துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்! ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார். டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.! ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/மூத்த-பெண்-எழுத்தாளர்-பத/ கண்ணீர் அஞ்சலிகள் ..
-
- 3 replies
- 939 views
-
-
யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!
-
- 103 replies
- 15.9k views
- 1 follower
-
-
[size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size] லதா[/size] திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது? விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று: சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து தி…
-
- 0 replies
- 725 views
-
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை…
-
-
- 28 replies
- 1.7k views
-
-
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான வாசுதேவர்-நேரு கொரோனாவால் கனடாவில் உயிரிழப்பு.! ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த வாசுதேவர்-நேரு கொரோனாத் தொற்று காரணமாக கனடாவில் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த வாசுதேவர்-நேரு அவர்கள் ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களில் முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்…
-
- 0 replies
- 490 views
-
-
ஈழப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் சிட்னியில் காலமானார். தாயக விடுதலையை ஆழமாக நேசித்த கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் தமிழீழ விடுதலைக்கு அமைதியாக அரும்பணியாற்றினார். அமைதியான சுபாவமும் அப்பழுக்கற்ற ஈழப்பற்றும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பல தடவை தமிழீழத்துக்குச் சென்று பல ஆண்டுகள் தங்கியிருந்து பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்தார். உயரிய மானிடப் பண்பு கொண்ட கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் அவர்களை அறிந்த தமிழீழ மக்கள் அவரின் சேவைகளை என்றும் நினைவிற்கொள்வர். ஈழப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் அவர்களின் சேவைகளை நினைவுகூருவதோடு அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழ்லீடர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின…
-
- 23 replies
- 1.3k views
-
-
உதயன் பத்திரிகைகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை அடுத்து ஊடகத்திற்காய் உயிர்நீத்த எமது சக பணியாளர்களான சுரேஸ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரது நினைவு அஞ்சலி இன்று காலை 10 மணியளவில் உதயன் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் - நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பொ.கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் உதயன் பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=27…
-
- 0 replies
- 414 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார் பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா வீரச்…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் ஊடகவியலாளர் மேரி கொல்வின்! உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலை…
-
- 0 replies
- 646 views
-
-
உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…
-
- 0 replies
- 331 views
-
-
எனது நெருங்கிய உறவின் ( அக்காவின் கணவர் ) இழப்பின் போது அனுதாபம் தெரிவித்தஇணை யவனுக்கும் அத்தனை யாழ் கள உறவுகளுக்கும், தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும் ,எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத முற்பட்டால் இப்பதிவு மேலும் நீண்டு விடும்......மரணச்சடங்கு கொழும்பில் வியாழக்கிழமை ( நேற்று) நடைபெற்றது அவருக்கு வயது 72.டயபடிக் , ஒரு கால் விரல் எடுத்தது சாட்டு. பின்பு செவ்வாய் அதி காலை மாரடைப்பினால் காலமானார் .எனக்கு ஒரு நல்ல தந்தையை போல் .இருந்தவர். எனது மூத்த சகோதரியின் கணவர். நான் குடும்பத்தில் ஐந்தாவது இடையில் மூன்று சகோதரர்கள். இழப்பு மிகவும் துயரமானது தான் ஆனால் வாழ்வில் நிச்சயமானது இறப்பு.உறவினர்கள் வீட்டுக்கு சந்திக்க வருவதால் ந…
-
- 1 reply
- 943 views
-
-
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம் அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்
-
- 11 replies
- 1.9k views
-
-
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:- இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக…
-
- 12 replies
- 1.6k views
-
-
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களி…
-
- 1 reply
- 900 views
-
-
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் பொன்ராசா, வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள், பொன…
-
- 0 replies
- 235 views
-
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று.. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது…
-
- 4 replies
- 593 views
-
-
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ்.…
-
- 0 replies
- 713 views
-
-
எங்கள் சாந்தியக்காவின் தந்தை மரணம் அடைந்துள்ளார் ரமேஸ் வவுனியனின் மாமனாரும் சாந்தி ரமேஸ்ன் தந்தையும் ஆகிய ஆனந்தசடாட்சரம் அவர்கள் மரடப்பு காரனமாக மரணம் அடைந்துள்ளார்.. சந்தியக்காவுக்கு ரமேஸ் அண்ணாவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
- 36 replies
- 7.3k views
-
-
எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.
-
- 44 replies
- 1.9k views
- 3 followers
-
-
எனது அத்தான் - என் அப்பாவின் அக்காவின் மகனும், எனது மூத்த அக்காவை திருமணம் செய்த எங்கள் சொந்த மச்சானும் ஆகிய திரு தம்பு சுப்பிரமணியம் நேற்று இலங்கையில் காலமானர். எனது 5 வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கும் எங்கள் குடும்பத்தையும் தனது சொந்த உறவாக கவனித்து வந்தவரின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னமும் நானும் எங்கள் குடும்பமும் அவரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். இந்தத் துயரச்செய்தியை எனது யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
-
- 37 replies
- 3.2k views
-
-
எனது கவலையில் பங்குபற்ருவிர்களா? 01.01.2009 எனது அண்ணாவின் வீரசாவு 1 அண்ணவும் 1அக்காவும் களத்தில் அம்மவால் நடக்கமுடியாது அப்பாவால் உலைக்க முடியாது விரைவில் நானும் களத்தில் நிற்கலாம் ????????????????? மாவீரரின் கனவை நினைவாக்குவோம்
-
- 19 replies
- 2.2k views
-
-
எனது ஜீவன் ஒன்றுதான்... மனைவி ஜீவாவுக்கு இளையராஜாவின் பாட்டு! இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜீவாவின் உடல் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜீவா மீது மிகுந்த பிரியம் கொண்ட ராஜா, பல பாடல்களை ஜீவாவை நினைத்துதான் மெட்டு அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதயக்கோயில் படத்தில் 'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ...' என்ற பாடலில் எனது 'ஜீவன்' நீயடி... என்றும் புதிது... என்ற வரிகளை என் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத் தான் எழுதினேன் என்று முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுள்ளார் இசையமைப்பாளர் இளையரா…
-
- 2 replies
- 5.9k views
-