Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

Featured Replies

இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன்.

இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள்.

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.

எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !

இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்

அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி.

தாயகன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சி ஒரளவு ஈழ அவலங்களை சொல்கிறது. மற்றையவை( குறிப்பாக சன், ஜெயா) சிறிலங்கா அரசின் பொய்ச் செய்திகளை அதிகளவில் வெளியிடுகிறது. ஆனால் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரெலியாவில் இத்தொலைக்காட்சிகள் பல ஈழத்தமிழர்கள் விடுகளில் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். சிங்கள அரசின் பொய் செய்திகளை கேட்டும் , அது பொய் என்று தெரிந்தும் இவர்கள் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட!! இவ்வளவு நிகழ்ச்சிகள் இருக்கோ? தாயகன் அவர்களே நீங்கள்சொல்லித்தான் எனக்குத்தெரியும். எங்கள் கண்டனங்களைத்தெரிவிக்க வேணும். தெரிவித்துக்கொண்டும் இருக்கின்றேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தாயகன்!

தங்கள் கருத்து வலுவானதே...!

மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்றவை தமிழீழ ;அவலத்தை வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் நேற்றும் இன்றும் என்ற நிகழ்ச்சி கடந்த கால நிகழ்வுகளின் உண்மையை வெளிக்கொண்டு வருகின்றன.

தாயகன் அனைவரும் இணைந்து தமிழ்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இணையமடல் தாக்குதல் செய்தால் என்ன?

சொல்வதன் மூலம் மட்டும் அவர்கள் ஒளியேற்றீடப்போறார்களோ??? நினைத்தாலும் அதிகாரம் அதாவது தமிழ்நாட்டு அரசு அங்கீகரிக்கவேணுமே, அழுத்தம் அங்கேயிருந்துதான் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன். இதனிடையே இரண்டு கருணாவிற்கும் இடையில் நெருங்கிய நேரடித்தொடர்புகள் பேணப்படுவதாக ஒரு செய்தி உலவுகின்ற வேளையில் எப்படி உண்மை வெளிவரும்???

  • கருத்துக்கள உறவுகள்

முடியாதது என்று எதுவுமே இல்ல நிலவன்...!

வாய்களால் உரைக்க முடியும், மெய்களிப் பொய்த்துப்போகின்றனவே, முடியாதுன்னு எதுவுமில்லை என்பது தெரியும், முடிக்கவேனும். என்னால் அது சாத்தியப்படவில்லை. அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் முளைவிட்ட ஆரம்ப காலத்தில் தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சூறாவளி ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் அழிவு ஏற்பட்டிருந்தது பாதிக்கப்பட்ட மக்களிற்கு எவ்வாறேனும் உதவி செய்யவேண்டும் என்று விரும்பிய விடுதலைப்புலிகள் அந்த நேரம் அமைப்பின் மொத்த நிதியில் இருந்து அரைவாசியை கொடுக்க அனைவருமாக முடிவு செய்த்தனர் அந்த நிதி கூட குருவி கூடு கட்டுவது போல உடல் வருத்தி விடுதலைக்காக சேர்த்த நிதி இலங்கை ரூபா 5000 கொடுக்கப்பட்டது பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு.

அந்த பணம் மக்களுக்கான ஆத்மார்த்தமான சேவையூடாக வழங்கப்பட்டதாக இருக்கவேண்டும் என கூறிய தமிழீழ தேசியத்தலைவர் அதற்காக ஒரு வேளை சாப்பாட்டை நிறுத்தியிருந்தார் அனைத்து உறுபினர்களுக்கும்.அதன் மூலமே அந்த 5000 ரூபா பெறப்பட்டதாக இருக்கவெண்டும் என விரும்பினார்.

நாம் இந்திய தொலைக்காட்சிகளை இவற்றை ஒளிபரப்பாதே என கட்டளை போடுவது சரியாக இருக்குமா?

நமது முதுகுகளைப்பாருங்கள் எவ்வளவு அழுக்குகள்?ஒரு பக்கம் சாவின் ஓலம் மறு புறம் சில்லறை சந்தோசங்களுக்காக சிறிய குடும்ப நிகழ்வுகளுக்கு கூட ஊரையே புலம்பெயர்ந்த நாடுகளில் கூட்டி காசை இறைக்கின்றனர் அதனை அம்மக்களின் துயர் துடைக்க பயன்படுத்தினால் என்ன?

