ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியா சிறிலங்காவுடன் இன்னமும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக ஜெனீவா வாக்கெடுப்பை பயன்படுத்தலாம் என ராஜபக்ச நம்பியிருந்தார். இவ்வாறு நேப்பால் நாட்டை தளமாகக் கொண்ட Himal Southasian என்னும் ஊடகத்தில் Ajaz Ashraf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியா மீது அதிருப்தி கொண்டுள்ளதுடன், இவ்வாறான சதித் திட்டத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் சிறிலங்கா மத்திய அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகில் ஆபத்தான வெடிபொருள் அபாயம் உள்ள பிரதேசம் முகமாலை - ஹலோ ட்ரஸ்ட் உலகில் மிகவும் ஆபத்தான மிதி மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் உள்ள பிரதேசமாக முகமாலை பிரதேசம் உள்ளது என மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 13 வருடங்களாக கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் குறித்த நிறுவனம் அண்மையில் முகமாலை பிரதேசத்தில் இரண்டு இலட்சம் மிதி வெடிகளை அகற்றியிருந்தது. குறித்த நிறுவனத்தின் தகவலின் படி ஈராக் அல்லது முகமாலை பிரதேசமா உலகில் ஆபத்தான மிதிவெடி மற்றும் வெடிபொருள் ஆபாயம் உள்ள பிரதேசம் என்பது தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெற்று வருகிறது எனவும், ஆனால் ஈரர்ககை விட முகமாலை பிரதேசத்திலேயே மிதிவெடி ம…
-
- 0 replies
- 895 views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30பொதுமக்களின் நினைவு தினம் நேற்றுமுன்தினம் (23) அனுஷ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுகொலைசெய்தனர். கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர். இவர்களை நினைவுகூரும் வகையில் …
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து காந்தன் என்பவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய கருணாநிதி திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த்துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி பிரபாகரன் சிறந்த வீரர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா தெரிவு December 31, 2015 பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தொடரில் தங்கப் பதக்கத்தையும் வென்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவியான ஜே.ஜே.பி.டினேஜா வடமாகாணத்தின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு வர்ண இரவுகள் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரினால் நேற்று கௌரவிக்கப்பட்டார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய 6ஆவது வர்ண விருது வழங்கும் நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளார் இ…
-
- 0 replies
- 450 views
-
-
கடலூர், ஏப். 12: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் வாழ்வுரிமை கருத்தரங்கில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களையும் இதர உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும். கடற்கரை மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீன் பிடிக்கச் ..................... தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3433.html
-
- 1 reply
- 1k views
-
-
பாக். பிரதமர் வந்தடைந்தார்... பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.(படங்கள்: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/163021/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.fk39wJMI.dpuf
-
- 0 replies
- 299 views
-
-
கிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம் -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 11 மணியளவில் கு…
-
- 1 reply
- 657 views
- 1 follower
-
-
இலங்கை விமானப்படை முதற் தடவையாக தனது 'கீபிர்' மற்றும் 'மிக்' தாக்குதல் விமானங்களின் இரவு நடவடிக்கைகளுக்கான துணைக் கருவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கருவிகளைப் பயன்படுத்தி நள்ளிரவு வேளைகளில் புலிகளின் எந்தவோரு கேந்திர நிலையங்கள் மற்றும் கடற்புலிகளின் படகுகள் மீதும்; தாக்குதல் நடத்த முடியுமென சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியோருவர் தெரிவித்தார். புலிகள் தமது இலகு ரக விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமானத்தளம், கொலன்னாவ எனண்ணெயக் குதம் மற்றும் அநுராதபுரம் விமானப் படைத்தளம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்களில் விமானப்டையினரின் தாக்குதல் விமானங்களுக்கு இந்த இரவு நடவடிக்கை துணைக்கருவிகள் இருக்கவில்லையென தெரிவித்த அந்த அதிகாரி - இந்த இரவ…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக சிறிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என…
-
- 1 reply
- 598 views
-
-
தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு Published by Loga Dharshini on 2019-11-15 11:11:30 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்துக் குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக்குருக்கள் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும். நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும். எமதும் சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமைய…
-
- 7 replies
- 1.1k views
-
-
சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்! சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID), சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப்பிரிவுகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குற்றவியல் மற்றும் நிதி விசாரணைகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) நிதிக் குற்றம் மற்றும் சட்டவிரோத சொத்து விசாரணைகளை மேற்பார்வையிடுவார். அதே…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
கொடூரமான பயங்கவாதத்திடம் இருந்து மீட்ட நாட்டை எந்த சக்திகள் பறிக்கவும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பார்க் லேனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில், லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டகார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையர்கள் மற்றும் சகல இனங்களுக்காகவும் கட்டியெழுப்பபட்டு வரும் நாட்டை, எதிர்கால சந்ததி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் இடம்பெற்றதொரு காட்சிதான் இன்று கிழக்கு மாகாணத்தில் ரணில் ! May 1, 2008 மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம் 01.05.08 திருகோணமலை முற்ற வெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மேலும் தனது உரையில் பாண்டவர்கள் அதிகாரப் பகிர்வு கேட்டார்கள். நூறு சகோதரர்களுடன் ஆட்சி நடத்திய துரியோதனன் மறுத்தான். பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் துரியோதனாதியர்களைச் சந்தித்தனர் அப்போது கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் நடக்கிறது. பாண்டவர் வென்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நான் இத்துடன் ஒப்பிடுகிறேன். …
-
- 0 replies
- 845 views
-
-
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம் ஆரம்பம் [ Monday,18 January 2016, 03:07:07 ] ஸ்ரீலங்காவிற்கான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாப்பு உருவாக்கம் தொடர்பில் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை அறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் செயற்றிட்டம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு - 02 ஸ்டெப்பல் வீதி…
-
- 0 replies
- 317 views
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் துஆப் பிரார்த்தனையொன்று இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் புதிய ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற வைபவத்தில் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் உள்ளிட்ட நகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். துஆப் பிரார்த்தனையினை காத்தான்குடி முகைதீன் மெத…
-
- 7 replies
- 908 views
- 1 follower
-
-
யாழில் தொடர்ந்து ஊதாசீனப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இம்மாதம் ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை மீறுவோர்மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்முடிவு காவல்துறையினருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுவோர் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் காவல்துறையினரு…
-
-
- 4 replies
- 390 views
- 1 follower
-
-
மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி 06.05.2008 / நிருபர் எல்லாளன் மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும் உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும். http://www.sank…
-
- 8 replies
- 1.8k views
-
-
உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்! விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது குறித்த தரவரிசையில் கடந்த ஆண்டு 96 ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தரவரிசையில் ஐந்து இடங்களுக்கு இலங்கையின் கடவுச்சீட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும். மொத்தம் 99 தரவரிசைகளைக் கொண்ட பட்டியலில் ஈரான் மற்றும் சூடானுடன் இலங்கை 91 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்க…
-
- 0 replies
- 186 views
-
-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஆயிரம் கோடி இந்திய ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடியில் நேற்று ஊடவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டில் இருந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து அப்பாவி மீனவர்களை படுகொலை செய்து வருகின்றனர். இதுவரை 300 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை சுட்டு கொல்லும் இலங்கை கடற்படையினர்இ சில சந்தர்ப்பங்களில் படகுகளை சேதமாக்கியும்இ மீன்களை அபகரித்து வருவதுடன் மீனவர்களை பிடித்துச் சென்று சித்திரவதை செய்து வருவதாகவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடந்த 2…
-
- 0 replies
- 1k views
-
-
Published By: VISHNU 15 MAR, 2025 | 02:46 AM (எம்.மனோசித்ரா) தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன. பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் …
-
- 1 reply
- 132 views
- 1 follower
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.9k views
-
-
சுதந்திர தின விழாவுக்கு மகிந்தவுக்கு அழைப்பில்லை! [Wednesday 2016-02-03 07:00] தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்பு வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்பு வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் …
-
- 0 replies
- 372 views
-
-
மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்! மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடுகம்பொலவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்ப…
-
- 5 replies
- 1.1k views
-