அரசியல் கைதிகளை இனியாவது விடுதலை செய்யுங்கள்’ [size=2][size=2][size=4]தமிழ் அரசியல் கைதியொருவர் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னராவது அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் அரசு விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் விடுத்துள்ள அறிக்கையில்; கடந்த மாதம் 29 ஆம் திகதி வவுனியாச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். படுகாயமடைந்த அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு அங்கும் வைத்துத் தாக்கப்பட்டனர். இத் தாக்குதல்களில் படுகாயங்களுக்குள்ளானவர்களில் ஒருவரான கணேசன் நிமலரூபன…
-
- 0 replies
- 518 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட சமூகத்தை கவனிக்காமல் கைகழுவி விட்டமையினாலேயே இலங்கைக்கு இப்போது சிக்கல் - JVP 0 போரில் பாதிக்கப்பட்ட சமூகத்தை கவனிக்காமல் கைகழுவிட்டமையினாலேயே இலங்கைக்கு இப்போது சிக்கல் எனத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா செயிட் அல் ஹூசைன் ஐ.நாவில் என்ன சொல்வார் என்பதே தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அவர் மேற்கொண்ட விஜயத்தின்போது நகர்வுகள் எப்படி இருந்தது என்பதைக் காட்டிலும் இதனையே பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர் இலங்கை போர்க்குற்ற விவகாரங்களில் உள்ளக விசாரணையில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது என்றும் தெரிவி…
-
- 2 replies
- 455 views
-
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள் தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் இன்று நாக விகாரையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர்…
-
-
- 7 replies
- 418 views
-
-
[size=3][size=4]யுத்தப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size] [size=4]சுவீடன் நாட்டில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளசகல இலங்கையர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகளை நாடுகடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாகசுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.[/size] [size=4]சுவீடன் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size][/size] [size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]
-
- 0 replies
- 543 views
-
-
இன்று உலகம் முழுவதிலும் அனுஸ்டிக்கப்படும் உலக காதலர் தினத்தை எதிர்த்து மட்டக்களப்பு காத்தான்குடியில் பாரியளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுர வினியோகம் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. முஹாஸபா மீடியா நெட்வேர்க்கின் அனுசரணையுடன் மற்றும் இளைஞர் தலைமைத்துவ கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் உட்பட சமூக அமைப்புக்கள இதனை ஏற்பாடு செய்துள்ளன. காதல் எனும் பெயரால் கற்பை சூறையாட ஒருதினம் தேவையா.? புறக்கணிப்போம் இந்த கலாச்சார சீரழிவை எனும் சுவரொட்டிகள் பொது இடங்களில் பெருமளவு ஒட்டப்பட்டுள்ளதுடன் இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. முஸ்லிம்கள் சார்பாக குர்ஆன…
-
- 1 reply
- 499 views
-
-
வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் 13 APR, 2025 | 10:08 AM வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது. சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இற…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
புலித்தேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் என்பவரை பிரபாகரனின் நேரடி பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு உட்பூசல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Tamil Tigers place senior leader under house arrest: military Mon Jun 2, 4:32 PM ET COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday. Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Pra…
-
- 13 replies
- 3.2k views
-
-
[size=4]முஸ்லிம் வாக்குகளை கொள்ளையிடும் தரகரே ஹக்கீம்[/size] அரசாங்கத்திற்கு ௭திரான கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தாரை வார்ப்பதற்கான தரகராகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுகிறார். [size=2][size=4]அதற்காகவே தனித்து போட்டியிடுகிறார் ௭ன குற்றம் சாட்டும் ஐ.தே.க. தமது சமூகத்திற்காக உண்மையில் போட்டியிடுவதென்றால் அமைச்சர் பதவியை அவர் தூக்கியெறிந்திருக்க வேண்டும் ௭ன்றும் தெரிவித்தது. கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.[/size][/size] [size=2][size=4]இங்கு உரையாற்றிய கொழும்பு …
-