இதனைத்தான் ஊருக்கு உபதேசம் என்று சொல்வார்களா என்ன?

நாம் முதலில் எமது பங்கை கடமையை ஆத்மார்த்தமாக செய்வோம்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இரஸ்யா ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கி அவலப்பட்டுக்கொண்டிருந்தது கிளர்ந்தெழுந்த மாண்வர் சமூகம் ஸ்ராளினிடம் போய்க்கேட்டார்களாம் நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சொல்லுங்கள் நாம் செய்கிறோம் அதற்கு அவர் சொன்னாராம் உங்களுக்கு 3 கடமைகள் உண்டு

1.படிப்பு

2.படிப்பு

3.படிப்பு

எமது பொறுப்புகளையும் கடமைகளையும் மற்றவர் மேல் சுமத்தாதீர்கள்

இதனிடையே இரண்டு கருணாவிற்கும் இடையில் நெருங்கிய நேரடித்தொடர்புகள் பேணப்படுவதாக ஒரு செய்தி உலவுகின்ற வேளையில்

நிலவன் என்ன சொல்கிறீர்கள்?? :rolleyes:

Edited by வசி_சுதா

  • தொடங்கியவர்

எமது பொறுப்புகளையும் கடமைகளையும் மற்றவர் மேல் சுமத்தாதீர்கள்

மற்றவர்கள் மேல் சுமத்துகிறோமா ???

அப்போ அவர்கள் செய்வது சரி என்று சொல்லுகிறீங்களா ?

எமக்கு எந்த விதத்திலும் உதவாத இந்த மாதிரியான ஊடகங்களை ஏன் நாடிச்செல்லுகிறார்கள் எம்மவர்கள் ?

என்னையா இது பக்கத்தில் இருந்து கொண்டு இதைப்பற்றி வாய்திறக்காமல் இருக்கலாமா ? இது அவர்கள் பொறுப்பும் கடமையும்.

இப்போது விளங்குது தானே இவை எல்லாம் அரசியல் நோக்குடன் தான் இயங்குகின்றனவே தவிர மக்களுக்காக இல்லை.

காலம் செல்லச்செல்ல வெட்ட வெளிச்சமாகும் அதாவது இலங்கையில இருந்து இந்தியாவுக்கு அடிக்கடி தொலபேசுதாம்.... இடைக்கிடை ஆக்களும் எட்டிப்பார்க்குதாம்... இப்ப வரைக்கும் 2தான், இனி எத்தனையோ???

யாழில் இருந்து கொண்டு கண்டன் தெரிவிப்பதில் என்ன பலன்... உங்களது கண்டனங்கலை எழுதி அவர்களிற்கு அனுப்பினால் அதன் பலன் அதிகமாய் இருக்குமென்பது எனது கருத்து....குறிப்பாள யெயா விஐய் நிறுவனங்கள்.....

யாழில் நாலு கட்டுரை எழுதுவது அலது கண்டனங்கள் தெரிவிப்பதால் கிடைப்பது இஞகுள்ள ஒருசிலரின் பாரட்டுக்களும் தனிமடலில் அணட்டையும்.....

வெளியே வாருங்கள் போராட நிறைய கள்ங்கள் இருக்கின்றன.....

நன்றி

  • தொடங்கியவர்

யாழில் இருந்து கொண்டு கண்டன் தெரிவிப்பதில் என்ன பலன்... உங்களது கண்டனங்கலை எழுதி அவர்களிற்கு அனுப்பினால் அதன் பலன் அதிகமாய் இருக்குமென்பது எனது கருத்து....குறிப்பாள யெயா விஐய் நிறுவனங்கள்.....

யாழில் நாலு கட்டுரை எழுதுவது அலது கண்டனங்கள் தெரிவிப்பதால் கிடைப்பது இஞகுள்ள ஒருசிலரின் பாரட்டுக்களும் தனிமடலில் அணட்டையும்.....

