வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
452 topics in this forum
-
இன்று எம் மூத்த கலைஞர், வில்லிசை மன்னர் இராஜன் வில்லிசைக்குழுவோடு இணைந்து பல அருமையான வில்லிசை நிகழ்வுகளை எமக்கு தந்தவர் ,கவிஞர் , என்ற பல வகை திறமைகள் மூலம் ஈழக்கலை உலகிற்கு பெருமை சேர்த்த எம் மதிப்புக்குரிய ராஜன் முருகவேல்[சோழியான் அண்ணா ] அவர்களுடைய 25 ஆவது திருமண நினைவு நாளிலே அவரையும் ,அவரது துணைவியாரையும் , வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்
-
- 39 replies
- 9.8k views
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் முக்கிய எழுத்தாளரான நெடுக்ஸ் அவர்களுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். எப்படி இவ்வளவு எழுத முடிகிறது
-
- 38 replies
- 2.9k views
-
-
காதலிப்பவர்கள் , காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் , எப்பிடி தான் ட்ரை பண்ணாலும் ஒரு பிகரும் மாட்டுதில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள்...., மாட்டின பிகர எப்பிடி கழட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்...... சூப்பர் பிகருக்கு ட்ரை பண்ணி சுமார் பிகராவது கிடைச்சிச்சே என்று சந்தோஷத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுண்டலின் காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 18 replies
- 2.9k views
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் தூண்களில் ஒன்றான தமிழரசுவுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். இந்த 20,000 பதிவுகளை பதிய அவர் எடுத்த (எடுக்கும்) நேரம் மூன்று வருடங்களினை விட குறைவானது என்பது உண்மையில் மலைப்பான விடயம். தமிழரசு யாழில் இணைக்கும் பல செய்திகள் கூகிள் போன்ற தளங்களில் தானியங்கி மூலம் இணைக்கபடுவதால் இணையத்தள வரிசையில் யாழ் தொடர்ந்தும் கணிசமான இடத்தில் தன்னை தக்க வைத்துள்ளது என்பதும் முக்கியமானது. இது வரைக்கும் 5 கள உறுப்பினர்களே 20,000 பதிவுகளை கடந்து இருக்கின்றார்கள். அவர்களிலும் இருவர் தான் இன்று வரைக்கும் யாழுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 56 replies
- 4.1k views
-
-
உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
-
- 19 replies
- 9.7k views
-
-
எமது கள உறவான நெற்கொழுதாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " என்ற முதலாவது கவிதை தொகுதி வெளியாகியுள்ளது . நெற்கொழுவன் எதுவித ஆர்பாட்டமும் இல்லது அமைதியாக இந்த கவிதை தொகுதியை உருவாக்கியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய விடையம் ஒன்றாகும் . இந்தக் கவிதை தொகுதியை கறுப்புப் பிரதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது . இந்தக் கவிதை தொகுதிக்கு நிலாந்தன் , எமது கள உறவான ஜெயபாலன் ஐயா போன்றோர் முன்னுரை வழங்கியுள்ளார்கள் . எனது அருமை தம்பி கொழுவனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .
-
- 27 replies
- 2.1k views
-
-
வரப்போகும் ஆங்கில புது வருடத்தில் தமிழர்களின் இன்னல்கள் நீங்கி சகல சௌபாக்கியங்களுடனும் தமிழ் இனம் சிறப்புற்று வாழ வாழ்த்துகின்றேன் !
