ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
[Wednesday, 2011-09-14 11:57:32] போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அரசு விடுத்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. குறிப்பாக இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் நட்புறவையும் கட்டி எழுப்பும் வகையிலான நல்லிணக்க அணுகுமுறையை இலங்கை அரசு அழுத்தமாகக் கடைப்பிடிக்கிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையை எதிர்த்துள்ள கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அனுபவங்கள் அமைச்சரின் கூற்றுக்குச் சற்றும் பொருந்தாது என்றும் அடித்துக் கூறியுள்ளது. நாட்டின் நிலவரத்தை அனைத்துலக சமூகத்துக…
-
- 4 replies
- 633 views
-
-
கோட்டாபய தலைமையில் புதிய கட்சி; தொடங்குகின்றது பொதுபலசேனா பொதுபலசேனா அமைப்பு நாளைய தினம் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரை சந்தித்துப் புதிய கட்சியொன்றை தொடங்குவது தொடர்பில் பேச்சுக்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பௌத்த கடும்போக்குவாதிகளான பொதுபலசேனா அமைப்பினர் மஹிந்த ராஜபக்சவின் மீள்வரவை ஆதரித்து வருகின்றனர். .அதற்கான போராட்டங்களையும் அண்மைக்காலத்தில் மேற்கொண்டிருந்தனர். ஆயினும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆயினும் கோட்டாபயவை தலைமையாகக் கொண்டு புதிய அரசியல் கட்சியொன்றைப் பதிவுசெய்வது தொடர்பிலான முனைப்புக்களில் பொதுபலசேனா ஈடுபட்டுவருவதாகத் தெரியவருகின்றது. அதன் ஒரு கட்…
-
- 0 replies
- 535 views
-
-
திருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம் 2006 ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரiணைகளையோ அல்லது ஏனைய முக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையோ அரசாங்கம் அலட்சியம் செய்யவோ கைவிடவோயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில விசாரணைகள் பல காலம் நீடிக்ககூடியவை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் குறிப்பாக படையினர் தொடர்பான விசாரணைகள் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார் இவ்வாறான விடயங்கள் காரணமாக குழப்பங்கள் ஏற்படுகின்றன,நாங்கள் அவற்றின் ஊடாக விசாரணைகளை …
-
- 0 replies
- 320 views
-
-
30 DEC, 2023 | 05:16 PM இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார். இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
Posted on : 2007-07-23 நீடிக்கும் ஆடிக் கலவர அதிர்வு இன்றைக்குச் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணம் பலாலி வீதியில், திருநெல்வேலியில், தபால்கட்டுச் சந்தியில் வெடித்த நிலக்கண்ணியின் அதிர்வு இன்னும் ஓயவில்லை. அந்த அதிர்ச்சியின் அலைகள் பெரும் வன்முறைப் புயலாக விஸ்வரூபம் எடுத்து, இலங்கைத் தீவை இன்றும் கலங்கடித்து சமராடிக் கொண்டிருக்கின்றன. அன்று பறந்த சிறு பொறி, இன்று ஊழித்தீயாக உரு வெடுத்து,முழு இலங்கைத் தீவையும் வெந்தணலாய் தகிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. பௌத்த சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதி ராக, நீதியும், நியாயமும், கௌரவமும் மிக்க வாழ்வியல் உரிமை வேண்டி அஹிம்சை வழியில் அறநெறியில் சுமார் மூன் றரை தசாப்த காலம் சளைக்காது ஈழத் தமிழினம் நடத்திய விடு தல…
-
- 0 replies
- 1.1k views
-
-
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களினால் தீர்க்கப்படாத பல மனிதாபிமான பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலய காணிகள் மீளளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119588/language/ta-IN/articl…
-
- 7 replies
- 969 views
-
-
போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆலோசனை வழங்க சிறிலங்கா வரும் பிலிப்பைன்ஸ் நிபுணர் குழு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்சுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கம், சிறப்பு நிபுணர்கள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பவுள்ளது. இந்தக் குழு சிறிலங்காவின் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும். இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு சிறிலங்கா அதிபர் மேற்கொண்ட பயணத்தின் போது ஆராயப்பட்டுள்ளது. போத…
-
- 1 reply
- 408 views
-
-
இலங்கையின் சமா தான முன்னெடுப்புகளில் காத்திரமான பங்கு வகிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் தட்டிக்கழித்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவி வகிப்பது பெரிதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ரொனி பிளேயரின் கணிப்பீடு என்று தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பிளேயர் பிரதமராக இருந்தபோது இலங்கை நிலைவரத்தில் அதீத அக்கறை செலுத்தி வந்துள்ளார். தற்போது அவர் மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவியேற்றிருப்பதால் இலங்கை தொடர்பாக பிரிட்டன் மேற்கொள்ளும் முயற்சிகளில் அவர் தீவிர பங்கேற்பார் என எதிர்பார்க்க இயலாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு தசாப்த காலங்களாக, இலங்கை இன…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். புறச்சக்திகளினால் திணிக்கப்படும் தீர்வுத்திட்டமொன்று எமக்கு தேவையில்லை. எனினும் தீர்வுத் திட்டமொன்று அவசியம். அது உள்ளுர் ரீதியான தீர்வாகவோ அல்லது வெளிநாடு ஒன்றின் தலையீட்டுடன் கூடிய தீர்வாகவோ இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார். எனினும் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது இன்றியம…