வெளியே வாருங்கள் போராட நிறைய கள்ங்கள் இருக்கின்றன.....

நன்றி

வணக்கம் ஐயா !

யாழை குறைத்து மதிப்பிட்ட உங்களை எண்ணி வருந்துகிறேன்.

இங்கே யாரும் பாராட்டுகளையோ அல்லது தனிமடலையோ (உங்களுக்கு வந்தபடியால் இப்படிச் சொல்வத தவறு) எதிர்பாாத்து செயல்ப்படுவதில்லை.

யாழைப் பொறுத்தவரை இது பல்லாயிரக்கணக்கான வாசகளின் வரவு உள்ள ஊடகம், இங்கு இணைப்பதால் அனைவரையும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.

இங்கு இணைகஇகப்பட்டதன் நோக்கமே எம்மவர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதால்த்தான், இங்கே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது, எழுதப்பட்டுள்ளது, அனைவரும் கண்டனங்களை அனுப்புங்கள் என்று சொல்லியா புரியவேண்டும் ??? மேலே 'tigerblade' கூறியிருந்தார், அவருக்கு புரிந்துள்ளது.

நீங்கள் ஏதாவது எழுதவேணும் என்பதற்காக விதண்டாவாதமாக எழுத நினைத்தால் என்ன செய்வது ?

மீண்டும் ஒருமுறை யாழை குறைத்து மதிப்பிட்ட உங்களை எண்ணி வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயர் இதுதான் தாயகன 'tigertel இது அல்ல 'tigerblade'

இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன்.

இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள்.

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.

எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !

இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்

அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி.

தாயகன்.

போட வென்னை( நான் சொல்லவில்லை) ஈழ(இளவு)த்து தமிழர்களால் நடத்த படும் ரிவிகளுக்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சி எப்படியாவது வாங்கி வ்இட வேண்டும் என்ற போட்டி இருக்கும் போது 6 கோடி இருக்கும் மகளுக்காக நடத்த படும் ரிவிகள் உங்கட செத்த வீட்டட காட்டனுமோ?

சரி 2 யாபார நோக்கத்தத சொல்லவா?

1. இதுவரை இலவசமாக வந்த G ரிவி முக்கிய நேரத்தில் கட்டனமாக பொகிறது காரணம்(?) தற்போது வன்னியில் நடக்கும் படுகொலைகள் சண்டை காட்சிகள் அவர்களுக்கு தான் கி(கொ)டைக்க படுகிறது அதனால் தான்.........

2 வது எப்பவுமே கட்டனத்தில் வேலை ச்எய்யும் தீபம் தற்போது இலவசமாக விட்டு இருகிரது காரணம்(/0 தீபத்துக்கும் தமிழ்த் தேசிய உணர்வு வந்து விட்டது

3 வது அய்ங்கரன் . அட கொயாலே கருணா'நிதி ஆப்பு வச்சாலும் இவர்கள் அந்த நோவுக்கு கீரிம் பூசி விடுகிரார்களாம், அதாவது லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் , சுவிஸ் போராட்டத்துக்கு அண்டர் ரைட்டில் செய்தி போடிகினம் , முடியல என்னால முடியலா உண்மமயாக இவர்கள் ஏமார்றுகிரார்களா அல்லது புலத்து தமிழர்கள் ஏமாறுகிறார்களா?

தாயகன் சும்மா நானும் எழுதுகிறேன் என்றி எழுதி விட்டு போகிரார்.

ஆனால் மேலெ சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் ஈழத்து ரிவிகளால் ஜரோப்பாவில் ஒளிபரப்ப படுகிறது என்பதை ஏன் மறைத்தார் என நான் அறியேன்...............

(தாயகன் @ Feb 11 2009, 03:17 AM)

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா

?

நீங்கள் என்ன குருடரா?

  • தொடங்கியவர்

போட வென்னை( நான் சொல்லவில்லை) ஈழ(இளவு)த்து தமிழர்களால் நடத்த படும் ரிவிகளுக்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சி எப்படியாவது வாங்கி வ்இட வேண்டும் என்ற போட்டி இருக்கும் போது 6 கோடி இருக்கும் மகளுக்காக நடத்த படும் ரிவிகள் உங்கட செத்த வீட்டட காட்டனுமோ?

