ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
சிறிலங்கா அரசிற்குத் தலையிடியாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்காக பல்வேறு உபாயங்களை வகுத்து இவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலரை விலை கொடுத்து வாங்கி நாடு கடந்த அரசிற்கெதிரான பிராச்சாரங்களை அவர்கள் மூலமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தி;ல் துணைத் தூதராகப் பணிபுரியும் அம்சா இந்தப் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது. உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசிய…
-
- 4 replies
- 512 views
-
-
ஆகக் குறைந்த சித்தியுடன் மருத்துவத்துறைக்குள் நுழைய அமைச்சரவை அங்கீகாரம் மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌ…
-
- 4 replies
- 991 views
-
-
கொழும்புத் துறைமுகம் - சீனாவிடம் அக் 7, 2010 Font size: Decrease font Enlarge font கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் புதிய நிலையம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக கொள்கலன்களை கையாளும் நோக்கத்துடன் இது அமைக்கப்படுவதாக துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் பிரியந்தா விக்கிரமா தெரிவித்துள்ளார். பாரஊர்திகள் செல்வதற்கு தனியான பாதை ஒன்றும் அமைக்கப்படவுளதுடன், கொள்கலன்கள் அனைத்தும் புதிய நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆசிய கப்பல் வர்த்த சபை ஒழுங்கு செய்த கூட்டத்தில் பேசும் போது இந்த தகவல்களை வெளியிட்ட விக்கிரமா, இந்த பணிகளை சீனாவே மேற்கொள்கின்றது எ…
-
- 4 replies
- 755 views
-
-
அமெரிக்க நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு: பணிந்தார் ராஜபக்சே-வக்கீலை அனுப்புகிறார்! வியாழக்கிழமை, ஜூன் 30, 2011, 9:28 [iST] கொழும்பு: அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் அனுப்ப்பட்ட சம்மனை ஏற்க மறுத்து வந்த அதிபர் ராஜபக்சே பணிந்தார். தற்போது அவர் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு செய்து உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபை குழு குற்றம் சாட்டி உள்ளது. இந்த போரின் போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றன போர்க்…
-
- 4 replies
- 556 views
-
-
கொழும்பு மாவட்டத்தின் மாநகர பிரதேச எல்லைகளுக்குள் மட்டக்குளி முதல் தெஹிவளை வரை அருள்பாலிக்கின்ற பெரிய இந்து ஆலயங்கள், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்-இந்து பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினர், தமது ஆலய வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை இந்த நல்ல நோக்கத்துக்கு ஒதுக்கித்தர முன்வர வேண்டும். இதற்காக கொழும்பின் சகல ஆலயங்களின் அறங்காவல் பிரதிநிதிகளை உள்வாங்கி ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். எந்த பாடசாலைக்கு என்ன தேவை, எந்த பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற விபரங்களை திரட்டி தந்து இந்த அறக்கட்டளைக்கு உதவிட என்னால் முடியும். ஆலய வருமானத்தின் ஒரு சிறுபகுதியை கொண்டு ஏழை பிள்ளைகளின் அறிவுக்கண்களை திறந்…
-
- 4 replies
- 572 views
-
-
எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி Published By: RAJEEBAN 20 MAR, 2024 | 10:40 AM வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜேர்மனியின் கப்பலின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் …
-
- 4 replies
- 472 views
- 1 follower
-
-
- கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்ல - வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம் பெற்ற வேர் அறுதலின் வலிகவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம். ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார். அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெள…
-
- 4 replies
- 1.1k views
-
-
எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி! எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'வெற்றி நிச்சயம் - கிராமம் நமதே' எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று மித்தெனியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அ…
-
- 4 replies
- 265 views
-
-
நாடு திரும்பினார் ஜனாதிபதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கசகஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார். கந்த 19 ஆம் திகதி கசகஸ்தானுக்கு சென்ற அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்வையிடுவதற்காக கடந்த 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை பிரதமர் டி.எம். ஜயரட்ன 3.30 மணியளவில் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக…
-
- 4 replies
- 762 views
-
-
யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம்வெளியிட்டுள்ளது. . தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார். . சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார். . இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சின…
-
- 4 replies
- 459 views
-
-
இப்படி ஒரு இணையத்தில் குறிபிடபட்டுள்ளது சர்வதேச கடலில் ’எம்.வி.அகத்’ என்ற கப்பலில் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கிட்டு இன்னும் சில புலி உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மத்திய அரசுக்கு அறிவித்தது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு யுத்தக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன. இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தியை புலிகளின் தலைமை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஆனால், இந்தியா அரசு செய்தி எதனையும் உடனடியாக வெளியிடவில்லை. இதற்கிடைய…
