Jump to content

மாவீரர்நாள் பாடலைப் பாடிய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்வைக்கு

Sunday, 10 Oct 2021 6:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

Monday, 11 Oct 2021 8:00 AM - 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Monday, 11 Oct 2021 8:30 AM - 10:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Monday, 11 Oct 2021 10:30 AM - 11:00 AM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

 

https://ripbook.com/rameswaran-varnakulasingam-61521567a4910/notice/obituary-6152163183d32

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தழிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரனுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல்.

C9BBE31E-A7CF-4DFF-9418-D8DB2E963D60.jpe

தழிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரனுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரன் அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் இரங்கல் அறிக்கை . தமிழீழ இசைமகன் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் மறைவு எம் நெஞ்சை அழுத்துகிறது . சிறந்த சமூக அக்கறையாளர் , தேசபக்தர் , இனப்பற்றாளர் , கலைக்காவலன் முக்கியமாகத் தமிழீழத்தின் தலையான இசைக் கலைஞர்களில் ஒருவரும் , எல்லோராலும் வர்ணராமேஸ்வரன் என அறியப்பட்டவர் . இவரின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் , வேதனையும் அடைகிறோம் . மிக அற்புதமான குரல் வளத்தால் எம்மை ஆட்கொண்ட ஓர் இசைமகனைத் தமிழர் தேசம் இன்று இழந்து தவிக்கிறது . இவரது இழப்பு தமிழீழ இசைப் பரப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர் . இவர் சிறந்த பாடகர் கவிஞர் , மிருதங்க கலாவித்தகர் , இசையமைப்பாளர் , குரல் வள நிபுணர் என இசைத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர் . இசைத்துறைசார் பாண்டித்தியம் பெற்ற பெரும் எம்மவர் தம் சுயத்துக்காக உழைத்துக் கொண்டிருக்க , இவர் போன்ற ஒரு சிலரே தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்கும் ஆயுதமாகத் தம்குரலையும் , தாம் பயின்ற கலையையும் அர்ப்பணித்தார் கள் . பல தாயக விடுதலைப் பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரராகிய இவரின் இனிமையான குரல் எம்மவர்கள் பலரின் உள்ளத்தை உருக்கி , தாயக விடுதலைப் போரில் பங்கெடுக்க உந்தியதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் .

பாலான குறிப்பாக மாவீரர் நாளில் ஒலிக்கும் துயிலுமில்லப் பாடலாகிய தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே ” என்ற பாடல் எங்கள் நெஞ்சத்தை நெகிழ்ந்துருக வைத்துக் கண்ணீர் மழை பொழிய வைக்கும் அளவிற்கு அவரது குரல் வசீகரமானது . முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தானே எழுதி இசையமைத்துப் பாடிய ” எப்படித் தங்குவதோ இறைவா எத்தனை கொடுமைகள் ஈழத்தில் தொடர்கையில் எப்படித் தூங்குவதோ தமிழர் நாம் எப்படித் தூங்குவதோ ? ” , அதன்பின் கனடாவில் வெளிவந்த ” மறந்து போகுமோ மண்ணின் வாசனை தொலைந்து போகுமோ தூர தேசத்தில் ” போன்ற பாடல்களிலிருந்து இவர் இனம்மீது கொண்ட அக்கறையின் அளவை நாம் உணர்ந்து கொள்கிறோம் . மேலும் தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றி , இவர் பாடிய பக்திப் பாடல்கள் எமது வாழ்க்கையில் நாம் கேட்டிருக்காத வித்தியாசமானதோர் பரிமாணம் கொண்டவை .

