ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவமிக்க விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேறியதன் காரணமாக அந்தப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் அன்றாடக் கற்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டபிள்யூ.எம். டெரன்ஸ் மதுஜித் இது குறித்து தெரிவிக்கையில் : “பல ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். இந்நிலை மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பல் மருத்துவ பீடங்களையே பிரதானமாக…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
[sunday, 2011-07-03 13:29:45] விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விமானப்படை அறிவித்துள்ளது.வாடகைக்கு பெறப்பட்ட ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். நிலாவெளியில் இருந்து புறப்பட்ட ஹெலிகொப்டரின் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்புட்டார். இந்த ஹெலிகொப்டர் குருநாகல் ஹிரிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றுக்கு சொந்தமான காணியில் நேற்று தரையிறக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. பின்னர் வேறாரு ஹெலிகொப்டரை பயன்படுத்தி அதிலிருந்தவர்களுக்கு போக்க…
-
- 1 reply
- 552 views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்கள் - நாமும் மனிதர்கள்தானா ?? குமுறும் அவுஸ்திரேலிய வானொலி தொகுப்பாளர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவின் எல்லாப் பகுதிகளிலும் மூன்றுமுறை ஒளிபரப்பப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் எனும் விவரணத்தைப் பார்த்து பலரும் கொதிப்படைந்திருக்கிறார்கள். தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், "மாடுகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் கொதிப்படைகிறோம், ஆனால் மக்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்றுகுவிக்கிறார்கள், பெண்களிக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்து மார்பகங்களை அறுத்தெறிகிறார்கள், வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாய்களைப்போல வேட்டையாடப்பட்ட பெண்களி டிராக்டரில் தூக்கி எறிகிறார்கள், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்"? என்று கொதித்துப் பேசுகிறார். அவரி…
-
- 1 reply
- 935 views
-
-
மஹிந்த கண்டிக்கு விஜயம் – தலதா மாளிகையில் விசேட வழிபாடு! புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டிக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். உலங்கு வானூர்தியில், அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டரங்கில் இறங்கிய மஹிந்தவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின் கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவர், மதவழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய வராகொட ஸ்ரீஞானரத்ன தேரரைச் சந்தித்து ஆசிபெற்றதுடன், தனது நியமனம் குறித்தும் மஹிந்த அஸ்கிரிய பீடாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக அவர் அங்கு குறிப்பிடுகையில், “நான் முடிவு வரும் முன்னே அலரி…
-
- 0 replies
- 315 views
-
-
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும். என்ற முன்மொழிவை முன்வைத்துள்ளார். மேலும், வடகிழக்கு மாகாணம் பி…
-
- 3 replies
- 279 views
-
-
வரும் யூலை மாதம் 16ம் திகதி “ஒன்றாகி எழுவோம்” Monday, July 11, 2011, 21:55உலகம், தமிழீழம் தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்கிறோம். தாயகத்தின் மேல் பற்றுறுதியும், எம் தேச விடுதலைக்கு கடின உழைப்பையும் புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்த கனேடிய செயற்பாட்டாளர்கள் இன்று வெவ்வேறு குழுக்களாகவும், அமைப்புகளாகவும் தனித்து நின்றும், பிரிந்து நின்று செயற்படுவதும் செயல் பட முயல்வதும் இளம் சமூகமாகிய எங்களுக்கு வேதனையும் அதிர்ச்சியையும் அளிகின்றது. இவ்வகையான ஒரு போக்கு ஒரு சிந்தனை எம்மிடையே வளர்ந்துள்ளது என்பது எமது தேசிய மாவீரர்களையும் எம் உயிரினும் மேலான மக்களையும் அவமத…
-
- 1 reply
- 638 views
-
-
கடந்த அசராங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் சுமார் 2000 பேருக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளது. இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்ட பலரது இரட்டைக் குடியுரிமை ரத்து செய்யப்படலாம். 2010ம் ஆண்டு முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் ஒரு சிலருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கையூட்டல் பெற்றுக்கொண்டு இவ்வாறு சிலருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எட…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும்-மாவை சேனாதிராஜா கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக மஹிந்தராஜபக்ஷவை நியமித்தார். ஆனால் அது அரசியலமைப்பின் பிரகாரம் பிழையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்காத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சரியா என்ற கேள்வி எழுகின்றது.ஆனால் நாம் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதியினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.நாடாளுமன்றத்தில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பில் இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 313 views
-
-
கோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து கொழும்புச் செய்தியாளர்Nov 07, 2018 by in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை- மெதமுலானவில் உள்ள தமது இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ஹக்கம பகுதியில், சிறிய உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. உழவு இயந்திரத்தில் மோதிய கோத்தாபய ராஜபக்சவின் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து. மரம் ஒன்றுடன் மோதி நின்றது. இந்தச் சம்பவத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கோ, அவரது மனைவிக்கோ எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. அவர்கள் மற்றொரு வாகனத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். …
-
- 0 replies
- 569 views
-
-
