Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் By T. SARANYA 21 OCT, 2022 | 11:56 AM இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார். இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் 'சாகித்திய ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virake…

  2. இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காலமானார் ! 02 Oct, 2022 | 09:52 AM இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காமானதா அவரது குடும்பத்வர்கள் தெரிவித்தனர். தர்சன் தர்மராஜ் தனது 41 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இன்று (2) அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமான சிங்கள தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சிங்கள, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தர்சன் தர்மராஜ். சிறந்த நடிகர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தர்சன் தர்மராஜின் மறைவுக்கு திரையுலகப் பிரமுக…

  3. புகழ்பெற்ற... இலக்கியத் திறனாய்வாளரும், ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான... கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்! புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் கே.எஸ். சிவகுமாரன் பெற்றிருந்தார். https://athavannews.com/2022/1299374

  4. மணிவண்ணன்... தான் இறந்த பின்பு தன் உடலில், புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார். நினைவு அஞ்சலி. 🙏

  5. உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார் பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா வீரச்…

  6. மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்! இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார். காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள…

  7. தமிழீழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யேர்மனி முல்கைம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 அன்று காலமானார். இவர் டுயிஸ்பூர்க், ஓபகௌசன் மற்றும் முல்கைம் தமிழாலயங்களின் மூத்த ஆசிரியரும் ஆவார்.

  8. பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்! மே 22, 2022 ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்று பின்னாளில் அங்கேயே நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தெணியான். மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் இவர் வர்ணிக்கப்பட்டவர். ந…

  9. இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) May 22, 2022 — என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.…

  10. ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் யேர்மனி மன்கைம் நகரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன் மாஸ்டர் (தீட்ஷண;யன்- நாட்டுப்பற்றாளர்) ஆகியோரின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88 வது வயதில் ஜேர்மனியில் 18.05.2022 ஆம் நாளன்று காலமானார். கப்டன் மொறிஸ் - பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன்(ஐPமுகு) ஏற்பட்ட நேரடிமோதலின்போது வீரமரணத்தைத் தழுவியிருந்தார் . கப்டன் மயூரன் - இவர் எமது தேசியத்தலைவரின் பிரத்தியோக மெய்ப்பாதுகாவலராக பல ஆண்டகள் சேவையாற்றி 1993 இல் விடுதலைப் புலிகளால் சிறப்பாத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீது தவளைப் பாய்ச்சல் ந…

  11. “நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முடிகின்றது. ஊருக்கு சென்று மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக இலங்கை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக முகநூல் அஞ்சலி பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

  12. யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார் April 13, 2022 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிய அதே வேளை 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பீடத்தின் 9 ஆவது பீடாதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பீடாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மருத்துவ பீடத்துக்கென அதி நவீன வசதிகளைக் கொண்ட ஹூவர் …

  13. தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் சாவடைந்துள்ளார்! March 27, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/tempsnip.jpg தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் இன்று (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார். http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648414187254-191x300.jpg …

  14. இன்று இணையம் முழுவதும் GIF என்ற அசையும் படத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கமெண்ட் செய்வதற்கும், ரியாக்ட் செய்வதற்கும் ஜிஃப் படங்கள் அதிகம் பயன்பட்டு வருகின்றன. ஜிஃபை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்நிலையில் இந்த ஜிஃப் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் கொரோனா காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 74. இந்த செய்தி தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. வில்ஹிட் ஜிஃப் படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இவரது முதல் ஜிஃப் இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும். அவர் அப்போது கண்டுபிடித்த ஜிஃப் இன்று இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஜிஃபை …

    • 5 replies
    • 448 views
  15. குமார் ரூபசிங்க - (1943 – 2022) - இடதுசாரித்தனத்திலிருந்து NGO த்தனம் வரை... - என்.சரவணன் குமார் ரூபசிங்க ஞாயிறன்று (20) கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் காலமாகிவிட்ட என்கிற செய்தியை அறிந்தேன். SWRD பண்டாரநாயக்கவின் மூத்த மகளான சுனேத்திராவை 1972 இல் மணந்து கொண்டார். சுனேத்திராவின் இளைய தங்கை சந்திரிகா குமாரணதுங்க, இளைய சகோதரன் அனுரா பண்டாரநாயக்க என்பதை நீங்கள் அறிவீர்கள். குமார் ரூபசிங்கவும் சுனேத்திராவும் சில ஆண்டுகளின் பின்னர் விவாகரத்தாகி வேறு திருமணம் செய்துகொண்டனர். ஒரு காலத்தில் குமார் தீவிரமான சமூக, அரசியல் செயற்பாட்டாளர். அவருக்கு பல தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். 1958 கலவரம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரின் நெருங்கிய தமிழ் நண்பரும் குடு…

  16. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியா…

  17. 'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்! பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாட…

    • 14 replies
    • 1.3k views
  18. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் December 25, 2021 நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது. 25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வுக்கு முன்…

  19. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34 வது நினைவு தினம் இன்று! AdminDecember 24, 2021 எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்! மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர்…

  20. யாழ் கள உறவு விசுகு அவர்களின் குட்டித்தம்பி சிறி இன்று இயற்கை மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை பார்வைக்கு வைக்கப்படும். இடம்: Le Funérarium 95 rue Marcel Sembat 93430 Villetaneuse நேரம்: பின்னேரம் 3 மணியிலிருந்து 4 மணிவரை.ஏனைய பார்வைக்கு வைக்கப்படும் நேரம் மற்றும்இறுதிக்கிரியைகள் சம்பந்தமான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: விசுகு அண்ணா மற்றும் அவரது முகனூல் பதிவு

  21. இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார் December 11, 2021 இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 68ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற கணித ஆசிரியராகயிருந்த இவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகாலமாக ஆயுட்கால உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தார். எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்த இவர் மட்டக்களப்பு மாவட்ட தம…

  22. எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் இன்று (04.12.2021, சனிக்கிழமை) காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தோழர் கணேசலிங்கன் அவர்களின் பூதவுடல் இன்று (04.12.2021, சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. …

  23. மூத்த பத்திரிகையாளர் கானமயில்நாதன் காலமானார் மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று திங்கட்கிழமை தனது 79 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லை…

  24. செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் . தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.

  25. “திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது! AdminOctober 26, 2021 தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், …

    • 5 replies
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.