ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
மே மாதம் 9ஆம் திகதி கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அனுமதி! படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 170 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறித்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதற்கு முன்னர் எதிர்ப்புகளை தெரிவிக்க முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 18ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அரசுடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாக ஒழுக்காற்று விசாரணைகள் எதுவுமின்றி தனது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளதாக பியசேன தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதனை சட்டவிரோதமானதென அறிவிக…
-
- 0 replies
- 607 views
-
-
ஈரோடு அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.SSM கல்லூரியில் நடைபெறும் மகளிருக்கான தொழில் முனைவோர் மாநாடு 22-08-2014 அன்று நடை பெற இருந்தது. அதற்கு இன்று இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்தொழிலதிபர்கள் இலங்கை பண்டாரநாயகா விமானநிலையத்தில் புறப்பட்டு Mahin langa என்ற விமானம் மூலம் மதுரைக்கு வந்திறங்கி பின்னர் அங்கிருந்து தரைவழியாக குமாரபாளையம் செல்வதாக இருந்தது . இதனை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என தமிழகம் சட்டசபைத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இங்குள்ள தொழிலதிபர்களை இலங்கையில் தொழில்நிறுவனம் அமைக்க அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு தமிழகம் வரும் சிங்களவர்களைத் தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் என கழக பொதுசெ…
-
- 0 replies
- 371 views
-
-
கொழும்பு தெமட்டகொட அருகாமை எண்ணெய் களஞ்சியம் சாலை சூழவுள்ள பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனத்தப்பட்டுள்ளது மக்களின் கவனத்திற்க்கு என பெரிய அளவில் அறிவித்தல்கள் வைக்கப்பட்டுள்ளது . இதே வேளை அந்த பகுதியில் உள்நுழைபவர்கள் தீவிர சோதனைக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டும் வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் களஞ்சியசாலை பகுதிமாத்திரம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திருந்தது . தற்போதைய பாதுகாப்பு நிலமைகாரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதாக தெமடகெட பொலிஸார் தெரிவித்தனர் இந்த பகுதியில் அதிகளவு படையினர் பொலிஸார் வைக்கப்பட்டுள்ளனர் http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&…
-
- 0 replies
- 717 views
-
-
500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 500 அறைகளை கொண்ட விடுதி ஒன்றினை கொழும்பில் அமைப்பதற்கு ஹொங்கொங் நாட்டைத் தளமாக கொண்டு இயங்கும் ஷங்கிரி லா நிறுவனத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது என திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் ஷங்கரி-லா லங்கா ஹோட்டல் லிமிடட் என பெயரிடப்படவுள்ள இந்த விடுதிக்காக தற்போதே நிலம் மற்றும் சில தேவைகளுக்காக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்
-
- 1 reply
- 920 views
-
-
பாரிய சிக்கலின் விளிம்பில் குடாநாடு: அவலக்குரல் எழுப்புகிறது யாழ். ஐ.நா. அலுவலகம் [சனிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] நாட்டின் தற்போதைய நிலைமையால் பாரிய சிக்கலின் விளிம்பில் யாழ்ப்பாணக் குடாநாடு நிற்கிறது என்று யாழ். ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. யுனிசெஃப் அமைப்பின் யாழ். பிரதிநிதி ஜூடித் ப்ரூனோ வெளியிட்டுள்ள அறிக்கை: உணவுப்பொருட்கள் விநியோகம் நிறுத்தம், 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 60 ஆயிரம் மக்கள் வெளியேற்றம், மின்சாரமின்மை, குடிநீர் இன்மை ஆகியவற்றால் யாழில் பாரிய ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது அலுவலகத்துக்கு கூட நாளாந்தம் ஒரு மணிநேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. யாழில…
-
- 0 replies
- 796 views
-
-
உரும்பிராய், யோகபுரத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை நேற்றிரவு முதல் காணவில்லையனெ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் காணாமல் போனவரின் சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது. உரும்பிராய் யோகபுரத்தில் வசிக்கும் மகாலிங்கம் அமிர்தராசா (வயது 35) என்ற கூலித் தொழிலாளியே நேற்று இரவு முதல் காணாமல் போனவராவார். வழக்கமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் நேற்று இரவு முழுவதும் காத்திருந்ததாகவும் ஆனால், இன்று காலையும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் காணாமல் போனவரின் சகோதரி தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirr…
