கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். ""ஏம்பா ரமேஷ்... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?'' பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். ""நான் கேட்டுட்டேயிருக்கேன்... ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?…
-
- 6 replies
- 1.2k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01 மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவ…
-
- 7 replies
- 1.4k views
-
-
அழுத்தம் க.சட்டநாதன் புலன்கள் ஒடுங்கி உறைந்த நிலையில் அவன் இருந்தான். கலக்கமுற்றிருந்தவனை எதுவும் நிதானப்படுத்தவில்லை. பதகளிப்பு அவனுடனேயே அசையாது இருந்தது. அவனைப்பார்த்த ஐயா, “என்ன ரமணா…! குட்டி போட்ட பூனை போல வளைய வளைய வாறை… ஏ.எல் சோதனை வெள்ளிக்கிழமை, ஏழாம் திகதி……! இன்னும் மூன்று நாள்தான் கிடக்கு, எழுந்து படியன்ரா….!” ஐயாவின் பேச்சு அவனுக்கு எரிச்சல் தருவதாய் இருந்தது. உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு முறை படையெடுத்து, அவனுக்கு தோல்விதான் மிஞ்சியது. ‘இன்னுமொரு முறை அந்தத்தொந்தரவா….?’ சலிப்புடன் அவன் புரண்டு படுத்தான். “ அம்மா இருந்திருந்தால் என்னைப்புரிந்து கொண்டு அனுசரணையாக இருந்திருப்பாளோ…? அம்மான்ரை இதமும் பிரியமும் ஏன் ஐயாட்டை இல்லை… சரியான சுடு…
-
- 1 reply
- 715 views
-
-
மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின. 2007 செப்டெம்பர் 08 அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள் அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின் 20வத…
-
- 11 replies
- 1.7k views
-
-
பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோவை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் அல்லது கண்டிருக்கலாம். அந்த நாட்களில் கொழும்பில் அனேகமான வீடுகளில் கனெக்ஷ்சன் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது இருக்கவில்லை. எனக்கு அது பிரச்சனையாகவும் இல்லை. என்னை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் புஷ்பா அக்கா வீட்டில் றெடிவிஷன் இருந்தது. இந்த ஊடகம் தொடர்பாக பலரையும் திக்குமுக்காட வைக்கும் மட்டற்ற பல கேள்விகள் பாலகனான என்னிடம் அன்று இருந்தன. அதற்கு வரமுதல் றெடிவிஷனைப் பற்றிக் கொஞ்சம் அறிவோம். இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ. முதற் படத்தில் காட்டியவாறு நல்ல பவுத்திரமான இட…
-
- 9 replies
- 764 views
-
-
மண்டைக்காய் “என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற. போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே” என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது. “முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவ…
-
- 0 replies
- 618 views
-
-
விடுதலை வேங்கை குயிலி - உலகின் முதல் தற்கொடைப் போராளி கு.ஜக்கையன் இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையொட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே. நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளிகளுக்கென தனிப்பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களி…
-
- 10 replies
- 9.6k views
-
-
நான் பிறந்தது ஊர் மக்களால் “கீளிச்சந்தை ஆஸ்பத்திரி” என்று செல்லமாக அழைக்கப்படும், அளவெட்டி அரசினர் மருத்துவமனையில் தான். பின் எனது ஆரம்ப மழலைக் காலங்களில், அப்பாவின் வேலை காரணமாக திருகோணமலை, உப்புவெளி, என முதலிருவருடங்கள் கழிந்தன. பெற்றோர்கள் என்னை சல்லியம்மன் கோவில், கோணேஸ்வரர் கோவில் என்று நேர்த்திக்காக கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனது முதல் பிறந்த நாளிற்கு ஐந்து விரலிற்கும் ஐந்து மோதிரம் போட்டிருக்கின்றார்கள். ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை. எல்லாமே அப்பா, அம்மா, மற்றும் என்னை அங்கு வளர்த்தவர்கள், பிற்காலத்தில் சொல்லிய கதைகள். மற்றப்படி திருகோணமலை, என்ன நிறமென்றே எனக்கு இன்றுவரை தெரியாது. போய்ப்பாக்க வேணுமெண்டு ஆசைதான். பார்க்கலாம்! நான் பிறந்த “கீளிச்சந்தை ஆஸ்ப…
-
- 12 replies
- 905 views
-
-
தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும். சாத்திரி ஒரு பேப்பர். இந்த வருசம் நத்தாரோடை பத்து நாளைக்கு கடையை பூட்டுவம் எண்டு முதலாளி சொல்லிட்டான்.நீண்ட நாளின் பின்னர் பத்துநாள் லீவு மகிழ்ச்சிதான் நத்தார் முடிந்ததுதம் லண்டனுக்கும் ஒருக்கா போய் சில உறவுக்காரர் பழைய சினேதங்கள். எல்லாத்தையும் பாத்திட்டு வரலாமெண்டு நெற்றிலை மலிவாய் றிக்கற்றை பாக்கத் தொடங்கினன். வழக்கம் போலை தோடம் பழக் கொம்பனி அதுதானுங்கோ Easy jet அதிலை றிக்கற்றும் பதிஞ்சிட்டன். ஆனால் போகிற நேரக் குளப்பத்தாலை பதிவு போடுறதும் நிறுத்திறதும் திருப்ப பதியிறதுமாய் ஒரு நலைஞ்சு தரம் செய்து ஒரு மாதிரி பதிஞ்சு முடிச்சிட்டன். நத்தாருக்கு மனிசி எனக்கு ஒரு ஜுன்ஸ் பரிசா வாங்கி வைச்சிருந்தாள். வாங்கிய…
-
- 45 replies
- 3.3k views
- 1 follower
-
-
வதனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம். "நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!" அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது. "உன்னைப் போலவே மற்றவர்களும் நடந்துகொள்ள முயன்றால்? அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை. நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்தே செய்துவிட்ட பிழையிது. இது பிழையென்றல்ல குற்றமென்று நீ சரியாகப் புரிந்து கொள்." வதனியின் மனச்சாட்சியின் மறுபக்கம் இவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது. தான் தங்கிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
காதலின் விலை எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு . அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை. ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம் தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை. அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம் கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை அறுத்துப்போட்டாங்கள். என்ர மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது. அதுவும் தொண்ணூற்றி ஒன…
-
- 15 replies
- 1.5k views
-
-
புரட்டாதி 30 எனது பிறந்தநாள். முதல் நாள் இரவு 10 மணியளவில் நானும் எனது இரண்டாவது மகனும் கடையைப்பூட்டிவிட்டு காரில் புறப்படுகின்றோம். அவர் தொலைபேசியில் குறும் செய்தி அனுப்பியபடி வருகின்றார். இடையில் அப்பா வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி என்னை இறக்கிவிடமுடியுமா என்று கேட்கின்றார். எதற்கு? அதுவும் இந்த நேரத்தில்?? இது நான். எனது நண்பர் ஒருவரை சந்திக்கணும் சில நிமிடங்கள் மட்டுமே. சரி கெதியாக வா என்ற படி பயணம் தொடர்கிறது. இடையில் யாரிடம் போறாய்? என்ற கேள்விக்கு தன்னுடன் படித்த பெண் வீட்டுக்கு என்று பெயரையும் சொல்கின்றார். அந்தப்பிள்ளை பற்றி முன்பும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வகுப்பில் எப்பொழுதும் முதலிடம். உயர் தரத்திலும் எல்லா பாடத்திலும் திறமைச்சித்தி பெற்றவர…
-
- 77 replies
- 6.6k views
-
-
http://www.saatharanan.com/nostalagic-mem/ டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!! அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே? இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டில…
-
- 4 replies
- 728 views
-
-
கைப்பாவை வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மி…
-
- 3 replies
- 669 views
-
-
1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கின்றன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 95 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார் . நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எலாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பளகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் . அப்பர் அடிச்ச காயம் எனக்க…
-
- 29 replies
- 2.6k views
-
-
நந்தியாவட்டை பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது. வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும். “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?” “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா. விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!” பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான்.…