-
- 2 replies
- 981 views
-
-
மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கையளிக்கப்பட்டன.. January 27, 2019 மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட சில மனித எச்சங்களில் காபன் பரிசோதனை செய்வதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 6 மனித எச்சங்கள் அடங்கிய பொதிகள் மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சங்கள் B/295 எனும் இ…
-
- 0 replies
- 257 views
-
-
வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், பல நாடுகள் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. புகலிடம் வழங்குவதில் கடுமையான விதிகள் பின்பற்ற படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பிலான விதிமுறைகளில் சில நாடுகள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் புகலிடம் வழங்க வேண்டிய அவசியமில்லை என பல நாடுகள் கருதுவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த காலங்…
-
- 0 replies
- 610 views
-
-
விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் ஊருக்கு அனுப்பிவைப்பு எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களை நேற்றையதினம் காலை இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்த 16 பேரையும் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர். திருகோணமலை மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களுகளுக்கு பேருந்து மூலம் தாம் அனுப்பி வைத்துள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்கள …
-
- 0 replies
- 321 views
-
-
சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுமந்திரன் அவருடைய வாயாலயே சொல்கிறார் நான் நேரடியாக சென்று பேசிய போது 200 பேருக்கு மேற்பட்டவர்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தார்கள். ஆனால் 134 வாக்குகள் தான் பதிவாகின என்று, இதிலிருந்து இன்னொரு விடயம் தெரிகிறது. உங்களுக்கு நேரடியாக சொல்வதற்கே பலர் பயப்படுகிறார்களா?அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூட அச்சம் இருக்கின்றதா? என்பது உங்களது வார்த்தைகளிலே தெரிகிறது. https://tamilwin.com/article/those-who-voted-against-sum…
-
- 0 replies
- 502 views
-
-
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 14:56 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் சென்னையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த ரஞ்சன் மத்தாயிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப முனைந்த போதும், அவர் எதுவும் பேசாமலேயே அங்கிருந்து சென்று விட்டார். இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக சிறிலங்கா செல்லும் ரஞ்சன் மத்தாய், கொழும்பு செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதல்வரைச் சந்தி…
-
- 0 replies
- 806 views
-
-
விசேட தேவையுடையோரும் வாக்களிக்கலாம் வடக்கு, கிழக்கில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடையோரின் நலன் கருதியும்,அவர்களின் வாக்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் எதிர்வரும் தேர்தலில் புதிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தொரிவிக்கையில், எதிர்வரும் தேர்தலில், விசேட தேவையுடையோருக்கான புதிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின்படி கண்பார்வையற்றோரின் நலன் கருதி, பிரெயில் எழுத்து முறையிலான வாக்குச் சீட்டை அ…
-
- 0 replies
- 386 views
-
-
பால்மாவில் பன்றிக்கொழுப்பா? – அரசு மறுப்பு! வெளிநாட்டு பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்ததாக வெளியாகும் கருத்துக்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது இந்தக் கருத்தினை முன்வைத்திருந்தார். இது குறித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்த அமைச்சர், “உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் பால் கொழுப்பு தவிர வேறு எந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவில் இல்லை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோதனை க…
-
- 0 replies
- 357 views
-
-
