நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
ஈழத்தான் கிருபா லைக்கா சுபாஸ்கரனை அடுத்து 10 டாலருக்கு இணையம் நடத்தும் இணைய போராளிகளின் அடுத்த இலக்கு தமிழ் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மேல் பாய்கிறது. ஆனந்த கிருஷ்ணன் ஈழத்தின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவரும் மலேசியாவில் குடியேறியவரும் ஆவார். இவர் உலகின் 82 வது செல்வந்தரும் மலேசியா நாட்டின் 2 வது செல்வந்தராகவும் உள்ளார். உலகின் முதல் 100 செல்வந்தர்களுள் உள்ள ஒரே தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் மலேசிய நாட்டின் Maxis மற்றும் இந்திய Aircel நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் என்பதுடன் மேலும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக…
-
- 0 replies
- 606 views
-
-
https://www.youtube.com/watch?v=5vNtwqccdCs#t=17
-
- 85 replies
- 5.2k views
- 1 follower
-
-
எமது தமிழீழ விடுதலைப் புலிகளின் தானைத் தலைவர் - தமிழிழத் தேசியத் தலைவர்...தமிழர்களின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது அகவையில் புலிகளின்குரல் வானொலியின் சிறப்பு வெளியீடு...ஈழச்சூரியன் இறுவெட்டு - 26/11/2014 http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 825 views
-
-
எல்லையில் ஊடுருவல், எல்லை அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள், இந்தியாவும், சீனாவும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன. மொழி,கலாச்சாரம்,அறிவியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒன்றிக் கலந்த உறவைக் கொண்ட நாடுகள் தற்போது போர் அபாயத்தில் இருக்க காரணம் நிறைய இருக்கிறது என்றாலும் அவற்றில் அடிப்படையானது வணிகப் போட்டியே. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இருந்து உப்பு, உணவு, எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் முன் எப்போதைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகமே. அதிலும் இந்தியக் கள்ளச் சந்தையில் சீனா வலுவாகவே காலூன்றியிருக்கிறது. இதனையும் தாண்டி தற்போது சீனா, இந்தியா…
-
- 3 replies
- 3k views
-
-
ABOUT NORTH EAST MEAGER AND MUSLIMS RIGHTS தோழன் பசீர் சேகுதாவுத் தலைவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அவர்களது சகோதரன் நசீர் அவர்களது கேழ்வி Segudawood Nazeer முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை கொள்ளாத சமயம் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகளை இனம் கண்டு கருத்து சொன்ன ஒரு சாமான்னியன் நீங்கள் அதுவும் விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு தமிழர்களை எதிரிகளாக்கிய சமயம். வடகிழக்கு இணைந்து 13 அமுல்படுத்தப்பட்டால் அதில்முஸ்லிம்களுக்கு என்ன பங்குண்டு என்பதை சொல்லமுடியுமா எனது பதில் தோழன் பசீர் சேகுதாவுத்துக்கு, நான் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது என்பாதுகாப்பு விடுதலை தொடர்பாக துணிச்சலுடன் நீங்கள் எடுத்த முன் முயற்சிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறே…
-
- 1 reply
- 618 views
-
-
"ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர். தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர…
-
- 53 replies
- 3.3k views
-
-
அதிகம் செல்பி (selfie) எடுப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்பி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்பு…
-
- 7 replies
- 825 views
-
-
ஜனாதிபதி முறைமையும் தமிழர்களும் (ஒரு பேப்பரிலிருந்து) மிக விரைவில் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நடைபெற இருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன. அதிலும் இரண்டுமுறை பதவி வகித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போட்டியிடக்கூடுமென்று ஊகங்கள் அடிபடுகின்றன. ஆரம்பத்தில் இலங்கையில் ஜனாதிபதியொருவரின் பதவிக் காலம் ஆறாறாறு வருடங்களாக இரண்டு தடவைகளுக்கே மட்டுப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியுமென்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் அந்தத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதிக்குப் பொருந்தாது, இனிவரப்போகும் ஜனாதிபதிகளுக்கே பொருந்துமென்ற வாத…
-
- 0 replies
- 427 views
-
-
-
- 1 reply
- 372 views
-
-
லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும் லைக்கா நிறுவனத்தின் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான கட்டுக்கதையை புலம்பெயர் ஊடகங்கள் அவிழ்த்துவிட்டு அம்பலமான சம்பவம் தெரிந்ததே. லைக்காவைத் தேசிய விரர்களாக முயன்றதன் பின்னால் உள்ள அசிங்கம் இப்போது வெளியாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் சண்டே டைம்ஸ் இல் வெளியான பத்தி ஒன்றும் இதன் பின்னணியைத் தெளிவுபடுத்துகின்றது. அலிபாபாவின் திருடர்களின் எண்ணிக்கையில் ஒன்பது நபர்கள் குறைவான லைக்காவின் குழு ஒன்று மாலைதீவில் விடுமுறையக் களிப்பதற்காகச் சென்றுள்ளது. கத்தியில் கொத்திய பணத்தைக் கொண்டாட மாலைதீவின் என்ற Four Seasons நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமுமாக நடத்தப்பட பார்ட்டி…
-
- 10 replies
- 2.3k views
-
-
அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை! தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது. எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கி…
-
- 0 replies
- 587 views
-
-
ஒரு 19 வயது இளம்பெண், தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒருவரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பேனாக் கத்தியைப் பயன்படுத்துகிறாள். அந்தக் கத்தி, அம் மனிதனைக் கொன்று விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு முன்னர் 7 கொடிய வருடங்களை அவள் சிறையில் சித்திரவதைகளோடு கழிக்கிறாள். அந்தப் பெண் ரிஹானா ஜப்பாரி(Reyhaneh Jabbari). கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை, மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அநீதியிழைக்கப்பட்ட அந்தப் பெண், மரணிக்கும் தினத்துக்கு முன்னர் தனது தாய் ஷோலேக்கு அனுப்பியிருந்த கடிதம் இது. (நன்றி - JENYDOLLY) "இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண…
-
- 1 reply
- 652 views
-
-
இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்…
-
- 0 replies
- 612 views
-
-
ஒரு மனித உரிமைக் குழுவினர் "The Social Architects" என்ற பெயரில் ஈழத் தமிழரின் அவலங்களை ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள். தற்போது அவர்கள் வன்னிப் போர் முனையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர். அதன் முதலாவது முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆங்கிலம் மூலம்: மின்னஞ்சல் யாழ் இணையத்திலிருந்து ஒதுங்கி விட்ட ஆனால் மின்னஞ்சலில் என்னுடன் தொடர்பில் உள்ள ஒரு யாழ்கள உறவு கடந்த மாதம் (செப்டெம்பர்) இதை அனுப்பியிருந்தார். நீண்ட நாட்களின் பின் இன்று மின்னஞ்சலை திறந்த போது கண்டேன். யாழிலும் இணைத்துள்ளேன்.
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா? ஜெரா படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்” என்று அழைக்கின்றனர். கண்ணீரைத் துடைத்தபடி எழுந்திருக்க முயற்சிக்கும் அவரை இரு பிள்ளைகளும் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போய் கார் பின் இருக்கைகளுக்குள் இருத்துகின்றனர். அம்மா யன்னலுக்கு வெளியே பார்க்கிறார். பனி அழகாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. எங்கட இடத்துக்கு காரை விடு, முன் இருக்கையில் அமர்ந்திருப்பவன் சொல்கிறான். அதெப்பிடி, இந்த முறை எங்கட இடத்தில தான் விளக்குக் கொளுத்த வேணும் என்கிறான் காரை செலு…
-
- 0 replies
- 670 views
-
-
எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்:- 18 அக்டோபர் 2014 கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வை அன்றைய சந்திரிகா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்த சுதந்திர தின நிகழ்வினை கிளிநொச்சியில் நடத்துவோம் என பகிரங்க சவால் விட்டார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை. இதற்குப் பதிலடியாக குண்டு பொருத்தப்பட்ட வாகனத்தை தலதா மாளிகைக்கு அனுப்பி விட்டனர் விடுதலைப்புலிகள். அந்த வருடம் சுதந்திர நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. …
-
- 0 replies
- 451 views
-
-
சொன்னபடி சீதனம் கொண்டு வராததால், முதல் நாளே, கோபத்தில் புலியாய் பாய்ந்து மணப் பெண்ணை அடித்து, கடித்து கொன்றார் மாப்பிளை குமார்.. > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > கர்நாடகாவில் இனப்பெருக்கத்திற்காக பெண் புலியுடன் விடப்பட்ட ஆண் புலி, அப்பெண் புலியைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
