அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
THEORETICAL BOTTLENECK FACED BY THE MUSLIMS. - - V,I,S,Jayapalan Poet முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால் பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம்களின் ஒருமித்த தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் தொடர் வெற்றிகள் எனலாம். . . சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே பாதகமாக நகர்த்தபடுகிற அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் முஸ்லிம்களின் தேசிய நலன்களையும் தமிழ் முஸ்லிம்…
-
- 0 replies
- 478 views
-
-
பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்…
-
- 2 replies
- 559 views
-
-
[size=6]முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை[/size] [size=3][size=4]Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. [/size] [size=4]சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமா…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன் கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்.... 'நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆன…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவின…
-
- 0 replies
- 151 views
-
-
இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 29 இந்தப் பத்தியாளர், ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இதுவாகும். இந்தக் கட்டுரையானது, இலங்கைத் தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை கோரலின் வரலாற்றையும் அதன் சூழலையும் சுருக்கமாக ஆராய்கிறது. அத்துடன், ‘சுயநிர்ணய உரிமை’க்கு உள்ளேயும் வெளியேயும் ஆக, இருவகைக் கருத்தாக்கங்களைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்கிறது. அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது தொடர்பில், சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்குத் தீர்ப்பின் அரசமைப்பு சார் முக்கியத்துவத்தை, மதிப்பீடு செய்யவும் முனைகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை கோரல் இலங்கையில், 19…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…
-
- 0 replies
- 584 views
-
-
-
ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும் 12 Views “போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம். இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி, சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி, அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை உருவாக்குதல் எனத் …
-
- 0 replies
- 283 views
-
-
சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’ புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேச…
-
- 0 replies
- 841 views
-
-
அரசாங்கத்தின் போக்கும் மக்களின் சந்தேகமும் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், பௌத்த மதத்தை மேலாதிக்கம் கொண்டதாக ஆக்கி, அரசுகள் தமது மனம் போன போக்கில் ஆட்சி நடத் தின. மதச்சாரர்பின்மை கடைப்பிடிக்கப்பட வில்லை. அதேபோன்று சிங்களம் மட் டுமே அரச மொழியென்றும். அதற்கு விசேட அதிகாரமும், உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. ஏனைய மொழியில் குறிப்பாக தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன், சிறு பான்மை தேசிய இனங்களின் உரிமைகளை, அந்த அரசுகள் மதித்து செயற்படத் தவறியிருந்தன. மோசமான ஒரு யுத்த நிலைமைக்கு நாடு முகம் கொடுப்பதற்கு இத்த கைய ஆட்சிப் போக்கே வழிவகுத்திருந்தது. அனைவரும் சமம். மதச…
-
- 0 replies
- 364 views
-
-
ஐ.நா. அறிக்கையின் படி 40,000 பேர், இறந்திருந்தால் 2 இலட்சம் பேர், காயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி 2 இலட்சம் பேர் காயப்பட்டவில்லை என்றால் 40,000 பேர் இறந்தனர் என்று சொல்வது பொய்யானது” என்று லங்கா சம சமாஜ கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஒருவர் கொல்லப்பட்டால் ஐவர் காயப்படுவர் என்ற பேராசிரியரின் கதை வாய்ப்பாடு சரியானது. ஆனால் கணிதத்தோடு சேர்ந்து சார்பியல் என்னும் கோட்பாட்டையும் இணைத்துக் கணக்குப் பார்க்க வேண்டும் என்பதை பேராசிரியர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார். வெடி குண்டுத் தாக்குதல்களின் போது ஒருவர் மரணமடைந்தால் நான்கு அல்லது ஐந்து பேர் காயமடைந்திருப்பர் என்பது ஒரு பொதுவான கணக்கு. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறிய சார்பியல் கோட்பாட்ட…
-
- 0 replies
- 388 views
-
-
’13க்கு ஆதரவாகவும் எதிராகவும்’! - நிலாந்தன். 13வது திருத்தம் எனப்படுவது தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதாவது தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவே அது. இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளின் திரட்டப்பட்ட விளைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு எதிராக இரத்தம் சிந்தியது. அதேசமயம் 13ஆவது திருத்தத்தை ஆதரித்து ஈபிஆர்எல்எஃப் இயக்கமும் ஏனைய இயக்கங்களும் ரத்தம் சிந்தின. மொத்தத்தில் 13ஐ உருவாக்குவதற்காகவும் ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்தினார்கள். 13ஐ ஆதரிப்பதற்காகவும் இரத்தம் சிந்தினார்கள். எதிர்ப்பதற்காகவும் ரத்தம் சிந்தினார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரு…