-
- 4 replies
- 2.4k views
-
-
சீதேவி வரும்போது நன்றாக இருக்கிறது மூதேவி போகும்போது நன்றாக இருக்கின்றது இந்தக்கதை தெரியுமா? தங்களுக்கு.... இன்று கலைஞர் கருணாநிதி; அவர்களும் nஐயலலிதா அவர்களும் ஈழதேசத்தை போட்டு படுத்தும் பாட்டைப்பார்க்கும்போது... இந்தக்கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது இதில் சீதேவி யார்? மூதேவி யார் என்பதை தங்களது கருத்துக்கே விட்டுவிடுகின்றேன் ஆனால் இருவரையும் பகைத்துக்கொள்ளமுடியாதநிலைய
-
- 4 replies
- 2.1k views
-
-
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது : அருட்தந்தை ஜெகத் கஸ்பார் இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ‘நக்கீரன்’ குழுமத்தின் ‘இனிய உதயம்’ காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார். ‘நக்கீரன்’ இதழில் தற்போது நீங்கள் எழுதிவரும் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கு…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. தவறில்லை இருப்பினும் சோனியா காந்தியுடனும், ஈழத்தமிழர்களை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியிடமும் கூட்டுச்சேர முனைவதே அவர் பெரும் தவறிழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்று (புதன்கிழமை) டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. ஜங்கரன் இன்டர் நேசனல் நிறுவனம் ஊடாக இநடிகர் விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதுடன் கோடிக்கணக்கான வெளிநாட்டுக் காசை தயாரிப்பாளர்கள் இதன்மூலம் பெற்றுவருகின்றனர். …
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கைக்கான.... கடன் நாணயப் பரிமாற்ற, கால எல்லையினை... நீடித்தது இந்தியா! இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை, இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷும் 450 மில்லியன் டொலர் பரிமா…
-
- 4 replies
- 282 views
-
-
முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் தருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்பில் இணைந்தார்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, மற்றும் பட்டிப்பளைப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று(02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமா…
-
- 4 replies
- 376 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் அரசாங்கத்தில் : தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்கின்றார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தி…
-
- 4 replies
- 284 views
-
-
காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_12_23.pdf
-
- 4 replies
- 1.5k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யமுடியும். எனினும் அவர்கள் இலங்கையல் விசாரணை எதையும் நடத்த முடியாது என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். லிபியா நிலைவரம் குறித்து கருத்து கேட்டபோது, "எவரும் தமது நாட்டின் பிரஜைகளுக்கு தீங்கிழைக்க முடியாது. மக்களை கொல்லும் எவரும் அவர்களுடன் இருப்பவர்கள் அல்லர்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொதுமக்களை கொல்பவர்களுடன் நாம் இல்லை. அத்துடன் எந்த நாட்டினதும் இறைமையை மீற முடியாது&…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு- உதய கம்பன்பில விட்ட சவால்!! இந்த நாட்டில் சிங்கள வர்களுக்கு முன்னரே தமிழர்கள் குடியிருந்துள் ளார்கள் என்பதை முடியுமானால் நிரூபிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில. இந்த நாட்டில் சிங்கள வர்களுக்கு முன்னரே தமிழ் மக்களே குடியி ருந்துள்ளார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து நேற்றுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அ…
-
- 4 replies
- 913 views
-
-
மெல்போர்ன், ஆஸ்திரேலியா: “ஸ்ரீலங்கா நியமித்துள்ள தூதுவரை, ஆஸ்திரேலிய அரசு எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டிருப்பது, ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.” இவ்வாறு ஆஸ்திரேலியாவின் The Age பத்திரிகை இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா தனது ஆஸ்திரேலியாவுக்கான தூதராக, முன்னாள்கடற்படைத் தளபதி திஸர சமரசிங்கவை கடந்த வெள்ளிக்கிழமை நியமித்திருந்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவர்களை தூதுவர்களாக ஏற்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்கனவே பல மட்டங்களில் இருந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலிய எம்.பி. ஜோன் மேர்ஃபி, “ஆஸ்திரேலிய அரசு ஓய்வுபெற்ற அட்மிரல் திசர சமரசிங்கவின் நியமனத்தை நிராகரிக்க வேண்டும்” என…
-
- 4 replies
- 999 views
- 1 follower
-
-
உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..! நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..! எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..! ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..? முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..? ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..? இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்…
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-