Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. விமல் போத்தலை ஓப்பின் பண்ணச் சொன்னதும் சற்றுக் குனிந்து முன்னாலிருந்த 'ரெமி மார்ட்டின்' போத்தலை எடுத்துத் திறந்து இரண்டு கிளாஸிலும் பாதியளவுக்குக் கொஞ்சங் குறைவாக விஸ்கியை ஊற்றினான். "மச்சான் உனக்கு ஏற்ற மாதிரி கோக் மிக்ஸ் பண்ணடா" என விமலிடம் சொன்னவன்... தனது கிளாஸிற்குள் நாலைந்து ஐஸ்கட்டிகளை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டான். அப்படிக் குடிப்பதுதான் அவனது வழக்கமாயிருந்தது. தனது கிளாஸிற்குள் கோக்கைக் கலந்தபடியே... "அஞ்சலிக்கும் உனக்கும் என்ன மச்சான் நடந்தது...?" என அவனைப் பார்க்காமலேயே கொஞ்சம் தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான் விமல். அவன் அவ்வாறு கேட்டதும், வழக்கமான 'சியர்ஸ்' எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் தனது கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியபடியே வ…

  2. இப்பொழுது எல்லாம் வீடு கலகலப்பு குறைந்து போகிறது.மகளின் பிரிவுடன் ஏதோ எழுததொடங்கிவிட்டேன்.எனக்கு ஒரே பிள்ளை ஜான்சி . ஜான்சி இப்போது போலந்தில் மருத்துவ படிப்பு படிக்கிறாள்.ஜான்சிக்கு இப்ப பத்தொன்பது வயது.நல்ல துடியாட்டம்.தமிழ் கதைப்பாள் ஆனால் எழுத வாசிக்கமாட்டாள்.நானும் தமிழ் பாட்டுகளைப்போட்டு கேள் கேள் எண்டாள். போங்க அப்பா நல்லா இல்லை அப்பா என்னுறாள்.கிறிஸ்மஸ் லீவில இரண்டு கிழமை நின்றவள் இப்ப மனிசி அவளைக்கூட்டிக்கொண்டு போலந்துக்கு போயிட்டுது.மனிசி வாற கிழமைதான் வரும்.இன்றைக்கு ஒரு கதையை யாழில வாசிச்சன் எனக்கும் ஏதோ எழுதோணும் மாதிரி கிடக்குது. நானும் யாழ்ப்பாணம்தான். பள்ளிக்கூட படிப்பு எனக்கு சரிவரயில்லை. ஒரு மினி பஸ்சில கொண்டட்டறாய் வேலை செய்தன்.அப்பதான் விக்…

  3. தேர் முட்டுக்கட்டை சந்தோஷ் பருத்தித்துறை சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பிடத்தில் தன் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு நிமிரவும் அவன் யாழ் செல்லவேண்டிய 750 பஸ் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது. "ம்...." பெருமூச்சொன்றை விட்டன். இன்று பஸ் வேறு குறைவு குஞ்சர்கடை சந்தியில் எதோ பிரச்னை என்று 750 மினி பஸ் ஏதும் ஓடவில்லை. இந்த பஸ் விட்டால் அடுத்து 8 .30 தான் வரும். அதில் சென்றால் வேலைக்கு பிந்திவிடும். சிந்தனையை அலைய விட்ட படி மெதுவாக பஸ் தரிப்பிடத்திற்கு வந்தான் சந்தோஷ். வந்தவன் வந்து நிற்கவும் ஓர் 751 மினி பஸ் ஒன்று ‘ஹாங்........’ பலமாக ஹோன் அடித்து தரிப்பிடத்திற்கு வந்து நின்றது. 751என்றால் வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, வல்லை,அச்சுவேலி எல்லாம் சு…

