வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் November 26, 2021 — ஏ.பீர் முகம்மது — உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல் திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை. யாழ். நல்லூரிலே பிறந்து மட்டக்களப்பு வாசியாகவே வாழ்ந்து சாதனைகள் தொட்ட இந்த எழுத்துலகச் செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014 நவம்பர் 26இல் அடங்கி இன்றுடன் ஏழு வருடங்கள் முழ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது! நவம்பர் 10, 2021 –முருகபூபதி இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது. எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன். தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடி…
-
- 0 replies
- 653 views
-
-
-
- 1 reply
- 603 views
-
-
புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் பாரதியார்! -தி.வரதராசன் செப்டம்பர் 11: மகாகவியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று! ஆயிரம் ஆண்டில் அதிசயமாக ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்புசொல்லச் சொல்லச் சுவைமிகும் பெயரைஎண்ண எண்ண இனித்திடும் பெயரை பிறந்தநாள் கண்டு நாம் பேசி மகிழ்கிறோம்…” கவியரசு கண்ணதாசன் மகாகவி பாரதியைப் போற்றி அவரது பிறந்த நாளின்போது தமது “கண்ணதாசன்” மாத இதழில் (செப்டம்பர் 1976) எழுதிய கவிதைவரிகள் இவை. பிறந்த நாள்-நினைவு நாள் என இரு நாட்களிலும் மகாகவியை மறக்காமல் மனதில் ஏந்துகிறது தமிழ்நாடு. “ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியிலும்சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்பண்ணை மடவார் பழகு…
-
- 1 reply
- 2.7k views
-
-
அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’ பதாகை த. நரேஸ் நியூட்டன் இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் ப…
-
- 0 replies
- 769 views
-
-
மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு. — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தர…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேயர்கள் அபிமானம் வென்ற மூத்த அறிவிப்பாளர் சரா இம்மானுவேல் இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். தமிழ் ஒலிபரப்பாளர்கள் எஸ். பி. மயில்வாகனம் (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்) வீ. சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்) ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வீ. ஏ. கபூர் எஸ். புண்ணியமூர்த்தி எஸ். கே. பரராஜசிங்கம் சற்சொரூபவதி நாதன் கே. எஸ். ராஜா பி. எச். அப்துல் ஹமீட் விமல் சொக்கநாதன் சரா இம்மானுவேல் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம் ராஜேஸ்வரி சண்முகம் பி. விக்னேஸ்வரன் ஜோர்ஜ் சந்திரசேகரன் எஸ். நடராஜசிவம் எஸ். எழில்வ…
-
- 3 replies
- 2.3k views
-
-
-
திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.! ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஓர் அழைப்பும் விடுத்தனர் “நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்” சரி என ஒப்புக்கொண்டேன் பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் …
-
- 0 replies
- 958 views
-
-
சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள்.. ஒரு இனமானது காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்து சந்ததி ஈர்ப்பின் ஊடாக கடத்தப்பட்டு அது பேணப்பட்டு வருகின்றமையே காரணமாகும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த பண்பாட்டை கொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டி இருந்தவர்கள். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழில் ஒன்றான நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடககலையில் ஈடுபட்டுவருகின்றனர். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நாடகம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதினை நாம் வரலாற்று ஆத…
-
- 0 replies
- 1k views
-
-
கலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை 20.05.1938~21.09.2005 வாழ்க்கைக் குறிப்பு: ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார். காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி கலைஞர்களின் மண்குளித்து நாடகம் 13 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது! கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச நாடக குழு இணைந்து 2020ம் ஆண்டின் 48வது அரச நாடக விழாவை கடந்த பெப்ரவரி மாதம் நடத்தியிருந்தது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட ‘மண்குளித்து’ என்ற நாடகம் கடந்த 26.02.2020 அன்று எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது. குறித்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம்பெற்றது. குறித்த நாடக போட்டிக்காக இவ்வருடம் 32 குறுநாடக பிரதிகளு…
-
- 0 replies
- 944 views
-
-
தமிழ் திரை இசை நூலகம் திரு.B.H.அப்துல் ஹமீது அவர்கள் நெகிழ்ச்சியான நினைவுகள்
-
- 0 replies
- 566 views
-
-
