Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிரிழந்த காயமடைந்த பயங்கரவாதிகளின் விபரங்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எம்மிடத்தில் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான கஜந்த கருணாதிலக்க சபையில் அறிவித்தார். அதேநேரம் இக்காலப்பகுதியில் அரச பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்து ஏனைய படைகளில் 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதி…

  2. காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு அரச தலை­மை­க­ளு­டன் பேசித் தீர்வு - வடக்கு முத­ல்வர் தெரி­விப்பு'' “அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெற்­றுக் கொடுக்­கும் நோக்­கில், காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் விவ­ரங்­கள் பெறப்­பட்­டுள்­ளன” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் சங்…

  3. புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட ந…

    • 1 reply
    • 1.9k views
  4. எஸ்.கே.பிரசாத் இடபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்லில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன இந்த தேர்தலில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிட கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்ததாகவும் நாளைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் தெரிவித்தார். இதன்படி முதன்மை வேட்பாளராக தி.துவாரகேஸ்வரன் மற்றும் என்.சதானந்தன், பி.கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ்.தியாகேந்திரன், கே.தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு.காஜன், வி.தயாபரன், எ.இயஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜ…

  5. கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரஜைகள் குழு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சின்னராசா ஜீவநாயகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் …

  6. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழிந்து விட்டதால் யுத்தம் முடிவுற்றதாக எண்ணக்கூடாது. இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்புப் போல உள்ளதெனவும் தெரிவித்தார். மாத்தளை, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கடற்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய எட்டுப்பேரைக் கொண்ட கொள்ளை கோஷ்டியைக் கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் சுனில் ஏக்கநாயக்க தலைமையிலான எட்டுப் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை புதிய பொலிஸ் நிலையக் கட்டிட கேட்போர் …

  7. சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளது சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  8. கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரை அரசு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்ற போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரச தோல்வியடைந்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  9. வாழைச்சேனையில இன்று காலை கைக்குண்டு வீச்சு வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் எம் வீ வாசுதீன் என்பவிரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி வாழைச் சேனை வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=6031

  10. காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி (கே.குமணன்) கேப்­பாப்­பு­லவு மக்­களின் பூர்­வீக நிலங்­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணுவ தரப்­புடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்­து­வதில் எந்­தப்­ப­யனும் இல்லை. ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட அரச உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து காணி­களை விடு­விக்க முயற்­சிப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பார­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ. சுமந்­திரன் தெரி­வித்தார். மக்கள் மாற்றுக் காணி­களை எடுக்­கப்­போ­வ­தில்லை என்­பதை உறு­தி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். ஆகவே அதே நிலைப்­பாட்டில் இருந்து மக்­களின் சொந்த நிலங்­…

    • 4 replies
    • 350 views
  11. கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது. அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மது…

  12. சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்களை கவலை கொள்ள வைத்திருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து வேட்டையில் லண்டன் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்க…

  13. காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950

  14. "எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. …

    • 1 reply
    • 629 views
  15. வடமராட்சிப் பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வடமராட்சி வதிரிப் பகுதியில் வலிகமாகம் தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினரும், வடக்குமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் கஜதீபன் என்பவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே மேற்படித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த பகுதியில் நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அப்பகுதிக்குச் சென்ற தமிழ் தேச…

    • 1 reply
    • 742 views
  16. தொழி­லாளர் வர்க்­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் மேடை­யாக பயன்­ப­டுத்­துங்கள் : எதிர்க்­கட்சித் தலைவர் தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடை­யா­கவும் தொழி­லா­ளர்­களின் முயற்­சி­களை நினைவு கூர்­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் தமது மே தினக் கொண்­டாட்­டத்தை அமைத்துக் கொள்­ளு­மாறு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­டமும் நான் வேண்­டுகோள் விடுக்க விரும்­பு­கின்­றேன் என்று தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச தொழ…

  17. எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதி மிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க தம்முடன் இணைந்து செயற்படுமாறு நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையா…

    • 16 replies
    • 780 views
  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை இந்தியா கேட்டுக்கொண்டால் ஒப்படைப்பதற்குத் தயார் என்று சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பத்மநாதனை ஒப்படைக்கும்படி இந்தியா கேட்டுள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு எதிர்மறையாகவே அவர் பதிலளித்துள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் சிறிலங்கா அரச படையினரும் தமது வெளிநாட்டு சகபாடிகளுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தனரா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் ஆம் எனப் பதிலளித்தார். அரச படையினரின் எந்தப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருந்தனர் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பத்மநாதனைக் கைது ச…

  19. காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சட்ட விதிகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமாக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்வாறு வாகனங்களை சட்டவிரோதமா…

    • 0 replies
    • 416 views
  20. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் SSP வாஸ் குணவர்ட்தென காவல்துறைத் தலைமயகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். ஒரு தகவல் தொழிநுட்ப மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் திரு.வாஸ் குணவர்தென முழுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகக

    • 0 replies
    • 675 views
  21. இலங்கையில் சிவில் யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்த காலத்திற்குள் இலங்கையில் வாழ் அனைத்து இன மக்களுக்கும் எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மட்டுமன்றி யுத்தம் நிலவிய ஒட்டுமொத்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படுமென சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடலின் போது நவிபிள்ளை தெரிவித்துள்ளதாக அவரது பிரதிநிதியான ரொரி முன்கவன் தெரிவித்துள்ளார். விசேடமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த காலப்பகுதியில் பௌத்த பிக்குமார்களை கொலை செய்தமை ஆயிரக் கணக்கா…

  22. புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீது வான் மற்­றும் தரை வழி­யா­கத் தாக்­கு­தல் நடத்­தி­னார்­கள் என்று குற்­றச்­சாட்­டப்­பட்­டுள்ள, விடு­த­லைப் புலி­க­ளின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இரு­வர் வழங்­கிய வாக்­கு­மூ­லம் சட்­டப்­ப­டி­யா­னது என்று அனு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்று நேற்று அறி­வித்­தது. இது தொடர்­பான வழக்கு அநு­ரா­த­புர மேல் நீதி­மன்­றில் நீதி­பதி மகேஸ் வீர­மன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீதான தாக்­கு­தல் கார­ண­மாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் …

  23. வட மாகாண சபை தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இடம் பெறுவதனை வேட்பாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் கஃபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத ஆயுதப்பாவனை அதிகரித்துள்ளமையினால் வேட்பாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆயுதக்குழுக்களிடமுள்ள ஆயுதங்களை பொலிஸார் களைந்து வேட்பாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.http://goldtamil.com/?p=7877

  24. இதுவரையில்... தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு! கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232521

  25. ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் உலகிலேயே மெக்சிக்கோவுக்கு அடுத்தபடியாக இலங்கையிலேயே நடைபெறுகின்றது என 26 ஆவது அனைத்துலக காணாமல் போனோர் நாளான இன்று சனிக்கிழமை எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. ஊடகவியலாளர்கள் அரச முகவர்களாலோ உள்ளூர் குற்றவாளிகளாலோ கடத்தப்பட்டாலும் அவர்கள் அனைவரும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்பதையே அச்செயல்கள் காட்டுகின்றன. ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான …

    • 0 replies
    • 333 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.