Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழத் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 22 மே 2011 அன்று சிறப்புற நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தர்சன் குணசிங்கம் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியக் கொடியை மருத்துவர் ராகவன் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஸ்கந்தகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் திரு. யோகராசா தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், துணை வெளியுறவு அமைச்சர் மாணிக்கவாசகர், நாடுகடந்த …

  2. கிழக்கு தேர்தலில் ஜ.தே.க.வுக்கு அளிக்கும் வாக்குகள் பிரபாகரனுக்கு உரியனவாகும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 5/1/2008 10:56:23 PM - கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போடும் வாக்காகும். அரசாங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் படையினர் வடக்கிற்கு செல்வதற்கான வாக்காகவே அமையும். இதனால், எதிர்வரும் 10ஆம் திகதி 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று சமையலறை யுத்தத்திற்கும் விரைவில் முடிவுகட்டுவோம். கிழக்கு மாகாண மக்களுக்கு ஜன…

  3. நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான தீர்ப்பை இன்று வெளியி…

    • 5 replies
    • 1.2k views
  4. விமல் வீரவன்சவின் இருபதுக்கு இருபது - வேலவன் - ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று மகிந்தவின் அரவணைப்பிலிருந்து கொண்டு கட்சியை ஆரம்பித்துள்ள விமல் வீரவன்ச தனது கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்த இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கைக்கு அவர் ~20 இற்கு 20| என பெயர் சூட்டியுமுள்ளார். இது துடுப்பாட்டத்தின் பாதிப்பால் இடப்பட்ட பெயராகும். அதாவது, இப்போது 20 இற்கு 20 துடுப்பாட்டம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்று வருவதால் இளைஞர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இந்த ஒரு மாதகாலப்பகுத…

  5. கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலி…

  6. தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார். வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார். அந்…

  7. இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!! [sunday, 2011-03-13 04:50:25] ஹொன்சு10வையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்…

    • 6 replies
    • 1.2k views
  8. மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/142429

  9. போவோர் போனால் போகட்டும் இருப்போரை பாதுகாப்போம் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டமை அரசாங்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமன்று. அவர்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றாலும், அரசு பலமுடனேயே இருக்கின்றது. போவோர் போனால் போகட்டும். இருப்பவர்களை நாம் பாதுகாப்போம் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். தொப்பிகல காட்டுப்பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறைப்பட்டுள்ளனர் என்ற விடயம் உலகமறிந்தது. ஆனால், அங்கு படையினரே விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ளதாக பொறுப்புள்ள எதிர்…

    • 0 replies
    • 1.2k views
  10. வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன…. வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 176 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 88 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 64 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 33 இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களும் யாழ் மாவட்டத்தில் 79 இடங்களும் கிளிநொச்சியில் 18 இடங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்…

  11. முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…

    • 9 replies
    • 1.2k views
  12. தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மீது இலண்டனில் இன்று பதியப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கலகேயைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் முயற்சித்தபோதும் இவ் இராணுவ அதிகாரி பிரித்தானிய மண்ணைவிட்டு வெளியேறியுள்ளதால் நீதிமன்றத்தால் கைது உத்தரவைப் பிறப்பிக்க முடியவில்லை என உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: உலகத் தமிழர் பேரவையின் சார்பாக வணக்கத்திற்குரிய இம்மானுவேல் அடிகள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோ…

    • 1 reply
    • 1.2k views
  13. வடக்கைக் கைப்பற்றும் படைநவடிக்கை நிறுத்தப்படமாட்டாது - லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன வடக்கைக் கைப்பற்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை ஒருபோதும் இடை நிறுத்தப்படமாட்டாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று கொழும்பில் ஊடகவியலாரிடம் கருத்துரைத்திருக்கும் அந்தஸ்து அல்லாத ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்துவதைத் நிறுத்தினாலும் வடக்கு நோக்கிய படை நடவடிக்கைகள் தொடரும் எனச் சூழுரைத்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  14. ஐ.தே.க.வுக்கு ஆதரவாக பிரிட்டன் செயற்படுகிறது * ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அரச சமாதான செயலாளர் நாயகம் புதுடில்லியில் குற்றச்சாட்டு இலங்கையில் `ஆட்சி மாற்றத்தை' பிரிட்டன் எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளும் கட்சியிலும் பார்க்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரிட்டன் கொண்டிருப்பதாகவும் அரச சமாதான செயலகச் செயலாளர் நாயகம் ரஜீவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் (பிரிட்டன்) மகிழ்ச்சியடைவார்களென கூறியிருக்கும் ரஜீவ விஜயசிங்க, மேற்குலகின் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில பிரிவினர் மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை தெரிவ…

