ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/blog/page10.html
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா இராணுவம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கீழ் வருமாறு கூறியுள்ளது. இராணுவ 51வது படைப் பிரிவின் தலைமையகம் யாழ். நகரப்பகுதிக்கு வெளியே உள்ள இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர் [19 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:30 மு.ப இலங்கை] அண்மைக்கால தமிழ் சினிமாவில் ஒரு காட்சி. வெற்று வாயால் வெட்டி வீழ்த்தி வாய்ச்சவடால் பண்ணும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எடுப்புகளைப் பார்த்து ஊர் மக்கள் அசந்துபோய் வாய் பிளப்பர். அதைக் கண்டு கைப்பிள்ளை வடிவேலுவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். "இன்னுமா உலகம் எங்களை நம்புகின்றது?" - என்று தன்னை மறந்து தோழர்களிடம் அக்காட்சியில் கேட்பார் வடிவேலு. அதுபோலத்தான் இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இப்போதும் கயிறுவிட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கும். வாழ்வா, சாவா என்ற இறுதிக் கட்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஈழத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் யூன் மாதத்தில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது. அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர சங்கரியின் கட்சியும், மற்றும் சில ஆயுதக் குழுக்களும் இணைந்து அன்று திம்பு பிரகடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் தமிழர் தாயகத்தைக் கூறு போட எண்ணி பேரினவாதத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, இவ்வினத்திற்கு துரோகம் இழைக்க சங்கரியும் மற்றும் தமிழ் குழுக்களும் முயல்வதாக அரசியல் ஆய்வாளரான குசலா பெரேரா தெரிவித்துள்ளார். சங்கரிக்கு, குசலா பெரேரா அனுப்பியுள்ள கடித்தில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவது சிங்களப் பேரினவாத்தின் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்கும் கபட எண்ணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. அத்துடன் சங்கரி மற்றும் தமிழ் குழுக்கள் திம்பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
உறவுகளே விரைந்து செயற்பட இறுதி அழைப்பு சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன…
-
- 0 replies
- 1.3k views
-
-
பௌத்த சங்க பிரதிநிதிகளை சந்திக்க பிரிட்டன் தூதர் மறுப்பு பௌத்த சங்கங்களின் சம்மேள னப் பிரதிநிதிகளை சந்திக்க கொழும்பி லுள்ள பிரிட்டிஷ் தூதுவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக மேற்படி பௌத்த சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் பிரிட்டிஷ் தூதுவர் சிவில் சமூகங் களை சந்திக்கப் பயப்படுகிறார். பயங் கரவாத பிரச்சினை தொடர்பாக பிரிட் டிஷ் அரசாங்கமும் இலங்கையிலுள்ள அதன் தூதுவரும் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் எம்மை கவலை கொள்ளச் செய்துள்ளன. பிரிட்டனுடனான இலங்கை யின் உறவுகளை பெரிதும் பாதிக்கும் வகையில் அலுவல்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட் டுள்ளது உதயன்
-
- 3 replies
- 1.3k views
-
-
இது ஒரு முக்கியமான தருணம். தவறவிடக் கூடாத அதி முக்கிய தருணம். தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது போல், தமிழகத் தலைவர் முதல்வர் முதல், தமிழகத்துப் பாமரன் வரையுள்ள தமிழபற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டுள்ள நேரமிது. இந்நேரத்தில் தவறிவிட்க் கூடாது , தடுமாறிவிடக் கூடாதென்னும் அக்கறையில் எழுதப்படுவது இது . ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்கனவே தவறவிடப்பட்ட தருணங்கள் சிலவற்றைசுட்டிக்காட்ட விரும்புவது. இனிலரும் பொழுதில் எடுக்கவேண்டிய அடியை தளம்பாது எடுத்து வைக்க எண்ணுவதுஈ என்ற வகையில் அமைகிறது. இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களவர்களில், ஏழைத்தொழிலாளியாய் வாழ்வு நடத்தும் சராசரிச் சிங்களவரிடம் வேண்டுமானால் இல்லாது போகலாம் இனத்துவேசம்.மனிதாபிமானத்தின
-
- 0 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான வேலைத்திட்டங்களை அடுத்த பாராளுமன்றத்தில் முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன என்றும் அதற்கு எவ்வாறான அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வினவியதற்கு பதி…
-
- 10 replies
- 1.3k views
-
-
2006 தொடக்கம் 2009 முள்ளிவாய்க்கால் வரை கம்பி எண்ணும் ஜெனரல் சரத்துக்கு எஜமானனாக கொலைகார இந்திய தரைப்படையின் செவிட்டு பார்ப்பான் ஜெனரல் தீபக் கபூர் விளங்கியதாக அவுட்லுக் முன்னாள் நிருபர் நிக்கல் கோகளே பத்திரிகை விவரிப்பில் தெரிவித்துள்ளார்.இவர் மாத்திரமே போர் நடந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.புலிகளின் தோல்வியை இவராலும் கணிக்க முடியவில்லையாம்.