சரி 2 யாபார நோக்கத்தத சொல்லவா?

1. இதுவரை இலவசமாக வந்த G ரிவி முக்கிய நேரத்தில் கட்டனமாக பொகிறது காரணம்(?) தற்போது வன்னியில் நடக்கும் படுகொலைகள் சண்டை காட்சிகள் அவர்களுக்கு தான் கி(கொ)டைக்க படுகிறது அதனால் தான்.........

2 வது எப்பவுமே கட்டனத்தில் வேலை ச்எய்யும் தீபம் தற்போது இலவசமாக விட்டு இருகிரது காரணம்(/0 தீபத்துக்கும் தமிழ்த் தேசிய உணர்வு வந்து விட்டது

3 வது அய்ங்கரன் . அட கொயாலே கருணா'நிதி ஆப்பு வச்சாலும் இவர்கள் அந்த நோவுக்கு கீரிம் பூசி விடுகிரார்களாம், அதாவது லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் , சுவிஸ் போராட்டத்துக்கு அண்டர் ரைட்டில் செய்தி போடிகினம் , முடியல என்னால முடியலா உண்மமயாக இவர்கள் ஏமார்றுகிரார்களா அல்லது புலத்து தமிழர்கள் ஏமாறுகிறார்களா?

தாயகன் சும்மா நானும் எழுதுகிறேன் என்றி எழுதி விட்டு போகிரார்.

ஆனால் மேலெ சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் ஈழத்து ரிவிகளால் ஜரோப்பாவில் ஒளிபரப்ப படுகிறது என்பதை ஏன் மறைத்தார் என நான் அறியேன்...............?

நீங்கள் என்ன குருடரா?

சுத்தம் !!!!!

உள்ளுக்குள்ள ஏதோ இருக்குது எண்டுதான் நினைச்சன், ஆனால் களிமண்தானா ???

இதற்குப் பதில் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஏனெண்டால் உங்களுக்குப் புரியவில்லை. வீணாக கருத்து முரண்பா வந்து களத்தால் மூடப்பட்டு விடும்...

மற்றது ஈழத்து தொலைக்காட்சி ஒன்று மட்டும்தான் "த.தே.தோ".

மேலே நீங்கள் குறிப்பிட்டவை என்ன செய்கின்றன என்பது முக்கியமில்லை, அவற்றை நாடிச்செல்வது உங்கள் தப்பு, சோறு தண்ணி இல்லாமல் இருந்தாலும் இவை இல்லாமல் இருக்க மாட்டோம் எண்டு அடம் பிடித்தால், அதுக்கு அவையா பொறுப்பு ???

கருத்துக்கு பதில்க்கருத்து எழுதோணும், அதுவும் ஏதாவது விதண்டா வாதமா எழுதோணும் எண்டு நீங்கள் சிந்தித்துக்கொண்டிருங்கள், நாடு உருப்படும்....

இதில் ஏன் பார்வையற்றவர்களை தேவையில்லாமல் இழுக்கறியள் ? பார்வையற்றவர்கள் என்றால் அவ்வளவு இழக்கனமா உங்களுக்கு ???

முதலில் உங்கள் எழுத்துப் பிழைகளைத் திருத்துங்கள், மிச்சத்தை பிறகு பார்க்கலாம்....

இதற்குப் பிறகு என்ன கருத்து எழுதப்பட்டாலும் பதில் கருத்து எழுதமாட்டேன், தேவையற்ற விவாதமாக மாறி விட்டது....

நன்றி வணக்கம்.

எனது பெயர் இதுதான் தாயகன 'tigertel இது அல்ல 'tigerblade'

அடடா மன்னித்து விடுங்கள் "tigertel" வேறு எங்கோ பார்த்த ஞாபகத்தில் எழுதி விட்டேன்... :)

சுத்தம் !!!!!

உள்ளுக்குள்ள ஏதோ இருக்குது எண்டுதான் நினைச்சன், ஆனால் களிமண்தானா ???

இதற்குப் பதில் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஏனெண்டால் உங்களுக்குப் புரியவில்லை. வீணாக கருத்து முரண்பா வந்து களத்தால் மூடப்பட்டு விடும்...

