நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஸ்பரிசத்தால் தன் தாயைக் கண்டுபிடிக்கும் குட்டீஸ்: ஒரு கோடி பேரின் இதயத்தை இதமாக்கிய யூ-டியூப் வீடியோ அம்மா என்றால் அத்தனை பேருக்கும் உயிர்தான். ஆனால், அந்த உயிரை குழந்தைகளாக இருந்த போது நாம் எப்படி அடையாளம் கண்டோம்?. அவளைத் தொட்டு உணரும் ஸ்பரிசத்தால் தானே!!, எப்படியோ, வளர வளர அம்மாவுக்கென்று பிரத்தியேகமாக இருந்த வாசனையை, தொடு உணர்வை, அவளது ஸ்பரிசத்தை நாம் தவறவிட்டு விட்டோம். இப்படி நாம் தவறவிட்ட சில அற்புதங்களை நமக்கு நினைவூட்டி நம்மை நேசத்தால் திக்கு முக்காடச் செய்வதாலே ’தி யுனிக் கனெக்சன்’ என்ற வீடியோவை, வெளியான இரண்டு வாரத்திற்குள் யூ-டியூபில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். பதட்டமும் பரவசமும் ஒன்று சேர்ந்த ஒரு கலவையான உணர்ச்சியில் 6 அம்ம…
-
- 10 replies
- 830 views
-
-
நாடுதிரும்பும் இலங்கை அகதிகளின் மீழ் வருகையும் சிக்கல்களும். நேற்று (19.04.2015 இரவு 9 மணி. ) புதியதைமுறை தொலைக் காட்ச்சியில் தமிழ் நாட்டுக்கு ஆபத்தான படகுப் பயணத்தில் திரும்பி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை அகதிகள் பற்றிய விவாதம் இடம்பெற்றது. மீழ்வருகைக்கான காரணங்களாக அவர்கள் பின் வரும் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவை 1. இராணுவம் கைப்பற்றிய தமது நிலங்கள் திரும்பக் கிடைக்காதமை.2. தம்பலகாமத்தில் நிலவும் இராணுவச் சூழலில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பின்மை 3. இன்னும் இரண்டு பிள்ளைகள் திருவண்ணாமலை அகதி முகாமில் இருப்பது, . அகதிகளை மீழ் குடியேற்றத்தில் தீவிரமாயுள்ள குறிப்பிட்ட தொன்டு நிறுவத்தினர் ரஜபக்ச ஆட்ச்சிக் காலத்தில் இருந்தே இலங்கையில் போர் மு…
-
- 0 replies
- 355 views
-
-
கி.பி. அரவிந்தன்: அகதிநிலையைச் சுமந்து கொண்டலைந்த பயணத்தின் முடிவு APR 20, 2015by புதினப்பணிமனைin கட்டுரைகள் தொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களைக் கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்து வருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி. அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும். இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக் கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விசயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி. அரவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 6 வது வருட நினைவு மாத நிகழ்வுகள்: [Wednesday 2015-04-15 07:00] கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது (NCCT) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 16, 2015 சனிக்கிழமை காலை 10 மணி: குருதிக்கொடை: பெர்ச்மௌண்ட் எக்ளிண்டன் சந்திப்பிற்கு அரு…
-
- 0 replies
- 301 views
-
-
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச சமூகத்தின் வாயிலாகப் பெற்றுவிட முடியும் - என்று உறுதியாகநம்பியவர்கள் இரண்டுபேர். ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை. இன்னொருவர், கல்லம் மேக்ரே. நடந்த இனப்படுகொலையை 'சேனல் 4' மூலம் அம்பலப்படுத்திய 'நோ ஃபயர் சோன்' ஆவணப்படத்தின் இயக்குநர் மேக்ரே. பிள்ளை மற்றும் மேக்ரேவின் முயற்சிகளைப் பார்த்து வியர்த்துக் கொட்டியது இலங்கைக்கு! தமிழருக்கு எதிராக தமிழரையே பயன்படுத்தும் பௌத்த சிங்களக் கயமைத்தனம் மீண்டும் அரங்கேற்றப்பட்டது. இந்த இனத்தில் பண்டார வன்னியனுக்குத் தான் பஞ்சம். காக்கை வன்னியன்களுக்கு என்ன குறை! காக்கைகள் இப்படித்தான் பேசத்தொடங்கின..... 'இனப்படுகொலை என்று சொன்னால் சர்…
-
- 0 replies
- 630 views
-
-
