ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர். சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, "13'இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார். வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி முயற்சித்து வருகின்றது என்றும், ஆனால் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய பங்காளிக்கட்சிகளும், அரசு சார்பான சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் இவ்விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் "உதய'னிடம்…
-
- 0 replies
- 744 views
-
-
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் எனவும் இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகள் ஐரோப்பிய புலி வலையமைப்புடன் தொடர்பு பேணி வருவதாகவும்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருப்பதாகவ…
-
- 0 replies
- 267 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது - மோடி இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். பாஜகவுக்கு ஆதரவாக நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்தார். முதலில் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் நாகர்கோவிலில் பேசினார். அங்குள்ள நாகராஜா கோவில் திடலி்ல் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பேசிய மோடி, பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, பாரத நாட்டின் தென்கோடியில் வாழும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு எனது வணக்கம் என தமிழில் பேசினார். பின்னர் மோடி பேசிய…
-
- 0 replies
- 601 views
-
-
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார். அவரும் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந் தேதி தவராஜா இலங்கைக்கு சென்றார். பிறகு 29-ந் தேதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் வந்தார். கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தவராஜாவும், அவர் மனைவி சலஜாவும் வந்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கு சென்றனர் என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் லண்டனில் உள்ள தவராஜாவின் மகள் தர்ஷ…
-
- 2 replies
- 994 views
-
-
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்பு; இந்திய வர்த்தகர்கள் வேண்டுகோள் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக தொழில்முனைவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’யில் கலந்துகொண்டபோதே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர். கடந்த 27ஆம் திகதி யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 65 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இதில் பேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை-இந்திய வர்த்தக உறவுக்கு தரைவழித் தொடர்பு மிக முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 286 views
-
-
2ஆம் இணைப்பு: முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதிக்குள் படையினர் நுளைவு? இருதரப்புக்கும் கடும் மோதல் சுயாதீன தகவல்கள் வெளியாகவில்லை கொழும்பிலும் அனுராதபுரத்திலும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடராக ஓடுகின்றன காயப்பட்ட படையினர் பெருமளவில் தெற்கு நோக்கி:பெருமளவு மக்கள் கொல்ப்பட்டு இருக்கலாம் என அச்சம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி சூனியப் பிரதேசமான வட்டுவாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மோதல்கள்; இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று மாலை படைத்தரப்பு பெரும் முயற்சியின் மத்தியில் படைத்தரப்பு வட்டுவாகல் பகுதியைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இன்று அதிகாலை 3மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக…
-
- 0 replies
- 2.7k views
-
-
அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற் றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற் கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற் றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமா…
-
- 13 replies
- 3.1k views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே அமெரிக்க அரச தலைவரினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபியரின் வெண்ணையை திருடி தின்னும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான். அவரது கலகம் நன்மையில் முடியும் என்பதால் அவரும் ஒரு நல்ல கில்லாடிதான். கம்பன் கழக காப்பாளர் கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு…
-
- 0 replies
- 547 views
-
-
http://www.france5.fr/c-dans-l-air/index-f...d_rubrique=1161 or http://kelvi.net/?p=2250
-
- 1 reply
- 1.8k views
-
-
மக்களுக்கு ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்த முன்னர் அதிகார போதையிலுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கும், அவரது சகாக்களுக்குமே ஒழுக்கக் கோவைத் தேவைப்படுவதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18003
-
- 0 replies
- 344 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாடு பிரிவதை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அல்லது அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட ஐந்து விடயங்கைள அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நீக்கிவிடவேண்டும் என்று பெளத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பெளத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டி…
-
- 2 replies