-
- 7 replies
- 1.3k views
-
-
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு by : Jeyachandran Vithushan 2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சில தரப்பினரால் வதந்திகள் பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உயர்தரப்-பரீட்சை-ஒத்திவை…
-
- 14 replies
- 1.3k views
-
-
இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம். [Friday, 2014-04-18 10:03:55] புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக சிவப்பு எச்சரிகை அறிவிப்பு (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலி சந்தேகநபர்கள் 40 பேரும், கொலை, போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டுவரும் 56 பேரும் இந்த அபாய அறிவிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புலி உறுப்பினர்களான விநாயகம், நெடியவன…
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 20:16 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் முஸ்லிம் வர்த்தகர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெறப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்து வருவது திட்டமிடப்பட்ட வதந்தி என்று பேரிடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்களுக்குள்ள நெருக்கத்தையும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவையும் சிதைப்பதற்கான முயற்சியே இவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் ஏற்படப் போகும் பாரிய மாற்றங்கள். சிறிலங்காவின் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட ஒரு வருட பதவி நீடிப்பு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் இந்த பதவி நீடிப்பு அவருக்கு அடுத்த நிலையில் இராணுவத் தளபதியாகும் கனவுடன் இருந்த மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சியை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பணியில் இருந்து ஓய்வெடுப்பதற்கு ஏதுவாக நந்தா மல்லவராச்சி தற்போது விடுமுறையில் இருக்கின்றார். மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி மாவிலாறு இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தியதுடன் ஆறு மாதங்கள் கிழக்கிலேயே தங்கியிருந்து பணி புரிந…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக கிராமப்புற மக்களின் கொந்தளிப்பை ரணிலுக்கு எதிரான மறியல் காட்டுகின்றது -சிங்காரவேலன்- ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டிய அரசியல் தீவிரம் தமிழக அடித்தள கிராமங்களில் மிகவும் கூடுதலாகி வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் ஒதுங்கிய, ஊடகங்களின் கருத்துக்கள் கூட போய்ச்சேர முடியாத கிராமங்களிலும் பெரும் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு பொதுமக்களின் போராட்டம் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கிராமத்து மக்கள் எத்தகைய எழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிராமத்து மக்கள் கோபத்துடன் தொடர் மறி…
-
- 1 reply
- 1.3k views
-
-
பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணு…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Sun Jun 10 7:37:33 EEST 2007 83 வயதான முதியவருக்கு சோதனைச் சாவடியில் ஏற்பட்ட கதி! அவர் நடப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். அவரது வயதின் முதிர்ச்சியை உடலில் காணமுடிகிறது. உற்றார், உற வினர்களின் உதவியின்றி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் அரச ஊழியர். அத னால் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு கள் சம்பந்தமான விடயங்களுக்கு அங்கு செல்ல வேண்டுமாயின் தாமே வருவ துண்டு. அதிக தூரம் நடக்க முடியாத, பஸ்ஸில் தானும் அடிக்கடி ஏறமுடியாத முதியவர் அவர். அவருக்கு வயது 83. கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் செயலகத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. எவரது உதவியுமின்றித் தாமே வந்தார். அலுவலை முடித்துக் கொண்டு திரும்பியபோது ஏற்பட்டஅனுபவம் அவரை விரக்தியுடன் பேச…
-
- 0 replies
- 1.3k views
-
-
பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு? பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
17.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/video/304/E...avan-17-06-2008
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2008-01-05 சர்வதேசத்தையே உதாசீனப்படுத்தும் பௌத்த சிங்கள மேலாண்மைவாதம் பேரழிவுகளில் சிக்கி அவலப்பட்டு, அல்லலுற்றுத் தவிக்கும் இலங்கைத் தீவின் மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நப்பாசையுடன் காத்திருந்தனர். ஆனால் முழு அளவில் போர் வெடிப்பதற்கு வழி திறந்து விடப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்புடனேயே தை மகள் வந்திருக்கிறாள். தைப்பொங்கலின் போது புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கும். அடுத்த நாள் ஆவினத்துக்கும் அதே பொங்கல். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இம்முறை அதற்கு அடுத்தநாள் தொடக்கம் வேறு பொங்கலும் காத்திருக்கிறது. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தொடக்கம் இலங்கையில் பொங்கப் போவது போர்ப் பொங்கல். அது தினசரி தொடரப் போகின்றது என்பது பெரும்பாலும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae
-
-
- 22 replies
- 1.3k views
- 2 followers
-
-
சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி உண்மையை பேசுவார்: சம்பந்தன் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத…
-
- 19 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் உலகு எங்கும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று 47 இடதுசாரி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-