Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

'தமிழினத்திற்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு வன்னியில் உள்ள இராணுவத்தினருக்கு எந்த அருகதையும் கிடையாது.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பிரதித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

மாவீரர் நாள் நெருங்குவதையடுத்து வன்னியில் படையினர் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம்முறை மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடும் கொண்டாடப்படவுள்ளது. மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், வன்னியில் ஆலயங்கள் மீதும் இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டனர் என அறியமுடிகின்றது.

இது தொடர்பாக எம்.எம்.ரதன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அல்லல்பட்ட தமிழினத்தின் விடுதலைக்காக களத்தில் நின்று போராடி தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள்தான் மாவீரர்கள். இந்தப் புனிதத் தெய்வங்களை நினைவுகூருவது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு படையினருக்கு எந்த அருகதையும் கிடையாது.

இம்முறை மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதனால் மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி புனிதத் தெய்வங்களை நினைவுகூர சந்தர்ப்பம் வந்துள்ளது.

இந்நிலையில், மாவீரர் நாள் வருவதையிட்டு இராணுவத்தினர் வன்னியில் மக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பல பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதனால் வன்னியில் இந்து ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். இதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆலயங்களில் தீபங்களை ஏற்றுவதற்கு ஏன் இராணுவத்தினரிடம் அனுமதி பெறவேண்டும்? அவர்கள் எமக்கு யார்?

மாவீரர்கள் தமிழன்னையின் வயிற்றில் பிறந்தவர்கள் தமிழின விடுதலைக்காக போர்க்களம் புகுந்தவர்கள். இவர்களை ஒவ்வொரு தமிழரும் புனிதத் தெய்வங்களாக நினைத்து வழிபடுவர். இதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அருகதை கிடையாது.

சிங்கள மக்களும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூருகின்றார்கள். அதேபோல தமிழ் மக்களும் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவார்கள். இதை இராணுவத்தினரும், அரச தரப்பினரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா யாழ். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=557fcefd-2a17-4df5-b137-4f2b237323f9

[size=4]2009, மே க்கு பின்னர் இது நாலாவது நாலாவது மாவீரர் தினம்.[/size][size=1]

[size=4]அன்று மக்களின் மனங்களில் மட்டுமே இருந்த நினைவு இன்று வீட்டைக்கடந்து வீதியில் வர தொடங்கியுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]இத்தனை கெடுபிடிகளுக்குள்ளும் மக்கள் துணிவது எதை கூறி[/size] [size=4]நிற்கிறது? [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இது குருதியோடும் நரம்பில் ஆடும் உணர்வின் அனுபவம்[/size]

[size=5] யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்[/size]

"கவிஞர் புதுவை இரத்தினதுரை"

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கதைகளை சொல்வதை

நிறுத்திவிட்டோம்..

உங்கள் இறுதிக்கனவினை

ஊட்டியே இங்கு

தமிழனை வளர்க்கிறோம்!!!

இது நன்றி சொல்லும் அணிவகுப்பு

உங்கள் வீரம்தானே எங்கள்

விலாசம்!!

உயிர்தந்து..

மொழிதந்து..

முகம்தந்து சென்றீர்!

திமிர்கொண்டு..

நிமிர்கொண்டு..

தமிழ்கொண்டு வாழ..

திடம்தந்து சென்றீர்!

இன்னொருவர் கவிதையில் இருந்து என் மனதைத்தொட்ட சில வரிகள்.....தமிழன் ஒவ்வொருவரின்

மனதையும் குத்தும் வரிகள்...

Edited by alvayan

[size=5]மாவீரர் தினத்தை இம்முறை மக்கள் கொண்டாடுவார்கள்; முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நிசாந்தன் உறுதி[/size]

[size=4]இந்தமுறை மக்கள் தமது வீடுகளில் அமைதியான முறையில் ஒரு நிமிட வணக்கத்துடனாவது மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவக இளைஞர் அணி அமைப்பாளரும் மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிசாந்தன்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size]

[size=4]உயிரிழந்த படையினருக்கு தென்பகுதியில் நினைவுதினம் அனுஷ்டிக்க முடியுமெனின், ஏன் தமிழர்களது உரிமைக்காகவும் விடிவிற்காகவும் உயிர்த்தியாகம் செய்த எமது உறவினரான மாவீரர்களுக்கு எங்கள் பிரதேசங்களில் நினைவுதினம் அனுஷ்டிக்கக் கூடாது?

வடக்கு கிழக்கில் நவம்பர் 27 இல் மாவீரர்களுக்கு நிச்சயமாக சுடரேற்றுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தீபமேற்றி நினைவு கூருவார்கள். இலங்கை அர_ தமிழ் மக்களை [/size]கோதர மக்களாக ஏற்றுக்கொண்டால் எமது நினைவு தின நிகழ்வுக்கு எதுவித இடையூறும் இருக்காது.

[size=4]இறந்து போன எங்கள் உறவுகளுக்காய் பிரார்த்திக்கும் இந்த நாளில் முடிந்தால் சிங்கள மக்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=623261644426578328

[size=4]யாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் நேற்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும்,மாணவர் ஒன்று கூடும் இடம், சிற்றுண்டிச்சாலை, அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது.[/size]

[size=4]”போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை”,

“எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்”,

"விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?’’

அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்” போன்ற வீர வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது,

அந்த சுவரொட்டிகளின் கீழே தமிழீழ இளையோர் அமைப்பு, புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” மாணவர்களின் இத்தகைய செயற்பாடானது யுத்தம் முடிந்த பின்னரும் அவர்கள் தமிழீழம் பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதனை எடுத்து காட்டுகின்றது,

அத்துடன் இலங்கையில் இராணுவத்தினர் மாவீரர் நாளை குழப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்ற இந்த வேளையிலும் மாணவர்கள் மாவீரர் வாரத்தை நினைவுகூரும் முகமாக இதனை செய்து வருகிறனர்.

அண்ணனால் ஊட்டி வளர்க்கப்பட்ட உணர்வும் வீரமும் இன்னும் சாகவில்லை என்பதனை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை நிருபித்து காட்டியுள்ளனர்.

எமது தமிழீழ மக்களே!

மாணவர்களின் இத்தகைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான முறையில் 27/11/2012 அன்று மாலை விளக்கேற்றி எமது மான மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

எமது மக்களின் சுதந்திரமான நிம்மதியான வாழ்விற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் வீர மறவர்களை என்றும் எம் நெஞ்சங்களில் நிறுத்திக்கொள்வோம்![/size]

224020_441028249310394_159088791_n.jpg

[size=4]மாவீரர் தியாகத்தால் இன விடுதலை கிடைப்பது உறுதி"[/size]

[size=4]=======================[/size]

[size=4]கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.[/size]

[size=4]அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது.[/size]

[size=4]ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர்.[/size]

[size=4]ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.[/size]

[size=4]எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள்.[/size]

[size=4]கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை.[/size]

[size=4]எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி.[/size]

[size=4]நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்.[/size]

[size=4]அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம்.[/size]

[size=4]ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்[/size]

[size=1](முகநூல்) [/size]

சிங்களப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது மாவீரர் தினத்தை கொண்டாட பெரும்பாலான தமிழர் தயாராகி வருகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.