திடீர் வெள்ளப் பெருக்கு - ஒரு அபசகுனம் கொழும்பு, தமிழ் போராளிகளின் விமானங்கள் கடந்த வாரம் இலங்கையின் தேசிய தலைநகருக்கு மேலான வான்பரப்பை முற்றுகையிட்டுப் பறந்த வேளையில் தரையில் தோன்றிய மோசமான இயற்கை அழிவான திடீர் வெள்ளப் பெருக்கிலிருந்து அரசியல் தலைவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. காலநிலை மாற்றமே இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதிகரித்து வரும் வெப்பம், உயர்ந்து வரும் கடல்மட்டம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இதே வாரத்தில் ஐக்கிய நாடுகள் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது துரிதமாக செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களாலோ பூமி வெப்பமடைவதை தடுப்பது குறித்…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஊடகவியலாளரான சுதர்மன் ரதலியகொடவை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தவு [Tuesday, 2011-07-19 18:02:02] சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.ரி.என்) ஊடகவியலாளரான சுதர்மன் ரதலியகொடவை கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு மோசடி புலனாய்வு பணியகத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ரெலிகொமிடமிருந்து 1828 தொன் கழிவு இரும்பை கொள்வனவு செய்வதற்கு உதவும் வகையில் போலி ஆவணங்களை தயாரித்து இரண்டு வர்த்தகர்களுக்கு வழங்கியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதான ரெலிகொம் களஞ்சிய அதிகாரி, தான் வழங்கியதாக கூறப்படும் அனுமதிக் கடிதத்துடன் 1828 தொன் கழிவு இரும்பை கொள்வனவு செய்ய இரண்டு பேர் தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும் அந்த அனுமதிக்…
-
- 0 replies
- 223 views
-
-
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீபாவளி தினத்தன்று அறிவியல் நகர் பல்லைக்கழக சந்தியிலுள்ள உணவகத்திற்கு சென்று வருவதாகத்தெரிவித்து அவரது உறவினர் அழைத்துச்சென்றநிலையில்; குறித்த இளைஞன் வாகனம் ஒன்றில் பொலனறுவையைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டு இளைஞரின் உறவினர்களிடம் ஐந்து இலட்சம் ரூபா பணம் தருமாறும் அவரை உயிருடன் விடுவதாக கடத்தல்காரர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்தினர். இதையடு…
-
- 0 replies
- 372 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் ஆயுதமுனையில் பறிமுதல்! Published on July 23, 2011-6:46 am கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் ஆயுததாரிகளால் ஆயுதமுனையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம் உட்பட்ட கிராமங்களுக்கு நள்ளிரவிற்குப் பின்னர் முகம்மூடிகள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் சென்றநபர்கள் ஆயுத முனையில் வலுகட்டாயமாக வாக்குச் சீட்டுக்களை மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து சென்றுள்ளனர். இதனைவிடவும் கிளிநொச்சியின் பெருமளவான பின்தங்கிய கிராமங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகின…
-
- 0 replies
- 316 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென குற்றம் சுமத்தியுள்ளார் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல். பிணையில் வெளிவந்த ஜெயக்குமாரிக்காக இதுவரை நீதிமன்றில் ஆஜராகி வாதாடி வந்த இவர், ஏனைய அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி…
-
- 1 reply
- 438 views
-
-
November 19, 2018 சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த வேளையில் அவர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துள்ளார். இத் தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியவர…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று புதன்கிழமை (27) விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட …
-
- 0 replies
- 280 views
-
-
நெடுந்தீவு தாக்குதல்- யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அறிகுறி: முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வ…
-
- 6 replies
- 2.4k views
-
-
இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார். வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலு…
-
- 0 replies
- 394 views
-
-
“இன, மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது” இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூ…
-
- 3 replies
- 370 views
-
-
VIDEO: Tamil men walk to correct 'errorism' Group plans to arrive in Ottawa June 11 May 25, 2007 By Stefanie Swinson More from this author DURHAM -- A group of eight Tamil men are taking their fight for social equality to the streets walking to Ottawa from Toronto to "stop errorism." Errorism, as described by walk organizer Mayuran Rhaashivam, is when "a majority community uses stigmatized terms to bully a minority community for its own self interests." The walk began on May 22 from Nathan Phillips Square and is due to be completed June 11 on Parliament Hill. "We want to raise awareness about the Sri Lankan confli…
-
- 1 reply
- 1.1k views
-
-
முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றப்படாது அரசியல் தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த முடியாது – ரிசாட் 10 ஆகஸ்ட் 2011 யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் கௌரமான முறையில் மீள் குடியேற்றப்படாது, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் சாத்தியம் கிடையாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவசரகாலச் சட்ட நீடிப்பு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் முஸ்லிம்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட…
-
- 3 replies
- 554 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலை கொடுத்து வாங்க முடியாது தன்னையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்த உறுப்பினரையோ எவரும் விலைக்கு வாங்க முடியாது என்று கிழக்கு மாகாணசபையின் புதிய பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா நேற்று தெரிவித்துள்ளார். தனது பதவி பணம் கொடுத்து பறிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கில் மலர்ந்துள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் இன ஐக்கியத்தை கொச்சைப்படுத்தவும் சீர்குலைக்கவும் நினைக்கின்ற சுயநல வங்குரோத்து அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்களை மக்கள் பெரி…
-
- 4 replies
- 413 views
-
-
சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது: மடு தேவாலய திருப்பலி நிகழ்வில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு. [Tuesday, 2011-08-16 10:51:30] சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அதி வணக்கத்திற்குரிய கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மருத மடு தேவாலய திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சரியான முறையில் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சகல விடயங்களையும் நிராகரிக்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் …
-
- 1 reply
- 678 views
-
-
ஜனாதிபதி ரணிலை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கின்றோம் ;ஹக்கீம் (ஆர்.விதுஷா) உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர். உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் அமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தவறானது என்பதை உயர் நீதி மன்றத்தில் ஏழு நீதியரசர்களும் ஒருமித்து தங்கள்…
-
- 0 replies
- 539 views
-
-
10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு 10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமை…
-
- 2 replies
- 328 views
-