Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…

  2. பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் கொலை பிரித்தானிய செஞ்சிலுவை சங்க தொண்டர் தங்காலை விடுதியில் கொலை செய்யபட்டுள்ளர். ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இறந்தவரின் மனைவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,இதை கண்ணுற்ற கணவன் தட்டிகேட்டதாகவும் ஆரம்ம கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சம்பத் சந்து புஸ்பவும் அவரது சகாக்களும் ஆயுத பிரயோகம் செய்துள்ளனர்.இறந்தவரான பிரித்தானிய பிரசையின் பெயர் குரும் சேக்.

  3. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்ற…

  4. வடக்கு கிழக்கிலிருந்து 2012 இல் இராணுவத்தை முற்றாக விலக்குக! ஆசிய மனிதவுரிமை ஆணையம் கோரிக்கை வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி, சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிசெய்தல், போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புனர்வாழ்வளித்தல், நீதியின் முன் நிறுத்தப்படாது இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தல், மற்றும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்படல் என்பன புதிய ஆண்டில் சிறிலங்காவில் நிறைவேற்றவேண்டிய மாற்றங்கள் பற்றிய எமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் என்ற…

    • 0 replies
    • 1.2k views
  5. தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரி்த்தானியாவை தளமாக கொண்ட உலகத் தமிழர் பேரவை இந்த விழாவில் பங்கேற்பதாலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது. டர்பனில் இன்று நடைபெறு்ம் ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டதாலேயே, இந்த நிகழ்வைப் புறக்கணித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. இல்லையேல், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப…

    • 5 replies
    • 802 views
  6. பிரகீத் கடத்தலுடன் தொடர்புடையோரை பாதுகாக்கும் இராணுவம்! [Thursday 2015-08-20 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் இதனைத் தெரிவித்துள்ளனர். எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட மூன்று இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேலும் நான்கு இராணுவத்தினரை கைது செய்ய பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த நான்கு இராணுவத்தினரையும் இராணுவ உயரதிகா…

  7. தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிஜி தீவின் நீதிபதியாக, இலங்கையின் தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் நியமனம் பெற்றுள்ளார். பிஜியின் ஜனாதிபதி Ratu Epeli Nailatikau மற்றும் பிஜியின் பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக “தெ பிஜி டைம்ஸ் ஒன்லைன்” செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பட்டதாரியான பிரபாகரன், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும் கடமை புரிந்துள்ளார். அத்துடன் இலங்கையின் உயர் நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாக பிரபாகரன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=3268

  8. ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 'சனல் 04' தொலைக்காட்சி சேவைக்காகவே முதலில் தயாரிக்கப்பட்ட, ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் நீண்டு செல்லும் இவ் ஆவணப்படமானது DRG வழங்குனர்களால் அவுஸ்திரேலிய ஒலி, ஒளிபரப்பு சேவையான ABC க்கும், இந்தியாவின் AETN 18 மற்றும் TV Today Network ஆகியவற்றிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான காட்சிகளை ஆவணப்படுத்திய 'சிறிலங்காவின் கொலைக்களங்க…

  9. எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேராSEP 03, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா இராணுவம் நடத்திய இரண்டு நாள் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, உரையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா, “கடந்த நூற்றாண்டில் தீவிரவாதம் தனது பழைய முகங்களை மாற்றியுள்ளது. தீவிரவாதத்தின் ஐந்தாவது அலையைத் தடுத்து நிறுத்த, அனைத்துலக சமூகம் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் அடு…

    • 3 replies
    • 722 views
  10. குறுக்கே பாய்ந்த சருகுபுலியால் இருவர் பலி மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19) மற்றும் கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்துகொண்டிருந்துள்ளனர். அப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதி…

  11. அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்SEP 08, 2015 | 5:58by கார்வண்ணன்in செய்திகள் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் சிறிலங்கா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு அனைத்துலக விசாரணை. இந்த நிலையில் இன்னொரு அனைத்துலக விசாரணை தேவைய…

  12. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீனைக் காணவில்லை என்று அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் பதவியேற்றதன் பின் மேற்கொள்ளும் முதல் விஜயமாக இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை …

  14. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருந்தார். …

  15. அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் இலங்கையில் ஆரம்பம்! அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது வெளிநாட்டு நிறுவனமாகும். இதேவேளை இந்த நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்ய இந்தியாவின் ஐஓசி, சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1396826

  16. மேற்குலகம் எமக்கு தொடர்ந்தும் அழுத்தம் தருகின்றன அது ஏன்? இவ்வாறு கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அமெரிக்க குழுவினரை நேற்று சந்திக்கும்போதே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறெல்லாம் மேற்கொண்ட போதிலும் மேற்குலக நாடுகள் எமக்கு அநீதியையே இழைக்கின்றன. மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் எமக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார். http://www.se…

  17. இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள…

  18. July 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . …

  19. கோத்தாவை சிறையில் அடைத்தாலும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவார்-உதய கம்மன்பில தெரிவிப்பு கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும். கோத்தபாய ராஜபக்க்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எம்புல்தெனிய மெக்ரின் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், சிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். …

    • 1 reply
    • 329 views
  20. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதில்லை என்ற தீர்மானமானது எனது தனிப்பட்ட முடிவல்ல. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாகும். ஜெனீவா செல்லாவிட்டாலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேசநாடுகளுடன் பேசிவிட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் ஊடகவியலாளர் ஒரவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: கேள்வி: ஜெனிவா விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதாக எடுக்கப்பட்ட முடிவு தனிப்பட்ட முடிவா? பதில்: இல்லை. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு கேள்வி: ஜெனிவா கூட்டத்தொடர் புறக்கணிப்பு சம்பந…

  22. இலங்கை இலவசமாக எதையும் எதிர்பார்ப்பதில்லை : இந்திய துணைத்தூதுவர் இலங்கை மற்றைய நாடுகளுக்குள்ளே அவர்களுடைய உதவிகளை எதிர்ப்பார்க்காது, நமது இந்திய தேசத்தில் இருந்து தான் கூடுதலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கூறினாலும், கூறாவிட்டாலும் இது ஒரு உண்மையான விடயம், என்றாலும் அவர்கள் எதனையும் இலவசமாக எதிர்பார்ப்பதில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்தார். இன்றைய தினம் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்தும் விசேட மாநாடு யாழில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். எமது இந்திய தேசம் வர்த்தகத்திலும் சரி,பொருளாதாரத்திலும் வேகமாக உயர்ந்து சென்றாலும் எமது அண்டை நாடான இலங்கையும் முன்னேற வேண்டும். இலங்கை …

  23. பாலியல் வதை முகாம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருக்கும் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக களமறங்கவிருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு முறைப்பாட்டின் தமிழாக்கம் இது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் பணிப்புரையால் மேற்கொள்ளப்பட்டதும், அவரின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டதுமான மோசகரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த முறைப்பாட்டின் தமிழாக்கம் 107 பக்கங்களைக் கொண்டது. இந்த வழக்கைத் தொ…

  24. மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  25. வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மதியம் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிய கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். அவர்களது போராட்ட களத்தில் மதியம் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து (சிங்கள அதிகார ஜனநாயகத்திலிருந்து) தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை. எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற …

    • 1 reply
    • 687 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.