அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
வழமையாக செய்திகள், வார்த்தைகள் மூலமோ காட்சிகள் மூலமோ எம்மை வந்தடைவதுண்டு. அவ்வாறே ஓவியங்கள், புகைப்படங்கள் போன்றவையும் செய்தி சொல்வனவாக விளங்குகின்றன. சில சமயங்களில் ஓவியங்கள், புகைப்படங்கள் என்பன தமது தளத்துக்கு வெளியே விரிவடைந்து பல செய்திகளை உணர்த்துவதுண்டு. அவ்வகையில் அண்மையில் சண்டேலீடர் ஆங்கில இதழில் வெளிவந்த ஒரு புகைப்படம் தனது காட்சிப் படிமங்களுக்கு வெளியே பல செய்திகளை உணர்த்துவதாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிச் சில அமைச்சர்கள் நின்றிருக்க அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியின் காலடியில் நிலத்தில் பணிவுடன் அமர்ந்திருக்கிறார். ஜனாதிபதியின் அன்புக்குரிய அவரின் விசுவாசமுள்ள ஜீவனாக அப்படத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா காணப…
-
- 0 replies
- 590 views
-
-
-கார்வண்ணன் பொதுத்தேர்தல் முடிவுகள் சில அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் முக்கியமானவர்கள். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பில் தோல்வியடைந்திருக்கிறார். கடந்தமுறை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டவர்களான ஈ.சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோரும், தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். கடந்த முறை ரெலோ சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று, இந்தமுறை த…
-
- 0 replies
- 483 views
-
-
உடையும் இந்தியா? - புத்தகத்திலிருந்து ஒரு பகுதி அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘உடையும் இந்தியா?’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது. இந்தியாவைக் குறி வைக்கும் மூன்று பண்பாடுகள் இந்த நூல், இந்தியாவின்மீதான மேற்கத்தியத் தலையீடுகளையும் அதற்கு திராவிட-தலித் பிரிவினைவாதங்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும் குறித்தது. ஆனால் இந்தத் திராவிட-தலித் அடையாள அரசியலை சர்வதேசச் சக்திகள் இந்தியாவில் தலையீட்டுக்காகப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையின் ஒரு பரிமாணம் மட்டுமே. இன்று மூன்று சக்திகள் வெளிப்படையாகவே உலக மேலாதிக்கத்துக்காக மோதுகின்றன. மேற்கு (குறிப்பாக அமெரிக்கா), …
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=6]உடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு [/size] - யதீந்திரா மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்தே, இதுவரை அமுங்கிக் கிடந்த உள் முரண்பாடுகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையை சற்று உற்று நோக்கினால், சிறுவயதில் படித்த அம்புலிமாமாக் கதையில் வரும் வேதாளம் - விக்கிரமாதித்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
அந்த ஒரு லட்சம் பேர் எங்கே? இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்பது நீண்ட நெடுங்கால நம்பிக்கை. உணர்ச்சி வசப்படுபவன் அறிவு பூர்வமாகப் பேச முடியாது என்றோ அறிவு பூர்வமாகப் பேசுபவன் உணர்ச்சி வசப்பட மாட்டான் என்றோ இதற்குப் பொருள். ஒரே ஆள் இரண்டாகவும் இருக்க முடியும் என்பதை ஒரு நூறாண்டுகளுக்கு முன் நிரூபித்தவன், எட்டயபுரத்துக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை நிரூபித்தவன், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்! தன்னுடைய அபரிதமான கவிதைத் திறத்தாலும், கட்டுரை வன்மையாலும் ஒரு மகாகவியாக நிமிர்ந்து நின்றதோடு நின்றுவிடவில்லை பாரதி, “என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்…
-
- 0 replies
- 811 views
-
-
உணவு, நெருக்கடியை.. எதிர் கொள்வது! -நிலாந்தன்.- வரும் ஓகஸ்ட்,செப்டம்பர் மாதமளவில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு விழிப்பு ஏற்பட்டிருப்பது சந்தோஷமே.இந்த விடயத்தில் செயல்பூர்வமாக தற்காப்பு நடவடிக்கைகளை தொடக்கி வைத்த கட்சியாக ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தைக் குறிப்பிடலாம்.அக்கட்சியானது, சிறுதானியங்களுக்கு “ராசதானியம்” என்று பெயர் வைத்து, விதைத் தானியங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.அதைத் தொடர்ந்து அரச நிர்வாக கட்டமைப்புக்கள் சிலவும், செயற்பாட்டு அமைப்புகளும் தனி நபர்களும் அதுபோன்ற செய்முறைகளை முன்னெடுக்கப்படுகின்றனர். தவிர சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் விவசாய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் குறிப்ப…
-
- 0 replies
- 244 views
-
-
-
- 0 replies
- 477 views
-
-
உண்ணாவிரதம் இருந்தால் மாத்திரமே அறியப்படும் இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமை அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சுக்கு இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்றும் அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறியிருந்தமை முக்கிய விடயம். இந்நிலையில் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்க் கைதிகளுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருவது என்னவோ ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கைகளும் மட்டும…
-
- 0 replies
- 417 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக் குழுவை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் தனது கருத்தின் ஊடக வலியுறுத்த முனைந்திருந்தார். எனினும், பொறுப்புகூறல் முறை எவ்வாறானதாக இருக்கப் போகிறது. என்ற கேள்விக்கான விடையை அரசாங்கம் இதுவரை அளிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் இணங்கிக் கொண்டபடி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம்இதுவரை நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 326 views