கலை புலம் பெயர்ந்து கனடா வந்தபின் , சமூக அக்கறையோடு பயணிக்கும் அனைவருக்கும் தோள்கொடுத்ததோடு , தான் கற்றறிந்த எமது பண்பாடுகளை , அடுத்த தலைமுறைக்குப் பழுதின்றி கையளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கனடாவில் ” வர்ணம் இசைத் தொழில்நுட்பப் பாடசாலைகள் நிறுவி ” தமது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார் . இப்படியாக ஈழத் தமிழர் இதயங்களில் இசையால் புரட்சி செய்து வந்த தமிழீழ இசைமகன் , எம் இனத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பல இருக்க , இடைநடுவே எமைவிட்டு நெருங்க முடியாத்தூரம் சென்றுவிட்டார் .

தேசியத் தலைவரையும் , தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் , அதன் இலட்சியத்தையும் முழுமையாக ஏற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தாம் கற்றுத் தேர்ந்த இசைத் துறையூடாக பெரும் பங்களிப்பை வழங்கி வந்த இவர் போன்ற உத்தம மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை . கலைமாமணி அமரர் . வர்ணராமேஸ்வரன் போன்ற தமிழ்த் தேசிய இனப்பற்றாளர்கள் சரித்திர மனிதர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் என்றும் வாழ்வார்கள் .

உங்கள் உடல் மறைந்தாலும் , நீங்கள் மாவீரரை வணங்கிப் பாடிய துயிலுமில்லப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் குரலை நாம் கேட்டுக்கொண்டே இருப்போம் . இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் , உறவினர் எல்லோரது துயரிலும் , ” தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை ” தமிழீழ மக்களின் சார்பாக பங்கெடுத்துக் கொள்கிறது . இவர் போன்று தமிழினத்தை நேசித்த ஆயிரம் ஆயிரம் இனப்பற்றாளர்களின் இலட்சியம் நிறைவேறத் தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம் .

நன்றி .

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

பா . தயாமோகன்
அரசியற்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள் .
arasiyalthurailtte@gmail.com

08B4F6D4-63B1-4CC7-8E52-749ED6A49911.jpe

0DBFF643-0D79-4D3B-8DE8-BB357E928672.jpe

 

 

 

https://www.meenagam.com/தழிழீழ-இசைமகன்-வர்ணராமேஸ/

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அகவை ஒன்று நினைவு வணக்கங்கள்! 🙏🙏🙏

 

https://ripbook.com/rameswaran-varnakulasingam-61521567a4910/notice/remembrance-63087179666b3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுப் பகீர்வு சங்கீத இசைக் கலைஞரும் ஈழத்துப் பாடகருமான அமரர் வர்ண ராமேஸ்வரன்

 

ஈழத்து கலைஞர்களில் இவரும் ஒருவர் வர்ண இராமேஸ்வரன் கனடாவில் கொரோனாவால் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது

இவரது குரலில் விடுதலை கானங்கள் நல்லூர் முருகன் பாடல்களை அந்தநாள்களில் விரும்பி கேட்பேன் இன்றும் காதில் ஒலிக்கும் அந்த வசீகர குரலின் மறைவு எமக்கு ஒரு இழப்பு

உதாரணத்துக்கு ஒரு பாடல்

பன்ரனிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லையே நாம் பகலிரவாய் வாடி நின்றோம்.

பல்வேறு துயரச் செய்திகளுக்கு மத்தியில், சங்கீத இசைக் கலைஞரும் ஈழத்துப் பாடகருமான வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மறைவுச் செய்தியினையும் அறிய நேர்ந்திருக்கிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், அண்மையில் அவரோடு நீண்ட நேரம் உரையாடியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். ஈழத்துக் கலைஞருக்கு அஞ்சலி…

‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய…’ என்ற பாடலை, முதல் முறை ஒலிப்பதிவிற்காக அவர் பாடிய போது அருகில் இருந்து பார்த்த நினைவு சுடர்கிறது. அப்போது ஒலிப்பதிவு செய்தவர் இன்றில்லை. அந்தப் பாடல் வரிகளை எழுதியவரும் இன்றில்லை. அப்போது அணி இசை வழங்கிய வேல்மாறன் அவர்கள், மிக அண்மையில் மறைந்துவிட்டார்.

