Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஐஸ்வர்யா அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா. தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிர…

    • 0 replies
    • 1k views
  2. உண்மையை சொன்னால் என்ன நான் நம்பவில்லை இப்படி ஒரு காட்சி(கன்றாவி)நடக்கும் என்று இப்பொழுது உங்களுக்கு நடன பள்ளியின் மாணவிகள் இதோ வருகிறார்கள் என்று அறிவித்தார்கள். நானும் ஏதோ சிரிசுகள் வரும் என்று பார்த்து கொண்டு இருக்கையில் வந்ததோ 35- 45 வயசு கிழசுகள்(நான் 18 வயசு வாலிபன் தானே) ஏதோ கிப்கொப் டான்சாம் அத்துடன் பொலிவூட்டும் கலந்து மகிழ்விக்க வந்தவையலாம் என்று விளக்கமும் கொடுத்தார்கள். மனிசியிட்ட கேட்டன் என்ன கிழசுகள் எல்லாம் மேடையில் நிற்குது என்ன நடந்தது என்று கேட்டேன்,அது ஒன்றுமில்லையப்பா அவையள் உடம்பை சிலிம்மாக வைத்திருக கிப்கொப்பும்,பொலிவூட்டும் பழகீனம் உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நொட்டை என்று திட்டினா. எதையாவது பழகட்…

    • 0 replies
    • 1.6k views
  3. இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார். தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக்குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்தகாலத…

  4. அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன. இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன்…

  5. தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் ஹிந்தி திரைப்பட இசை போன்ற மெல்லிசை உருவாவது இலகுவான காரியமாக இருக…

  6. ‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி! christopherDec 19, 2024 09:12AM வ.உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார். இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. தற்பொழுது 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகி…

  7. அய்யைய்யோ.. சீமான் விடுதலையா. I SUPPORT wikileaks JulianAssange (உலக தாதா அமெரிக்காவின் டவுசரை கழட்டும் விக்கிலீக்ஸை பாராட்டுகிறேன். இதுக்கு பேர்த்தான் புலனாய்வு.. லோக்கல் புலனாய்வு புலிகளே.. பாடம் படிங்க.) பிரமாண்ட ஊழல் யாருக்காக.. எல்லாம் மக்களுக்காக.. ஆஹா... சொல்றதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்னு அடிக்கடி கருணா சொன்ன மேட்டர் இப்பத்தானே புரியுது.. புத்தாண்டு வாழ்த்துகள்.. நல்லகாலம்.. தமிழுக்கு சேவை செய்யத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சோம்னு சொல்லல. ஐ.பி.எல். ஏலம் முடிஞ்சுடுச்சு.. கேப்டன் ஏலத்துக்கு ரெடி..

  8. தஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன். தஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின் பெயர்த்தி. எதுவுமே சொல்ல வேண்டாம் துணிவைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் என்னிடம் அது இல்லை காதலைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல…

    • 8 replies
    • 3.1k views
  9. மற்றுமொரு ஈழத்து பாடகி லக்ஸ்மி (கனடா) டி. இமானின் இசையில் பாடி உள்ளார். படம் இன்னும் வெளிவரவில்லை. லக்ஸ்மிக்கு வாழ்த்துக்கள். D Imman Page Liked · 19 hrs via Facebook Mentions · Glad to introduce a Srilankan Tamil singing talent Luksimi Sivaneswaralingam from Toronto,Canada for #Bogan She rendered a Romantic number to Mrs.Thamarai's lyric! கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்றவரும் மேற்கத்தையை இசையில் பல்கலைகளக பட்டம் பெற்றவர் என்பதும்( doing masters in waterloo) பரத நாட்டியத்தை முறையாக பயின்றவரும் சுப்பர்…

    • 1 reply
    • 602 views
  10. பத்திரிகையுலகப் பிதாமகர் ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 1) அன்பு வாசகர்களே... இன்று, ஆகஸ்ட் 10-ம் தேதி, பத்திரிகையுலகப் பிதாமகர் சாவியின் (சா.விஸ்வநாதன்) நூற்றாண்டு. அதையொட்டி, அவரைப் பற்றிய 100 தகவல்கள், ஐந்து பகுதிகளாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது. முதல் பகுதிக்கான 20 தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல். 2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந…

  11. வாசிப்பும், யோசிப்பும் 107 : ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் (மேலும் சில முகநூல் குறிப்புகள்).' Wednesday, 12 August 2015 04:14 - வ.ந.கிரிதரன் - எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் 'ஆடுகளம்' ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது. இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொ…

  12. நீங்கள் இளையராஜாவின் ரசிகரா… இசையின் ரசிகரா..? B.R. மகாதேவன் தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி யாரேனும் ஏதேனும் நியாயமான சிறு விமர்சனத்தை முன் வைத்தால்கூட, பொம்மையைப் பறித்தால் அழும் குழந்தைகள்போல் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுவார்கள். பிஞ்சுக் கைகளால் சட் சட்டென்று நம்மை அடிப்பார்கள். குழந்தைகளைப் போலவே தமிழர்களின் உலக அனுபவமும் வெகு குறைவு என்பதால் எதையும் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. தமிழர்களின் இத்தகைய மனநிலை தெரிந்த பிறகும் சில உண்மைகள், சிலரால், சில நேரங்களில் சொல்லப்படுவதுண்டு. அப்படி ஓர் உண்மையைச் சொல்லும் முயற்சியே இது. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுக்கும் லைஃப் ஆஃப் பை படத…

