நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பிரிவு எதற்கு? அகிலன் கதிர்காமன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார். ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்குமிடையில் சில காலமாக…
-
- 0 replies
- 450 views
-
-
தாக்கத்தை ஏற்படுத்துமா வேல், ஏர்கலப்பை யாத்திரைகள் -குடந்தையான் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பை அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி, வித்திட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடத்தை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சி, அதிகார அரசியல் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த இந்துத்துவா சித்தாந்தத்தை முதன்மைக் கொள்கையாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 'கைப்பாவையாக’ இயங்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் உதவியுடன் அரசியல் நோக்கம் கொண்ட 'வேல் யாத்திரையை ' நடத்துவதற்கு திட்மிட்டிருந்தது. இந்த வேல் யாத்திரை மூலம் தமிழக வாக்காளர்களிடம் ஊறிப் போய்க் கிடக்கும் 'தி.மு.க. –அ.தி.மு.க.' என்ற இரட்டை நிலைப்பாட்டை மாற்றி, பா.ஜ.க.வின் 'தாமரை'யை மலர வைப…
-
- 0 replies
- 450 views
-
-
மூலம்: http://maatram.org/?p=4592 மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை. பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்…
-
- 1 reply
- 450 views
-
-
ஆளுமைகளின் பங்களிப்பு …… எமது வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே பலவகையான ஆளுமைகள் தங்களின் செல்வாக்கை பலவிதங்களிலும் செலுத்தி எங்களின் சொந்த ஆளுமை வடிவமைப்பை ஆக்குவித்திருந்திருப்பார்கள். பெற்றோர் , உடன் பிறந்தோர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , ஊரார் , முன்னர் இருந்த பிரபலங்கள், சம கால பிரபலங்கள் என்று ஒரு நீண்ட நிரல் . யாழ் திண்ணை வாசிகள் தங்களின் ஆளுமை வளர்ச்சியில் மற்றையவர்கள் செல்வாக்கும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்பதனை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மீட்டலாகவும், மற்றயவர்களுக்கு உதவியாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடுமே. தொடக்கமாக எனது தந்தையாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. குழப்படி செய்து பிடி பட்டால் அம்மா பிரம்பை தூக்க…
-
- 0 replies
- 450 views
-
-
இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை. ஜே.வி.பி.யில் இரண்டு வகையான தரப்பினர் இரு…
-
- 0 replies
- 450 views
-
-
எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் - சாந்தி சச்சிதானந்தம்:- 18 அக்டோபர் 2014 கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர தின நிகழ்வை அன்றைய சந்திரிகா அரசு ஏற்பாடு செய்திருந்தது. அடுத்த சுதந்திர தின நிகழ்வினை கிளிநொச்சியில் நடத்துவோம் என பகிரங்க சவால் விட்டார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை. இதற்குப் பதிலடியாக குண்டு பொருத்தப்பட்ட வாகனத்தை தலதா மாளிகைக்கு அனுப்பி விட்டனர் விடுதலைப்புலிகள். அந்த வருடம் சுதந்திர நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. …
-
- 0 replies
- 450 views
-
-
விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு நந்தி முனி இம்முறை மாசிப் பனி மூசிப் பெய்யவில்லை. எனினும், விடியப்புறம் எழும்ப மனமில்லாமல் சுருண்டு கிடந்தேன். அலைபேசி அலறியது. திடுக்கிட்டு எழும்பி யார் என்று பார்த்தேன். புதுக்குடியிருப்பில் இருந்து ஒரு சிநேகிதன் எடுத்திருந்தான். சிநேகிதன்: என்னடாப்பா நித்திரையை குழப்பிட்டனே? நந்திமுனி: இல்லை. பறவாயில்ல கத. சிநேகிதன்: என்ன புதினங்கள்? நந்திமுனி : ஒண்டுமில்ல. எல்லாம் வழம போலதான்... அது சரி அதென்ன பின்னணியில ஒரு இசைபோகுது? சிநேகிதன்: ஓ..அதுவா? அதுதான் பேக்கரிக்காரர்களின் தேசிய கீதம். நந்திமுனி: தேசிய கீதமோ. சிநேகிதன்: ஓம். பருத்தித்துறையில இருந்து தெய்வேந்திரமுனை வரைக்கும் ஒரே இசைதான். கொழும்பில…
-
- 0 replies
- 450 views
-
-