மற்றது ஈழத்து தொலைக்காட்சி ஒன்று மட்டும்தான் "த.தே.தோ".

மேலே நீங்கள் குறிப்பிட்டவை என்ன செய்கின்றன என்பது முக்கியமில்லை, அவற்றை நாடிச்செல்வது உங்கள் தப்பு, சோறு தண்ணி இல்லாமல் இருந்தாலும் இவை இல்லாமல் இருக்க மாட்டோம் எண்டு அடம் பிடித்தால், அதுக்கு அவையா பொறுப்பு ???

கருத்துக்கு பதில்க்கருத்து எழுதோணும், அதுவும் ஏதாவது விதண்டா வாதமா எழுதோணும் எண்டு நீங்கள் சிந்தித்துக்கொண்டிருங்கள், நாடு உருப்படும்....

இதில் ஏன் பார்வையற்றவர்களை தேவையில்லாமல் இழுக்கறியள் ? பார்வையற்றவர்கள் என்றால் அவ்வளவு இழக்கனமா உங்களுக்கு ???

முதலில் உங்கள் எழுத்துப் பிழைகளைத் திருத்துங்கள், மிச்சத்தை பிறகு பார்க்கலாம்....

இதற்குப் பிறகு என்ன கருத்து எழுதப்பட்டாலும் பதில் கருத்து எழுதமாட்டேன், தேவையற்ற விவாதமாக மாறி விட்டது....

நன்றி வணக்கம்.

அடடா மன்னித்து விடுங்கள் "tigertel" வேறு எங்கோ பார்த்த ஞாபகத்தில் எழுதி விட்டேன்... :)

ஒண்டும்மில்லை என்று தெரிந்ததால் தானே உங்கல் கருத்துகு பதில் சொன்னேன் :) இந்தியாவில் நீங்கள் சொன்ன எந்த ஒரு தொலைகாட்சியும் அரசியல் சார்பில்லாத தொலைக்காட்சிகள் இல்லை அவர்களுக்கு 2 முக்கியம் 1 தங்கள் அரசியலை வளர்த்து கொள்வது 2 வது பனம் சம்பாதிப்பது இதுக்கு பின் தான் அனைத்தும்.

எழுத்து பிழைகள் என்னால் திருத்த முடியாது அது பள்ளிக்கூடம் போய் படித்தவர்கள் செய்யும் வேலை :(

எனக்கும் இதற்க்கு மேல் கருத்து இதில் எழுத விருப்பமில்லை ஆனால் நீங்கள் என்ன நோக்கத்தில் எழுதிதினீர்களோ அது வெற்றி பெற வேண்டும் என்பது தான் இதில் முக்கியம் .

ஈழத்து மக்களால் நடத்தும் ரிவிகளின் தவறுகளையும் சுட்டு காட்டி இருக்கலாம் என்பது தான் எனது கருத்தின் நோக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகன் தங்களுடைய கருத்துக்களை நான் வரவேற்கின்றேன் உங்களின் ஆதங்கம் புரிகிறது

ஒரு ஈழத்தமிழனின் வேதனை....

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஈழத்தமிழனின் தோலோடு தசைத்துண்டம் ஆடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்களால் கடியுண்டு.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "சோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "சோடிகள்" அழியுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிசத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோப்பி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி க ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மகா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

---வேதனையுடன்,

சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து ஒரு தமிழன்.

Edited by Vatha

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்போம்....! என்றதை விட அவ்வ+டகங்களை எமது பக்கம் திருப்புவதே நன்மை. முடியாதது என்று எதுவுமே இல்லை..! யாராவது தொலைக்காட்சிகளின் இணைய முகவரிகளை இங்கே இணையுங்கள் ஒரு மாதிரி மடலையும் இணையுங்கள் இணைந்து இணையமடல்கள் அனுப்பினால் எதையுமே வெற்றிகொள்ள முடியும் சலிக்காதீர்கள், நம்பிக்கையிழக்காதீர்கள,; நம்புங்கள் வெற்றிபெறுவோம்! அல்லல்படும் எமது உறவுகளுக்காய்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.