எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
-
- 3 replies
- 1.2k views
-
-
பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…
-
- 0 replies
- 404 views
-
-
அழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில் இயற்கையான முறைகளில் தயாரித்த பொருட்களை பயன்படுத்திய மனிதன் அன்று ஆரோக்கியமாக வாழ்ந்தான். நவீன காலத்தில் நவீன உற்பத்திப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதன், அதன்பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் மனிதனும் நவீன முறைகளை கையாள்கின்றான். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். மட்பாண்ட கொள்வனவில் மக்கள் அக்கறை செலுத்தாத கார…
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்! மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. குறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்ப…
-
- 0 replies
- 608 views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் January 28, 2019 ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்..... வ. ந. கிரிதரன் ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன். இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவ…
-
- 0 replies
- 916 views
-
-
-
- 123 replies
- 15.6k views
-
-
எனது இலங்கைப் பயணம் .. தி.சு. நடராசன் இலங்கை மட்டக்களப்பிலிருந்து, இ-மெயிலில் ஓர் அழைப்பு வந்தது. பேரா. சிவரத்தினம் என்பவரின் கடிதம் அது. செப்டம்பர் முதல் வாரம் அங்கு நடைபெற விருக்கும் கண்ணகி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், என்னுடைய புத்தகம், சிலப்பதிகாரம்: மறு வாசிப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) செய்த வேலை இது. இதனை விழாக் குழுவினர் சிலர் படித்திருக்கிறார்களாம். அழைப்பு, அதனை ஒட்டி வந்ததுதான். முதலில் எனக்குத் தயக்கம். 1980 வாக்கில் இலங்கை மலையகத்திலிருந்து இப்படி ஓர் அழைப்பு வந்தது.மலையக இலக்கியம் பற்றிப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். போகவில்லை. அதே விழாவிற்கு இரண்டாண்டுகள் கழித…
-
- 8 replies
- 2.1k views
-
-
‘வன் செவியோ நின் செவி’ - ‘முன்னாள் போராளிகள்’ நிலை காரை துர்க்கா / 2019 ஜனவரி 01 செவ்வாய்க்கிழமை, மு.ப. 08:04 கொடூரப் போரின் கோரத் தாண்டவம், இலங்கைத் தீவில் முற்றுப் பெற்று (2009 மே 2019) ஒரு தசாப்தம் நிறைவு பெறப் போகின்றது. ஆயினும், போரின் வடுக்கள், எம் கண் முன்னே நிற்கின்றன; நிழல்களாகப் முன்னும் பின்னும் தொடர்கின்றன. பொதுவாக, ஆயுதப் போரொன்றில் சிறுவர்கள், பெண்கள், முதியோர் போன்ற பகுதியினரே, பெரும் சேதங்களைப் சுமப்பவர்கள் ஆவர். ஆனால், இவர்களுக்கு அப்பால், ‘முன்னாள் போராளிகள்’ என ஒரு வகுதியினர், இன்று எமது சமூகத்தில் கடும் உடல், உள, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதப் போரின் முடிவின் பின்னர், இலங்கை அரசாங்கத்தால் அண…
-
- 0 replies
- 1.5k views
-
-
(Basheer Segu Dawood) மட்டக்களப்பு/ சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும்,விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார்.அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது நண்பிகள் கூறுகிறார்கள். ஹாஸியா அழகி, பணக்காரி என்ன குறை அவளுக்கு ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்று தெரியவில்லை என்கின்றனர் இவரது இன்னும் சில நண்பிகள். ஹாஸியாவுக்குத் திருமணம் பேசி திகதி குறித்து அழைப்பிதழும் அச்சிட்டாயிற்று, விநியோகமும் தொடங்கிற்று. கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கையில் ஹாஸ…
-
- 2 replies
- 1.1k views
-
-
யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார். கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலை…
-
- 0 replies
- 749 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள்! December 25, 2018 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் கொல்லப்பட்டு, இன்றுடன் பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஜோசப் பரராஜசிங்கத்தை அன்றைய அரசு பலியெடுத்தது. தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாக, தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, தெற்கிற்கும் உலகிற்கும் கூர்மையாக எடுத்துரைத்த பலர் அழிக்கப்பட்டனர். அப்படியான குரல்களில் ஒன்றே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் குரல். ஒரு பத்திரிகையாளராக ஜோசப் பரராஜசிங்கம் செயற்பட்டவர். இலங்கை அரசுகளின் கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பு நெருக்கடிகளையும் மட்டகளப்பின் வா…
-
- 0 replies
