ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
நேற்று மலை ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தராஜாபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் இணைந்து பதுங்கித்தாக்குதல் இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் விடுதலைப் புலிகள் மீது பதுங்கித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படைமுகாம்களிலிருந்து மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிக்கப்படுகிறது. இத் தாக்குதலின் போது ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளதாகவும் அறியமுடிகினறது. வீரச்சாவடைந்தவர் இதயவேந்தன் என்ற போராளியாவார். இத் தாக்குதலானது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் துறையினர் இச் சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பதுங்கித் தாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) தெரிவித்தார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை இந்த வாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விவாதத்துக்கான திகதியை ஒதுக்கித் தருமாறு சபாநாயகரைஇன்று கோரவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்றே தானும் எதிர்ப்பு தெரிவிக்க பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக ம…
-
- 10 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் போதுமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளாதது, அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மத்திய அரசினால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழக அமைச்சர்கள் பதவி விலகுவதாக கூறியிருந்தமை பிழையானது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி. ஞானசேக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரணில் பயணித்த ஹெலி அவசர தரையிறக்கம்! வீரகேசரி இணையம் 5/5/2008 6:04:37 PM - கிழக்கில் இருந்து எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புறப்பட்ட உலங்குவானூர்தி இயந்திர கோளாறு காரணமாக மஹியங்கன பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் தரை இறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. இக்கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இராஜதந்திர- கலாசார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இக்கப்பல் இலங்கை வந்துள்ளதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். சகலவிதமான தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 123 மீற்றர் நீளம் கொண்டது. 2010 ஆம் ஆண்டு சீனா சங்ஹாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது http://www.virakesari.lk/article/local.php?vid=4586
-
- 0 replies
- 1.2k views
-
-
குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேரூந்து ஒன்றில் ஒலித்த சிங்களப்பாடல்களை நிறுத்துமாறு பயணிகள் கேட்டபோது பாடலை நிறுத்த பேருந்து நடத்துனர் மறுத்ததும் சிறிது நேரம் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது. குறித்த பேரூந்தில் சிங்கள இசைக்கச்சேரி வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. சமார் 11 மணியை தாண்டிய பொழுது அவற்றை நிறுத்தும் அல்லது தமிழ்ப் பாடல்களைப் போடவும் என்று பயணிகள் கேட்டனர். தாம் போடும் பாடல்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் ஒரு சிலர் இருப்பதாகவும் அவர்களுக்காகவே இந்தப் பாடல்களை ஒளிபரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தடவைகள் பயணிகள் கேட்டபொழுதும் மறுத்த பேரூந்து நடத்துனர் தொடர்ந்து சிங…
-
- 15 replies
- 1.2k views
-
-
டக்ளசின் சமூக சேவை திகதி: 11.11.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஈ.பி.டி.பி குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் சமூக சேவைகள் அமைச்சின் ஊடாக, கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கப்படுவதற்கென்று யாழ்ப்பாணம் எடுத்து வந்த 750 தையல் மெசின்களை ஈ.பி.டி.பியினர் யாழில் தனியார் கடை ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுஇவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு சிறிலங்கா படையினரால் பொருட்கள் சூரையாடப்பட்டுள்ளன. சங்கதி
-
- 1 reply
- 1.2k views
-
-
Jul 9, 2010 / பகுதி: செய்தி / தாயகி கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிபடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என கனடாவில் இருந்து வெளியாகும் பிரபல்யமான நாளிதழான ரொரன்ரோ ஸ்டார் எனும் ஊடகத்தில் ஆய்வாளரும், பேராசியருமான ஜெகதீசன் சாமி வலியுறுத்தியுள்ளார். உண்மைகளைக் கண்டறிதலும் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறுவதும் இல்லாமல் இன முரண்பாடுகளால…
-
- 0 replies
- 1.2k views
-
-
CBCNews 1of2: Sri Lankan Widow Sonali Samarasinghe-Wickramatunga CBCNews 2of2: Sri Lankan Widow Sonali Samarasinghe-Wickramatunga
-
- 2 replies
- 1.2k views
-
-
