Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சோமவன்ச தலைமையில் லண்டனில் ஜே.வி.பி. தியாகிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டங்களில் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் அந்தக் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மாவீரர்கள் தினம் லண்டனில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அங்குள்ள மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பிரதம பங்கு வகித்ததுடன் லண்டனில் வசிக்கும் ம.வி.மு. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். லண்டன் மாநகரில் அமைந்துள்ள கட்பர் நகர மண்டபத்தில் மேற்படி ஜே.வி.பி. மாவீரர் தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டதாகவும் விழாவின் பிரதான …

  2. தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள் அண்மையில் தமிழக மீனவர்களுடன் பிடிக்கப்பட்ட இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது என்று வடமாராட்சி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் டக்கிளஸ் தேவானந்தா பிரசன்னமாகி இருந்ததாகவும் ஆனால், பத்திரிக்கையாளர்களின் கண்னில் படாதவாறு பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை மீள ஒப்படைக்குமாறு இலங்கை ராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் வடமாராட்சி மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைத் தருமாறு அதிகாரப் பீடத்தை வலியுறுத்தியிருப…

  3. தமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கிய போதிலும் சொத்து முடக்கம் தொடர்பிலான உத்தரவுகள் தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்த ஐரோப்பிய நீதிமன்ற நீதவான்கள், புலிகளின் சொத்து முடக்கம் குறித்த உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் 2006ம் ஆண்டு இணைக்கப்பட்டதாகவும், புலிகள் தொடர்பில் நேரடியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்காலிக அடிப்படையில் சொத்து முடக்கம் த…

  4. பொது மக்கள் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்! ----------------------------------------------------------------- இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. நேற்றும் இலங்கை இராணுவம் மட்டக் களப்பில் மக்கள் வசிப்பிடங்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடி யாக நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் சென்ற சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்திவரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளன…

  5. Feb 25, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவின் புதிய வான்படை தளபதி-ஹர்சா அபயவிக்கிரம! சிறீலங்காவின் புதிய வான்படை தளபதியாக எயர் வைஸ் மார்சல் ஹர்சா அபயவிக்கிரமா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாதத்துடன் ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா ஓய்வுபெறவுள்ளதால் அபயவிக்கிரம புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 28 ஆம் நாள் தனது பதவியை ஏற்றுக்கொள்ளவுள்ளார். எனினும் குணதிலகா சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றவுள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபயவிக்கிரம சிறீலங்கா வான்படையின் 13 ஆவது தளபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்திற்கு பேர…

  6. நவிக்கு கடிதமெழுதிய கூட்டமைப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பாணை news ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33 மாகாணசபை உறுப்பினர்கள் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர். வட மாகாணசபையைச் சேர்ந்து 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் இவ்வாறு கடிதம் அனுப்பியிருந்தனர். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலும்,…

  7. கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்? சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தம்மைக் கைது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்சவை இந்த வழக்கு முடியும் வரை கைது செய்வதற்கு, நீதியரசர் ஈவா வனசுந்தர, சிசிர ஆப்ரு ஆகியோரைக் கொண்ட அமர்வு…

  8. யாழ் குடாநாட்டில் சிக்குன் குனியாவால் ஐந்து நாட்களில் பத்துப்பேர் உயிரிழப்பு. யாழ் குடாநாட்டில் கடந்த ஐந்து தினங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக யாழ் மாவட்ட பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். யாழ்குடாநாட்டின் அண்மை நாட்களாக பரவி வரும் சிக்குன்குனியா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாமலும் போசாக்கான உணவுப் பொருட்கள் இல்லாமையினாலும் கடந்த ஐந்து தினங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீரிழிவு, அஸ்மா, இதய நோய்க் கோளாறு போன்ற நோயாளிகளே சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணைகளில் இருந்தது தெரியவந்துள்ளது என பதில் நீதவான் …