-
- 0 replies
- 311 views
-
-
தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும் சி. அருள்நேசன், கல்வியியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி? திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது. உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய…
-
- 0 replies
- 509 views
-
-
வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன் வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டள…
-
- 1 reply
- 395 views
-
-
இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன். “செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.…
-
- 41 replies
- 2.3k views
- 1 follower
-
-
சனி 19-08-2006 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் என்றும் இல்லாத அளவுக்கு பணப்புளக்க நெருக்கடி. யாழ்ப்பாண குடாநாட்டில், என்றும் இல்லாத வகையில் மோசமான பண புளக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரச வங்கிகள் மூடப்பட்ட நிலையில் உள்ள அதே வேளை சில தனியார் வங்கிகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக மட்டுமே பண கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 20 ஆயிரம் ரூபா வரை பண கொடுப்பனவுகள் தன்னியக்க இயந்திரங்களின் ஊடாக பெற கூடிய வசதி இருந்த பொழுதிலும், 10 ஆயிரம் ரூபாவாகவும், பின்னர் 3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருந்தது. அந்த தொகை இன்று முதல் 900 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன? December 6, 2022 ~ கருணாகரன் ~ “போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி. அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு: 1970 களில் அன்றைய தமிழரசுக்கட…
-
- 0 replies
- 563 views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையின் வடிவம் சிதைவடையுமானால் தமிழ்நாடு வெறும் அவதானியாக இருக்கமாட்டாது என்பதற்கான உறுதிமொழியாக ஜெயலலிதாவின் அறிக்கை அமைந்திருப்பதாக ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வி.சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார். "ஜெயலலிதாவும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையும்' என்ற தலைப்பில் சூரியநாராயணன் எழுதியுள்ள கட்டுரையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; முன்னொருபோதுமில்லாத வகையில் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து ஊடகங்களுடனான தனது முதலாவது சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு அழ…
-
- 1 reply
- 813 views
- 1 follower
-
-
அனைத்துலக கூட்டுச்சதி அரசியல் ஆய்வாளர் அரூஸ் | அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்
-
- 0 replies
- 623 views
-
-
வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 01:38 அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை. எம்மத்தியில், அயற்தலையீடுகளைக் கூவி அழைப்போர் இருக்கிறார்கள். அதைத் தீர்வுக்கான வழியாகக் காண்போர், அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆபத்தைக் காணத் தவறுகிறார்கள். அவர்கள், அந்த ஆபத்தை இனங்காணும் போது, காலம் கடந்திருக்கும். வெனிசுவேலாவில் இப்போது சதிப்புரட்சி ஒ…
-
- 1 reply
- 911 views
-
-
2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன் ஏப்ரல் 2024 - டி.அருள் எழிலன் · அரசியல் மொத்த இந்தியாவையும் காவி மயமாக்கி வரும் மோடி நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளங்களையும் மாற்றி வருகிறார். டெல்லி மக்களவை வளாகத்தில் ஒரு காந்தி சிலை இருக்கிறது. நியாயமாக இந்தப் பத்தாண்டுகளில் மோடி அந்தச் சிலையைக் கடாசி விட்டு அதில் சாவர்க்கர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியமாக அதைச் செய்யவில்லை. காந்தி சிலையை விட்டு வைத்திருந்தார். ஏன் தெரியுமா? பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த காந்தி சிலையின் கீழ்தான் போராடிக் கொண்டிருந்தனர். எங்கே இந்த காந்தி சிலையை அகற்றி விட்டால் இவர்கள…
-
- 0 replies
- 461 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவருக்கு வயது 91. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். …
-
- 2 replies
- 813 views
- 1 follower
-
-
தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்? | இரா மயூதரன்
-
-
- 3 replies
- 898 views
-
-
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?. பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும். அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை. மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேய…
-
- 0 replies
- 252 views
-