  4. பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்…

  5. மேற்கு அடிவானை நோக்கி சூரியன் நகரத்தொடங்கிய மாலைப்பொழுது. கண்ணைக்கூசும் மெல்லிய மஞ்சள் ஒளியால் சுவர்கள், மரங்கள் என வெளிச்சம்படும் இடங்கள் எல்லாம் மஞ்சளாக மாறி இருந்தன. முன்வாசல் படிக்கட்டில் இருந்து வீதியையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் மனம், அடிக்கடி நிறம்மாறி அங்கும் இங்கும் அலையும் அடிவான்மேகங்களைப் போல உணர்வுகளை மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தது. "விடியக்காத்தல வெளிக்கிட்டதாக அதுகள் அடிச்சு சொன்னதுகள், இன்னும் இங்கை வரவில்லையே எப்படியும் இந்த நேரம் வந்திருக்கணுமே, என்ன ஆச்சோ, வந்தவாகனத்தில ஏதும் பிரச்சனையோ என்னண்டு தெரியேல்லையே, பிள்ளையின்ர போனும் வேலை செய்யுதில்லை, வான்காரனும் யார் என்று தெரியவில்லை" என புறுபுறுத்தபடி அடுத்து என்ன செய்வது என தெரியா…

  6. கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம் செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள். பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள். இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள். ஒரு அதிகாலைப்பொழுதில் அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள். தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும் இயக்கத்திற்கு போனான்.கமலம்…

    • 7 replies
    • 879 views
  7. வணக்கம் பிள்ளையள்! ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து உங்களோடை புலம்பிப் போட்டுப் போறதே எனக்குத் தொழிலாப் போச்சுது. என்ன செய்ய அடிக்கடி வந்து உங்களோடை ஊர்க்கதைகளைப் பறைய எனக்கும் ஆசை தான். ஆனால் இந்தக் கண்டறியாத நாட்டிலை அதுக்கெல்லாம் நேரமெங்கையணை? சரி நான் நேரை விசயத்துக்கே வாறன். இப்ப எங்கடை தமிழ் ஊடகங்களுக்குச் செய்திப் பஞ்சம் வந்திட்டுது. அதிலையும் மழைக்கு முளைக்கிற காளான்கள் மாதிரி ஒவ்வொரு நாளும் முளைக்கிற இணைய செய்திச் சேவைகள் தங்கடை பக்கங்களை நிரப்ப என்னத்தைப் போடலாம் எண் ஆவெண்டு பாத்துக் கொண்டிருக்க கொண்டிருக்க இன்னொரு பக்கம் புதுசா வாற செய்தித் தளங்களாலை தங்கடை இடம் பறிபோயிடுமோ எண்ட பயத்திலை இருக்கிற பழைய ஆக்களும் பரபரப்புச் செய்திகளுக்கு ஆலாய்ப் பறக்கினம…

  8. உடற்பயிற்சி நிலையம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. மிகச் சிலரே அந்நேரம் வந்திருந்தார்கள். காதிற்குள் இளையறாஜா ஒலிக்க காடியோவில் மூழ்கியபோது, பாடல் ஒவ்வொன்றையும் சிற்றுவேசன் பாடலாக ஆக்கி, மனம் பழைய சீன்களை மனத்திரையில் ஓடவிட்டுக்கொண்டிருந்தது. காடியோ முடித்த கையோடு வெயிற்சிற்கு சென்றபோதும், இன்று ஏனோ மனமும் உடலும் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைபோல் முரண்டு பிடித்தன. ஒன்றுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் முப்பது வீதமாவது செய்தோமே என்று திருப்த்திப்படுத்திக்கொண்டு லொக்கர் நோக்கி நடந்துகொண்டிருக்கையில் கடைப்பார்வை கைப்பற்றிய, இலிப்ற்றிக்கல் உபகரணத்தில் உழன்றுகொண்டிருந்த, பெண் பரிட்சயமான முகமாகத் தெரிந்தது. எனவே மீண்டும் பார்த்தபோது மிகப் பரிட்சயமானதாகத் தெரிந்த…