நாளை மறுநாள் பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன. வாக்கிய பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது, மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவதில் பிரச்சனை. இலங்கையின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றின் கருத்து பாராளுமன்றில் சபாநாயகரினால் வாசிக்கப் பட்டது. அவ்வாறு நீக்குவது தொடர்பில் மக்கள் குடிஒப்பம் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை விட்ட ரணில், நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் பாராளுமன்றில் சமர்பிக்கப் படும் என்று தெரிவித்தார். ஆக, பிரதமருக்கு அதிகாரம் கிடைக்கும் என திட்டம் போட்ட ரணிலுக்கும், அதன் மூலம் மீண்டும் அரசியலுக்கு வரலாம் என திட்டம் போட்ட மகிந்தருக்கும் ஆப்பு. எனினும், மகிந்தரினால் வந்திருக்கக் கூடிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க இது உதவக் கூ…
-
- 0 replies
- 314 views
-
-
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வை தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தியது. தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சும் நிலை தென்னாபிரிக்காவில் நிலவுகின்றது. இந்த நிலையில் அங்கு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வ…
-
- 1 reply
- 307 views
-
-
-
- 0 replies
- 369 views
-
-
பலரின் சந்தேகங்களுக்கு ,கட்டு கதைகளுக்கு புத்தக ஆசிரியர் கொடுத்த நேரடி பதில்கள் . https://m.youtube.com/watch?v=oxW9IS5EwdI
-
- 2 replies
- 523 views
-
-
ஈழத் தமிழர் நில மீட்ப்பு போராட்டத்தில் திரு வினேஸ்வரனைப் பலப்படுத்துவோம். தமிழர் வாக்கு பலத்தில் ஆட்ச்சிக்கு வந்தவர்களது உள் முரண்பாடுகளைக் கையாண்டு ரனிலைத் தனிமைப் படுத்திக் காரியமாற்றுவது அவசியம். ரணில் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவியை குறி வைத்திருப்பதால் தமிழருக்கு விட்டுத்தராத வகுப்புவாத நிலைபாடு எடுக்கிறார். ஆனால் ஜனாதிபதிக்குத் தேர்தலில் தமிழர் ஆதரவு அவசியம். இந்த முரண்பாட்டை சரியாகக் கையாண்டு ஓரளவுக்கேனும் நிலம் மீட்ட்ப்பு போன்ற உடனடிப் பிரச்சினைகளூக்கு தீர்வுகானா முனைய வேண்டும். திரு விக்னேஸ்வரன் இதனை உனாரத் தலைப் பட்டுல்ளார் என நம்புகிறேன். திரு விக்னேஸ்வரனின் வலாலாய் பேச்சு We are at the threshold of hope. A hope that those who have been denied what was…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது. அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்ட…
-
- 13 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பயங்கரவாதம் …
-
- 6 replies
- 620 views
-
-
பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல் பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே. இலங்கை அரசு தனது எதிரியாகப் பிரகடனப்படுத்திய கலம் மக்ரே அதே ஆவணப்படத்தைச் சிங்கள மொழியில் வெளியிட்டிருந்தார். காலனியத்திற்குப் பின்னான இலங்கையின் அரசியல் தலைமைகள் செய்யது துணியாத செயல் இது. ஊடகவியலாளர் என்ற தனது எல்லைக் கோடுகளுக்கு அப்பால், உலக சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட கலம் மக்ரே சாமானியச் சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் மீதா…
-
- 1 reply
- 576 views
-
-
-
- 2 replies
- 643 views
-
-
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட எந்தத் தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. எனினும் 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய நிறைவேற்று குழுவில் முன்வைத்த கேள்விக்கு அமைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும் எனவும் …
-
- 2 replies
- 506 views
-
-
1978ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ரோகண விஜயவீரவிற்கு கல்லெறி விழுந்த போது...
