Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 14 MAR, 2025 | 04:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதாயின் அதற்கு அந்த தோட்ட முகாமையாளரின் சிபாரிசு கடிதத்தை பெற வேண்டும். இலங்கை மின்சார சபைக்கு தோட்ட முகாமையாளர் ஏன் கடிதம் வழங்க வேண்டும். இந்த முறைமையை மாற்றுங்களெனன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்…

  2. பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்! [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 03:00.12 AM GMT ] பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடும் வழங்கப்படவில்லை. தற்போது …

  3. 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக மாற்றம்! நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டம் நேற்று (புதன்கிழமை) வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ரயில் நிலையங்கள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அபிவிருத்திச் செய்யப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இதேபோன்ற ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்…

    • 2 replies
    • 485 views
  4. தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல். ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய த…

  5. வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளது? -எம்.றொசாந்த் மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/165636/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%A…

  6. சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…. December 18, 2019 வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

  7. இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு! இலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரிய வருவதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதுடன் இலங்கையின் கடலடிப் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆராயும் உரிமையை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து பிரதமர் மோடி விவாதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது இந்திய விஜயத்தின் போது இது குறித்து ஆதரவு தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர கு…

  8. யாழ். உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் காரணமாக அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை அங்கு மீளக்குடியமர்த்துவது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்வதற்கு உரிய உயர் குழுவை உடனடியாக அமைத்து, அது குறித்து அடுத்த வாரத்துக்குள் மன்றுக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்டமையை ஆட்சேபித்து மாவை சேனாதிராஜா எம்.பியும் மற்றும் யாழ். வலிகாமம் வாசிகள் சிலரும் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி திலகவர்த்தனா, கே.ஸ்ரீ பவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு விடுக்கப்பட்டது. ஏற்கனவே இந்த விடயத்தைக் கையாள்வதற்காக பாதுகாப…

    • 0 replies
    • 813 views
  9. வடக்கில் மீள்குடியேற்றம்: ஜனாதிபதியின் முடிவு வெளியாகவுள்ளது! [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 05:05.52 AM GMT ] வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்வின் தகவல்படி, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி, மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதி முடிவை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பெரும்பாலும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேற்றம் தொடர்பாக அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டன்பேரில் அந்தக்குழு ஆராய்ந்து தமது அறிக்கையை தயாரித்துள்ள…

  10. யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் சுமார் 12.30 மணிவரை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை.இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார்.இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ பிரபாகரன் "அடக்கப்படும்போதுதான்' இலங்கையில் அமைதி சாத்தியம் என்றும் அவர் கூறி…

    • 0 replies
    • 798 views
  12. மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதனை திசைதிருப்ப தமிழ் – முஸ்லிம் இனமோதலைத் தூண்டிவிடும் முயற்சிகளில் றிசாத் பதியுதீன் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, நேற்று றிசாத் பதியுதீனின் கட்சியினரால் கொழும்பிலும், கிழக்கிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று ஜும்மா தொழுகையை அடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அத்துடன், மன்னார் ஆயர் இராயப்பு யோசப்புக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். …

    • 0 replies
    • 375 views
  13. ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்! ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகர சபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆ…

    • 0 replies
    • 174 views
  14. இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமையும் பெற்று விட இயலுமெனக் கருதுவது ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும்மொழிகள் [size=3] ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன. இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும…

    • 1 reply
    • 599 views
  15. புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம் -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டப…

    • 10 replies
    • 758 views
  16. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 05:04 PM சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர். https://www.virakesari.lk/article/213594

  17. சூடு பிடிக்கும் டெசோ மாநாடு ..?! ஜாதிக ஹெல உறுமயவும் - மு.க.வின் கைது என்ற கோரிக்கையும்..! ஈழதேசம் செய்தி..!. டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும்..? என்று ஜாதிக ஹெல உறுமிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கே கூறியிருக்கும் செய்தி, நீதிமன்ற அனுமதியைப் பெற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டை இந்திய மத்திய அரசு தடை செய்ய வேண்டும், டெசோ மாநாடு நடத்தும் அதன் தலைவர் மு.கருணாநிதியை கைது செய்ய வேண்டும். இந்த மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து யார் சென்றாலும் அவர்கள் இலங்கையின் துரோகிகள் என்றார். மேலும் தமிழ்நாடு ஒரு மாநிலம், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று, எவ்வாறு ஒரு அந்நிய நாட்டின் கொள்க…

  18. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக இங்கிலாந்துடன் கலந்துரையாடல். " ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்…

  19. முள்ளிவாய்க்காலில் திருச்சடங்கு; அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர் https://akkinikkunchu.com/?p=324771

  20. நீரிழந்தகுளமும் நிலைமறந்த அதிகாரிகளும். இரணைமடுக் குளத்தின் நீர்தட்டுப்பாடும் துலங்கும் மர்மங்களும் 06 ஆகஸ்ட் 2012 இது ஒரு செய்தி ஆய்வு- நடராஜா குருபரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் அமைந்திருக்கும் இரணைமடுவும் இரணைமடுக் குளப்பிரதேசமும் வடக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாறியுள்ளன. விடுதலைப்புலிகளின் காலத்திலும் இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதியில் அவர்கள் விமான ஓடுதளமொன்றை அமைத்து அதனை இராணுவக் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகப் பேணியிருந்தனர். இப்பொழுது அந்த இடத்தை இலங்கைப் படையினர் மூன்று மடங்காக விஸ்தரித்துள்ளதை அவதானிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை இலகுவில் எவராலும் புரிந்து கொள்ள முடியும். இ…

  21. வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என தெரிவித்தமையால் சர்ச்சை..! (ப.பன்னீர் செல்வம்) வரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந்து தவறை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நினைவுபடுத்தினார். ஜனாதிபதி செயலகமும், விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடாத்தும் “நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு” என்ற தொனிப் பொருளினாலான கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வவிசாய அமைச்சின் செயலாளர் விஜேயரத்ன வரவேற்பு…

    • 1 reply
    • 395 views
  22. மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அ…

    • 2 replies
    • 1.2k views
  23. தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை! உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433137

  24. போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் -கேணல் பானு போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாகி வருவதாக, கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் - மணலாறு களமுனைகளில், சிறப்பாக செயலாற்றிய பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வு, நேற்று வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது சிறப்புரையாற்றிய மன்னார் போர்முனை கட்டளை தளபதி கேணல் பானு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி, யுத்த களமுனைகளில் திறம்பட செயற்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். மன்னார் களமுனைகளில் …

  25. சிறிய தேர்தல்களை நடத்தி மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தாது, முடிந்தால் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். தேவையற்ற தருணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இரண்டு மாகாணங்களில் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை வெளிகாட்டுவதே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இந்த தேர்தலுக்கு 40 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.…

    • 0 replies
    • 485 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.