- 783 views
-
-
இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:15 - ஜெரா இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” …
-
- 1 reply
- 854 views
-
-
இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்? Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 -ஜெரா போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது. அதிலும், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று (10) அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில், இவர்களின் துயரங்களைப் பதிவுசெய்வது முக்கியமானது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இத்தினம் அனுஷ்டிக்…
-
- 0 replies
- 939 views
-
-
-
- 0 replies
- 548 views
-
-
இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் December 2, 2018 இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுள…
-
- 0 replies
- 854 views
-
-
இந்த ரயர் கயிறைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ஊர்ப் பக்கம் போயிருக்க வேண்டும்.ஏனென்றால் நானும் ரயர் கயிறை முதன்முதல் பார்த்தது ஊரில் தான். ஊருக்கு போனபோது ஆடுமாடு கட்டும் கொட்டிலில் ரயர் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது அதைப் பார்த்தேனே தவிர என்ன ஏது என்று ஆராயவில்லை.பின்னர் வீட்டு வேலி அடைக்கும் போது தான் தேவையான சாமான்களில் ரயர் கயிறும் சொன்னார்கள்.அப்போது கூட ரயர் கயிறைப் பற்றி ஆராயும் எண்ணம் எழவில்லை.அவர்கள் சொன்ன சாமான் எல்லாம் வாங்கி வேலி அடைக்க ஆட்களும் வந்தார்கள். வந்தவர்களுடன் அறிமுகமாகி வேலை தொடங்கும் போது நானும் கூடவே நின்று வேலை செய்தேன்.அப்போது தான் ஒருவர் பெரிது பெரிதாக இருக்கும் ரயர் கயிறை தனித்தனி ஆக்குமாறு கூறினார்.எப…
-
- 21 replies
- 2.9k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படும் காலம் இது. ஆனால், அவர்களது மடிந்த போராளிகளின் குடும்பத்தினர், குறிப்பாக அவர்களது மனைவி மற்றும் தாய்மார் போர் முடிந்து இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்னரும் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் நிலை, உணர்வுகள் குறித்து எமது சமூகத்தின் புரிதலும் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கின்றது. இவை குறித்து பேச இறந்துபோன இரு விடுதலைப்புலிகளின் குடும்பத்தினரை நாம் சந்தித்தோம். அதுபற்றிய அரங்கம் நிறுவனத்தின் காணொளி.
-
- 1 reply
- 465 views
-
-
என் நேசத்துக்குரிய கரிகாலனே... உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு. உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம். தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றானஉறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம். கேள்... இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்... இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள். இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் எற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள். பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும்…
-
- 5 replies
- 1.2k views
-
-
தம்பி என்னை தெரியுதா?நான் : இல்லை அம்மாஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா?நான் : இல்லை அம்மா...முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர். ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது. இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ... முகப்புத்தகத்தில் இருந்து ...
-
- 0 replies
- 458 views
-
-
-
மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நான்காவது இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளில் இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு, சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர் மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன. அதனையடும்மு தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்ப…
-
- 1 reply
- 630 views
-
-
மட்டக்களப்பு மக்களை பற்றி சிலர் மக்கள் சொல்வது 'மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள்" என்பது. அதாவது மந்திரத்தால ஆட்களை வசியம் செய்து (முக்கியமாக ஆண்களை) விடுவார்கள் என்பது. உண்மையிலேயே அவர்கள் மந்திரத்தால் வசியம் செய்வார்களா என்பது பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு
-
- 6 replies
- 2.5k views
-
-
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதள…
-
- 0 replies
- 1k views
-
-
(ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…
-
- 0 replies
- 533 views
-