-
- 2 replies
- 469 views
-
-
நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. முஸ்லிம் மக்களையும் எமது தாயகப் பிரதேசத்திலுள்ள அனைத்தத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இறுதித் தீர்வுக்கான நடவடிக்கையை எடுப்போம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைர் இரா.சம்பந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு இன்று மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- மஹிந்த அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மக்கள் …
-
- 0 replies
- 392 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பிரதான பொங்கல் விழாவானது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது ஈபி.டி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனராம் தழிழர்களின் தைத் திருநாளாம் தைப் பொங்கல் விழா இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிழக்கில் ஒரு வீட்டிலும் பொங்கள் இல்லை எல்லா சனமும் அகது முகாம்களில் குடா நாட்டில் உள்ள மக்கள் சுயமாக கிழக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் டக்குளஸ் மற்றும் சிங்கள அமைச்சர்கள் தைப்பொங்கள் விமரிசையாக கொண்டாடினார்களாம். இங்கு புதினம் என்ன்வென்றால் கூட்டமைப்பும் போய் நின்றுகொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். வைஸ் அட்மிரல் அஜித் குமாருக்கு நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், மூலோபாய கடற்படை ஒத்துழைப்புக் குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் நாளை தமது சிறிலங்கா பயணத்தை முட…
-
- 0 replies
- 193 views
-
-
சாதீ! பனங்காயின் பனக்காய்த்தனமான ஆய்வு. இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமையினால்.. சாதி வேறுபாடுகள் தலைதூக்கத்தொடங்கியிருப்பத்தாக எமது யாழ்ப்பாண நிருபர் அறியத்தந்தார் ( அதான் பச்சை சட்டை போட்டு மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர்) இந்தியாவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் இதை உக்கிரமாக பரப்புவதாக சொல்கிரார்கள். ஐரோப்பாவில் இருக்கும் மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களும் இதில் அடக்கம்.. எமக்கு இருக்கும் சுயநலம், விண்ணானம் ஆகியவற்றுடன் சாதிவெறியும் சேர்ந்தால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்கமுடியாது. இந்த சாதி பிரச்சினையை நுளைப்பதில் லோக்கல் தமிழ் அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது. விடுதலை, போர…
-
- 20 replies
- 3.4k views
-
-
ராமேசுவரம் மீனவர்கள் நேற்று சுமார் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்துள்ளனர். அவர்களை கண்டதும் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த தங்களது வலைகளை அவசர அவசரமாக எடுத்தனர். ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34020/57//d,article_full.aspx
-
- 0 replies
- 285 views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம். அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய…
-
- 0 replies
- 726 views
-
-
யாழில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் வடமராட்சி மாலை சந்தி மைக்கல் விளையாட்டரங்கில் மாலை நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. இதேவேளை வெசாக் வாரத்தில் மே தினம் வந்தமையில் , மகாநயக்க தேரர்கள் மே தினத்தை பிற்போடுமாறு அரசாங்கத்தை கோரியதனை அடுத்து இலங்கையில் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதி என அரசாங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் மே தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கப…
-
- 1 reply
- 570 views
-
-
இலங்கை சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றது - மத்திய வங்கி ஆளுநர் By Rajeeban 22 Dec, 2022 | 11:28 AM இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின்2…
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியா - இலங்கை இராணுவத்துக்கு சண்டிகாரில் போர்ப் பயிற்சி. இராணுவத்தினால் பட்டினியாகும் தமிழர்களுக்கு உணவு. யாழில் பட்டினியுடன் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு அனுப்ப உள்ளதாக மன்மோகன் சிங் கலைஞ்சர் கருணானிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல் கட்டமாக 5200 மெட்ரிக் தொன் அரிசியும், 1500 மெட்ரிக் தொன் சீனியும், 3000 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவித்தார். India to raise concerns of Tamils to Sri Lanka CHENNAI: Expressing concern over the recent developments in Sri Lanka and the Tamils' plight there, Prime Minister Manmohan Singh said he will convey India's concern to the Lankan President Mahinda Rajapakse in an appropri…