  15. வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல் திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 10:03 வல்வெட்டித்துறை ஆதிகோவிலடிக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் நேற்றிரவும் வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த இரவு 8மணியளவில் வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு படகில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்ற போது இவர்களை வல்வெட்டித்துறை 8ம்பாகம் கடற்பரப்பில் வைத்து வழிமறித்த சுமார் 5ற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகளில் வந்தவர்கள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக வல்வெட்டித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இந்திய இலங்கை கடற்படையினர் உதவியாக இருப்பதாகவும் இலங்கை தமிழனுகள் அனாதை பிச்சைக்காரன்கள் என்று தம்மை இந்திய மீனவர்கள் திட்டியதாக…

    • 3 replies
    • 1.2k views
  16. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று ஒரு பிரதேசம் இருக்கிறதா? -டிட்டோ குகன்- "விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்" என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கான எதிர்ப்பால் கடந்த வார பாராளுமன்றம் அதிர்ந்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஏனைய சந்தர்ப்பங்களில் போலல்லாது, சற்று அவதானத்துடனேயே பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வார பாராளுமன்ற அமர்வு 26 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதியுடன் முடிவடையும் வரை வரவு - செலவுத் திட்டம் மீதான அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதமே நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் க…

  17. Posted on : Tue Aug 14 8:23:12 EEST 2007 .ரணிலின் உரை துண்டு பிரசுரத்தில்: இன்று கொழும்பில் விநியோகம் மாத்தறையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அர சிற்கு எதிரான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்துள்ளது. நாளை புதன்கிழமை கொழும்பு புறக் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இத்துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோ கிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரி வித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்காவின் தலைமையில் பிற் பகல் 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும். ரணிலின் அந்த உரை ஊடகங்களில்…

  18. நவாலி படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு தமிழர் வரலாற்றில் மக்களால் ஜீரணித்துப் பார்க்க முடியாத படுகொலை என்றால் அது நவாலி படுகொலையாகும். இப்படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை. ஆலய வீதிகளில் தஞ்சமடைந்த வேளை யில் 13 குண்டுகளுக்கு 147 பேர் கொலை யுண்ட கோரமான தினத்தின் நினைவு நாள் 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நவாலித் தாக்குதல் சம்ப வத்தை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்பு ரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட சம்ப வத்தை நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்கின்றோம். இந்த கொடுமையான நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலய உயிரிழப்பு சர்வதேச சமூகத்த…

  19. இரட்டை வலு சக்தி கொண்ட முச்சக்கர வண்டிகளை தடை செய்வதென்பது இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகுமெனத் தெரிவிக்கும் அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் நலன்புரிச் சங்கம் தடை செய்வதென்றால் தமது முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் முச்சக்கர வண்டிகளை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றது. கொழும்பு- 15 முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினால் எலிஹவுஸ் மைதானத்திற்கு முன்பாக இரட்டை வலு முச்சக்கர வண்டிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தின்போதே இச்சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். இலங்கை முழுவதும் 2,80,000 முச்சக்கர வண்டிகள் பாவனைய…

  20. - பொ.சோபிகா பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக தற்போது உடைப்பெடுத்துள்ளன. கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடல் நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/--main/135074-2014-11-29-09-01-45.html

  21. கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் ஏழு வார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீள ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகள் தொடர்பான விதிமுறைகளின் பிரகாரம், S&P SL 20 சுட்டி 196.93 புள்ளிகளால் அல்லது 10.11% இனால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினத்துக்கு மூடப்பட்டது. இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் புரள்வு பெறுமதி ரூ. 24 மில்லியனாக பதிவாகியிருந்தது. சந்தை செயற்பாடுகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட போது அபவிசு 179.…

    • 5 replies
    • 1.2k views
  22. போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து சிறீலங்கா தப்பிக்க முடியாது! - சனல்-4 செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013 17:43 சிறீலங்காஅரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சிறீலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூடைகளுக்கு நடுவே பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்…

  23. செவ்வாய்க்கிழமை, 8, மார்ச் 2011 (23:53 IST) ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது! இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு! 08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறங்கியதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. 08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் 08.03.2011 அன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு…

  24. யாழ்.தேவி தடம்புரண்டது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/219918

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.