ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வடமராட்சி, பொலிகண்டியில் தந்தை மகன் ஆகிய இருவரும் வெள்ளைவான் ஆயததாரிகளால் கடத்தல்:- 26 ஜனவரி 2011 வடமராட்சி, பொலிகண்டி பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவர், வெள்ளை வான் ஆயுததாரிகளால் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையடுத்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்க குடும்பத்தவர்கள் பின்னடிக்கின்றனர். கடத்தப்பட்ட மகனுக்கு சுமார் 35 வயது வரையில் இருக்குமென அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். வன்னி யுத்தத்தினில் அகப்பட்டு, வவுனியா நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர், அண்மையிலேயே வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. முன்னதாக ஆயுதங்கள் சகிதம் வீட்டிற்கு வந்…
-
- 0 replies
- 549 views
-
-
நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், மதரசாக்களில் வெளிநாட்டு மத போதகர்கள் எதனைச்சொலல்கின்றாhகள் என்பதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பாக…
-
- 0 replies
- 327 views
-
-
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்பாடு, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த…
-
- 4 replies
- 668 views
-
-
Jan 31, 2011 / பகுதி: செய்தி / பர்மாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான நேரடி விமானசேவை சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்கா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசு சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தை தொடர்ந்து அது தனது உறவுகளை பர்மாவுடனும் வலுப்படுத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சிறீலங்காவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான நேரடியான விமானசேவையை ஆரம்பிப்பது குறித்து சிறீலங்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் நயோமல் பெரேரா பர்மாவின் வெளிவிவகார அமைச்சர் யூ நயன் வின் என்பவருடன் பேச்சுக்ளை நடத்தியுள்ளார…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திரத்துக்கான குரல் எனும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ள அதேவேளை அக்கட்சி எம்.பி.க்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கமே திட்டமிட்டவகையில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்…
-
- 1 reply
- 727 views
-
-
http://www.intertam.net/
-
- 0 replies
- 377 views
-
-
பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்த முடியாது: இணைத்தலைமை நாடுகள் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தும் தாக்குதல்களை சிறிலங்கா அரசு நடத்த முடியாது என்று இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் தரப்பு மக்களைக் கவசமாகப் பயன்படுத்தினாலும் சிறிலங்கா அரசு மக்கள்மீது தாக்குதலை நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இணைத் தலைமை நாடுகள் சார்பில் ஜெர்மன் தூதுவர் ஜர்கன் விரீத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சிறிலங்கா மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவ…
-
- 0 replies
- 715 views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையின் 2.12 பிரிவை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முடிவு பயங்கரவாத தடைச் சட்டத்தை நிராகரிக்கும் போர்நிறுத்த உடன்படிக்கையின் 2.12 பிரிவை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முடிவெடுத்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்வதானால், செய்ய விரும்பும் பிரிவு அது குறித்து நோர்வே அனுசரணையாளர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இரு பிரிவும் ஒத்துக்கொண்ட பிற்பாடே மாற்றத்தைச் செய்யமுடியும். ஆனால் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சட்ட நிபுணர் குழுவைச் சேர்ந்த ஒருவர், அண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், பயங்கரவாத்தை ஒடுக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்து…
-
- 1 reply
- 999 views
-
-
யாழ். பருத்தித்துறை நீதிவானுக்கு சட்டம் சொல்லிக் கொடுக்கும் இந்திய துணைத் தூதுவர்! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 10:05 .யாழ். வடமராட்சிக் கடலுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் துணைத் தூதரகம் தலையீடு செய்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. மேற்படி மீனவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் பருத்தித் துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் மீது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என்று சாடப்பட்டு உள்ளது. மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பாப்பரசர் அதி வணக்கத்திற்குரிய முதலாம் பிரான்ஸ் ஆண்டகையின் இலங்கை விஜயம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதியின் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. பாப்பரசரின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்தக் குழுவினர் பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பாப்பரசர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக பாப்பரசர் அறிவித்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால், பாப்…
-
- 0 replies
- 404 views
-
-
உதயனுக்கு சர்வதேச விருது:- இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை. உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன். மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
கே.பி எங்கே? வெள்ளி, 25 பெப்ரவரி 2011 19:23 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இலங்கையில்தான் உள்ளாரா? என்று சந்தேகப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா இச்சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:- "கே.பி எங்கு உள்ளார்? என்பது எமக்கு தெரியாது. நாம் இவரை ஒருபோது காணவே இல்லை. இவருடன் பேசியமையும் இல்லை. இவரை பற்றி பத்திரிகைகளில் மாத்திரமே வாசிக்க முடிகின்றது. இவர் இலங்கையில்தான் உள்ளாரா? என்பதுகூட எமக்கு தெரியாது. கே.பியால் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறப்ப…
-
- 24 replies
- 5.1k views
-
-
இலங்கை இராணுவத்திற்க்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா இணக்கம்:- 22 அக்டோபர் 2014 இலங்கை இராணுவத்திற்க்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையுடனும் மாலைதீவுடனும் பாதுகாப்பு உறவுகளை இந்தியாமேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் இரு நாட்டு இராணுவங்களுக்கும் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி அவற்றின் திறனை மேலும் அதிகரிப்பதற்க்கு உதவப்போவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன/ இலங்கை பாதுகாப்பு செயலளர் கோத்தாபய ராஜபக்சவுடன் திங்கட்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லி இருதரப்பு பதுகாப…
-
- 1 reply
- 454 views
-
-
இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் இன்று சிறிலங்கா அதிபர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா …
-
- 1 reply
- 278 views
-
-