- 0 replies
- 500 views
-
-
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்! [08 - June - 2008] யாழ். குடா நாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பயங்கரக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி "ஏ9' நெடுஞ்சாலைக்கு மூடுவிழா நடந்ததன் பின், யாழ். குடாநாட்டில் பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. எனினும், 2007 ஆம் ஆண்டுகளின் பின் ஆறு மாதங்களில் அவை படிப்படியாக வீழ்ச்சி கண்டு 2008 முற்பகுதிகளில் முற்றாக இல்லாதிருந்ததென்றே கூறலாம். எனினும், 2008 ஆம் ஆண்டில் முதல் அரை ஆண்டு உருண்டோடி விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்கி வருகின்…
-
- 0 replies
- 898 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாக உயர்நிலை பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். மன்னார் நீதவான் நீதிமன்றம் மீது அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் முஸ்லிம் மீனவர்கள் தாக்குதல் மேற்கொள்ள தயாராகி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. அதனைத் தடுத்து நிறுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தாக்குதலைத் திட்டமிட்ட அமைச்சரை ஹெலிகொப்டரில் மன்னாருக்கு அனுப்பி தள்ளாடி இராணுவ முகாமில் அவருக்கான வசதிகளை பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ளார். இதன்மூலம் பாதுகாப்புச் செயலாளரும் இந்தத் தாக்குதலுக்கு உதவி ஒத்துபப்புக்களை வழங்கியுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக…
-
- 1 reply
- 737 views
-
-
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு May 3, 2025 தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மு…
-
-
- 4 replies
- 542 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் கலைக்கப்பட்ட இரண்டு மாகாண சபைகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அந்நாட்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற 2 மேஜர் ஜெனரல்கள் போட்டியிடவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 677 views
-
-
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேகநபர்கள் பயணித்த சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கடை நீதிமன்றத்துக்கு சென்று, பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளை, தெமட்டகொட பகுதியில் வைத்து குறித்த பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது காயமடைந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். http://onlineuthayan.com/news/9887
-
- 0 replies
- 324 views
-
-
17 MAY, 2025 | 09:38 AM (நா.தனுஜா) ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரனின் காணொளி வடிவ உரை ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் அவர் மேலும் கூறியதாவது: வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் என்னால் முன்மொழியப்பட்ட 'தமிழின அழிப்பு தீர்மானம்' கடந்த…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு 6/20/2008 9:30:00 PM - பிரபாகரன், பிள்ளையான், தமிழ்ச்செல்வனை நானறியேன். அரசாங்கத்துக்கே அவர்களுடன் நல்லுறவு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது காணி அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் போது வடக்கின் காணி அதிகாரத்தை ரணில் பிரபாகரனுக்கு வழங்கியதாக அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர். அதற்கு பதிலளித்து உரையாற்றிய போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது டிரான் அலஸ் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சிக்கு அனுப்பி, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு பேரம் பேசப்பட்டது. அப்…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆழுகைக்குள் இருக்கும் சாவகச்சேரி நகர சபயினரே இந்த இரண்டகத்தை எவ்விதம் ஏற்றுக் கொண்டீர்கள் அல்லது இதற்கும் நீங்கள் உடந்தையா ? தமிழ் மொழி யாழ்ப்பணத்தில் எங்கு இருந்தாலும் அது முன்னிலையில்தான் இருக்க வேண்டும் அதனை யாரும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது ஆனால் இந்தப் பேருந்து நிலையத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் காரணம் யாது ? மதிப்புக்குரிய யாழ்ப்பணத்தின் கல்வியியலால்ர்களே எமது நிலத்துக்கு சொந்தமில்லாதவன் வந்து சிங்களத்தை திணிக்கிறான் ஆனால் எமது நிலத்தின் சொந்தக்காரர்கள் தமிழை வெறுக்கிரீர்களே இது சரியோ முறையோ ? ஆங்கிலம் தவறல்ல ஆனால் தமிழ் அவமானம் அல்ல அது எம் இனத்தின் அடையாளம் என்பதை உணருங்கள் இது யாரையும்…
-
- 0 replies
- 914 views
-