ஈழத்துப் புகைப்படக் கலைஞர்.

இசை அத்தியாயம் சரிந்ததுவே!!

இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு.

ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும், தன் தனித்துவமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர். இவர் தந்தையார் சங்கீத வித்துவான் வர்ணகுலசிங்கம். இவர் தந்தையார் மறைந்த இசை மாமேதைகள் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் மகாராஜபுரம் விஸ்வநாதையா அவர்களின் பிரதம சீடர்.

தெல்லிப்பளை வரதராஜசர்மாவிடம் மிருதங்கம் பயின்றவர். மிருதங்கம், தவில், ஆர்மோனியம் நன்கு அறிந்த – பரிச்சயமான பல்துறைக் கலைஞனாக விளங்கினார் வர்ண ராமேஸ்வரன்.

இளமையிலே இசைப் பரிச்சயம் உடைய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க வித்துவான் சிவபாதம், பாடகி பார்வதி சிவபாதத்தின் உறவினரும் கூட.

தெல்லிப்பளை மகாஜானக் கல்லூரியல் கல்வி கற்ற வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு அளவையூர் விநாசித்தம்பிப் புலவரின் கதாப் பிரசங்கத்திற்கு மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அளவையூர் விநாசித்தம்பிப் புலவர் தான் தந்தையாரின் பெயரின் முற்பகுதியையும் இணைத்து வர்ண ராமேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில் உருவான நல்லை முருகன் பாடல்கள், மற்றும் திசையெங்கும் இசை வெள்ளம், ஊர் போகும் மேகங்கள் என தாயக மண் வாசம் கமழும் இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார்.

உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக நன்கு பரிச்சயமானவர்.

பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூர் தான் இக் கலைஞன் பிறந்த மண், பின் யாழ்ப்பாணம் , வன்னி , கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.

பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளார்.
வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.

நிதர்சனப் பொறுப்பாளராக பரதன் அவர்கள் இருந்த காலத்தில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் அழைக்கப்படுகிறார், பூபாளம் பாடும் நேரம் , பூ மலர்ந்தது கொடியினில் என இவ் இரு பாடல்களையும் பாடுவதற்கு பயிற்சி எடுத்துவருமாறு அனுப்பப்படுகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஒலிப்பதிவு தடைப்பட்டு பாடல்கள் இரண்டும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திர்ற்கு வழங்கப்படுகின்றது.

பின்னர் புதுவை இரத்தினதுரையின் அழைப்பின் பேரில் விழித்தெழுவோம் (1992) ஒலி நாடாவில் புறமொன்று தினம் பாடும் பெண் புலிகள்,
கரும்புலிகள் ஒலி நாடாவில் தாயக மண்ணின் காற்றே,
எதிரியின் குருதியில் குளிப்போம், பூநகரி வெற்றிச் சமர் ஒலி நாடாவில் அப்புகாமி பெற்றெடுத்த லொகு பண்டா மல்லி,
முன்னேறிப் பாய்ச்சலின் போது வெளியான அவரும் அவர் நண்பர் சடகோபனும் எழுதிப் பாடிய வேப்பமரக் காற்றே நில்லு, வீதியோரப் பூவே சொல்லு”
போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுகின்றது. இதன் பின்னர் புதுவையர் வர்ண ராமேஸ்வரன் கூட்டணியில் நல்லை முருகன் பாடல்கள் ஒலிநாடா வெளியாகின்றது.

1992ம் ஆண்டு கிளாலி கடல் நீரேரிப் பாதையில் இடம் பெற்ற மோதல் காரணமாக பாடகர் சாந்தன் அவர்கள் வன்னிக்குள் சிக்கிக் கொள்ள, அவர் யாழிற்கு வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை அவர்களிற்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

உடனடியாக புதுவையர் வர்ண ராமேஸ்வரனை தன் இல்லத்திற்கு அழைக்கிறார். முக்கியமான ஓர் பாடல், நீதான் இதனைப் பாட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றார்.