-
- 15 replies
- 1.1k views
-
-
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் நானே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் முழுமையாக அவர்களது சிந்தனையிலிருந்து விடுபட்டனரா என்பது தொடர்பில் இன்னும் எனக்குச் சந்தேகம் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்புச் செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நேர்மையான முறையிலேயே எனது சேவையை முன்னெடுத்தேன். நான் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவி…
-
- 0 replies
- 225 views
-
-
தர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா? யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அட…
-
- 21 replies
- 1.4k views
-
-
பழைய திருடி, கதவைத் திறடி! -புகழேந்தி தங்கராஜ் ஈழத் தமிழின அழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுக்கும் பிரையன் சேனவிரத்ன பற்றி சென்ற இதழில் விரிவாகப் பேச முடியவில்லை. இந்த வாரமும் அதே நிலைதான். மோடியின் பயணம் தொடர்பாகவே அதிகம் பேச வேண்டியிருக்கிறது. என்றாலும், சென்ற வாரம் பிரையன் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் உள்ள ஒரு வாக்கியத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். "ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது ஒரு கேலிக்கூத்து. 2009ம் ஆண்டு, ஒரு இனப்படுகொலையை ராஜபக்சே அரசு திட்டமிட்டு செய்து முடித்த ஓரிரு வாரத்தில், இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் போட்டது இதே பேரவை தான்" என்கிற வார்த்தைகளுடன் தனது மின்னஞ்சலை முடித்திருந்தார் பிரையன். அவரது இதயத…
-
- 0 replies
- 457 views
-
-
''இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது தானே'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கேள்வியெழுப்பிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா என்றும் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6 மணிக்கு கொழும்பு தாஜ்சமுத்திர ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். சுமார் அரைமணி நேரம் நீடித்திருந்த இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.…
-
- 3 replies
- 417 views
-
-
இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி நாட்டிவைக்கவுள்ளார். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளையதினம் வரவுள்ள இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார். நாளை மறுதினம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் மன்னாரில் இந்திய அரசினால் புனரமைக்கப்பட்ட தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதுடன் தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடி கீரிமலைப்பகுதியில் இந்திய அரசின் வீட்டுத்திட்டத்…
-
- 1 reply
- 255 views
-
-
இலங்கையில் மக்கள் மத்தியில் அரசு குறித்து இன்னமும் நம்பிக்கையின்மையே காணப்படுகின்றது. வடக்கில் சந்தேக மனப்பான்மையை நான் நேரடியாகப் பார்த்தேன் என இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ஜெவ்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய அதிகாரி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கத்துடனும், அதிகாரிகளுடனும் இடம்பெற்ற பேச்சுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றவைகளைவிட வித்தியாசமானவையாக காணப்பட்டன. இதன் காரணமாகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதே…
-
- 0 replies
- 690 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார் என இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரை முழுக்க முழுக்க சாடி அவர் அளித்த நேர்காணல். தந்தி:- வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் பற்றி கேட்டே ஆக வேண்டும். தொடர்ச்சியாக இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்ற தீர்மானம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? ரணில்:- முதல்வரின் இந்த பேச்சு மிக மிக பொறுப்பற்றது. நான் இதை ஏற்கவில்லை. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. இந்தியாவில் ஒரு மாநிலம்…
-
- 7 replies
- 699 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் ம…
-
- 7 replies
- 1.5k views
-