கி.ராஜநாராயணன் புதுச்சேரி 99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா. கரோனா காலத்தில் தனது கையெழுத்தில் ’அண்டரெண்டப் பட்சி’ எழுதி முடித்து கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தொடர் எழுத்தில் மும்முரமாக உள்ளார். கி.ரா. என்றும் 'தாத்தா' எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப…
-
- 1 reply
- 917 views
-
-
பாரதியின் கடைய வாழ்வு கிருஷ்ணன் சங்கரன் ஆகஸ்ட் 22, 2020 கிருஷ்ணன் சங்கரன் “கடலூர் ஜெயிலிலிருந்து ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி விடுதலையடைந்து கடையம் போய்ச் சேர்ந்ததாகவும் அவருடைய உடம்பு அசௌகரியமாக இருப்பதால் பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தாமதிப்பாரென்றும், அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்றபொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறது அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. தன் விடுதலையில் சிரத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீமதி அன்னிபெசன்ட், ஸ்ரீ திருமலை அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ரங்கசாமி அய்யங்காருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020 கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல…
-
- 1 reply
- 1.8k views
-
-
அகவை தொண்ணூற்றி மூன்றில் டொமினிக் ஜீவா June 27, 2020 -கனடாவில் இருந்து எஸ்.பத்மநாதன் டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி. அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடு…
-
- 3 replies
- 1.5k views
-
-
பார்வையை மாற்றிய பாலகுமாரன் - ஜி.ஏ.பிரபா மாதா, பிதா, குரு என்று சொல்வார்கள். எனக்கு அந்த மாதாவாகவும் நின்றவர் பாலா சார். ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை அழுத்தமாகப் போட்டு வைத்தால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நடத்திக் கொடுக்கும் என்பார்கள். அந்த வகையில் பாலா சார், எனக்கு இந்தப் பிரபஞ்சம் தந்தப் பரிசு. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதோடு குருவாய் நின்று வழிகாட்டும் ஒருவர் வேண்டும் என்று விரும்பினேன். விளையாட்டுப் பெண்ணாய் பிளஸ் டூ படிக்கும்போது சார் எனக்கு மெர்க்குரிப் பூக்கள் கதை மூலம் அறிமுகம். படித்து நாலு பக்கம் விமர்சனக் கடிதம் எழுதினேன். அதற்கு உடனே பதில் வந்தது. “நீ சின்னப் பெண். இப்போது அந்தக…
-
- 0 replies
- 718 views
-
-
ஒன்பது வருடங்களாக தொடர்ந்து 'ஊரோடு உறவாடி' சாதனை செய்த புலம்பெயர் தமிழர்! இன்றைய நவீன தொடர்பூடக உலகில் ஒரு வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடாத்துவது என்பது பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் IBC-தமிழ் வானொலியில் இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து 8 வருடங்களாக இடம்பெற்று வருவதென்பது மிகப் பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டாகவேண்டும். அதுவும் ஒரே அறிவிப்பாளரே இந்த நிகழ்ச்சியை இந்த 8 வருடங்களும் வெற்றிகரமாக நடாத்துவதென்பது தற்கால வானொலிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஒன்றும் இலகுவான காரியம் கிடையாது. IBC-தமிழ் வானொலியில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறும் இந்த நிகழ்ச்சியின் பெய…
-
- 0 replies
- 847 views
-
-
வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை க்ருஷ்ணி அலை ஓய்ந்த பிறகு கடலில் இறங்கலாம் என்று நினைப்பதைப் போன்றதுதான் கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வரும்வரை நம் பணிகளை ஒத்திப்போடுவதும். எதையும் எதிர்கொள்ளும் சூழலும் கொஞ்சம் சமயோசிதமும் இருந்தால் நெருக்கடி காலத்தில்கூடச் செயலாற்ற முடியும் என்கிறார் ஓவியர் சத்யா கௌதமன். தான் அறிந்த கலையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதுடன் தன்னால் இயன்ற அளவுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவும் இதை இவர் பயன்படுத்திவருகிறார் சிங்கப்பூரில் வசித்துவரும் சத்யா, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா எல்.ஐ.சி. நிறுவனத்தில் பண…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஈழத்து இசையமைப்பாளர் சுதாகரன் கணபதிப்பிள்ளை அவர்களின் செவ்வி TIME FM-ITR வானொலி காற்றலைகளின் பெட்டகம் நிகழ்ச்சியில்!! இலண்டனில் இருந்து வருகை தந்திருக்கும் !!இசையமைப்பாளர்,இந்தியத் திரையுலகில் சாதனை(80 களில்) படைத்த ஈழத்து இசையமைப்பாளர் SUTHAKARAN KANAPATHIPILLAI அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்!!
-
- 1 reply
- 1.2k views
-
-
பரமேஸ் - கோணேஸ் உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது http://parameshkonezsh.blogspot.com/2010/02/blog-post.html
-
- 5 replies
- 4.1k views
-
-
என் பார்வையில் கண்ணதாசன் மகாதேவஐயர் ஜெயராமசர்மான், B.A ( Hons ) Tamil Dip.in Ed, Dip.in Soc Dip.in Com M.Phil Edu SLEAS , மெல்பேண் .. அவுஸ்திரேலியா ( முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் ) - காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்கு…
-
- 6 replies
- 4.6k views
-