    • 25 replies
    • 3.4k views
  9. நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி. 1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்? மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி…

    • 2 replies
    • 1.4k views
  10. அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை "இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்" என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை. 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்…

  11. சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு - கறுப்பி அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள் இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால் யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை ஆகவே … காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப் பாதியாகக் கொடு என்றான்.. 1 “மிஸ்ரிமோஃபோர்பியாதான் சந்தேகமில்லை”. பெரியக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்து “என்ன பெயர் சொன்னனீ?” என்றாள். நான் முகத்தை வலு சீரியஸாக வைத்துக்கொண்டு, “மிஸ்ரிமோஃபோர்பியா, எல்லா அறிகுறிகளும் அது போலதான் கிடக்குது. நான் கூகிளில தேடியும்; பார்த்தனான். இப்படித்தான் விளக்கம் கிடந்தது” என்று கையில் மடித்து வைத்திருந்த வெள்ளைப்பேப்பர் ஒன்றை விரித்துப் படித்துக்காட்டத…

  12. உறுதி[ப்]பத்திரம் அதிகாலையில் தொலைபேசி தொல்லை கொடுத்து என்னை எழுப்பியது நான் என்னடா காலந் காத்தால் நித்திரையை தூங்க விடாம பண்ணுதே என்று போட்டு அமத்தி வைக்கலாமே என்று பாத்து போணை தூக்கினேன் அது இலங்கையில் எனது மாமனாரின் வீட்டில் இருந்து வந்தது .எனது எனது மனைவியிடம் கொடுத்தேன்.அவளும் பேசினாள் என்னங்க அப்பா சீரியசா கிடக்காராம் வாங்க உடன்டியாக போகலாம் என்றாள். என்னடி கொப்பன் சாகப்போறான் போல என்றேன் அவளோ எனக்கு கேட்டாள் கேள்வி காது முதல் கால் வரை குளிர்ந்தது . சரி சரி உடனே போறது என்றால் சும்மாவோ அந்த வெள்ளக்காரன்ட லீவு கேட்கணும் . அவன் நம்மட ஆள் என்றாலும் பரவாயில்லை அவனிடம் முண்டித்தான் லீவு கேட்கணும் அவன் குரைப்பான் என்பது எனக்கு தெரியும். அதிகாலை நான் அவனிடம் செ…

  13. Started by கிருபன்,

    புதிய வருகை கே.எஸ்.சுதாகர் உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். “சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!” சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே ரெலிவிஷனிற்கு முன்னால் அமர்ந்தான் செல்வா. நேற்றைய தினம் ‘சிற்றியில்’ நடந்த ஊர்வலமொன்று செய்தியினூடாகப் போய்க் க…

  14. ராஜ்சிவா- இதோ 2012ம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான். “சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது. இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.அது….! ‘மாயா’. மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன…

  15. அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன். அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். ...... என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும். பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம் சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்க…

  16. Started by கோமகன்,

    நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…

  17. கணவரை இழந்த அந்த அம்மாவின் சொந்தமாக இப்போ அந்த வீட்டில் இருப்பது அவளின் கடைசி மகளும், கடைசி மகனை நம்பி ஓடிவந்த மருமகளும் தான். இராணுவ கட்டுப்பாடு பகுதியில், இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருந்தாலும் தங்க பயப்படும் காலத்தில், அவர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் இருந்தமைக்கு அந்த அம்மாவின் கடைசி மகன் தான் காரணம். தங்களுக்கு ஏதும் நடக்க அவன் விடமாட்டான். மூத்த மகன், கொழும்பில் நடந்த காட்டி கொடுப்பில் சிறைபட்டு ஆறுமாதம். இரண்டாவது மகன் புலிசேனையில் அண்ணனுக்கு பக்கபலமாக, ஒரு வருடத்துக்கு இரு முறை தான் பேசுவான். இருந்த ஒரே ஆறுதல் அவவின் கடைசி மகன், கொள்ளி போட கூடவே வைத்திருந்தாள் அந்த அம்மா. அவனோ அண்ணன்கள் வழியில், புலிகளின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாழ் மாவ…

