விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
தமிழில் ட்வீட் செய்து ஹர்பஜன் சிங்கை கிண்டல் செய்த சச்சின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின், ஹர்பஜனுக்கு சற்று வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய ஹர்பஜன் அதன் பின்னர் தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழில் பதிவிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஹர்பஜனை தமிழ்ப் புலவர் என்று அழைத்து வ…
-
- 3 replies
- 794 views
- 1 follower
-
-
தொடர்ந்து 3வது முறையாக யு.எஸ்.ஓபன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார். இதன் மூலம் மார்டினா நவ்ரதிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாய்ட் என்ற டென்னிஸ் பெருந்தகைகள் பட்டியலில் செரினா இணைந்துள்ளார். மேலும் செரினா வில்லியம்ஸ் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டமாகும் இது. முதல் செட்டில் இருவருமே தொடக்கத்தில் சற்று திணற கடைசியில் செரினாவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க 5-2 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 8வது சர்வ் கேமில் வோஸ்னியாக்கி செட் ப…
-
- 3 replies
- 475 views
-
-
ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது 21ஓட்டங்களால் தமிழ் நடிகர் அணி கோப்பையை வென்றது தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் அப்பாஸ் கப்டனாகவும் தெலுங்கு நடிகர் அணிக்கு நடிகர் தருண் கப்டனாகவும் இருந்தார்கள். நாணயச் சுழற்சியில் தமிழ் நடிகர்கள் அணி வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நடிகர்கள் ஷாமும் ரமணாவும் களம் இறங்கினார்கள். 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில் ஷாம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரமணா 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்ராந்த் 56 ஓட்டங்களுடனும் ஜீவா 25 ஓட்டங்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டம் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலிடத்தையும், சந்திரசேகரன் ஹெரினா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். எனினும், கடந்த 3 தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்…
-
- 3 replies
- 890 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங் [29 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அடிலெய்ட் டெஸ்ட் மூலம் அதிக சதமடித்த 2 ஆவது வீரர் என்ற நிலைக்கு அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கிபொண்டிங் உயர்ந்துள்ளார். காவஸ்கர் சாதனை சமன் டெஸ்ட் போட்டிகளில் நேற்று முன்தினம் 34 ஆவது சதம் அடித்தார். அவுஸ்திரேலியக் கப்டன் ரிக்கிபொண்டிங். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கவாஸ்கர் (34) மேற்கிந்தியாவின் லாராவுடன் (34) பொண்டிங் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் சச்சின் (39) உள்ளார். * அடிலெய்ட் மைதானத்தில் 5 ஆவது சதம் அடித்துப் புதிய சாதனை படைத்தார் பொண்டிங். இதற…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒலிம்பிக்கில் இந்திய இசைக்கு அமெரிக்கர்களின் ஆட்டம்
-
- 3 replies
- 882 views
-
-
சர்வீஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மீது செக். குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ரசூல் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் 2-வது சுற்று ஆட்டத்தில் லூகாஸை நடால் தோற்கடித்தார். இதன் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய லூகாஸ், சர்வீஸ் செய்வதற்கு நடால் வேண்டுமென்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். முன்னணி வீரர்கள் இதுபோன்ற தவறை செய்யும்போது நடுவர்களும் அவர்களைக் கண்டு கொள்வது இல்லை. இது தவறான முன்னுதாரணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்கிறார்கள். முன்னணி வீரர்கள் என்பதால் விதிகளை மீற அனுமதிக்கலாமா? இதனை யாரும் கண்டுகொள்ளா…
-
- 3 replies
- 516 views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…
-
- 3 replies
- 602 views
-
-
மதுபோதையில் வாகனம் ஓடியதற்காக 1996ம் ஆண்டு ஒலிம்பிகில் நூறு மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், 9.84 வினாடிகளில் நூறு மீற்றரை ஓடி அப்போது உலக சாதனை படைத்தவருமான கனடாவை சேர்ந்த Donovan Bailey இன்று Torontoஇல் கைது செய்யப்பட்டார். தற்போது 2012 ஒலிம்பிக் போட்டி சம்மந்தமான செயற்பாடுகளில் கனடா நாட்டுக்காக அவர் ஈடுபட்டுள்ளதால் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளார். முன்பும் கடுகதி பாதையில் வாகனத்தை மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் ஓடியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓடியதற்காகவும் காவல்துறையினால் Donovan Bailey இரண்டு தடவைகள் குற்றம் சாட்டப்பட்டார். தகவல்: http://www.theglobea...content=2433037
-
- 3 replies
- 2.6k views
-
-
பட மூலாதாரம்,FIDE 28 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2024 நார்வே நாட்டில் நடந்து வரும் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த போட்டியில் வீழ்த்தினார். இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளாசிக்கல் கேம்’ என்று செஸ் விளையாட்டில் அழைக்கப்படும் முறையில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் கிளாசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு விளையாடுவது. இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற சதுரங்க ஆட்ட முறையில் கார்…
-
-
- 3 replies
- 548 views
- 1 follower
-
-
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். …
-
- 3 replies
- 912 views
-
-
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தென்னாபிக்க இந்திய அணிகள் டெஸ்ட் போட்டியில் முன்றாம் நாளான இன்று சேவாக் 300 ஓட்டங்களை கடந்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 540 ஓட்டங்களை பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் சளைக்காமல் ஆடித்தாட ஆரம்பித்து 102 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 455 ஓட்டங்களை தற்சமயம் பெற்றுள்ளது. சேவாக் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்.
