Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார் யுவதி தனது எட்டுமாத குழந்தையுடன் ஆனமடுவில் உள்ள வீட்டிலிருந்த சமயம் இராணுவச் சிப்பாய் வானில் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து எட்டுமாத குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி யுவதியை பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.2k views
  2. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது பிள்ளையான் கட்சி இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும். இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்ப…

    • 14 replies
    • 1.2k views
  3. [saturday, 2011-09-24 21:47:21] தன்னை சந்திக்க நேரம் கேட்ட மஹிந்த ராஜபக்சேவை சந்திக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மறுத்து விட்டார். அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் யாரும் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. இதனால் இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது . ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது. நியூயார்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்சேவுக்குத் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய எலி போல மாற…

  4. கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு. “அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல். என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….? அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று……. அந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சி…

  5. அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அங்கு அதிபர் புஷ்ஷிடம் நேரில் உதவிகோருவார்! ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ளார். பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்களின் சம்பிரதாயபூர்வ சந்திப்பிற்குப் புறம்பாக மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து இந்த பேச்சுகளின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையை விடுப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின. ஜனாதிபதியுடன…

  6. சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கு தற்கொலைத் தாக்குதலினை நேற்று நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராமநாதபுரம் பகுதிக்கு ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைப் போராளி ஒருவரே நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இதில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தெரிவித்தனர். இப்பகுதிக்கு வந்த பெண் ஒருவர் மீது சந்தேகமடைந்த படையினர் அவரைத் தடுத்து நிறுத்தியபோதே அவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்தப் …

  7. ”13 ஆவது திருத்தம் தொடர்பில் எங்களுடனேயே பேச வேண்டும்”: அரசாங்கம்! 13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் இந்தியாவுடன் பேசாது இலங்கையுடனேயே பேச வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில், இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பிலவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை என்பது இந்தியாவின் காலனித்துவ நாடு அல்ல. இதனால் பிரச்சனைகள் இருந்தால் இங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள அர…

  8. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்த விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியற் பிரமுகர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாய் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த இவர்கள் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் மேலிடத்து உத்தரவுக்கமைய கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியற் துறைப் பணிகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் ஈரோஸ் இயக்கத் தலைவருமான வீ.பாலகுமாரன், வரலாற்று ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் யோகரத்னம் யோகி, கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் இவ்வா…

    • 0 replies
    • 1.2k views
  9. சிறீலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும், அரசில் உள்ள சிலகுழுவினரும் இணைந்து அரசின் மீதும் அதன் பிரதம மந்திரியின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் இரகசியமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் தொடர்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்களின் அத்துமீறிய தலையீடுகள் என்பன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்களாகவும் முன்வைக்கப்பட உள்ளன. இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவை. ஐ.தே.கவின் 43 உறுப்பினர்களும், தமிழ்த…

    • 3 replies
    • 1.2k views
  10. . சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு வீரகேசரி இணையம் 2/16/2010 11:47:36 AM - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சிய…

  11. புதன்கிழமை, ஜனவரி 26, 2011 எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் போய் ஒன்றரை வருடங்களாகின்றன. எமது உறவினரை தேடிக்கண்டுபித்து தாருங்கள், நாங்கள் வெள்ள நிலைமையில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் இன்று பிச்சையெடுத்தே எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ளோர் தமது கவலையை தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற கருணாவிடம் மக்கள் இந்த கவலையினை தெரிவித்துள்ளனர். தமது குடும்பம் அன்றாடம் கூலி வேலை செய்தே தமது வாழ்நாளை கொண்டு நடாத்தியதாகவும் தமது கணவர் காணாமல் போனது முதல் தனது தாயார் பிச்சையெடுத்தே எனக்கும் எனது குழந்தைக்கும் உணவு பெற்றுத்தந்ததாக ஒரு இளம் தாயார் கண்ணீர் மல்க பிர…

  12. உணவு, சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்புகளுக்கு சேதன விவசாய முறை அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இது ஒரு புலமைசார் கோட்பாட்டு விடயமாக இல்லாது வாழ்வியலுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சேதனப்பசளைப் பயன்பாடு என்பது இன்று பூகோள ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார தெரிவித்தார். சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமையுரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், சேதனப் பசளைப் பயன்பாடு என்பது வாழ்வியலுடன் தொடர்புடையது ஆகும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மாகாண கட்டமைப்புக்கள், மத்திய கட்டமைப்புக்கள் மற்ற…

