அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
திசைவழிகளை திசைகாட்டல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 02 இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும், கடந்த காலத்தின் தொடர்ச்சியும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பும் இந்த நிகழ்காலத்தில் நிரம்பி இருக்கிறது. கடந்த காலத்தின் சுமைகளையும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே உள்வாங்கிச் சிரித்து, விருட்சமாய் வளர்வதற்காகப் புதிய காலங்களையும் புதிய கோலங்களையும் உருவாக்கிச் செல்ல 2020 காத்திருக்கிறது. …
-
- 0 replies
- 880 views
-
-
திடிரென வந்து விழுந்த பேரிடி அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தை யெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு வெ ளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியை…
-
- 1 reply
- 975 views
-
-
திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும் – மு.தமிழ்ச்செல்வன் எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 326 views
-
-
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இன்னும் தொடர்கிறதா?
-
- 0 replies
- 252 views
-
-
திட்டமிட்ட செயற்பாடுகளை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்கவேண்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலையினை கண்டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதனைவிட வடக்கு உட்பட நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நண்பர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி பெரும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் நேற்று முன்தினம் யாழ்ப்பாண செயலகத்தை முடக்கி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது. கொட்டும் மழைக்கு மத்தியில…
-
- 0 replies
- 242 views
-
-
திட்டமிட்ட திடீர் அரசியல் திருப்பம் – பி.மாணிக்கவாசகம் October 29, 2018 இலங்கை அரசியலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு முக்கியமான வரலாற்று தினமாகப் பதிவாகியிருக்கின்றது. வரலாற்று தினம் என்பதிலும் பார்க்க ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிய ஒரு கரிநாளாகவும் அது கருதப்படலாம். அன்றைய தினம்தான், எவருமே எதிர்பார்த்திராத வகையில் திடீரென, அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சம்பவத்துடன் சூட்டோடு சூடாக ரணில் விக்கிரமசிங்கவை, அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளார் என்ற அறிவித்தலும் வெ…
-
- 0 replies
- 647 views
-
-
திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் சிங்களவர்களது சட்டத்துக்கு எதிரான குடியேற்றத்துக்கு தமிழ் மக்கள் மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும் (ஓகஸ்ட் 28) இல் இடம் பெற்றது. இந்தக் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்மும் தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் எம்மினத்தின் மீது திணிப்புகளை மேற்கொள்கிறது – தவராசா கலையரன் எம்.பி. -சி.எல்.சிசில்- திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய உயர்ஸ்தானிகருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை – இந்தியா என…
-
- 0 replies
- 294 views
-
-
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வ…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம் பாடசாலைப்பிள்ளைகளுக்கு நாசம் விளைவிக்கும் பல புதியவற்றின் வரவுகள் கண்டு பெற்றோர் பீதி கொள்கிறார்கள். பாடசாலைப்பிள்ளைகளை அடிமைகள் ஆக்கிவிடும் விதம், விதமான நவீன உணவுகள், குடிவகைகள், பொருட்கள், போதைப் பொருட்கள், என்றவகையில் ஏராளமானவை மாணவர் மத்தியில் உலவ விடப்படுகிறது. இன்னுமொரு புறம் ரக்ஸ் கலக்கப்பட்ட, ரொபிகள், பிஸ்கட்டுக்கள், குளிகைகள், மற்றும் அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இவையொருபுறமிருக்க, கைத்தொலைபேசி, இணையம், பேஸ்புக், நவீன வலைப்பின்னல்கள், கையேடுகள், நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற ஏராளமானவற்றின் புகுத்தல்களால் மாணவர் சமூகம…
-
- 1 reply
- 3.9k views
-
-
திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…
-
- 0 replies
- 479 views
-
-
“இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படாமை மிகப்பாரதூரமான விடயமாகும்” முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல், மதத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் கையாண்டு வெற்றி கொண்டு வந்துள்ளார்கள். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பொறாமையினாலேயே ஏற்பட்டுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்…
-
- 1 reply
- 425 views
-
-
திண்ணைப் பேச்சும் தமிழரசுக் கட்சியும்! நிலாந்தன். November 7, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும், எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்க…
-
- 1 reply
- 536 views
-
-
திண்ணைப் போர் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:07 Comments - 0 ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ‘பிடி’ பிடித்திருந்தார். ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற பழமொழி, அரசியலுக்கே நன்கு பொருந்தும். அரசியலில் இவ்வாறான எதிர்பார்ப்புகள் பலரிடம் இருப்பது உண்மை. எல்லோராலும் அரசியலில் வெற்றியைப் பெறமுடியாது. வெற்றி பெற்றவர்கள் இறக்கும் போது, பலருக்கு அந்த…
-
- 0 replies
- 632 views
-
-