  9. நாகர்கோவில் கிராமத்தின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது கூகிள் ஏர்த்! [Tuesday 2014-10-28 09:00] மனிதாபிமான பணிகளுக்கு உதவும் வகையில் இலங்கையின் வடக்கில் நாகர்கோவில் கிராமத்தின் செயற்கைக்கோள் படங்களை பெற்றுக் கொள்ள முடியும் என கூகிள் எர்த் (Google Earth) அறிவித்துள்ளது. ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனம் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன், மக்கள் மீள பிரதேசத்திற்கு திரும்புவதற்கும், 84 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையிலும் அங்கு 40 ஹெக்டேயர் விவசாயத்தை சரிபார்க்க உதவவும் இந்த மேம்படுத்தப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படும் என ஸ்கை பொக்ஸின் இணை ஸ்தாபகரும் கூகிள் அவுட்ரீச்சின் விரிவாக்கல் சட்டத்தரணியுமான ஜூலியன் மான் தெரிவித்துள்ளார். உயிர்களை பாதுகாக்கவும் சூழலை பாதுகாக்கவும…

  10. Most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted luxury hotels with pop bands, internet cafes, and diving schools catering to mostly middle-aged Germans and Britons looking for tropical sunshine in the middle of their winter. "This is the worst it's been in 30 years," said W. M. Bandaranayake, manager of the Coral Sands Hotel on Hikkaduwa's main strip. "We had more guests after the tsunami." The war has prompted foreign govern…

  11. 01.11.2014 அன்று காலை பாராளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் 2015 பற்றிய உரையின் முழு வடிவம் உங்களுக்காக... 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஓர் வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளார். துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என எல்லாத்தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்த…

  12. ஆளும் கட்சியை தோற்கடிப்பதில் சந்திரிக்கா தீவிரம் 07 நவம்பர் 2014 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவான ஒர் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட சந்திரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பயணம் செய்திருந்த சந்திரிக்கா அண்மையில் நாடு திரும்பியிருந்தார். பொது வேட்பாளர் ஒருவரைத் தெரியும் முயற்சிகளில் சந்திரிக்கா முக்கியமான பங்கினை வகிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்திரிக்கா திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை. இதேவேளை, பொது வேட்பாளரை தெரிவது குறித்து மாதுலுவ…

  13. வீடு திரும்­பிய சிப்­பா­யி­டம் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மாங்­கு­ளத்­தில் கைது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த இரா­ணு­வச் சிப்­பா­யி­ட­மி­ருந்து விளை­யாட்­டுத் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் மாங்­கு­ளத்­தில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. அவர் போதை­யில் பெண் ஒரு­வ­ரு­டன் முரண்­பட்­டார் என்று அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அத­னால் அவர் பொலி­ஸா­லி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்­றும் அவ­ரைச் சோதித்­த­போது அவ­ரது உட­மை­யில் குறி…

  14. கொக்குத்தொடுவாயில் சிறுபான்மை கால்நடை வளர்ப்பாளரை கட்டிவைத்து தாக்கிய பெரும்பான்மையின திருடர்கள் ! Published By: VISHNU 20 FEB, 2023 | 07:43 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும், குறித்த திருட்டுமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவ…

  15. சர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தன்! யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார். அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இவர் 2013- பிலிப்பைன்ஸ், 2014- இந்தோனேஷியா, 2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ள…

    • 7 replies
    • 916 views
  16. தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பில் போர் பயிற்சியில்.. [Thursday, 2011-04-07 12:17:49] தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்களான HTMS �Taksin� and HTMS �Saiburi என்பன நேற்று இலங்கை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 120 -103மீட்டர் நீளமான இருகப்பல்களிலும் 126 கடற்படையினர் தங்கிய நிலையில் இரு நாட்டு கடல் படையினரும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு பல நாட்டு யுத்த கப்பல்கள் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . seithy.com

  17. தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள் – காணொளி இணைப்பு.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஜயன்குளம் கமக்கார அமைபின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஓப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தல…

  18. சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார். சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார் http://www.eelampage.com/?cn=30658 அவன் என்னப்பா செய்வான் புலிகள் ஊடுறுவியதுக்கு அவன் காப்பெடுத்து பதுங்கியது தப்பா ஏன் மகிந்தவின் ஊரை தாண்டியெல்லோ வந்து சாத்தி இருகிறாங்கள் அதுதான் …

