ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
நாட்டினை பஞ்சத்திலிருந்து மீட்க கூட்டமைப்பு தயார் – இதற்கான நிபந்தனையை முன்வைத்தார் சாணக்கியன்! நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்…
-
- 0 replies
- 203 views
-
-
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை 2010-01-11 07:22:25 யாழ்.பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு தமிழ் மக்களுக்கு கௌரவமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் தமிழில் பேசுகையில் மேலும் கூறியதாவது: வன்னியில் இருந்து மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். தற்போது அவர்களை நாம் மீளக்குடியமர்த்த ஆரம்பித்து அந்தப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அகதிகள் யுகம் இனிம…
-
- 6 replies
- 935 views
-
-
கூட்டமைப்பு – மைத்திரி இன்று கொழும்பில் பேச்சு அரசமைப்புத் தாமதம் பற்றி ஆராயப்படும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தொடர்பில் அரச தலை வர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பேசவுள்ளது. இதற்காக நேரம் ஒதுக் கித் தருமாறு கேட் டுப் பல நாள்களாகிவிட்டபோதும்இ அரச தலைவரைச் சந்திக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூட்டமைப் பின் நிலைப்பாட்டை அதன் தலை வர் இரா. சம்பந்தன் இறுக் கமாக இடித்துரைப்பார் என்று தெரி கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதி…
-
- 0 replies
- 348 views
-
-
கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…
-
- 10 replies
- 1.5k views
-
-
மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம் – சிறிலங்கா அரசு வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள எஞ்சியிருக்கும் மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது. அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தகையோடு வன்னி நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்தும் பணிகள் வேகமாய் நடைபெற்ற நிலையில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தற்போது சுமார் 98 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக அனைத்து மக்களையும் மீள்குடியேற்றம் செய்வோம் என சிறிலங்கா அரசு வாக்குறுதி அளித்தபோதிலும்…
-
- 1 reply
- 666 views
-
-
புத்தரின் உருவப் படத்தைப் பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகல பிரதேசத்தில் பன்றி, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர் ஒருவர் 2014ம் ஆண்டுக்கான கலண்டர் அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார். தலதா மாளிகை மற்றும் கௌதம புத்தரின் உருவப்படங்கள் இந்தக் கலண்டர்களில் காணப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கலண்டர் வழங்கிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கலண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஓர் பௌத்தர் எனவும், அவரது மனைவி வேறு மதத்தைச் சார்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID…
-
- 2 replies
- 571 views
-
-
போரால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மனித உரிமைகளை பேணவும் எமது நடுவம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடுவம் அனைத்துலக நாடுகளின் நியமங்களுக்கு ஏற்ற முறையிலும், மனித உரிமை தகவல்களை ஆவணப்படுத்தும் அமைப்பு என அழைக்கப்படும் கூறிடொக்ஷ்ஸ் HURIDOCS அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் ஆவணப்படு;த்தும் முறைகளை பின்பற்றி மனித உரிமை மீறல்களை பதிவு செய்கின்றது. இப் பணியானது இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து குறிப்பாக 1958 லிருந்து அண்மைக் காலம் வரை இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் தமது குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களை இழந்து தவிக்கின்ற குடும்பத்தினர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புகனிற்கு சாட்சிகன…
-
- 0 replies
- 930 views
-
-
சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார் சரத் பொன்சேகா! தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தைத் தவறவிட்ட சரத் பொன்சேகா, சிறையிலிருந்து வெளியே வரும் சட்ட ரீதியான முயற்சியிலும் தோற்றுப்போயுள்ளார். பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி முஷ்ரப் போலல்லாவிட்டாலும், யுத்த வெற்றி மயக்கத்திலிருந்த மகிந்த சகோதரர்களை சுற்றி வழைத்துச் சிறைபடுத்தத் தயங்கியதால், தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றித் தன்னை அவமானப் படுத்திய ராஜபக்ஷ சகோதரர்களுக்கப் பாடம் படிப்பிக்க முடியாத சிறிலங்காவின் இராணுவத் தளபதி தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கடந்த காலங்களைக் கணக்கிட்டு வருகின்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரா…
-
- 2 replies
- 934 views
-
-
காணாமற்போனவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் கடத்தியவர்கள்தான் குற்றவாளிகள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு பரிந்துரைக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவினர் நேற்றுத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்திக் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனதாகவும் பெற்றோர் சிலர் விசாரணையில் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆணையாளர்களான மனோ ராமநாதன், சுரஞ்சனி விஜயவர்த்தன ஆகியோர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றுச் சாட்சியங்களைப் பதிவு செய…
-
- 0 replies
- 324 views
-
-
வன்னியில் உருவாக்கியது போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் பாதுகாப்பு துணை குழுக்களை அமைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. முன்னாள் போராளிகளை முகாம்களிற்கு அழைக்கும் படையினர் குறித்த சிவில் பாதுகாப்பு துணைகுழுக்களை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பது பற்றி பிரஸ்தாபித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு விசுவாசமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போதிய ஆட்கள் இல்லாதிருப்பதாகவும் அதனை கருத்தில் கொண்டே குறித்த சிவில் பாதுகாப்பு துணைக் குழுக்களை அமைப்பது பற்றி தமக்கு ஆலாசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக படை அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் போராளிகள் தரப்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. ஏற்கனவே வன்னி முழுவதுமாக சுமார் மூவாயிரம…
-
- 0 replies
- 299 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மனோவின் கூட்டணி அதிருப்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடும் அதிருப்தியில் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது. தமிழர் சார்ந்த விவகாரங்க ளின்போது தாம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது என்று முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் நேற்றுத் தெரிவித்தார். ‘நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப் பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் இருந்த சில சரத்துகள் மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவத் துக்கு அச்சுறு…