தினமென் சதுக்க படுகொலைகளை உலகம் மறக்கவிடமாட்டோம் ரோஜினா சியாவோக்கிங் ஹீ கார்டியன்- தமிழில் - ரஜீபன் 1989 இல் தினமென் சதுக்கத்தில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் ஒருவனின் சகோதரனனை கட்டுப்படுத்துவதற்கு தான் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லயனே நினைவுகூறுகின்றார். அவன் சிறியவன் ஆனால் பெரிய மனிதர்களை போன்று கதறினான் என அவர் தெரிவிக்கின்றார். 1989 இல் தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானவேளை லயனே ஹொங்ஹொங் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.ஆர்ப்பாட்டங்கள் பற்றி அறிந்ததும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் தினமென் சதுக்கத்திற்கு சென்றார். யூன் 3 ம் திகதி சீனா 200,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய படையினரை அப்பாவி பொதுமக்க…
-
- 0 replies
- 426 views
-
-
கடந்த டிசம்பர் 6 அன்று ரணில் கண்டி அஸ்கிரி, மல்வத்துபீட தலைமையை சந்தித்து புத்த சாசனத்துக்கும், பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் முன்னுரிமையையும் எந்தவிதத்திலும் மாற்ற மாட்டோம் என்றார். ரணில் பௌத்த பிக்குமாரை மதிப்பதில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. ஆனால் கடந்த ‘ஒக்டோபர் 26’ சதிகளுக்குப் பின்னர் அவர் சாஷ்டாங்கமாக அவர்களை நமஸ்காரம் செய்கிறார். அடிக்கடி பௌத்த விகாரைகளுக்கும், பௌத்த நிகழ்வுகளுக்கும் செல்வதாகக் காட்டிக்கொள்கிறார். தான் ஏனைய பௌத்தர்களுக்கு சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கப் படாது பாடு படுவதைக் காண முடிகிறது. ரணிலின் இத்தகையை போக்கின் ஒரு அங்கம் தான் மேற்படி உத்தரவாதம். இன்று ஜனாதிபதி திப…
-
- 1 reply
- 1.6k views
-
-
திமுக ஆட்சியமைக்க காங் நிபந்தனையற்ற ஆதரவு பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு மே 12, 2006 சென்னை: திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 96 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக கருணாநிதி நாளை பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியில் சேர மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்று பாமக, கம்யூனிஸ் …
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்திருக்கிறது. இத்தனை தோல்விகளுக்குப் பின்பு திமுகவின் தொண்டர்கள் போர்க்குணம் மாறாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் காவல்துறையினர் ஏறக்குறைய எழுபதினாயிரம் பேர் கைதாகியிருப்பதாகக் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிறை நிரப்புப் போராட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கின்றது. திமுக இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தையும் இழந்து போய் நிற்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத கட்சி. ஜெயலலிதாவை விட அதிகமாக இன்றைக்கும் கலைஞரே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றார். இன்றைய போராட்டத்திற்கு த…
-
- 11 replies
- 1.1k views
-
-
திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! June 8, 2025 9:08 am அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேக…
-
- 0 replies
- 244 views
-
-
திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் – நிலாந்தன் August 9, 2020 தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன. அப்படி என்றால் தமிழ் மக்களின் வாக்குகளி…
-
- 0 replies
- 684 views
-
-
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! “தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவைச் சந்தித்து, தமிழ்நாட்டு மின் திட்டங்கள் குறித்துப் பேச வாய்ப்பளிக்கவில்லை. பலமுறை முதல்வரைச் சந்திக்க வாய்ப்புக் கேட்டும் தமக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை” என்று நடுவண் மின்துறை இணையமைச்சர் பியுசு கோயல் 25.03.2016 அன்று புது தில்லியில் நடந்த கருத்தரங்கொன்றில் பேசினார். நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் பிரகாசு சவடேகர், 31.03.2016 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டு முதலமைச்சரை நடுவண் அமைச்சர்கள் சந்திக்க முடிவதில்லை என்றார். நடுவண் அமைச்சர்கள் இருவரும் குறிப்பாக இரண்டு செய்திகள…
-
- 0 replies
- 589 views
-
-
திராவிட அரசியல் ஏன் தோற்றம் பெற்றது - ஓர் வரலாற்றுப் பார்வை. காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானம் மட்டும், காங்கிரஸில் பெருவாரியாக இருந்த பிராமணர்களால் தோற்கடிக்கப்படாமல் நிறைவேறியிருந்தால், பெரியார் 1925இல் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்; சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காது; தி.க.(1944) உருவாகியிருக்காது; தி.மு.க. (1949) பிறந்திருக்காது; அ.தி.மு.க. (1972) அரும்பியிருக்காது; ம.தி.மு.க. (1993) மலர்ந்திருக்காது. 20_ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கே காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின் வரலாறாகப் போயிருக்கும். அந்த அளவிற்குப் பெரியாரின் ‘வகுப்புவாரி பிரதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 504 views
-
-
"திராவிட கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விகடன் டாட்காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அரசுக்கு தரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே? இது காலங்கடந்தது. ‘இசைப்பிரியாவுக்கு இப்படி நடந்துவிட்டது; இனிமேலும் போகலாமா? இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? நாம் தமிழர்கள் தானா? இதற்கு மேலும் இந்தியா போகலாமா? என்று கேட்கிறார். இதைத்தானே நாங்கள், ‘இதற்கு மேலும் இந்த அரசில் பங்கேற்கலாமா?’ என்று அன்று கேட்டோம். இன்று எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அன்…
-
- 0 replies
- 736 views
-
-
திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்ற, வெற்றுப் பெருமைகளில் விளையும் பயன் எதுவுமல்ல; எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும், அறிவியல் ரீதியான சிந்தனைப் பரப்புக்குள் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. எமக்கான வரலாற்றை, வெறுமனே கட்டுக்கதைகளில் இருந்து உருவாக்கிவிட முடியாது. ஒடுக்கப்படு…
-
- 1 reply
- 718 views
-