    • 2 replies
    • 1.2k views
  13. பார்வையிட............. http://utamiltube.net/play/Eelam_Videos/Ka...anippu_16072008

    • 0 replies
    • 1.2k views
  14. 'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது.…

    • 3 replies
    • 1.2k views
  15. நாட்டில் புலி முத்திரை பதிக்கப்படுகின்றது -கரு ஜயசூரிய நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித உரிமைகள் தொடர்பிலும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் எவரேனும் பேசுவார்களாயின் நாட்டில் அவர்கள் மீது புலி முத்திரை பதிக்கப்படுகின்றது.,மேலும் அவர்களிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இலங்கை அரசின் செயற்பாடுகள் காரணமா…

  16. திங்கள் 23-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ரணிலின் தீர்கதரிசனமே கிழக்கை படைகள் கைப்பற்ற முடிந்தது - லஸ்மன் செனிவிரட்ன தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதை விடவும் அவர்களை பலமிழக்கச் செய்வதே தூரநோக்குடைய அரசியல் தலைமையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அதனையே ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை வெளியேற்றி அந்த அமைப்பை பிளவு படுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க பலவீனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை நிரந்தரமாக மு…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  18. சரத் பொன்சேகா கைது பற்றி அச்சந்தர்ப்பத்தில் அவருடன் கூட இருந்த மனோ கணேசன் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி இங்கு நன்றி ATBC

  19. அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த JAN 09, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார். முன்னதாக அலரி மாளிகையில் இருந்து இன்று காலையிலேயே வெளியேறிய அவர், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் அமைச்சர்கள் அனைவரிடமும், பிரியாவிடை பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச, பின்னர், தனது சொந்த ஊருக்கு வாகன அணியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேவேளை, அலரி மாளிகையில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு அவசர அவசரமாக மெதமுலா…

    • 2 replies
    • 1.2k views
  20. கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் துப்பாக்கி ரவைகள் துளைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நுவரெலியாவைச் சேர்ந்த குமார (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத்தின் 66 ஆவது பிரிவின் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilthai.com/?p=28211

    • 2 replies
    • 1.2k views
  21. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படின் எந்த நடவடிக்கைக்கும் அரசு தயங்காது - கெஹெலிய வீரகேசரி நாளேடு 7ஃ9ஃ2008 7:59:32 Pஆ - விடுதலைப் புலிகள் தெற்கில் ஊடுருவி அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக அழிவுகளை விளைவிக்க எந்தவிதமான சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் வழங்கமாட்டாது. அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தேசிய பாதுகாப்பிற்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது: வாழ்க்கைச் செலவிற்கு நிவாரணம் கோரி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் இ…

  22. இந்திய அரசு உணரத் தவறினும் இந்திய தேசம் உணர்ந்துள்ளது இலங்கையில் தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக வாழும் பரிதாபத்திலிருப்பது வேதனைக்குரியது. இவ்வாறு தமிழகத்தின் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற பின் சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சுர்ஜித் சிங் பர்னாலா, ஈழத்தமிழர்களின் அவலத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உரையாற்றினார். அவரின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததன் காரணமா…

  23. பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிறவுண் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்ததன் மூலம் ஜனநாயக சம்பிரதாயங்களை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல இது ஒரு நியாயமற்ற செயல் எனவும் வர்ணித்திருக்கிறார். அல் கைடா ஆதரவாளர்களுடன் பேசுவதற்கும் கோர்டன் பிறவுண் தயாராக இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள றம்புக்வெல்ல பயங்கரவாதம் தொடர்பில் பிரிட்டன் இரட்டை வேடம் பூணுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியப் பிரதமரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் நடந்து கொண்ட விதம் குறித்து உத்தியோகபூர்வமான எதிர்ப்பை அரசு வெளியிடும் எனவும் றம்புக்வெல தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com/

  24. தரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தொண்டராசிரியர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோட்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தத் தொண்டராசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொட…

    • 3 replies
    • 1.2k views
  25. டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல. அது தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கும் விடுதலை இயக்கம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக உடனே தலையிட வேண்டும். இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ள வேண்டும். திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலாய் லாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.