-
- 3 replies
- 1.4k views
-
-
ட்விட்டரில் ட்ரென்ட் ஆன செரினாவின் அட்டகாச போஸ்! பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், கறுப்பாக இருந்தாலும் களையானவர். விளையாட போகும் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி ஆடை அணிந்து, ஃபேஷன் விழாக்களில் பங்கேற்பது செரினாவின் பொழுது போக்கு. இந்தியாவுக்கு ஒரு முறை வந்த போது பெங்களுருவில் நடந்த ஃபேஷன் விழாவில் செரினாவும், வீனசும் சேலை கட்டி வலம் வந்தது குபீர் சிரிப்பை வரவழைத்தது. டென்னிசில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, விளையாட்டுலகில் கனக்கச்சிதமான உடல் அமைப்பை கொண்ட வீராங்கனைதான். சில சமயங்களில் அவர் கொடுக்கும் போஸ்கள் உலகையே அதிர வைக்கும். அந்த வகையில் 'நியூயார்க் மேகசின்' இதழுக்காக அவர் கொடுத்த போஸ்தான் இப்பேது ட்விட்டரில் ட்ரென்ட் ஆகியுள்ளது. ட…
-
- 3 replies
- 365 views
-
-
மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…
-
- 3 replies
- 653 views
-
-
பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்துக்கான மோதலில் , ஜேர்மனிய கழகமான பயர்ன் மூனிச் , பாரிஸ் கழகத்திடம் படு தோல்வியைச் சந்தித்த நிகழ்வினை அடுத்து , பயர்ன் மூனிச் கழக பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியை பதவி நீக்கம் செய்துள்ளதாக கழகம் அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்த ஜெர்மன் கழகம் நேற்று வியாழனன்று , ஒர் அவசர கூட்டத்தை ஒழுங்குபடுத்தி , கார்லோவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது . இந்த லீக் கிண்ணத்துக்கான போட்டிகள் இறுதிக் கட்டத்துக்குள் நுழையும் தறுவாயாக இருந்தும் , கழகம் இவரைப் பதவி நீக்கி இருக்கின்றது . 3-0 என்ற கணக்கில் இந்தக் கழகம் பாரிஸ் கழகத்திடம் தோற்றுள்ளது , கடந்த21வருட காலத்தில் சந்தித்த படுமோ…
-
- 3 replies
- 562 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில…
-
- 3 replies
- 345 views
-
-
இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக Rovman Powell 107 ஓட்டங்களையும், Nicholas Pooran 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 225 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓ…
-
- 3 replies
- 407 views
- 1 follower
-
-
இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 இற்கான (டிவிஷன் III) கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அணிக்கு இரண்டு இன்னிங்ஸ்களாக அமையும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக ஆடி வரும் மதீஸ்வரன் சன்சயன், கனகரத்தினம் மத்திய வித்தியாலயத்திற்கு (ஸ்டான்லி கல்லூரி) எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார். வலதுகை துடுப்பாட்ட வீரரான சன்சயன் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கன…
-
- 3 replies
- 550 views
-
-
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கொண்டுவந்தது. இந்தநிலையில், இலங்கை அணி, அயர்லாந்தை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக நால்வர் சதங்களை பெற்றதுடன், அவர்களில் இருவர் இரட்டை சதங்களை பெற்றனர். அதன்படி, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை காலி மைதானத்தில் த…
-
- 3 replies
- 783 views
- 1 follower
-
-
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் `சர்ரே' அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு அணியான கிளெசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ரே அணி இந்தச் சாதனையைப் படைத்தது. இப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அலி பிரௌன் 97 பந்துகளில் 176 ஓட்டங்களைக் குவித்தார். இவர் ஜேம்ஸ் பென்னிங்குடன் (152 ஓட்டங்கள்) ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 296 ஓட்டங்களைக் குவித்தார். ரிக்கி கிளார்க் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். ஆட்டத்தின் முடிவில் கிளெசெஸ்டர்ஷயர் அணியை 239 ஓட்டங்களில் சுருட்டி 257 ஓட்டங்கள் வித்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
கேள்விக்குறியாகும் இலங்கைக் கிரிக்கெட் விமல் சந்திரன் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இந்தியா அணி, மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் இலங்கையணிக்கு வெள்ளையடிப்புச் செய்து தொடரை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி இலங்கையில் வைத்துப் பெற்ற மோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணியுடன் 2002/03 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை அணி, 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் தோல்விகளை இந்த தொடரில் சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா தொடரின் தோல்விகள் மிக மோசமாக அமையவில்லை.…
-
- 3 replies
- 572 views
-
-
யாழ்.இந்து - கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி - கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட்; போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மற்றும் சனிக்கிழமை (25) ஆகிய கிழமைகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது. இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/144492#sthash.jB7eRikG.dpuf
-
- 3 replies
- 591 views
-
-
சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்"…
-
- 3 replies
- 538 views
-
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில்…
-
- 3 replies
- 630 views
- 1 follower
-
-
வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…
-
- 3 replies
- 478 views
- 1 follower
-