-
-
உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க அனுபவம் 18 OCT, 2022 | 01:21 PM ஆணைக்குழு என்றதும் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன் சுவாரஸ்யமாக கூறிய ஒரு கருத்து எமக்கு நினைவுக்கு வரும்." ஆணைக்குழு நியமனம் என்பது மலசல கூடத்துக்கு போவதை ஒத்ததாக இருக்கும்.அமர்வுகள் இடம்பெறும்.அத்துடன் காரியம் முடிந்துவிடும்." ஆணைக்குழுக்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் பிரத்தியேகமான ஒரு வரலாறே இருக்கிறது.குறிப்பாக, இனநெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விசாரணை செய்வதற்கு இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் பயனுறுதியுடைய விளைபயன்களை தரவில்லை.உண்மைகள் …
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
இன்று கனேடிய வானொலியில் பிரிட்டிஷ் தமிழ் போரம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி கேட்டேன் .அவரும் அமெரிக்காவில் இருக்கும் ஜெயராஜாவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அழைப்பில் அங்கு சென்று பல முக்கியமானவர்களை சந்திதிருக்கின்றார்கள் .அதைவிட லண்டன் ,சவுத் ஆபிரிக்கா,நோர்வே ,சுவிர்சிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்த பல அரசாங்க பிரதிநிதிகளையும் கடந்த மாதங்களில் சந்தித்திருகின்றார். அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விரல்நுனியில் அப்டேற்ராக வைத்திருப்பதாக சொன்னார் . அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ஒன்று, முழு விடயங்களும் பகிரங்க படுதமுடியாது சில தேவைகள் கருத்தில் கொண்டு, அடுத்து, புலம…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.naanmuslim.com நன்றி : NELLAI POPULAR FRONT 1 நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html http://vanjoor-vanjoor.blogspot.ca/2013/02/exclusive-report.html
-
- 0 replies
- 1.7k views
-
-
உண்மை நிலை வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவ…
-
- 0 replies
- 418 views
-
-
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை Veeragathy Thanabalasingham on October 3, 2022 Photo, AFP எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிம…
-
- 0 replies
- 274 views
-
-
http://www.kaakam.com/?p=1814 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் ப…
-
- 1 reply
- 1k views
-
-
உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பல…
-
- 0 replies
- 399 views
-
-
உண்மையான தீர்வை நோக்கி தமிழ் மக்களை அழைத்துச் செல்லுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எழுதிய கடிதம் நான் ஏற்கனவே கூறியது போல் கடிதத் தொடரின் நான்காவது கடிதம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். வழமைபோலவே இது புறக்கணிக்கக்கூடியதல்ல. தற்போதைய மோசமான நிலைமையை பற்றி நீங்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. கனடா நாட்டின் ரொறொன்டோ ஒன்டாரியோவில் விசாரிக்கப்பட்டு, ஒட்டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதிமன்றத்தில் இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணை ஒன்றின் தீர்ப்பு 25.8-.2016 இல் வழங்கப்பட்டது. முன்னைய எனது கடிதத்திலும் இந்த வழக்க…
-
- 1 reply
- 630 views
-
-
உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் எம்.எஸ்.எம். ஐயூப் / இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும். - இவ்வாறு கூறுகிறார், கண்டி மாவட்டத்தில் மெத மஹநுவர, அம்பால என்னும் கிராமத்தில் இருக்கும், பேரகெட்டிய ஸ்ரீ இஸிபத்தனாராமய விகாரையின் பிரதம மதகுருவான, கீனபெலெஸ்ஸே உப்பாலி ஞானிஸ்ஸர தேரர். அம்பால என்பது, கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்…
-
- 0 replies
- 296 views
-
-
உண்மையின் தரிசனமாக இருக்கத்தக்க.. கருத்துக்களைச் சொல்லும் காணொளிகளை இங்கு இணைப்போம். அந்த வகையில்.. ஈழத்தமிழர்களை பலிகொடுத்த இந்தியா.. நாளை தமிழகத் தமிழர்களையும் பலிகொடுக்கும்..
-
- 0 replies
- 637 views
-
-
உண்மையிலிருந்து வெகுதொலைவில் ஜனாதிபதி்; நாட்டில் நல்லிணக்கம் எவ்விதம் சாத்தியமாகும்? இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவரது கருத்து தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவும்மே உணரமுடிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாம் இப்போது அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது,இதிலிருந்து…
-
- 0 replies
- 541 views
-
-
உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 06:44 Comments - 0 “ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் ‘எள்ளல்’ தொனியிலான உரையாடலையும் தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்ம…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில் அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும் அரசியலை, இராஜதந்திரத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள் என்.கே. அஷோக்பரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’ என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வும…
-
- 0 replies
- 674 views
-
-
உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? நிலாந்தன்- 27 செப்டம்பர் 2015 போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிர…
-
- 0 replies
- 185 views
-
-
உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்
-
- 10 replies
- 1.5k views
-