எபோலா என்ற வார்த்தையே எனக்குள் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் கேட்பதுகூட வெறுப்பாக இருக்கிறது. அது என்னுடைய குடும்பத்தையும் பள்ளிப் படிப்பையும் நாசமாக்கிவிட்டது. வாழ்க்கை திடீரெனத் துன்பமயமாகிவிட்டது. என்னுடன் அத்தையும் சில உறவினர்களும் இந்த வீட்டில் இப்போது இருக்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு ஆறுதல். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் முன்பு மகிழ்ச்சி யாக இருந்தோம். இப்போதோ நான் பீதியில் ஆழ்ந் திருக்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நண்பர்கள், பல குடும்பங்கள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டனர், இன்னமும் இறந்து கொண்டிருக்கின்றனர். உறவினர்களை இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எபோலா உண்மைய…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 704 views
-
-
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 76வது பிறந்த தினத்தை முன்னிட்ட ஞாபகார்த்த நினைவுப் பேருரை தலைப்பு: 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' உரை நிகழ்த்துபவர்: க.ச.இரத்தினவேல் சிரேஸ்ட சட்டத்தரணி காலம்:- 04-10-2014 சனிக்கிழமை நேரம்:- பி.ப 3.30 – 6.30 மணி வரை இடம்:- திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகம், இல.286, பிரதான வீதி, யாழ்ப்பாணம் மேற்படி நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு, இல. 136, கண்டிவீதி, யாழ்ப்பாணம், தொடர்புகளுக்கு:- 0773024316 http://globaltamilnews.…
-
- 3 replies
- 463 views
-
-
இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை என். சரவணன் படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால் ஈவிரக்கமின்றி வெறித்தனமாக தாக்குவதும், வீதியில் விழுந்தபடி அந்த பெண் தாக்க வேண்டாம் என்று மன்றாடி தன்னை பாதுகாக்க எடுக்கும் காட்சியும் களவாக கையடக்க தொலைபேசியொன்றின் மூலம் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவுடன் இது பலரை பதற வைக்கும் செய்தியாக ஆனது. குறிப்பாக சிங்கள இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய…
-
- 0 replies
- 462 views
-
-
இனி என்ன ஆவார் ஜெயலலிதா? ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம்; நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்!’ - இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! 'தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்!’ என்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து…
-
- 9 replies
- 3.9k views
-
-
ஜெ : சில குறிப்புகள் சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? 1) நிலப்பிரபுத்துவ மனோபாவம் அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத திரளான மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு சின்னக்கருப்பன் மிகப்பெரிய சமுதாயங்கள் வீழ்ச்சியடைகின்றன. சுமார் 9000 வருடங்கள் செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் என்ன சொன்னது என்று கூட புரியமுடியாமல் வெற்று கலாச்சார எலும்புகளாக கரைந்து போனது. மாபெரும் fertile cresent என்று நாகரிகமும் பண்பாடும் செழித்தோங்கிய ஈராக்கிய பிரதேசம், இஷ்டார் என்ற பெண் தெய்வம் காத்த நிலம், இன்று இடிபாடுகளுக்கு இடையே விழிபிதுங்கி ஓடுகிறது. அங்கோர் வாட் என்னும் நகரமே மரம் செடி கொடிகளுக்கு இடையே காணாமல் போயிருந்தது. அந்த பிரதேசங்களில்தான் போல்போட் என்னும் கம்யூனிஸ்ட் நாகரிகத்தையே ஒழித்துவிடுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்து, மனிதர்களை மிருகங்கள் நிலைக்கு கொண்டுசென்றால்தான் கம்யூனிஸம் மலரும் என்று ந…
-
- 0 replies
- 681 views
-
-
சதம் இருக்க மனிதம் உள்ளவனாக இருந்த மனிதன்… ஜெரா படம் | Panoramio அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன் என்று வேலை வெட்டியில்லா தவன்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில் அஞ்சு சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல அஞ்சு சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும், ரூபாய்களின் அறிமுகமும் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும் காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்களிடம் சதத்தின் பெறுமதி குறித்த கதைகள் நிறை…
-
- 0 replies
- 376 views
-