Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு சிங்கள மக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  2. பிரான்சில் நேற்று நடந்த கவனயீர்ப்பு நிகழ்வு பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் செய்தியும்: Get Flash to see this player. http://www.france24.com/en/20090127-troops...an-tamil-tigers

  3. இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தமிழ்த் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பதில் அளித்து பேசியபோதே மன்மோகன்சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரம் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ்வதை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்டாமல் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை. தமிழ் மக்களின் தலைவர்க…

    • 6 replies
    • 649 views
  4. 'போர்முனைக்குப் போய் வந்தேன்...' தி.மு.க. கூட்டணியை மூச்சுத் திணற வைக்கிறது ஈழ விவகாரம். 'ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கூட்டணி' என எதிர்க்கட்சிகளால் சாடப்படும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே ஒருவர் தமிழகத் திலிருந்து கடல் மார்க்கமாக வன்னிக் காடுகளுக்குச் சென்று புலிகளின் முக்கிய தளபதிகளைச் சந்தித்து திரும்பியிருக்கிறார்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தளபதியாகவும் அவர் நடத்தும் தாய்மண் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருக்கும் வன்னி அரசுதான் இந்த சர்ச்சைப் பயணத்துக்கு சொந்தக்காரர். உளவுத் துறை வன்னி மீது ஒரு கண் வைத்திருக்கிற நிலையில், நாம் வன்னி அரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தினரை சந்திக்…

    • 6 replies
    • 2.4k views
  5. -எஸ்.கே.பிரசாத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என…

    • 6 replies
    • 943 views
  6. சிறிலங்காவுக்குள் இருக்கும் பிரச்சினையை உள்நாட்டுக்குள்யேயே தீர்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கத் தூதுவர் அதிகளவில் தலையிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டுப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், "உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்…

  7. Sunday, February 20th, 2011 | Posted by thaynilam வெள்ளிவிழாவில் கறை பூசிய ‘உதயன்’ நாளிதழ்! உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது. உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்…

  8. Published By: VISHNU 01 DEC, 2023 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள் (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும். அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி…

  9. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலான அதிருப்தி வலுத்துவரும் தற்போதைய சூழ்நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் க்வாங்லீ அடுத்தவாரம் கொழும்பு வரவிருப்பது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவாரம் இலங்கைக்கு வரும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், நாட்டின் முக்கியமான பல இடங்களுக்கும் அவர் விஜயம் செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்பாடல்களை மேம்படுத்துதல், பரஸ்பர படைப்பயிற்சி ஒத…

  10. இலங்கை தொடர்பாக விரைவில் தீர்மானம் – சம்பந்தருக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி! தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார். மேலும் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகித்த இணைத்தலைமை நாடுகள் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிற்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார். விடுதலைப்புலி…

  11. சிலாபம் மாரவில நகரில் சிலரை ஒன்றுக் கூட்டி பிரார்த்தனை ஜெபக் கூட்டத்தை நடத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மஹாவெவ சுகாதார பரிசோதகர் பீ.எம்.வஜிர நிலந்த தெரிவித்துள்ளார். இந்த ஜெபக் கூட்டம் இன்று மதியம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாரவில பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். மாரவில நகரில் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இந்த ஜெபக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு நான்கு சிறுவர்களுடன் 18 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் என 27 பேர் கூடியிருந்ததாகவும் நிலந்த குறிப்பிட்டுள்ளார். ஜெபக் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பலர் முக கவசங்களை அணிந்திருக்கவில்லை. தன…

    • 6 replies
    • 1.4k views
  12. தமிழர்களுக்கு நீதி செய்யும் தாராளம் சிங்களத்திடம் கிஞ்சித்தும் கிடையாது [22 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை] நீதியும், நியாயமும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமையும் கேட்டு அஹிம்சை வழியில் - காந்தீய நெறியில் - சமாதான முறையில் - அமைதி மார்க்கத்தில் - போராடிய ஈழத் தமிழர்கள், அதை ஒட்டி அதிகாரத்தில் இருந்த பௌத்த - சிங்களத் தலைமைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்தார்கள்; உடன்பாடுகளுக்கு இணங்கினார்கள். தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையின் தீவிரத்தையும், தமிழ்த்தேசிய உண ர்வெழுச்சியின் வீரியத்தையும் கண்டு திகைத்த பௌத்த - சிங்கள அரசுத் தலைமைகள், தமிழர்களின் கிளர்ச்சியை முளையிலேயே அடக்குவதற்காக - வேகம் பெறும் தமிழர்களின் வெகுசனப் போராட்டத்துக்க…

  13. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்... 60 பேர்கொண்ட குழு, வத்திக்கான் நோக்கி பயணம்! கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமையவே குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். …

    • 6 replies
    • 420 views
  14. சென்னையில் கடந்த வியாழக்கிழமை (29.12.05) ஈழத் தமிழர் உரிமை-சமாதான வழித் தீர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரசுவதி தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்றோர் ஆற்றிய உரை: பேராசிரியர் சரசுவதி: ஈழத்திலே பதற்றமும் இராணுவ வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கிற நிலையில் நாம் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். ஈழத்தில் தமிழர்களின் மனித உரிமைகள்- வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை குறித்து அக்கறை கொள்கிற நாம் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். சமாதான காலத்திலும் கூட ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுக்…

    • 6 replies
    • 2.9k views
  15. "Yuan Wang 5" சீன கப்பல்... மீண்டும், சீனா நோக்கி பயணம். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1295670

  16. அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…

  17. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 04:44 PM டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கா…

  18. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பாக தமிழக மாநிலத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வழமையாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்…

  19. எங்கள் அவயங்களைப் பறித்தவனின் கரங்களினால் நாங்கள் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் இரண்டு கண்களும் தெரியாத கைகள் இரண்டும் இல்லாத நவின் பாடசாலை மாணவி. நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.படைகளின் தலைமையகதத்தில் நடைபெற்ற கா.பொ சாதாரண மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. எங்களை வலுக்கட்டாயமான எமது பாடசாலை ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இரண்டு கண்களும் தெரியாது இரு கைகளையும் கொடிய யுத்ததினால் இழந்துள்ளோம். எங்களின் வாழ்க்கையை சூனியமாக்கியவனின் கைகளினால் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர்தான் வருகிறது. தங்களின் உணர்வுகனை இந்த நவீன் பாடசாலை ஆசிரியர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இராணுவத்தினரின் கௌரவிப்புக்கு …

  20. அப்பக்கடைச் சந்தியில் திடீரென அருள்பாலிக்கும் புத்தபிரான்! March 30th, 2012 அன்று வெளியிடப்பட்டது - யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகா…

  21. முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது: வடமாகாணசபை உறுப்பினர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர். "உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

  22. 25 AUG, 2025 | 04:48 PM (எம்.நியூட்டன்) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்த…

  23. பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…

  24. நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி . யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் …

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.