-
- 0 replies
- 214 views
-
-
ஐ. நா அதிகாரிகள் இலங்கைக்கு வந்தால் கைது செய்யவேண்டும் - எல்லாவல மேதானந்த தேரர் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்…
-
- 5 replies
- 515 views
-
-
ஜே.வி.பி தொடர்ந்தும் வலுவான கட்சியாகவே திகழ்வதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா. தென் மற்றும் மேல் மாகாணசபைகளில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் பேசிய அவர், அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்தும் ஜே.வி.பி வலுவான மாற்றுக்கட்சியாக காணப்படுகின்றது. எமது கட்சியை மூன்றாம் சக்தியாக நாம் கருதவில்லை, மாற்று அரசியல் சக்தியாகவே கருதுகிறோம். மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி வெற்றியீட்டும். இதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=102950&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 234 views
-
-
சாரியை ஏந்திய விவகாரம்: செயலாளருக்கு இடமாற்றம் திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரத்தையடுத்து, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.பீ விஜயரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவங்ச தெரிவித்தார். இந்த இடமாற்றம் தொடர்பில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பத…
-
- 2 replies
- 534 views
-
-
நாட்டின், வங்கித் துறையும்... ஆபத்தில் உள்ளது – ரணில் எச்சரிக்கை! நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குழப்பமடைந்து அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வங்கித் துறையும் ஆபத்தில் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அதிகாரத்துவ ஆயுதங்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதால் பொருளாதார நெருக்கடி குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் ஒரு திசையில் செல்கின்றன என்றும் ஏனைய நிறுவனங்கள் மற்றொரு திசையில் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிடம் இருந்து பெறும் கடன் சில வாரங்களுக்கு மட்ட…
-
- 0 replies
- 130 views
-
-
இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ (றுயபெ லுi) தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திரம், இறைமை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் தங்களது உள்…
-
- 0 replies
- 358 views
-
-
வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு Share வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. வடமத்திய மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது. 33 உறுப்பினர்களைக் கொண்ட வடமத்திய மாகாண சபையில் 21 உறுப்பினர்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருந்தது. இதில் ஐக்கிய தேசிய கட்சி 11 உறுப்புரிமைகளையும், ஜேவிபி 1 உறுப்புரிமையையும் பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தின் பதவிக்காலம் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://newu…
-
- 0 replies
- 132 views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திலிருந்து முன்னர் எடுத்த ஏற்பாடுகள் விமான ஆசன முன்பதிவு (Bookings) என்பனவற்றிற்கான நிதியை மீள வழங்க அறிவித்துள்ளதாக பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அதாவது,நாட்டில் தினமும் ஏற்படும் டொலர் மாற்றம் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் பணத்தினை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்பதிவு என்பனவற்றில் பிரச்சினை ஏ…
-
- 0 replies
- 223 views
-
-
தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாண…
-
- 10 replies
- 5.6k views
-
-
சவால்களுடன் முகாம் வாசிகள் தொடரும் சவால்களுடன் முகாம் வாசிகள் வடக்கு முகாமில் உள்ள ஒரு மூதாட்டி இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீள் குடியேற்றத்தின் மூலம் மறுவாழ்வு பெற்று வருகின்ற போதிலும் இன்னும் சவால்கள் எஞ்சியிருப்பதாகவே ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கின்றது. மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் உண்மையாகவே இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக செயலாற்றி வருகின்ற போதிலும், மீளக்குடியமரும் மக்களுக்கான வீடுகள், தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்…
-
- 1 reply
- 648 views
-
-
அரசமைப்பை தோற்கடிக்க இராணுவத்தை நாடும் மகிந்த அணி Share புதிய அரசமைப்புக்கான முயற்சியை அடியோடு தோற்கடிக்க இராணுவத்திடம் உதவிகோர மகிந்த அணி தயாராகி வருகின்றது. இராணுவத்தினருடன் பேச்சுகளை நடத்த சிறப்புக் குழுவை அமைக்கவும் முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது குறித்து மகிந்த அணியின் பிரதான அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் மகிந்த அணியின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர். புதிய அரசமைப்புத் தொடர்பில் பொ…
-
- 3 replies
- 388 views
-
-
திருமலை ஈச்சிலம்பற்றில் மீழ் குடியேறிய மக்களுக்கு எதுவித நிவாரணமும் இல்லை திருமலை நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் குடியேறிய தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளோ அல்லது வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு மீழ் குடியேறிய மக்கள் சினமடைந்துள்ளதுடன் பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்தும் வருகின்றனர். கூட்டுறவு கிளைகள். பாடசாலைகள், வீதிகள் மற்றும் குட் நீர் போன்ற ஒழுங்கு படுத்தல்கள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன் மக்களிற்கான மீழ் குடியேற்ற நிவாரணங்களும் இன்னமும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர் மக்கள். தமது தேவைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும் அதனை தீர்த்து வைக்கவுமே தாம்…
-
- 0 replies
- 505 views
-
-
ஜெனீவா கூட்டத்துக்கு இலங்கை அரசாங்க குழு அடுத்த வாரம் பயணம்! [Friday, 2014-02-28 07:56:25] ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இதே வேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச…
-
- 0 replies
- 199 views
-
-
தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் April 26, 2022 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உள…
-
- 1 reply
- 217 views
-
-
எமது இனமும், நிலமும் சூறையாடப்படுகின்றது - மாவை சேனாதிராஜா யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 இன்றைய சந்ததியினர் எமது இனத்தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லையேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு கூறினார் மாவை சேனாதி ராஜா எம்.பி. இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று மாலை யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவர் செ.இலகுநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும்போது மாவை சேனாதி ராஜா மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது எமது சூழலில் நி…
-
- 0 replies
- 496 views
-