அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
-
- 0 replies
- 923 views
-
-
அரசியல்வாதிகளின் அபிவிருத்தி அரசியல்: பறிபோகும் தமிழர் நிலங்கள் Editorial / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 -க. அகரன் ‘காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும். வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது. வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனத…
-
- 4 replies
- 923 views
-
-
முந்தைய பகுதிகள் ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்கு சென்றடைந்தது. அப்போது இருந்த கடல் வணிகம் அதனை சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்கு தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கி புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு…
-
- 0 replies
- 923 views
-
-
இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில் மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு. ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள் என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு. அந்…
-
- 5 replies
- 922 views
-
-
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது. இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில் Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார். டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை t…
-
- 3 replies
- 922 views
- 1 follower
-
-
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அத…
-
- 3 replies
- 921 views
-
-
நாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019 யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இம்மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பதினோராம் திகதி வரை ஓர் ஒளிப்படக் காட்சியோடு ஒரு விவரணப்படமும் திரையிடப்பட்டது.ஒளிப்படங்கள் ஸ்டீபன் சாம்பியனுடையவை.விவரணப்படத்தின்பெயர் குடில். தயாரித்தவர் கண்ணன் அருணாசலம். இப்படம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப்போராடும் அமைப்பினால் தற்காலிகமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குடிலில் கிட்டத்தட்ட மூன்று பெண்கள் இருக்கிறார்கள.; ஒரு மேசை இருக்கிறது. தவிர குடிலின் உட்சுவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஒளிப்படங்க…
-
- 0 replies
- 921 views
-
-
[ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரச தலைவர் டேவிற் கமறோன் மற்றும் அமெரிக்கா இராசாங்கத் திணைக்களம் என்பன வெளியிட்ட கருத்துக்கள் மகிந்தவிற்குக் கசப்பாக அமைந்தது. போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரசபடையினரால் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது முயற்சிகளுக்கு எதிரான தங்களது முழுமையான ஆதரவு என்றும் இரு…
-
- 1 reply
- 921 views
-
-
ஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019 ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது ‘விடியுமாமளவும் விளக்கனைய மாயையா’? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று தளங்களில் ஆராய வேண்டும். முதலாவது ஜென…
-
- 0 replies
- 921 views
-
-
கறை மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31 Comments - 0 நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ என்ற கவலை, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் இயல்புநிலை, ‘ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் முடங்கும் ஓர் அப்பாவியைப் போல’, முடங்கிக் கிடக்கின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, கொச்சிக்கடை, தெமட்டகொட, கட்டுவான, மட்டக்களப்பு, தெஹிவளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொ…
-
- 0 replies
- 920 views
-
-
அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டன. இலங்கையின் பெற்றோலியச் சந்தைக்குள் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஏனைய போட்டியாளர்களை உள்ளீர்க்க அமைச்சரவை எடுத்துக்கொண்ட தீர்மானத்தினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தமும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது. எரிபொருள் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயால் குறைக்கப்பட்டது. த…
-
- 1 reply
- 920 views
-
-
இலங்கைக்கு குட்டு வைத்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக நாசூக்காகவும், வெளிப்படையாகவும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் வெளிப்படையாக வலியுறுத்திய விடயங்கள் மூன்று. நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கு அமைவான, மாற்றுச் சட்டம் ஒன்றை விரைவாகக் கொண்டு வர வேண்டும். ஜெனீவாவில், ஏற்றுக்கொண்…
-
- 0 replies
- 920 views
-
-
சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆ…
-
- 3 replies
- 920 views
- 1 follower
-
-
போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்" நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப…
-
- 2 replies
- 919 views
-
-
-
- 1 reply
- 919 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்…
-
-
- 7 replies
- 918 views
- 1 follower
-
-
அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது காரை துர்க்கா கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. புதிய சட்டங்கள், புதி…
-
- 0 replies
- 918 views
-
-
காலத்தின் கட்டாயம்… Published by Loga Dharshini on 2020-01-08 14:57:43 மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலை…
-
- 0 replies
- 918 views
-
-
மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம் படம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்ன…
-
- 0 replies
- 918 views
-
-
உலக ஒழுங்கு: தீர்மானிப்பவர்கள் யார்? உலக அலுவல்கள் இயல்பாக நடப்பது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால், அனைத்தும் இயல்பாக நடப்பதில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், உலகின் முக்கிய மாற்றங்கள் எவையும் இயற்கையானவையும் இயல்பானவையுமல்ல. உலக அலுவல்களைத் தீர்மானிப்போர் உளர். அவர்களின், செல்வாக்கு எல்லைகள் குறித்த, தெளிவான முடிவுகள் எவையும் கிடையாது. ஆனால் போர்கள், தேர்தல்கள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துவோர் இத்தரணியில் உண்டு. அவர்கள் பற்றி, நாம் அறிந்திருப்பது இல்லை. நாம் எல்லாம் இயற்கையாகவே நடக்கின்றன என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவே. கடந்த வாரம், இரண்டு நிகழ்வுகள் பலரது கவனத்தைப் ப…
-
- 0 replies
- 917 views
-
-
இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இதுபோன்ற…
-
- 0 replies
- 917 views
-
-
கள உறவுகளனைவருக்கும் திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளையும் கருத்துகளையும் ஒரேதிரியில் இருப்பது தேடிக்கொண்டிருக்காது நேரம் இருக்கும்போது பார்பதற்கும் அறிவதற்கும் தேவைப்படுமென்பதால் இந்தத் திரி. நன்றி.
-
- 9 replies
- 917 views
-
-
பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு ( லியோ நிரோஷ தர்ஷன் ) திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர். அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அக…
-
- 0 replies
- 916 views
-
-
கொழும்பை உலுக்குமா ராஜபக்ஷாக்களின் “ஜனபலய” ? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நாளை புதன்கிழமை நடத்தவிருக்கின்ற " கொழும்புக்கு மக்கள் சக்தி" என்ற பேரணி பற்றியே தலைநகரில் எங்கும் பேச்சு. நாளைக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரமுடியுமா? பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போகமுடியுமா? அலுவல்களைச் செய்துகொள்ள தலைநகருக்கு நாளையதினம் வரமுடியுமா? என்று எங்கும் கேள்வி. கூட்டு எதிரணியினரும் பொதுஜன பெரமுனவும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக செய்துவந்திருக்கிறார்கள். நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து மக்களை அணிதிரட்டி அழைத்துவந்து அ…
-
- 1 reply
- 916 views
-
-
Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தவிர்த்து இலங்கை - இந்திய அரசியல் ஒரு சாண்கூட நகராது என்பதற்கு அண்மைய பரபரப்புக்கள் உதாரணமாகும். நேற்றைய தினம் தமிழக அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் திடீரென ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நலமாக இருக்கிறார் எனச் சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகள், பிரபாகரன் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் தம் போராட்ட வாழ்க்கையின் ஊடாக விட்டுச் சென்ற செய்தி கனதியானது. அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. கொள்கை முப்பத…
-
- 0 replies
- 915 views
-