ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான தமிழரசு கட்சியின் உபதலைவர், பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலம் அவர்கள் சீனாவால் அழைக்கப்பட்டுள்ளார். 27 ஆம் திகதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது. இது ஒரு வழமையான நிகழ்வுதான் என தமிழரசு கட்சி கூறியபோதும் முன்பு எப்போது இவ்வாறு அழைக்கப்பட்டனர் என கேட்கப்பட்டதற்கு பதில் தரப்படவில்லை. தமிழர் தேசிய கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர்களின் தனித்துவத்தை அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக பரவலாக எண்ணப்படுகின்றது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எது நிராகரிக்கப்பட்டதோ அதை மகிந்த அரசால் தரமுடியாது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் …
-
- 6 replies
- 1.5k views
-
-
புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து "கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார். சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானத…
-
- 1 reply
- 1.5k views
-
-
சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஏழு வயதான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மௌலவி ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை – வெலிபென்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வெலிபென்ன நகரைச் சேர்ந்த 34 வயதான மௌலவி ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளிவாசலுக்கு சென்று கடந்த 2 வருடங்களாக மார்க்கக் கல்வியை கற்று வந்துள்ளதாகவும், அண்மையில் சில நாட்களாக தமது பிள்ளை இவ்வாறு மௌலவியினால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறுவனின் பெற்றோர் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக நபர் சிறுவனுக்கு ஆபாசப் படங்களைக் க…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: தயா மாஸ்டர் வெலிக்கந்தை ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீர்ப்பாசனத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிங்களத் தொழிலாளர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தடையைத் தொடர்ந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தியுள்ளனர். துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் அக்கிராமத்தில் இயங்கி வந்தனர். இப்படுகொலைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.விபரங்களுக்கு
-
- 1 reply
- 1.5k views
-
-
கரூர் மாவட்டத்தின் இலங்கை அகதி முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியசாலையில் நேற்று மரணம்‐ இறுதி வாக்குமூலம் இணைப்பு தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்;று (28.03.10) உயிரிழந்துள்ளார். கடந்தவாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர். இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல…
-
- 10 replies
- 1.5k views
-
-
சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதியை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளே அதிக முக்கியத்துவம் வழங்கி வந்தன. அத்துடன் குறித்த ஊடகங்களே சுயாதீனமாக இயங்கிவருகின்றன. இதன் காரணமாக அந்த ஊடகத்தின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில், படையினர் இந்த சுற்றிவளைப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் பாதுகாப்பு கருதி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று நடத்திய செய்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
1 மணி நேரம் முன் இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம். …
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ? கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். 1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடு…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்…
-
- 8 replies
- 1.5k views
-
-
திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை. 1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம். 2.காணி அதிகாரம். 3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம். 4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம். 5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை. இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்
-
- 23 replies
- 1.5k views
-
-
எனக்கு சீமான் மீது மிக அதிக ஈடுபடும் ப்ரியமும் உண்டு. காரணம் அவரது மிக வாஞ்சையான நட்பு. இன்றைக்கு சிறந்த பேச்சாளாராக சீமான் அறியப்படுவதற்கு முன்னால் சாலிக்கிராமத்தில் இருந்த அவரது இல்லத்திற்கு நானும் ஒளிப்பதிவாளர் செழியனும் எப்போதாவது செல்வோம். செழியன் தினம்தோறும் அங்கு செல்வார். நான் எப்போதாவது செல்வேன். மாலை நேரங்களில் சென்றால் அந்த வீட்டுக்கு வலப்பக்கமாக இருக்கும் திடலில் வலைகட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பார் சீமான். அதுவே மதிய நேரம் சென்றால் பல நேரங்களில் நல்ல உணவு அவரது இல்லத்தில் கிடைக்கும். ஆனால் சீமானைச் சந்தித்து சிறிது நேரம் பேசினாலே உற்சாகமாக இருக்கும். பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவரது குணம் எல்லோரையுமே வசீகரிக்கக் கூடியது. சாதாரண கிராமத்தான், கருப…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சிறிலங்கா அரசு சீனாவுடன் நெருங்கிச் செல்வது குறித்து தனது அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், இந்தியா ஒரு பிராந்திய சக்தி (Regional power)என்பதை வலியுறுத்திய நாராயணன், எமது வெளியுறவு கொள்கையின் வரம்புக்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இலங்கை தனது இராணுவ தேவைகளுக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய உச்சக்கட்டம் இதுவாகும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னரும் மகிந்த நிர்வாகம் தமது சீனாவுடனான நெரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
வாஷ் அவுட் ஆனது ரத்தசரித்திரம் - நஷ்டத்தை ஈடுகட்ட இறங்கி வந்தார் சூரியா! தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள் கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர். இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது! [Tuesday 2020-01-21 08:00] மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. இதில் …
-
- 9 replies
- 1.5k views
-
-
Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் 02.00 PM - தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. 02.02 PM - சபாநாயகர் கருஜயசூரிய மன்றுக்கு வருகை 02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கின்றார். 02.0…
-
- 3 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுதொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அர…
-
- 1 reply
- 1.5k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஜே.வீ.பீயில் இருந்து பிரிந்து நிற்கும் விமல் வீரவன்ஸவின் அணியை சேர்ந்த சுஜாதா அழககோன், சோமவன்ஸ அணியினரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக.......................... ................ தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7022.html
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் தி. மகேஸ்வரன் கடந்த வருடம் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்து பாதுகாப்பு உயரதிகாரிகளைப் பார்த்து ஓர் எச்சரிக்கையை விடுத்தார். நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடல், சட்ட விரோதப் படுகொலைகளைக் கண்டித்து ஆவேசமாக உரையாற்றிய அவர், ஆட்சியிலிருப்பவர்களின் தூண்டுதலின் பேரில் பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகைய அரச பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்தும் துணை போவார்களானால் அடுத்த ஆட்சியில் கட்டாயம் அதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற அறிவுறுத்தலையே பகிரங்கமாக அவர் அன்று அங்கு வெளிப்படுத்தினார். ஆட்சிப் பீடத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்குத் துணைபோகும் அரச…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 110ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். குருநகரிலுள்ள அவரது சிலைக்கு இன்று செவ்வாய்க்க்கிழமை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்போடு அரசியல் நடத்திய மாமேதை பொன்னம்பலம் தமிழர்களின் இதயங்களிலிருந்து என்றும் நிங்காதவர். தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு உயிரோட்டமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தார் என அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 13 replies
- 1.5k views
-
-
[size=6]கருணாநிதியின் கபட நாடகம்![/size] - பழ. நெடுமாறன் [size=4]தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகு…
-
- 5 replies
- 1.5k views
-
-
வான் கலங்கள் அழிக்கப்பட்டது கவலையில்லை: அரசின் நடவடிக்கைகள் தொடரும் " மகிந்த " சிறீலங்கா வான் படைக்கு சொந்தமான வான் கலங்கள் விடுதலைப் புலிகளின் தற்கொடை அணியினால் அழிக்கப்பட்டது தனக்கு கவலையைத் தரவில்லை என, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டது கவலையைத் தருவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ராஜபக்ஷ சூழுரைத்திருக்கின்றார். சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ள தனக்கான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்தும் வகையிலேயே அதிபர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எட்டு வான் கலங்கள் மட்டுமே விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங…
-
- 3 replies
- 1.5k views
-