ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பேர்ள் கப்பல் இரகசியங்கள் கீழே செல்கின்றன-எகோனொமிக் டைம்ஸ் 20 Views இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே 05 அபாயகரமான இரசாயன பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்- பிரஸ் பேர்ள் என்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இந்ந நிலைமையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக எகோனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் நோக்கில் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த அபாயகரமான இரசாய…
-
- 0 replies
- 403 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச தரப்பினரால் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முறைப்பாட்டினை செய்துள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து அழைக்கப்பட்ட கிராம சேவையாளர்களிற்கு மதிய விருந்து வழங்கிய அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள தமது தரப்பு வேட்பாளர்கள் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் எழுப்பியுள்ளாராம். அவ்வேளை ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களான அன்பழகன் மற்றும் தவநாதனென பலரும் அங்கு சமூகமளித்திருந்ததாக கூறப்படுகின்றது. அதே வேளை மூத்த அரச அதிகாரிகள் சி…
-
- 0 replies
- 634 views
-
-
மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் முதல் காணவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் விடத்தல் தீவைச்சேர்ந்த ஏ.சுகன்னியா (வயது-17) என்ற யுவதியே காணாமல் பேயுள்ளார். குறித்த யுவதி தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், மன்னார் விடத்தல் தீவில் உள்ள தனது பெற்றோரிடம் வருவதற்காக நேற்று முந்தினம் புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரோடு குறித்த யுவதி மன்னார் வருகை தந்துள்ளார். மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியல் 1 மணியளவில் நின்ற போது அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் அந்த யுவதி நின்ற இடத்திற்கு சென்ற போது யுவதியும், அவர் வைத்திருந்த உடுப்பு பையுடன் …
-
- 0 replies
- 454 views
-
-
மாகாணசபைத் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் - இந்தியா அடுத்த மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நம்பகமான முறையிலும் நடைபெறும் என நம்புவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அண்மைய அரசியல் வளர்ச்சிகள் நல்லிணக்கம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். இலங்கையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வை இலங்கையிடம் இருந்து இந்தியாவும் சர்வதேச நாடுகளும் எதிர்பார்த்துள்ளன. தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் ஒரு அர்த்தமுள…
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கை அரசியல் குறித்து தங்களுக்கு ஆர்வம் கிடையாது என்று பெரும்பான்மையான யாழ்ப்பாண மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்! July 10, 2021 பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உட விடுதலை செய்!, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறு…
-
- 0 replies
- 174 views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்ட புலனாய்வுத்துறையின் சிறப்புக் குழு ஒன்றே மலேசியாவில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனைக் கடத்தக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
சிறிலங்காவின் அடுத்த அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதை அடுத்து அடுத்த வேட்பாளர் யார் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி எழுந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கு - கிழக்கில் 6000 பொருத்து வீடு - அனுமதி வழங்கியது அமைச்சரவை வடக்கு - கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 லட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளன. முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை, வடக்கு - கிழக்கில் அமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப் …
-
- 0 replies
- 318 views
-
-
தமிழர் படுகொலை காணொளி ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது என திரிபுபடுத்தும் கொழும்பு ஊடகம் சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ அல்லது லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு திரிபுபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த நேசன்’ ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு: வடக்கில் மனிதாபிமான மீட்புப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலான பரப்புரையில் மேற்குலக ஊடகங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறுகின்றது எ…
-
- 2 replies
- 837 views
-
-
இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. 3500 இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய காவல்துறை பயிற்சி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு முதல் இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் கோப்ரேட் வொட்ச் என்ற அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தருணத்திலும் காவல்துறையினர் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. பல சந்தர்ப்பங்…
-
- 0 replies
- 515 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் செயலரான இமெல்டா சுகுமாரை கிளிநொச்சிப் பணிமனைக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. போரின்போது சேதமடைந்த கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைப் புனரமைக்கும் பணிகளை தொடங்குமாறு தனக்கு அரசினாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் படைத்துறை அதிகாரிகளினாலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். "மாவட்டத்தில் போரினால் சேதமடைந்த மருத்துவமனைகள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபை அலுவலகங்கள், தபால் நிலையங்கள், கூட்டுறவு நிலையங்கள் போன்ற அரச கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எனக்கு கூறப்பட்டுள்ளது" என்றார் மாவட்ட செயலர். முல…