  13. அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! இண்டைக்கு நான் ஒரு வித்தியாசமான கலைஞரை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்போறன். உங்களுக்கு தெரியும் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!" எண்டு ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிது. அதாவது... கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்வித்து அவர்களை கொஞ்சநேரம் தமது பிரச்சனைகள, துயரங்கள மறந்து அமைதியாக, சந்தோசமாக இருப்பதற்கு உதவுகின்றார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேல்.. மற்றது சத்தியராஜ், கமல், ரஜனி, சூரியா, விஜய்... எண்டு சினிமாவில நடிக்கிற ஆக்கள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டு இல்ல. பாட்டு படிக்கிற ஆக்கள், வாத்தியங்கள் வாசிக்கிற ஆக்கள், நடனம் ஆடிற ஆக்கள் இவேள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டும் இல்ல. …

    • 57 replies
    • 13.1k views
  14. எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் விக்கி 1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் …

    • 3 replies
    • 1.9k views
  15. வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுக…

  16. போர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது உலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். காலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் …

  17. இன்று நவம் அறிவு கூடத்திற்காக நிதி சேகரிப்பு வைபத்திற்கு சேரன் சிறிபாலன் பரத நாட்டிய கச்சேரி ஒன்று நடைபெற்றது இந்த கலைஞன் புலத்தில் பிறந்து வளர்ந்த கலைஞன்,நன்றாக நாட்டிய கச்சேரி சிறந்த முகபாவங்களுடன் ஆடினார்.இதன் மூலம் அவுஸ்ரேலியன் டொலர் 140000 நிதி சேகரிக்க பட்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக நவம் அறிவு கூடத்திற்கு கொடுக்கபட்டது,பரத நாட்டியத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இதற்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் காரணம் இது நல்ல நோக்கத்திற்காக பணம் அனுப்பபடுகிறது என்பதற்காக.அங்கு உறையாற்றிய சிலர் நவம் அறிவுகூடம் தேசிய தலைவரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது என்றும் கூறினார்கள். புத்தனுக்கும் பரத நாட்டியத்திற்கும் வெகு தூரம் இருந்தும் இந் நிகழ்ச்சிக்கு சென்றது ஒரு இனம் தெ…

    • 14 replies
    • 4.3k views
  18. தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அ…

  19. பத்மஸ்ரீ விருது மறுப்பு - ஜெயமோகன் January 24, 2016 இன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார். நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார். உண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை நான் ஒரு வேடிக…

  20. லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ…

    • 0 replies
    • 1k views
  21. என் பார்வையில் கண்ணதாசன் மகாதேவஐயர் ஜெயராமசர்மான், B.A ( Hons ) Tamil Dip.in Ed, Dip.in Soc Dip.in Com M.Phil Edu SLEAS , மெல்பேண் .. அவுஸ்திரேலியா ( முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் ) - காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்கு…

    • 6 replies
    • 4.6k views
  22. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90845 நெய்தல் நில மைந்தனாக, முதன்முதலாக 'சாகித்ய அகாடமி விருது’ பெற்றிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். திருநெல்வேலி, உவரி கரையோரத்தில் பிறந்த ஜோ டி குரூஸ், கடலோர மக்களின் வாழ்வை, மீனவர்களின் துயரத்தை, தன் படைப்பில் பதிந்து வருபவர். முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு’க்கு ஆரவார அங்கீகாரம் பெற்றவர், இரண்டாவது நாவலான 'கொற்கை’ மூலம் விருது கொய்திருக்கிறார்! ''எழுத்தாளனின் பயணம், விருதுகளை நோக்கியது அல்ல. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, சின்ன சந்தோஷத்தைக் கொடுக்கிறதே தவிர, ஆர்ப்பட்டமாகக் கொண்டாட இதில் ஏதும் இல்லை. யாராவது பாராட்டினால் கொஞ்சம் பீதியடைகிறது மனசு. மற்றபடி இல…

  23. தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் 32 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வசித்து வரும் வைதேகி ஹெர்பர்ட் என்பவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரிய சாதனையை தமிழ் சமுதாயம் வியந்து பாராட்டவில்லை. ஆனால் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன. அவர் இதுவரை பதினெட்டு சங்க இலக்கியங்களில் பன்னிரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மற்ற ஆறு இலக்கியத் தொகுப்புகளும் விரைவில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றும் வைதேகி சார்லஸ் ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலப் பள்ளியில் படித்த போதும் இவருக்கு தமிழ் மேல் தணியாத ஆர்வம் இருந்தது என்று அவர் கூறுகிறார். கலிபோர்னியா…

    • 0 replies
    • 904 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.