-
- 30 replies
- 2.6k views
-
-
யாழ் உறவுகளுக்கு... நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 19 replies
- 3.2k views
-
-
நன்றி! எல்லோரையும் போல் எனக்கும் ஒருநாள் பிறந்த நாள். எனக்கு அது டிசம்பர் பதினேழு. அவ்வளவுதான். எனது இந்த பிறந்த நாள் தொடர்பான நிகழ்வுகளை நான் வாழும் நாட்டுக்கும், நான் பிறந்த இனத்துக்கும் பயன் தரும் வண்ணம் என்னால் இயன்ற வரையில் பயன்படுத்த முயல்வதே எப்போதும் என் எளிமையான நோக்கம். இந்த நாளை முன்னிட்டு எனக்கு முகநூல், மின்னஞ்சல், கைப்பேசி உட்பட அனைத்து சமூக தளங்கள் மூலமாகவும், இலங்கை முழுக்க மற்றும் நாட்டுக்கு வெளியே இருந்து வாழ்த்துகளை தெரிவித்த ஆயிரக்கணக்கான அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவும்தான் என்னை எங்கள் கட்சியின் தலைவனாக இருந்துகொண்டு, அனைத்து அழிவு நோ…
-
- 6 replies
- 957 views
-
-
இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார். தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
-
- 28 replies
- 2.6k views
-
-
The celebration of forthcoming 2014 new year eve - The Dubai way, check it out here! I will miss this mega event this time. http://www.mydowntowndubai.com/en/newyear/
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இன்று வயது 65...! மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே...ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்.... வேரில் தமிழ் பாய்ந்த வீரமரம் சாயாது....
-
- 5 replies
- 1k views
-
-
-
தலைவரின் 59தாவது பிறந்த நாள் பாடல் பாடல் ( அஞ்சலி கதிரவன் )
-
- 41 replies
- 9.5k views
- 1 follower
-
-
5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்..... எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம் வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று.. வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா
-
- 33 replies
- 2.9k views
-
-
15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும் ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும். களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும் உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர். மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
- 63 replies
- 6.3k views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது. தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்.. நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC Posted on: 24/09/2013 (Tuesday) Ponnudurai Ayn…
-
- 34 replies
- 3.4k views
-
-
யாழ் களம் கண்ட மன்னவனே..எங்களின் எதிர்கால சூரியனே..உன்னை வாழ்த்த தமிழில் வார்தை இன்றி தவிக்கிறோம்..நீ யாழில் போடப் போறாய் 10000 ஆயிரம் நீயோ போடுவாய் 20000 ஆயிரம்.. சுவிஸ்சுக்கு நீ வாழ்ந்து காட்டு எதிரியை போட்டு தாக்கு உன் வாழ்க்கையில் நீ உயந்து காட்டு...நீ நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்
-
- 30 replies
- 2.5k views
-
-
ஆப்பிள் ஐ போன்களில் தமிழ் விசைப்பலகை நிறுவிய மலேசிய தமிழர் கவிஞர் முத்து நெடுமாறன் கணிணி பொறியாளர். வாழ்த்துவோம். https://www.facebook.com/photo.php?fbid=717543348261880&set=a.326669404015945.97318.100000186634527&type=1&theater
-
- 4 replies
- 888 views
-
-
இன்றைய ஒரு பேப்பரில் கள உறவுகளான கவிதையின் கவிதையும் , அஞ்சரனின் கவிதையும் , இன்னுமொருவனின் ஊரைப் பற்றிய பயணக் கட்டுரையும் வெளியாகியுள்ளன . மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . மிக்க நன்றி ஒரு பேப்பருக்கு.. ;)
-
- 16 replies
- 1.8k views
-
-
பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு. இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன். இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமா…
-
- 6 replies
- 3.3k views
-
-
என்னை யாரும் வாழ்த்தப்போறது இல்ல. அதுதான் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சன். என்னடா 50 கருத்தை எழுதிப்போட்டு இப்பிடி அலப்பறை அடிக்கிறான் எண்டு யோசிக்க இது என்ன புதுசா? அது என்ன 50.0000 எண்டு போட்டிருக்கான் என்கிறீர்களா மிகத் திருத்தமாகவும் கொஞ்சம் எழுப்பமாகவும் இருக்கெட்டும் எண்டுதான்.
-
- 27 replies
- 1.8k views
-
-
-
http://youtu.be/X9K3eSe_4b4 'ஆடிப்பெருக்கு' திருவிழா - கொண்டாடுவது ஏன்? "ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக....." என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம். ஆடியின் சிறப்பு: புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம், ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குற…
-
- 12 replies
- 5.4k views
-
-
சரியாக 6000 கருத்துக்களை எழுதிய புத்தனை வாழ்த்துவோம் புத்தன் சமுதாயத்தை மிக நுணுக்கமாக அவதானித்து நகைச்சுவையாக கதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துவோம்.
-
- 29 replies
- 3.1k views
-