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் கடல்நீர் மரம்போல் மேலெழுந்ததால் பரபரப்பு வீரகேசரி நாளேடு 7/12/2008 12:23:29 AM - பம்பலப்பிட்டி கடற்பரப்பில் ஏற்பட்ட ஒருவிதமான திடீர் மாற்றத்தினால் கடல் நீர் மேலெழுந்து, சில நிமிடங்கள் வரை மரம்போல் காட்சியளித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துக்குள்ளானதுடன் பிரதேசத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இந்த அரிதான அதிசயமான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீர் மேலெழுந்த அருங்காட்சியை பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நேற்று பிற்பகல் வேளையில் கண்டுகளித்துள்ளனர். சுமார் 5 நிமிடங்கள் வரை நீர் மேல…
-
- 0 replies
- 1.2k views
-
-
சு.க.-ஐ.தே.க. இடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது [திங்கட்கிழமை, 23 ஒக்ரொபர் 2006, 14:54 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. 6 அம்சங்களைக் கொண்ட பொதுத் தேசிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். செப…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையை மிரட்டுகிறது அமெரிக்கா! Posted by admin On March 2nd, 2011 at 12:10 pm / இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஒழுங்கான விசாரணைகளை கொழும்பு மேற்கொள்ளவில்லை எனில் போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயத்தின் முன்பாக இலங்கை இழுத்து வரப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக். சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ.நா. கூ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது. வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுரை நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே இரு வேறு அனுமதிகளின் பேரில் இரு மாதங்கள் சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்தமை தொடர்பிலான அறி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …
-
- 7 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரங்களுக்கான குழுவிலிருந்து அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை விலகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
பபுவா நியூ கினிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், 12 இலங்கையர்களைக் கைது செய்துள்ளனர். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத் தக்க இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பபுவா நியூ கினியாவின் போர்ட் போர்சபேய் ஹோட்டலில் வைத்து குறித்த நபர்களை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பபுவியா நியூ கினியாவின் மேற்கு எல்லைப்புற மாகாணம் ஊடாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக அந்த இணையம் தெரிவித்துள்ளது. http://www.tamilskyn…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெரிவு குழு உறுப்பினராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கமைய தாக்குதலுக்கான பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, குற்றவாளிகளான பயங்கரவாத அமைப்பின் 26 பேருக்கு சம்பளம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் சுமத…
-
- 4 replies
- 1.2k views
-
-
Saturday, January 8th, 2011 | Posted by admin புலம்பெயர் தமிழ் மக்களே வடக்கில் படுகொலைகளை மேற்கொள்கின்றனராம் கேகலியா கூறுகிறார் வடபகுதியின் முழு பிரதேசமும் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே அங்கு வன்முறைகளை தூண்டி படுகொலைகளை மேற்கொள்கின்றனர் என சிறீலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதற்கு சில குழுவினரே காரணம். அவர்கள் திட்டமிட்டு இதனை மேற்கொண்டுவருகின்றனர். ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு வருடம…
-
- 2 replies
- 1.2k views
-
-
தன் சொந்த மக்களுக்கெதிராகவே இந்தியா நடத்தி வரும் இனவழிப்புப் போர் http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31416 India’s genocide of its own tribal nations [TamilNet, Wednesday, 24 March 2010, 02:21 GMT] India had larger plans when it backed genocidal Colombo in the UN Human Rights Council. India is now embarked upon a greater genocidal war against its own tribal nations, picking up the footsteps of Colombo, making use of its partnership experience in crushing Eezham Tamils, exploiting the impotency of international community and encouraged by the electoral endorsement from Tamil Nadu. The precarious dimensions of the ongoing war in Central Ind…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர். இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர…
-
- 6 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 03:21.51 PM GMT ] திருகோணமலையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றது. திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவக் காவலரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார் தட்டிக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்? இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது. இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ள…
-
- 4 replies
- 1.2k views
-