இரட்டை வேடமிடுகிறது போர் நிறுத்த கண்காணிப்புக் குழு: கேகலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இரட்டை வேடமிடுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில்; மாணவர்களும் ஆசிரியர்களும் விடுதலைப் புலிகளினால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை உலகுக்கு அறிவித்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இதனால் ஏற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 ஆண்களை…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்துக்கு வந்த கரட்! – சூடான விவாதம். [Tuesday 2014-10-28 09:00] 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று அவைக்கு வருகை தந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜனமானவே இவ்வாறு கரட்டுடன் அவைக்கு வருகை தந்தார். அவர், வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் இரண்டு கரட்டுகளையும் காண்பித்து உரையாற்றினார். அவைக்குள் கரட் கொண்டு வந்தமை தொடர்பில் எம்.பி.யிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கிராசனத்தில் இருந்த ஜனக பண்டார எம்.பி, படைகல சேவிதர்களுக்கு பணித்தார். இடைமறித்த நலின் பண்டார, 'நானோ இரண்…
-
- 0 replies
- 318 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித், டலஸ் அறிவிப்பு ! Digital News Team நாளை (04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் குழுவினரும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/2374…
-
- 3 replies
- 622 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் 8 வெள்ளைவான் கடத்தல்கள். யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் சிறீலங்கா இராணுத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கூலிக் குழுக்களால் இரு மாணவர்கள் உட்பட 8 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.... 1)கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறையை சேர்ந்த 31 அகவையுடைய செபஸ்ரியான்பிள்ளை என்பவர் உள்ளுர் கடை ஒன்றில் பொருட்கள் வாங்க செல்லும் போது காணாமல் போயுள்ளார். 2)முளாய் வட்டுக்கோட்டையில் 20 அகவையுடைய கந்தையா லதீசன் அவர்கள் யாழ்பாணம் கன்னாதிட்டிக்கு தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு செல்லும் வழியல் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளார். …
-
- 0 replies
- 670 views
-
-
தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணித்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுஙக்ள் என இளைஞனின் பெற்றேர்கள் உருக்கமாக கோரியுள்ளனர். “எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றிருகின்றார். இதன் போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார். இதனை எமது பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினர் தன்னுடைய அரசியலாக்க முற்பட்டார் நாம் அதற்கு இடம்கொடுக்கவில்லை இந்த நிலையில் அவர் முகநூல்கள் மூலம் எங்களை பற்றியும் எங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அழைத்துச் சென்ற போதகர் பற்றியும் அவதூறு செய்து வருகின்றார். தயவு செய்து எமது மகனின் மர…
-
- 1 reply
- 888 views
-
-
வட-கிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சத்தியத்தை பின் தள்ளியுள்ளது. அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா நாட்டின் அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அரசியல் தீர்மானங்களை மாற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளமை ஆரோக்கியமான விடயமல்ல. இந்த அரசியலமைப்பு தொடர்ந்து இருந்தால் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அரசாங்கத்தால் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாது என்று நீதி மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு விவகார பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எமது அரசியலமைப்பில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சாத்திய…
-
- 0 replies
- 609 views
-
-
சிறீலங்கா இராணுவத்தால் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்துடாநாட்டில் ஊரடங்கு மாலை 7 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்பு மாலை 9 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இருந்தது தெரிந்ததே. குடாநாட்டில் சிறிய ரக மோட்டார் சைக்கிள்களில் மக்கள் பயணம் செய்வதற்கும் படையினர் நேற்று முதல் தடை விதித் துள்ளனர். "சூட்டி பப்', "ரி.வி.எஸ்49சிசி', "சாளி' போன்ற மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் மறிக்கப்பட்டு அந்த வாகனங்களில் பயணம் செய்வதை நிறுத்துமாறு படையினர் அறிவுறுத்தினர். இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வருவதாக அந்த வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் படையினர் நேற்று வீதிகளில் வைத்துத் தெரிவித்தனர். இந்த வகை வாகனங்களை இலகுவாகச் செலுத்தலாம் என்பதால் பெண்களே இவற்றை அ…
-
- 0 replies
- 738 views
-
-
உதயங்க வீரதுங்க இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளார் அரச சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவிப்பு (எப்.எம். பஸீர்) ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூது வர் உதயங்க வீரதுங்க நாடு திரும்பி அவருக்கெதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சமஷ்டி நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டுமென அரச சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று அறிவித்தார். மிக் விமான கொள்வனவின்போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவா…
-
- 0 replies
- 627 views
-
-
வியாழன் 18-01-2007 23:46 மணி தமிழீழம் [சிறீதரன்] வாகரை வைத்தியசாலையை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் 5 பொதுமக்கள் காயம் மட்டக்களப்பு மாங்கேணி மற்றும் கஐவத்தை இராணுவ முகாம்மில் இருந்து சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக கடும் எறிகணைத்தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை காலை மற்றும் மாலை மேற்கொண்டுள்ளதாகவும் இவ் எறிகணைகள் வாகரை வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும். இதன்போது 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் 8 எறிகணைகள் வைத்தியசாலையை அண்டியபகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும் இதன் போது ஒருவர் காயமடைந்ததாகவும் பின் மாலை 5.15 மணியளவில் …
-
- 1 reply
- 821 views
-
-
முன்னாள் புலிப் போராளிகள் விடுதலை இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் இறுதிச் சண்டைகளின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 206 பேர் கொண்ட மேலும் ஒரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆயினும் விடுதலையை எதிர்பார்த்து புனர்வாழ்வு நிலையங்களில் இருப்பவர்கள் மிகுந்த மனத்துயரத்திற்கு ஆளாகியிருப்பதாக விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். வீட்டுத் தலைவனின் உதவியின்ற…
-
- 0 replies
- 978 views
-
-
யாழ். நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவும்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதி கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்பளிப்பு செய்தார். இதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய ச. சுஜீவனிடம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கி வைத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ர…
-
- 0 replies
- 230 views
-