- 552 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.அத்துடன் மிக குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்தோரை நலன்புரி முகாம்களிற்குள் ஒன்று சேர்க்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பல எடுத்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன் போது உரையாற்றுகையிலேயே ஹெத் சூலர் இதனை தெரிவித்தார். தமது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழுவினர் வவுனியா மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தனர்.அமெரிக்காவிற
-
- 1 reply
- 949 views
-
-
பிரதான வீதியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் அடித்து நொருக்கப்பட்டது முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் நேற்று மாலை இரண்டு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சுமார் 20 பேர் வரை கத்திகள்.சைலன்சர் கொண்டு அடிதடியில் ஈடுபட்டதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டு புரட்டியபடி வீதியோரம் இரவிரவாக காணப்பட்டது. இரு கும்பல்கள் அவ்விடத்தில் அடாவடியில் ஈடுபட்டதோடு, அவர்களால் வீசப்பட்ட கற்கள் அயலில் உள்ள வீடுகளுக்கு மேல் வீழ்ந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது. இக் கோஷ்டி மோதல்கள் குறித்து பொலிஸாருக்கு அப்பிரதேச மக்கள் அறிவித்ததை அடுத்து பொலிஸ்,அதிரடிப்ப…
-
- 0 replies
- 258 views
-
-
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருன்கிறதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடல் வளத்தையும் எமது கடற்றொழிலாளர்களையும் பாதிக்கும் இந்திய மீனவர்களது எல்லைதாண்டும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை…
-
- 0 replies
- 470 views
-
-
சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்…
-
- 3 replies
- 892 views
-
-
ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். தொடர்ந்துவாசிக்க,. http://tamilworldtoday.com/?p=21207
-
- 1 reply
- 705 views
-
-
யாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி ‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். சங்கானது வாழ்வுக்கும் இறப்புக்கும் தனது பங்களிப்பைச் செய்து சிறப்படைகிறது’. என்று யாழ்.வலிகாமப் பகுதி ஒன்றில் இயங்கும் பிரதேச அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் எனது நண்பன் அக்கம் பக்கம் பார்த்தவாறு தத்துவம் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லையே யாருக்கு இந்த தத்துவத்தை சொல்கிறான் என்று கேட்பதற்காக அவன் பக்கம் சென்று ‘என்ன சொல்லுகிறாய்’; என்று கேட்டேன். அவனோ ‘சங்கானது மனிதனின் வாழ்வுக்கும் இறப்புக்கும் பயன்படுவது போல் இந்த அலுவலகம் தனது பணியைச் சரி…
-
- 0 replies
- 478 views
-
-
இந்திய மீனவர்கள் அத்துமீறல்- கடல் வளம் அழிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு 41 Views இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எதிர் காலத்தில் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமன்னார்,பேசாலை , சிறுத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களி…
-
- 0 replies
- 265 views
-
-
அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் இலங்கை அரசாங்கம் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களித்திருந்தது. இதனை அடுத்தே இலங்கை அரசாங்கம் அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் பாகிஸ்தானுடன் ஈடுபட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம், அணு ஆலை தொடர்பில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையினை இலங்கை இழுத்தடிப்புச் செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74949-2013-07-14-09-51-36.html
-
- 1 reply
- 490 views
-
-
வடக்கு மாகாண தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ,போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர்கள் ,சுகாதாரப் பிரிவினர் , முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள் நாளைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு கொரோனா நிலைமை தொடர்பில் ஆராய அவசர கூட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 226 views
-
-
இவரின் கடிதம் பொப் ரேயை (Bob rae)திருப்பி அனுப்ப உதவியதா? Was expat behind Bob Rae's woes? In her June 8 opinion piece Irangani de Silva urged Foreign Secretary Palitha Kohona to rip up a visa granting Bob Rae entry to Sri Lanka from June 10 to 12 because his report back to Canada would surely tarnish the country’s image. Print Bob Rae's nightmare Bob Rae statement 20,000 reported dead Warzone a wasteland Eatery targeted, Sinhalese say 'Photo shows rebel leader dead' Sri Lanka war timeline Tigers' elusive leader PHOTOS: Tamil protest Video: Gardiner closed Photos: Protest closes Gardiner Article by influential Sri Lankan in London, Ont., may have l…
-
- 1 reply
- 1.8k views
-
-
PLOTன்முன்னாள் மத்தியகுழு உறுப்பினரும் நிர்வாகப் பொறுப்பாளருமான குமரன்- பொன்னுத்துரை காலமானார்! 18 ஜூலை 2013 குமரன் என்றும் பொன்னுத்துரை என்றும் அறியப்பட்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை இன்று (யூலை 18 2013) மதியம் காலமானார். கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடதுசாரி செயற்பாட்டாளரும் காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் களகம் – (PLOT) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய க…
-
- 2 replies
- 474 views
-
-
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம் ! விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம் May 7, 2021 நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. …
-
- 0 replies
- 323 views
-