Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பி.கே.பாலச்சந்திரன் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன…

  2. அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர் Rajeevan ArasaratnamSeptember 14, 2020 அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது. ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரி…

  3. இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை -கேணல்.ஆர்.ஹரிகரன்- இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெ…

  4. நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  5. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூற…

  6. சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு? 09/09/2020 இனியொரு... இலங்கைத் தீவில் பேரினவாதம் கொழுந்துவிட்டெரிகிறது. இந்திய மத அடிப்படைவாத அரசின் அருவருக்கத்தக்க மத வெறி, இலங்கை அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக இராணுவ மயமாக்கல் என்பன இன்று தெற்காசியாவின் ஒவ்வொரு மூலையையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னை நாள் இராணுவத் தளபதி இலங்கை அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெபோதும் இல்லாத அளவிற்கு அவசியமாகிவிட்டது. பழமைவாத நில உடமைச் …

  7. இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன. சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும். உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.…

    • 14 replies
    • 1.8k views
  8. சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்…

  9. துப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்…

  10. டி.பி.எஸ்.ஜெயராஜ் (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989) நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் …

  11. ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? ஆர். அபிலாஷ் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும். 1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள…

  12. அசரமாகக் கொண்டுவரப்படும் 20 ஆவது திருத்தம்; அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்ன? September 5, 2020 பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. சட்டமா அதிபரின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் இது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிம…

  13. -என்.கண்ணன இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முற்பட்ட காலங்களில், மாபியா என்றால், அது பிரதானமாக போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக குழுக்களைத் தான், குறிப்பதாக இருக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் தான் மாபியா என்று அழைக்கப்பட்டன. குறிப்பாக, இத்தாலியின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தான் மாபியா என்ற பெயரில் அறியப்பட்டன. இப்போது இலங்கையில் பல மாபியாக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் மற்றும் அதனை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் மாபியாக்கள் இருக்கின்றனர். அரிசி பதுக்கல் மாபியா, மணல் கடத்தல் மாபியா, போன்ற பல வகை மாபியாக்கள் அரசியல்வாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்போது புதிதாக மின்சார மாபியா பற்றியும் பேசப்படுகிறது. அரிசி உள்ளிட…

  14. திசைதிருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்.! இளமைக் காலத்தை மனிதனின் வாழ்வுக்காலப்பகுதியின் வசந்தம் எனக் கூறப்படுவதுண்டு. அந்த வசந்தத்துக்குள் துணிவு, நேர்மையின் நின்றுபிடிக்கும் பற்றுறுதி, அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் இயல்பு, கூட்டு செயற்பாட்டின் மீது நம்பிக்கை எனத் தமக்கும், தாம் வாழும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையிலான சிறப்பம்சங்கள் மேலோங்கியிருப்பதைக் காணமுடியும். காலங்காலமாக எமது சமூகத்தில் இளைஞர்களிடையே நிலவி வரும் ஆரோக்கியமான அம்சங்கள் திசைதிருப்பப்பட்டு இளைஞர்களை மட்டுமின்றி எதிர்கால சமூகத்தையே ஒரு சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுமோ என அச்சமடையும் சூழ்நிலை மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. இவை ஒரு கலாச்சாரம், பண்பாடு உள…

  15. திராவிட ஆதரவாளரின் மேடை பேச்சுக்கு #பதில் அளிக்கும் இளைஞர்...

  16. வெல்லவாய, ஹண்டபனகல பகுதியில் நேற்று (28) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக வெல்லவாய பொலிசார் தெரிவித்தனர். நவகமுவாவிலிருந்து கட்டராகம பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர். இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டுமே, கிராமவாசிகள் தாக்கியுள்ளனர். ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற…

  17. சங்கிகளின் கொடூரமான திட்டங்கள் | RSSன் ரகசிய சுற்றறிக்கை | இந்துத்துவ அரசியல் |

  18. 30 ஆண்டு கொடுஞ்சிறை : விடுதலை எப்போது? - நிர்வாகத்திற்கு இந்த திரியை நாம் தமிழர் அரசியலுக்குள் நகர்த்த வேண்டிய தேவையோஇல்லை - நி......👍

  19. காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து, தற்போது கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் ஒரு சிறிய அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் இருந்தது. அந்த அமைச்சு இப்போது இல்லை. இந்த மாதத்தின் பொதுத் தேர்தலின் பின்னர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைசர் அலி சப்ரியின் கீழான ந…

  20. சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் த…

  21. கூட்டமைப்பு சுய பரிசோதனை செய்து பாதையை மாற்றியமைக்க வேண்டும்; ஜனா நேர்காணல் August 25, 2020 “கடந்த போராட்ட காலங்களில் எமது மாவட்ட மக்களும் மாவட்டமும் அபிவிருத்தியில் பின்தங்கி அந்நியப்பட்டிருப்பதனால் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிரேஷ்ட அரசியலாளர் என்ற ரீதியில் ஏனையவர்களை அரவணைத்து பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது அந்த கடமையினை செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பு தன்னை சுய பரிசோதனை செய்து தமிழ் மக்களின் மனநிலைக்கேற்றவாறு தங்களது பாதையை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் க…

  22. தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல் August 24, 2020 தமிழ் தேசியம் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்; தினக்குரலுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு; கேள்வி :- நடந்து முடிந்த 2020, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட நிலைமையினை எவ்வாறு பா…

  23. உக்ரேன் விமான விபத்து: ஏவுகணை தாக்கியும் 19 வினாடிகள் நீடித்த விமானிகளின் உரையாடல்! ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் பயணிகள் விமானத்தை, முதல் ஏவுகணை தாக்கிய பிறகும், விமானிகளுக்கு இடையே 19 வினாடிகள் உரையாடல்கள் நீடித்ததாக ஈரானின் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் கேப்டன் சங்கானே இதுகுறித்து கூறுகையில், ‘முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னும் 19 வினாடிகள் வரை இரண்டு விமானிகள் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஆகியோரிடையே உரையாடல் நடந்தது. அதற்கு 25 வினாடிகளுக்கு பிறகு இரண்டாவது ஏவுகணை விமானத்தைத் தாக்கியது அவர்கள் கடைசி வினாடிகள் வரை விமானத்தை இயக்கி வந்துள்ளனர். 19 வினாடிகளுக்கு பிறகு இந்…

  24. வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி.!! 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.. "சுதந்திரம் கேட்டு நீ போராடினாயா.? "நீதிபதி கேட்கிறார். இல்லை, நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு மட்டும் நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்.! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது.! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை.! கோபத்தின் உச்சத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.