  18. Started by கோமகன்,

    நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி . போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன். படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல் , என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன். பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை …

  19. உச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவரும். அம்மா அறைக்குள் அழுதபடி இருந்தார். ஒரு புறம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற கவலையாக இருக்கலாம். மறுபுறம் அப்பாவிடம் இரவும் காலையும் வாங்கிய அடியினால் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம். நேற்று இரவு அப்பா காசு கொண்டுவருவார் என நம்பிக்கொண்டு காத்திருந்தோம்.. அவர் காசு கொண்டுவந்தால் காலையும் மதியமும் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என அவாப்பட்டுக்கொண்டும் மனம் அங்காலாய்த்துக்கொண்டும் இருந்தோம். இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு என்பது காலையில் ஒரு துண்டுப் பாணும் சினியும் அல்லது வாழைப்பழமும் மதியம் பருப்பும் தக்காளிக் குழம்பும் தான். ஆனால் அப்பா காசு கொண…

  20. தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…

  21. திரும்பி வராத குரல் – யோ.கர்ணன் ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு இருக்க முடியாமல் போய்விட்டது. சீனியர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கவனித…

    • 6 replies
    • 1.1k views
  22. றெயில் பயணம் http://fr.wikipedia.org/wiki/Fichier:Attentat_du_RER_B_%C3%A0_la_station_Saint-Michel_2.jpg 1995 ல் ஓர் அதிகாலை நேரம் மனோவினது நித்திரைக்கு உலை வைத்தது அவனது அலாரம் . மனோ வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு , இதனால் மனோ பூனைத் தூக்கத்தை சர்மிளாவின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு . அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியது . அந்த இடம் வெறுமையாகவே இருக்க இந்த நேரத்தில் சர்மி எங்கே போய்விட்டாள் ? என்று நினைத்தவாறே அவன் கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான் மனோ . வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது , சர்மை முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் தெரிந்தது . அவனுக்கான கோப்பி ஆவி பறந்தபடி குசின…

  23. அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது. எனது தந்தை ஜெர்மனிக்குப் பயணம் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் கொழும்பு சென்றோம். அப்பாவைத் தவிர ஒருவரும் முன்னர் கொழும்பு சென்றிருக்கவில்லை. எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும் புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று. கொழு…

  24. அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே …

  25. Started by லியோ,

    (1) கிளிநொச்சி முந்தி மாதிரி இல்லை.செருப்பில குத்தி இருக்கிற முள் உடன் மிச்ச காலத்தை கடக்க வேண்டியிருக்கு.அவன் தொடர்ந்து கதைத்துக்கொண்டு இருந்தான்.அவன் முன்னாள் போராளி.பதின்ஐந்து வருடங்கள் இயக்கமாய் இருந்து முள்ளிவாய்க்காலில் சரணடைந்து , புனர் வாழ்வு பெற்று ?சமூகத்தோட வாழ்கிறான்.அவனுக்கு மனைவியும் ஒரு பிள்ளையும் இருக்கு.இது போதாதென்று அவனது தங்கையும் தங்கையின் இரண்டு பிள்ளைகளும் அவர்களோடு இருக்கிறார்கள்.தங்கையின் மனுஷன் போராளியாய் இருந்து ஒரு காலை இழந்து சமாதானத்தோட இயக்கத்தில இருந்து விலத்தி, சண்டை தொடங்கி இயக்கத்திற்கு ஆளணி பிரச்சனை பெரிதாக தானாய் போய் மீள இணைந்து ஆனந்த புரத்தில வீரச்சாவு. அவனுக்கு பெரிய படிப்பு இல்லை.படிக்கிற காலத்தில இயக்கத்திற்கு போன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.