9 ஜூலை 2012, ஒரு புது நாடு தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாகியது. 1955யில் உருவாகிய தென் சூடான் விடுதலை போராட்டம் பல வருட ஆயுதப்போராட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலை, பட்டினிச் சாவுகளுக்கு பின் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், சில சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஜனவரி 2011யில் தென் சூடான் மக்கள் பொது வாக்கெடுப்பு ஊடாக தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். 9 ஜூலை 2012, உலகத்தில் 193ஆவது நாடாக தென் சூடான் உருவாகியது. இன்று பிரான்சில் தென் சூடான் தூதுவராலயம் தமது 2ஆவது சுதந்திர தினத்தை பாரிஸ் நகரில் சகல நாட்டு தூதுவராலயங்கள், மனித நேய அமைப்புகள், தொழில் சங்க அதிபர்கள், பத்திரி…
-
- 1 reply
- 449 views
-
-
https://m.facebook.com/watch/?v=2918382778289386&_rdr இது முக்கியமான செய்தி என்றபடியால் முகநூலில் வந்ததை பதிவு செய்கிறேன்.
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான தலைமையல்ல என்பது நிரூபணமாயிற்று. கூட்டமைப்பின் அரசியல் என்பது சுயநலம் சார்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதை நாம் கூறுவதற்காக கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. கூட்டமைப்புக்குள்ளும் நேர்மையான தமிழ்ப் பற்றாளர்கள் இருக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கின்ற சக்தி அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் பேசாமல் மெளனித்துள்ளனர். எனினும் கூட்டமைப்பின் தலைமை தமிழினத்துக்குப் பாதகமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்திச் செல்லுகையில் அதனை எதிர்த்துக் கதைக்காமல் இருப்பதென்பது தர்மமன்று. ஆக, கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்க முடியவி…
-
- 0 replies
- 449 views
-
-
எமது அரசியலோடு தொடர்புடைய உரையாடல் என்ற வகையிலே இணைத்துள்ளேன். நன்றி. நன்றி - யூரூப்
-
- 2 replies
- 449 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக - கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல் யதீந்திரா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணி…
-
- 0 replies
- 448 views
-
-
உள்ளடக்கம்:- செய்தியாளர் மோசசை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் - சீமான் செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூக விரோதக் கும்பலை கைதுசெய்க - சீமான் வலியுறுத்தல் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஈடுசெய்ய இயலாப் …
-
- 1 reply
- 448 views
-
-
தமிழ் அரசியல் களத்தில் தற்போது தமிழ் தேசிய அரசியல் தேக்கநிலை காணப்படுகிறது. இந்த தேக்கநிலையை மாற்றி அமைப்பதற்கு தாயகத்தமிழ் மக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இணைந்து தமிழீழ அதிகாரசபை ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் ஊடாகவே தமிழீழ விடுதலை நோக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என எத்தியோப்பியா மடவளப்பு பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி கெனடி விஜயரத்தினம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் ஜி.ரி.வியின் செய்தி ஆசிரியர் இரா.துரைரத்தினத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை தெரிவித்தார். குறிப்பு இது ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக செவ்வியாகும். இதனை பயன்படுத்துவோர் ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக ச…
-
- 1 reply
- 448 views
-
-
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும். அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும். சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது,…
-
- 0 replies
- 448 views
-
-
“அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!” திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, சுயச்சார்புப் பொருளாதாரக் கொள்கை என்பதில் எல்லா இயக்கங்களும் உறுதியாக இருந்தன. 12 May 2022 6 AM 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். ``இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ ``இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந…
-
- 2 replies
- 448 views
-
-
