ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 03:52 PM சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள…
-
- 0 replies
- 222 views
-
-
கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…
-
- 2 replies
- 2k views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 26, 2011 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூ…
-
- 0 replies
- 495 views
-
-
மன்னார் மாவட்டத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி பிராத்தனையும்,விசேட நினைவு உரையும் மன்னார் நகர மண்டபத்தில் எதிர்வரும் திங்கள் காலை 10.00மணிக்கு இடம் பெறவுள்ளது. இது தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி செயலாளர் வி.எஸ். சிவகரன் இன்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தமிழினப்படு கொலையின் ஆறாம் ஆண்டு நினைவு நாளாகிய மே – 18 அன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களில் சுடர் ஏற்றி கோரமாக படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தியுங்கள். இறுதியுத்தத்திலே காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட 146இ793 அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை ஆறு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசும் இனப்படுகொலைக்கு காரணமாக இர…
-
- 0 replies
- 686 views
-
-
வித்தியா கொலையைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்! [saturday 2015-05-23 20:00] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது காலை 8.30 மணியளவில் திருகோணமலை முற்றவெளி மைதானத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இவ்வாறான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 701 views
-
-
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவித்தல்! Published By: DIGITAL DESK 3 02 FEB, 2024 | 11:38 AM எரிவாயு விலையில் இம்முறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175362
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 14:50 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருக்கோவிலில் 45 அப்பாவி பொதுமக்களை கருணா குழுவினர் தடுத்து வைத்ததாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளி…
-
- 0 replies
- 952 views
-
-
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4.30 முதல் நாளை காலை 6 மணி இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68353/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 1k views
-
-
இந்தோனேசியால் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன? இந்தோனேசியா நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளை கொண்டிருந்த படகொன்று பற்றி தகவல்கள் இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த இவர்கள் முதலில் இந்தோனேசியா சென்று முகாம்களில் தங்கியிருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொண்ட இப்படகில் சுமார் 65 பேர் வரையிலிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தாம் அடைக்கலம் புகும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை தகவலை அனுப்பியிருந…
-
- 1 reply
- 538 views
-
-
நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது …
-
- 0 replies
- 234 views
-
-
Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து…
-
- 31 replies
- 3.2k views
- 1 follower
-
-
மண்டான் இராணுவ முகாம் அகற்றப்பட்டது. ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ வடமராட்சியில் மந்திகையில் இருந்து கலிகை சந்தி ஊடாக சாவகச்சேரி செல்லும் பாதையில் அமைந்துள்ள வலிகாமத்தையும் தென்மறாட்சியையும் ஊடறுத்தச் செல்லும் பாதையில் உள்ள மண்டானில் அமைந்திருந்த படை முகாம் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாம் அமைந் திருந்த பகுதியில் படையினர் பயன்படுத்தி வந்த வீடுகளின் திறப்புக்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளனர். இந்த பிரதேசத்தில் தொடர்சியாக இராணுவத்தினருக்கு பல தாக்குதல்கள் நடாத்தபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nitharsanam.com/?art=24156
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன 14 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன. …
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட…
-
- 4 replies
- 813 views
- 1 follower
-
-
தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்ட பளைப் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=101404073008524270#sthash.blKWMCgD.dpuf
-
- 0 replies
- 936 views
-
-
இன்று வெளியாகிறது மன்னார் புதைகுழி இரகசியம் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட றேடியோ கார்பன் ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து இதுவரை 320 வரையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு தெரிவு செய்யப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு றேடியோ கார்பன் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த எலும்பக்கூடுகள் புதைக்கப்பட்ட காலத்தைக் கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த றே…
-
- 0 replies
- 227 views
-
-
இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அறிமுகம்! Published on October 26, 2011-4:47 am இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருட காலம்வரை காத்திருக்கத் தேவையில்லை எனவும் விரைவில் இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரங்களை 7 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு நேற்று அறிவித்தது. வேரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவர்தது திணைக்களத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக தினமும் 1200 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் அவற்றில் 600 விண்ணப்பங்களே தினமும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க கூறினார். இனிமேல் சாரதி அனுமதிப்பத்திரங்கும் வழங்குவதற்கான செயன்முறைகள் இரு நாட்களில் பூர்த்திய…
-
- 0 replies
- 555 views
-
-
உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஐதேக அவசர கோரிக்கை! [saturday 2015-06-13 21:00] பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றிரவு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு எதிரானது எனவும் செயற்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவார் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட ஆணை விசேட சூழ்நிலைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.ஆ…
-
- 0 replies
- 647 views
-
-
மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் - இரா.சம்பந்தன் அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் நிதானமாக முன்னெடுத்து வருகின்றோம்.அதற்காக இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு பின்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக சந்தித்துள்ளேன். எதிர்வரும் 28 ஆம் திகதியும் பேச இருக்கின்றோம். அதில் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரி இருக்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றய தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை பிரதேசக்கிளை ம…
-
- 10 replies
- 972 views
-
-
தமிழ் மக்களுக்குச் சுதந்திரம்; கனேடியப் பிரதமர் நடவடிக்கை; அந்நாட்டு தமிழ் எம்.பி. ராதிகா தெரிவிப்பு news இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைப்பதற்கு கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது தீவிரநடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரை வரவேற்றுப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு பல்வேறு இன மக்களும் சேர்ந்து என்னை தமது நாடா…
-
- 2 replies
- 2k views
-
-
27 MAR, 2024 | 11:01 AM இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட "எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதியை, வைத்தியசாலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட கல்லீரல் சத்திர சிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும். இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாட்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 857 views
-
-
ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம் சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அணுவணுவாய் உயிரை அரிக்கிற நோயால் பீடிக்கப்பட்டு சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்கிற இந்த மனிதனுக்கு இரக்கம் காட்ட யாருமேயில்லை. இறுதி யுத்தத்தில் செல்வச்சந்திரனின் குடும்பமும் அதிக இழப்புகளைத் தாங்கியிருக்கிறது. வாழப்போகும் தனது மீதி நாட்களில் தனக்காக எதனையும் எதிர்பார்க்காத செல்வச்சந்திரன் வலியிலிருந்து மீளத்தனக்கு மருத்துவம் கேட்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு வரு…
-
- 2 replies
- 862 views
-
-
புலிகளின் அச்சுறுத்தல் இல்லை! - இராணுவப் பேச்சாளர்[Thursday 2015-06-25 19:00] இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருக்கின்றோம். சிலர் குறிப்பிடுவது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இலங்கையின் புலனாய்வாளர்கள் இது தொடர்பான தகவல்களை திரட்டி கொடுத்துள்ளனர். நாம் இது தொடர்பில் மிகவும் உன்னிப்பா…
-
- 1 reply
- 538 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் சூளுரைத்துள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது. தமிழ் சட்ட நிபுணர்கள் பலரும் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தனர். இந்தநிலையில், பயங்கரவாத எத…
-
- 1 reply
- 791 views
-