-
- 4 replies
- 1.3k views
-
-
இரவு நேரத்தில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பங்களைத் தொடர்ந்து பொது மக்கள் தமது வீட்டு மின்னினைப்பில் இருந்து வீதிக்கு வெளிச்ச மூட்டி வருவதைக் காணமுடிகின்றது. இதுவரை காலமும் மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைகள் வீதிகளுக்கு வெளிச்ச மூட்ட வேண்டும் எனப் பொது மக்கள் கோரி வந்தனர். கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து தமது சொந்த செலவிலேயே அதிசக்தி வாய்ந்த மின்குமிழ்களை ஒளிரவிட்டு வருகின்றனர்.விழிப்புக்குழுக்கள் இயங்கும் பிரதேசங்களில் வீதிகள் இரவில் வெளிச்சமாக இருப்பது அவர்களது கடமையைச் செய்ய இலகுவாக இருக்கின்றது. இதேவேளை, இராணுவத்தினர் விழிப்புக்குழுவில் கடமை யாற்றும் உறுப்பினர்களுக்கு மும்மொழியில் அமைந்த அட்டை ஒன்றை சனசமூகத் நிலையத் தலைவர்கள் ஊடாக விநிய…
-
- 0 replies
- 480 views
-
-
மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அரியாலை தபாற்கட்டை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு கடற்றொழில் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பொது முகாமையாளர் ருவான் லங்ககோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட மீன்பிடித் திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் http://malarum.com/articl…
-
- 7 replies
- 918 views
-
-
மீண்டும் பறிபோகும் நிலையில் பொன்சேகாவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்தமையால் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் அவரது அமைச்சு பதவியும் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது அவர் ஜனாதிபதியை விமர்சித்திருந்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பணி…
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு! இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1317601
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
லசந்த படுகொலை – புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பு சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், படுகொலை தொடர்பான புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை காவல் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால ஆகியோரை எதிர்வரும் 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். http://www.puthinap…
-
- 0 replies
- 166 views
-
-
முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு? முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார். அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக…
-
- 7 replies
- 781 views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 11, 2011 வெளினாட்டவர்களுக்கு தவறான செய்திகளை வழங்கியபடியால்தான் ஒரு சமைய தலைவரையும் மேலும் நான்கு பேரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் மீறல்கள், சிறார்களின் படங்கள் ஆகியவற்றை வைத்திருந்தனர் என்பதனை பொலிசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.. இந்த ஐவரும் வெளினாட்டில் இருந்து வந்த இரகசிய ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளார்களாம். இந்த தகவல்களை வைத்து போர்குற்ற மீறல்கள் குறித்து பிரச்சாரம் செய்ய இவர்கள் உதவியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. முன்னதாக பொலிசார் விடுதலைப்புலிகளின் பிரச்சார பொருட்கலை வைத்திருந்ததாக கைது செய்ததாக கூறி இருந்தனர். http://www.eelanatham.net…
-
- 0 replies
- 805 views
-
-
5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய்! இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் கடந்த சில நாட்களாக தென்மாகாணத்தில் 5 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வுகூட அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நோயானது பிரதானமாக Influenza எனும் Virus இனால் உருவாகும் நியூமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க நேற்று (18/05/2018) தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையைத் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவ்வறிக்கையில் டாக்டர் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கராப்பிட்டிய ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு: கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு கலைஞர் அவர்களுக்கு ஓர் அவசரக்கடிதம்!.... பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழக மக்…
-
- 9 replies
- 1.9k views
-