புத்தரின் பெயரால் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் பூர்வீக நிலத்தை விழுங்கும் படலம் தொடங்கியுள்ளது. மிக நீண்டகாலமாகவே கண்வைத்திருந்த குமுளமுனை தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டபடி நேற்று புத்தரின் சிலையை பிரதிஷ்டை செய்துவிட்டது. ‘புத்தர் வருவார் முன்னே, நிலம் விழுங்கிகள் வருவர் பின்னே’ என்பது இலங்கையில் காலம்காலமாக இடம்பெற்றுவரும் ஒன்றுதான். இப்போதும் அதே பழைய உத்தியோடு குருந்தூர் மலையைக் கொள்ளை கொள்வதற்கு அகலத்திறந்த வாயோடும் படைப்பிரசன்னத்தோடும் பேரினவாதம் கால் வைத்திருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல காணிபிடிக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு வாய்த்திருக்கிறது தொல்லியல் திணைக்களம். இந்தத் திணைக்களம்தான் தொன்மையான தமிழர் ப…
-
- 1 reply
- 448 views
-
-
உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன் மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கி…
-
- 0 replies
- 448 views
-
-
[size=4] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987- இல் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்ட 13-ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் முழுமையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தமிழர் தரப்பினரின் ஆதங்கமாக இருந்தது.[/size][size=4] தமிழர் தரப்பினரினால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தைச் சிங்கள அரசு கிடப்பில் போட்டது. தற்போது இச்சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்கிற கருத்தை இந்திய அரசும், பல்வேறு உலக நாடுகளும் கூறிவருகின்றன. இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட இச்சட்டத்தை அமுலாக்க சிங்களத் தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துவரும் இவ்வேளையிலாவது இந்தியா திருந்துமா என…
-
- 0 replies
- 447 views
-
-
முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது. 1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன…
-
- 0 replies
- 447 views
-
-
நாளை என்ன நடக்கும்? Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது குறித்த அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வரிசைகள் நீடிப்பது விலைவாசி உயர்வு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போவது போன்றவற்றால் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமாகி வருகிறது. நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டினியை நோக்கி மிக வேகமாகத் தள்ளப்படுகின்றனர். 51 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக மதிப்பிட…
-
- 2 replies
- 447 views
-
-
http://varunamultimedia.me/videos/btv/vmtube2/youth-got-talent/youth-got-talent_-29-10-16/play.html?1 46 நிமிடத்திலிருந்து பாருங்கள்.... சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன். என் கால் நடமாடுமையாஉன் கட்டளைகள் வெல்லும்வரையும்..நீ உண்டு உண்டு என்ற போதும் இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது நிற்காது ஒரு போதும்...
-
- 5 replies
- 446 views
-
-
வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை (ர்யவந ளிநநஉh) தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தால், பேச்சுச் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும் என்றே தமிழ்க் கூட்டமைப்பும் வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை புதிய வடிவத்தில் முன்வைப்பதாக, நாடாளுமன்ற சீர்திருத்…
-
- 0 replies
- 446 views
-
-
உலகமெங்கும் கொரோனா நோய்த் தொற்று ஒரு காட்டாற்று வெள்ளமாக தன் பாதை எங்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்று கொண்டிருக்கின்றது. உயிர் வாழும் உரிமை என்பது பணம் படைத்தவனுக்குத்தான் என்று விதி செய்து வைத்திருக்கும் முதலாளித்துவம், இன்று தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை நிர்க்கதியாய் அம்போவென விட்டிருக்கின்றது. தன்னை அழிவே இல்லாத கடவுள் என்று பிரகடனம் செய்த முதலாளித்துவம் தன் அரிதாரங்களை எல்லாம் களைந்து, அழுகி புழு பிடித்த அதன் உடலை துர்நாற்றத்தோடு உலகுக்கு காட்சிப்படுத்தி உள்ளது. இத்தனை நாளாக அதைக் கருவறையில் வைத்து பூசித்து வந்த அதன் துதிபாடிகள் கூட அதன் அருகில் செல்ல முடியாமல் அதை எப்படி கொன்று புதைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவ சமூகத்தில…
-
- 1 reply
- 446 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் மிகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கிழக்குத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட காலமாக ஆயுத ரீதியான போர…
-
- 0 replies
- 446 views
-