Defence Secretary Liam Fox has resigned. He has been under pressure after a week of allegations over his working relationship with friend and self-styled adviser Adam Werritty. In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" his personal and professional responsibilities to become "blurred". The BBC's political editor Nick Robinson said Mr Cameron concluded Mr Fox could no longer continue. The defence secretary has faced allegations about his links to his former flatmate Adam Werritty after it emerged that the lobbyist had accompanied him on 18 foreign trips despite having no official role. Mr Fox was being investigated …
-
- 12 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் புதிய பாதை அமெரிக்காவுக்கு கிடைத்த வரம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரி JUN 03, 2015 | 7:32by கார்வண்ணன்in செய்திகள் நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப் வேபரவையில் உரையாற்றிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் ரிச்சர்ட் ஈ.ஹோக்லன்ட், இதனைத் தெரிவித்துள்ளார். ‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான அவர், ஜனநாயக வழியில் நல்லாட்…
-
- 0 replies
- 605 views
-
-
அடம்பன் கீலிக்கரையான் கடற்பகுதியில் 820 கிலோ பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்பு : February 14, 2019 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் மன்னார்-அடம்பன் காவல்துறைப் பிரிவில் சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று வியாழக்கிழமை(14) காலை அடம்பன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக்கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 183 views
-
-
புதன் 29-08-2007 05:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] அத்தாசின் மொழிபெயர்ப்பாளருக்கும் கொலை அச்சுறுத்தல் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பாதுகாப்பு பத்தி எழுதும் இக்பால் அத்தாசின் பத்தியை தினமும் வெளியாகும் லங்காதீப பத்திரிகையில் மொழிபெயர்ப்பு செய்யும் மூத்த பத்திரிகையாளர் டபிள்யு.ஜி.குணரட்னவிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ச்சியாக இவ்வாறக அத்தாசின் பத்தியை மொழிபெயர்ப்பு செய்யகூடாது அச்சுறுத்தல்விடுக்கப்பட்டு வந்ததாக தெரியவருகிறது. இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் நபர் சிறீலங்கா வான்படையை சேர்ந்த உத்தியோகஸ்தர் எனத்தெரியவருகிறது. இதேவேளை அத்தாசிற்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையடுத்து அவர்தனது பாதுகாப்பு நிலவரங்கள்…
-
- 0 replies
- 815 views
-
-
கொக்கிளாய் பகுதியில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது காணி பலவந்தமாகப் பறிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தமிழ்நெட் இணையத்தளம் குறிப்பிடுகிறது. அந்தப் பகுதியில் இரண்டாவது விகாரை ஒன்றைக் கட்டுவதற்குக் காணியை வழங்க மறுத்த தமிழர் கடுமையாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவேளை, அங்கு அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, அங்கிருந்து துரத்தப்பட்டாரெனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காப் படைகளின் முழு ஆதரவுடன் அங்கு செயற்படும் பௌத்த பிக்கு ஒருவரிடம் இந்தத் தமிழரின் காணி விகாரையை அமைப்பதற்கென வழங்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1.2k views
-
-
பொது மக்கள் மீதான கிளைமோர் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் : செ.கஜேந்திரன் Written by Ravanan - Sep 04, 2007 at 07:37 PM தமிழ் மக்களின் பாராம்பரிய வாழ்விடமான முசலிப் பிரதேசத்தினை ஆக்கிரமித்து அக்கிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்து இனச் சுத்திகரிப்பு செய்து அப்பிரதேசத்தினை சிங்கள தேசமாக மாற்றும் திட்டத்துடன் முசலிப் பிரதேசத்தினை கைப்பற்றும் திட்டமாகும். கடந்த சனிக்கிழமை 01-09-2007 அன்று காலை சிலாவத்துறை முள்ளிக்குளம் வீதியில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதுடன் ஒரு குழந்தை அடையாளம் காணப்படவில்லை. இத்தாக்குதல் ஸ்ரீலங்கா …
-
- 0 replies
- 811 views
-
-
1 Min Read February 26, 2019 A யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் , கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். …
-
- 3 replies
- 522 views
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய விசேட குழு Editorial / 2019 மார்ச் 01 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:28 Comments - 0 அதிகாரப்பகிர்வு தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நால்வர் கொண்ட அணியொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (28) மாலை, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதானிகளது கலந்துரையாடலின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டதென, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். நேற்றை இந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக…
-
- 0 replies
- 307 views
-