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் மூன்று பேர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து சென்று லண்டனில் நேற்றிரவு இறங்கிய விமானத்தில் இவர்கள் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திற்கு சென்ற இவர்களை வரவேற்க லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் சிலர் சென்றிருந்தனர். இவர்கள் எந்த வகையான இரகசிய நடவடிக்கைக்காக லண்டன் சென்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி ( ஆர்.டி.எப்) தற்போது எல…
-
- 0 replies
- 507 views
-
-
http://inioru.com/?p=4755 இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது? தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யு…
-
- 0 replies
- 456 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால், குண்டுகள் வெடிக்குமென மக்களை படையினர் அச்சுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டமைப்பிற்கான வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் நோக்கில், படையினர் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இத்தகைய பயமுறுத்தல்கள் காரணமாக சாதாரண பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 403 views
-
-
மட்டக்களப்பிலிருந்து காலிவரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர். காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, குறித்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், இப்பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்…
-
- 0 replies
- 303 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளன – சுமந்திரன் குற்றச்சாட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இரா.சம்பந்தனினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஓர் வரைபு என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றினை பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் இந்நிலையில் வேறு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு ரெலோவும் புளொட்டும் அனுப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எ…
-
- 2 replies
- 296 views
-
-
மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் வவுனியா பொலிசார் கண்டுபிடிப்பு வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையின் ரயில் நிலைய வீதிச் சந்தியில் உள்ள மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் ஒன்றினை வவுனியா பொலிசார் இன்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளார்கள். இந்தச் சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் கடையொன்றிலேயே இந்தச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு எதிரில் படையினரின் காவலரண் ஒன்று அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தக் கடையில் இருந்த ஒருவர் நெளுக்குளத்தில் வசித்து வரும் சிவகுமார் என்பவரின் மூன்றாவது மகளாகிய 18 வயதுடைய சுகியந்தி என்ற இளம்பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்ததாகவ…
-
- 0 replies
- 485 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார். இதன்போதே பாராளுமன்ற உறுப்பினரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின…
-
- 2 replies
- 368 views
-
-
மன்னார் பிரதேசசபை தவிசாளாின் பதவிநீக்கம் -அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. September 14, 2021 மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் பாவனையில் இருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்க…
-
- 0 replies
- 219 views
-
-
சேரமான் 23/09/2009, 22:50 தடுப்புமுகாம் மக்களை விடுவிக்காமல் மகிந்த அரசு பிடிவாதமாக உள்ளது. நெதர்லாந்து தெரிவிப்பு இன்று (23.09.2009) புதன்மதியம் 2மணியிலிருந்து 4மணிவரை நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன்விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான நெதர்லோப் அம்மையாரைச் சந்தித்து நெதர்லாந்தின் பலஇடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை இவ்அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு உரையாடினர். இதன்ப…
-
- 0 replies
- 506 views
-
-
கூட்டமைப்பு வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது : September 22, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பம…
-
- 0 replies
- 376 views
-
-
புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கையிலும் மியன்மாரிலும் உள்ள பௌத்தர்கள் இனவாத வன்முறைகளை நிறுத்த வேண்டும் என திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். திபேத்திய பௌத்த ஆலயத்தில் பக்தர்களுக்கு போதனைகளை வழங்கும் முதல் நாள் நிகழ்வில் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏற்கனவே மியன்மாரில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன. இலங்கை மற்றும் மியன்மார் பௌத்த துறவிகள் பயங்கரவாதிகளாக கருதப்படுவது மிகவும் வருத்தமானது. பௌத்த துறவிகள் புனிதத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மதம் மீது நம்பிக்கை வையுங்கள். அதேபால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளியுங்கள். இது பல்வேறு மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கொண்டு வரும் என்றார். திபேத்திய ஆன்மீ…
-
- 1 reply
- 384 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 590 views
-