”எங்கே எங்கே ஒருதரம் உங்கள் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”
அவர் இந்த வரிகளைப் பாடும் போதே புல்லரித்துப் போனதாய் வெளிச்சத்திற்கான ஓர் செவ்வியில் பகிர்ந்திருந்தார்.

புதுவையர் சாய்மனைக் கட்டிலில் அமர்ந்தவாறு இன்னுமொருக்காப் பாடும் ஐசி எனக் கேட்டுக் கேட்டுக் கொண்டாராம். இப்படி 3 தடவைகள் கேட்ட பின் 10 நிமிடங்கள் மௌனமாய் புதுவையர் இருந்தாராம், இறுதியில் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து மறுநாள் மாலை ஐந்தரை மணிக்கு ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார்.

இசைவாணர் கண்ணன் ஆர்மோனியம், சதா வேல்மாறன் தபேலாவுடனும், ஜெயராமன் வயலினுடனும் இசையமைக்க பாடல் ஒலிப்பதிவு ஆரம்பமாகின்றது. அருகே நின்றிருந்த மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி போன்ற கலைஞர்களும் இப்பாடலை முணு முணுக்க ஆரம்பிக்க ”எங்கே எங்கே” என்ற வரிகளை எல்லோரும் சேர்ந்தே பாடுங்கள் என புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறுகிறார்.

ஒலிப்பதிவ் முடியும் போது காலை 03 மணி, ஆனால் பாடகர் சாந்தன் அவர்கள் தவற விட்ட, இந்த ஓர் பாடல் , வர்ண ராமேஸ்வரனின் குரலால் உயிர் பெற்று ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாக அமையப் போகின்றது என்பதை அப்போது அங்கிருந்த எந்த ஓர் கலைஞர்களும் அறிந்திருக்கவில்லை.

1992ம் ஆண்டு மாவீரர் நாளின் இறுதி நாள், புதுவையரைச் சந்திக்க வந்திருந்த வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

புதுவையர் ராமேஸ்வரனை கட்டித் தழுவிப் பாராட்டினார், சிறிது நேரத்தில் காக்கா அண்ணை வந்து தலைவரே பாடல் கேட்டு வியந்திருப்பது பற்றி பகிர்ந்து கொண்டார். பின்னர் 11.30 மணியளவில் சு.ப தமிழ்ச் செல்வனும் வந்து பாராட்டினார்,

இவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி விரைந்தது. 12 மணியானதும் கோவில்களில் மணி ஒலிக்க , புலிகளின் குரலில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்தப் பாடலிற்கான மகிமை – மகத்துவம் அப்போது உணரப்படுகின்றது. நெய் விளக்கு ஏற்றப்படும் அதே சமயத்தில் வர்ண ராமேஸ்வரனையும் பாடலைச் சேர்ந்தே பாடுமாறு புதுவையர் கேட்டுக் கொண்டார். அந்தக் குரலும், குரலினால் வெளிப்பட்ட பாவங்களும் கேட்போர் அனைவரையும் – ஏன் கல் நெஞ்சங்களையும் கரைக்கும் வல்லமை கொண்டவையாக விளங்கியது என்றால் மிகையல்ல.

இது தவிர மெல்லிசைப் பாடல்களால் நம் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள்,

”மறந்து போகுமோ மண்ணின் வாசனை”,
”வாசலிலே அந்த ஒற்றைப் பனை மரம்”,
ஊருக்கு மீளும் கனவு உனக்கில்லையா தமிழா? ”
இப்படிச் சில பாடல்களைக் குறிப்பிடலாம்,

இசைத் தமிழ் உலகிற்கு வர்ண ராமேஸ்வரனின் இழப்பு – பேரிழப்பு

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

தேடல் , எழுத்துருவாக்கம்,
கமலேஷ்

 

https://www.vvtuk.com/archives/339063

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.