  19. [ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 09:05 GMT ] [ தி.வண்ணமதி ] மனித உரிமைக் கண்காணிப்பகத்தினது அறிக்கைகள் மற்றும் சிறிலங்காவினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களது அண்மைய கூற்றுக்களுக்கும் சிறிலங்காவில் நிலவுகின்ற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு மாணவர்களால் நடத்தப்படும் Iowa State Daily இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தியின் முழுவிபரமாவது, சிறிலங்காவினது ஊடகங்களில் மனித உரிமைகள் என்பது அளவில் பெரியதொரு அம்சமாகவே தொடர்ந்தும் இருந்துவரும் அதேநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மனித உரிமைசார் கவனயீர்ப்புகளைத் தொடர்ந்தும் வெளிக்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சிறிலங்காவில் தொடர்ந்த 26 ஆண்டுகாலப் போர் முடிவு…

    • 1 reply
    • 1.2k views
  20. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அடகு நிலையங்களில் நகைகளை அடகுவைத்த 2,379பேர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்ற நிலையில், நகைகளின் உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 1,960பேரின் நகைகள், எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பில் வைத்து, அந்நகைகளின் உரிமையாளர்களிடம் அவை கையளிக்கப்படவுள்ளன. இதற்காக, நகை உரிமையாளர்களை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா, நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அடையாளம் காணப்படாத நிலையில் 2,379 பேரின் நகைகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில்…

  21. போர் குற்றவாளி ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கவேண்டும் – வைகோ ஆவேசம்! Posted by uknews On April 20th, 2011 at 4:57 am / குருவிகுளம் அருகே சீகம்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியின் படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குருவிகுளம் ஒன்றியம், சீகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் ராஜஸ்தானில் மின்னணு பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை குறித்து மனவருத்தத்தோடு இருந்துள்ளார். நேற்று முன்தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். உயிரு…

  22. அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் மூலம் முன்னெடுக்கும் திட்டங்களை கண்காணித்து மாதாந்தம் அறிக்கையொன்றை கட்சித் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு நான்கு குழுக்களையும் நியமித்துள்ளார். கடந்த வாரம் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் அதன் 38 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவசரமாக அழைத்து கலந்துரையாடிய போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குள் ஊழல், மோசடிகள் அதிகளவில் தலை தூக்கியுள்ளதால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்…

  23. நிலத்தை கொள்ளையடிக்கும் புத்தியோடு படையெடுக்கும் புத்தர்சிலைகள் 25 ஏப்ரல் 2011 காணிகளில் விகாரை கட்ட அனுமதித்தால் ஆறு லட்சம் ரூபாவை வீடமைக்க வழங்குவோம் என்று தமிழ் பௌத்த சங்கம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு தெரிவித்த கருத்து தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. நிலக்கொள்ளையில் இப்படி வெளிப்படையான அறிவிப்பை விடுத்திருக்கும் பௌத்த சங்கம் தமிழர்களின் நிலத்தின்மீது எதை விதைக்க விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. யுத்தத்தால் நொந்து போயிருக்கிற ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்றும் இப்படியும் அவர்களின் நிலத்தை கொள்ளையடிக்கலாம் என்றம் பௌத்த சங்கம் என்று உருவாகியுள்ள அமைப்பு நம்புகிற அளவில் ஈழத்து தமிழர்களின் நிலமை இருக்க…

  24. எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட் பாவனையில் ஏற்றம் - இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது. இவ்வாறு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். சிறு நீரக நோயாளர்களிற்கான இரத்த சுத்திகரிப்பு சிகிற்சை நிலையத்திறப்பு விழா வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகா…

  25. சீன – இந்திய பனிப்போர் களமாக மாறும் இலங்கை சீன – இந்­திய வல்­லா­திக்­கப் போட்­டிக்­குள் இலங்கை சிக்­கிக் கொண்டு திண­றப்­போ­கின்­றது என்­பது மேலும் மேலும் தெளி­வாகி வரு­கின்­றது. இது­வரை தெற்­கில் மட்­டுமே இருந்­து­வந்த இந்­தப் போட்டி இப்­போது வடக்கு வரைக்­கும் விரி­வாக்­கம் கண்­டுள்­ளது. இது இனி­வ­ரும் காலங்­க­ளில் சீன – இந்­திய பனிப்­போர்க்கள­மாக இலங்­கையை மாற்­றும் என்று ஆரு­டம் கூறு­வ­தில் தப்­பில்லை. இந்­திய -– சீன அதி­கா­ரப் போட்­டி­யில் வடக்கு மக்­க­ளுக்­கான வீட­மைப்­புத் திட்­டம் அடி­பட்­டுப்­போ­கக்­கூ­டாது என்று தெரி­ வித்­தி­ருக்­கின்­றார் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.