-
- 4 replies
- 912 views
-
-
நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான். செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் த…
-
- 72 replies
- 5.3k views
-
-
நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். . நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது மிக இலகு. இப்பவும் இடைக்கடை ஒலித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கும் மனித குரல்களின் கோரஸ் சத்தங்கள் தான் காதுகளில் தார் ஊற்றியமாதிரி அவரது நித்திரைக்கு பங்கம் விளைவித்து கொண்டு இருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/03/blog-post.html
-
- 17 replies
- 3.3k views
-
-
மனதுக்குள் எதோ ஒரு வலி தூக்கம் கலைந்து விளித்து எழுந்தேன்.அட நெஞ்சில் விழுந்த இரு துளி கண்ணீர்.ஏன்கேள்வி பிறக்கும் போதுதானே வேள்வி நடக்கும். றிஷானா கொடும் தவறு செய்த பெண்ணே உனக்கு மரணதண்டனை.மிகவும் சரியான தண்டனை.பலவருடங்களாய் உன்னைப்பற்றிய வாதங்கள் விவாதங்கள் அனைத்துக்கும் முடிவு .செத்து ஒளிந்தாய்.நீ ஒரு இஸ்லாமிய பெண் உனக்கான தண்டனை சரி.ஆனால் ஏனோ தெரியவில்லை .இன்னும் என் கண்கள் உகுத்த துளிகள் உயிரில் சுடுகிறது.உன் முதல் தவறு ஏழை பெற்றோருக்கு மகளானது.அதுவும் முதல் மகளானது.உன் வயதுக்கு இறக்கை முளைத்து சிறகடித்து பறக்கும் வயதில் பணம் கொத்திவர பாலைவனம் பறந்தாய் அது உன் மறுதப்பு. சிலவேளைகளில் நினைத்திருப்பாய் ஒழுகும் உன் குடிசைக்கு ஒழுங்கான கூரையிடுவெனென.அதுவும் உன் தப்பு.பல …
-
- 4 replies
- 961 views
-
-
கீறோகொண்டாவின் TVS விக்டர் புதுசாக யாழ்ப்பாணத்தில அறிமுகமான நேரம்... தெரிஞ்ச பெடியன் ஒருத்தன் ஊருக்குள் முதன்முதல் புதிசாக இறக்கி இருந்தான்....அது எழுப்பிய இரைச்சல் அழகிய ஒரு ரியூனிங்காக இருந்தது வாசிகசாலையில் குந்தியிருந்த எனதும் நண்பனதும் காதுகளுக்கு...அப்பொழுது ஆளையால் பார்த்தபார்வைகளிலேயே முடிவெடுத்தோம்..வாசிகசாலை டியூட்டி முடித்து அவரவர் வீடுகளுக்கு நுழைந்ததும் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தோம்...அடித்து அடித்து அம்மியையும் நகர்த்தலாம் என்பது உண்மையோ இல்லையோ நச்சரித்து நச்சரித்து வீட்டுக்காறரின் மனதை மாற்றலாம் என்பது எங்கள் இருவரதும் வாழ்வில் பலவிடயங்களில் நிரூபணமாகி இருக்கிறது...அதிலொன்றுதான் இந்த கீறோ கொண்டா சீன்... வாசிகசாலையில் இருந்து ஆளையாள் பார்த்த கணத்தில் எடு…
-
- 15 replies
- 1.8k views
-
-
பின்னேரம் நாலு மணிக்கே இருட்டிவிட்டது.வெளியால சரியான குளிர் சுருண்டு படுக்கையில் கிடந்தான் ரகு .அவன் இந்த நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகிறது இன்னும் அகதி அந்தஸ்த்து கிடைக்கவில்லை.நண்பனுடன் இந்த அறையில் இருக்கிறான்.நண்பன் இங்கு வந்து ஏழு வருடங்கள் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்து ஒரு கொம்பனியில வேலையும் செய்கிறான். இன்று நண்பனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டதாய் இவனது மனம் சொல்லிக்கொள்கிறது. இன்று இவனின் நண்பனின் நண்பனுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.அதற்கு வருமாறு நண்பன் இவனையும் அழைத்தான். இவன் மறுத்துவிட்டான்.நண்பன் தனது நண்பனிடம் சொல்லியும் அழைப்பு விட்டான்.ரகுவோ குறை நினைக்கவேண்டாம் என்றுவிட்டான். அது இவனது நண்பனுக்கு மனத்தாக்கமாய் இருக்கவேண்டும்.நண…
-
- 2 replies
- 698 views
-
-
முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால் நிலா, என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள். ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு…
-
- 66 replies
- 7.2k views
-
-
வடக்கு வீதி அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும். மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக …
-
- 3 replies
- 873 views
-
-
கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் த…
-
- 100 replies
- 9.2k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவ…
-
- 31 replies
- 3.5k views
-