வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
390 topics in this forum
-
சூரியோதயத்தின் அழகான விடிவைப்போல் தமிழரின் வாழ்வும் ஓர் நாள் அழகாய் விடியும். இந்த உதயத்தின் போது வெளியான நிறங்களாக எம் தேசியக்கொடி வானில் பறக்கும்.
-
- 0 replies
- 855 views
-
-
இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா “இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நா…
-
- 3 replies
- 1.6k views
-
-
விடிகாலை என்று கூட சொல்ல முடியாது ஒன்று அல்லது இரண்டு மணிக்கு என் கைப்பேசி சிணுங்குகின்றது. அடுத்த பக்கத்திலிருந்து அழைப்பது ஸ்ரீதர் என்று தெரிந்துவிடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலைபேசி எடுப்பது அவராகத்தான் இருக்கும் என்பது என்அசைக்க முடியாத நம்பிக்கை.கைப்பேசியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்குறியா? தூங்கப்போறியா? அல்லது என் போனுக்கு காத்திருக்கியா?" என அடுத்தடுத்து கேள்வியை கேட்டு விட்டு சிரித்துக்கொண்டிருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்கப்போறேன்''என சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்காலமே கிடையாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கலகலப்புக்கு பின் இலக்கியம் பேச ஆரம்பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூ…
-
- 0 replies
- 1.8k views
-
-
பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள்மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான். தன் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கசித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்துவீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்கவிரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அநத பக்கத்துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக் காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் …
-
- 7 replies
- 2k views
-
-
ஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக.... 1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்? முதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது. 2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள…
-
- 1 reply
- 935 views
-
-
இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.-கற்சுறா கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம்…
-
- 0 replies
- 806 views
-
-
f8d90bfc759c26445f0a5c25daa83136
-
- 13 replies
- 1.6k views
-
-
இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்.ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூக்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். …
-
- 1 reply
- 1.5k views
-
-
-
-
இராவணனுக்கும் வரலாறு இருக்கு.. வாசுதேவன் நாயர் விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை: பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன். எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க. விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமி…
-
- 3 replies
- 2.6k views
-
-
இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு… இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும் அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல். இதனை எழுதும்போது கூட…. சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான் ஆரம்பிக்கிறேன் இதனை. நினைவு தெரிந்த நாளிலிருந்து…. “…திரை இசை இத்தோடு முடிந்தது. மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….” என்பதோடு என் வீட்டு வானொலியின் கழுத்து திருகப்பட்டு விடும். ஹம்சத்வதனியோ..கல்யாணியோ.. கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ… அணுவளவும் அறிந்ததில்லை நான். உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன். ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான். உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன். ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான். உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன…
-
- 0 replies
- 888 views
-
-
அன்பான உறவுகளே இன்று ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கும் நாள் . துயர வடுக்களோடு துன்பமான கணங்களோடு வாழ்ந்து வரும் நாம் சில காலங்களுக்கு முன் எம் உறவுகளாகிய முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரையும் நீதியை மறைத்து தூக்கிலிடப்போகும் செய்தி வெந்த புண்ணில் வேலாய் பாய துவண்டு நின்றோம் .ஆனால் நீதியை காக்க இறைவன் மனித வடிவில் வருவான் என்ற உண்மைக்கமைய ,வைக்கோ ஐயா மற்றும் எம் தொப்பிழ்கொடிகளின் முயற்சியால் நிரபராதி என்னும் உண்மையோடு விடுதலை செய்யப்பட உள்ளார்கள் ...............இறைவனுக்கு நன்றி . மேலும் இன்னுமொரு முக்கியமான விடயத்தை இங்கே குறிப்பிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .....உண்மையில் முகப்புத்தகம் மூலம் கலையூடாக எனக்கு அறிமுகமாகிய கலை வெறி கொண்ட அற்புத…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா அன்புள்ள ஜெ., நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி அளித்த பொழுதுபோக்கு இன்பத்தை என்றென்றும் மறக்க முடியாது. குறிப்பாக 1975-85 இடையேயான காலகட்டம் அப்போது பதின் வயதில் இருந்தவர…
-
- 8 replies
- 4.1k views
-
-
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…
-
- 0 replies
- 898 views
-
-
வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னெ…
-
- 20 replies
- 5.3k views
-
-
இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்! - த.சிவசுப்பிரமணியம் - ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
அன்னக்கிளியும் கவிக்குயிலும் பத்ரகாளியும் வெளிவந்ததற்குப் பிறகான காலகட்டம் அது. இளையராஜா என்னும் மாய மகுடிக்காரர் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களை, பாம்புகளாக ஆட்டி வைத்துக்கொண்டிருந்த தருணம். அதுவரை நாங்கள் பார்த்த இயற்கைக் காட்சிகளுக்கு வயலின் கோர்வையால் வண்ணமேற்றி, எங்கள் கற்பனையை விரித்த இசைக் கலைஞனின் வசந்த காலம். நான் என்பது அப்போது நான் மட்டுமல்ல. முருகேசன், வாசு, பாலு, ஞானசேகரன், கார்த்தி, சேகர் என்ற நண்பர் குழாம். தினமும் எல்லோரும், தளத்தெரு என்ற எங்கள் கிராமத்திலிருந்து, இரண்டு கி.மீ. தூரத்திலிருந்த காரைக்காலுக்கு சைக்கிள் களில் பயணிப்போம். இப்போதைய பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால்தான் எங்களுக்குப் பிடித்தமான இலவச இசையரங்கம். கடையின…
-
- 0 replies
- 1k views
-
-
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர். 'பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில் தந்த மலையரசித் தாயே'- என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, '…
-
- 7 replies
- 6.2k views
-
-
தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள். பண்டிதர் கே.வீரகத்தி 'மன்னவன்' கந்தப்பு திருமதி யோகா பாலச்சந்திரன் பேராசிரியர் கே.சிவலிங்கராசா கரவைக்கிழார்
-
- 5 replies
- 2.2k views
-
-
வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது …
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=3] ஈழ விடுதலை வரலாறு தமிழ்த் தியாகி விஜயராஜை தன்னுள் வைத்துப் போற்றும் [/size][size=3] தமிழ்த் தாயின் மைந்தன் , வீரமறத் தமிழ் உணர்வாளன்,ஈழம் தமிழகம் என்கிற பேதமில்லா இனத் தமிழன், தமிழினத்திற்கு நிகழ்ந்த பேரவலங்களின் துயர் சுமந்த எங்களின் தமிழ் சகோதரன் ஈகி விஜயராஜ் அவர்களின் உயிர் பிரிந்தமையறிந்து மனம் கலங்குகின்றோம். நீதி கேட்டு தன்னைப் தீயில் போட்டு மாய்ந்த செய்தி ஆறத் துயர் தருகிறது. [/size][size=3] அவர்களின் குடும்பத்தினர் , உறவினர்கள் ,நண்பர்கள், அவரின் மறைவால் துயருறும் அத்தனை தமிழ் மக்களோடும் இப் பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.[/size][size=3] -தன் சொந்த இனத்தின் ஒரு பாதியினர்,அருகிலேயே, இயற்கையால் பிரிக்கப்பட்ட இன்னுமோர் நிலப்பரப்பில் இனவ…
-
- 0 replies
- 548 views
-
-
ஈழக் கலைஞரும் நடிகையுமான இசைப்பிரியா சிறீலங்கா சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு படைகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் அண்மையில் சனல் 4 என்ற பிரித்தானிய ஊடகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 17 replies
- 4.1k views
-
-
-
ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம். "யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?” என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத…
-
- 1 reply
- 1.4k views
-