Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன்
02 நவம்பர் 2013


பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்
 
வடக்கு ஆளுநரை மாற்றுமாறும்இ படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலியஇ நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
 
இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லையா என்பது தான் கேள்வி. நான் ஒன்றைச் சொல்லஇ அதற்கு பதில் சொல்ல நான் மீண்டும் என்று சொல்வேன். அவ்வாறு விவாதம் நடத்தத் தேவையில்லை. விவாதத்தில் எனக்கு நல்ல பரீச்சயமுண்டு" என்றார் அவர்.  
 
"நாங்கள் இந்த நாட்டிலே ஒத்துழைப்பையும் ஒருமித்த தன்மையையும் கொண்டுவரப் பாடுபடுகின்றோம். இந்தப் போருக்குப் பின்னர் எங்கள் தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள்" எனவும் தெரிவித்தார்.
 
"எங்களுக்குஇ எங்களுடைய வாழ்கையை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறுவது கடமை. அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பு." எனவும் சுட்டிக்காட்டினார்.
 
"ஜனாதிபதி தான் நினைத்ததே தான் சரி. நீங்கள எதைப் பற்றி யோசித்தாலும்இ எதைப் பற்றிச் சிந்தித்தாலும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நான் அதற்குப் பொறுப்பல்ல. நான் நினைத்ததையே செய்வேன் என்றால் என்பதில் சொல்ல முடியாது." என்றார் அவர்.
 
"எங்களுடைய பிரச்சினைகளை எடுத்தச் சொல்லும் போது பக்கச் சார்பான பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது பிளையானது. இராணுவம் இமருப்பதால் நாங்கள் எங்கள் நாளாந்த வேலைகளை செய்யமுடிவதில்லை." எனவும் குறிப்பிட்டார்.  
 
"படிப்படியாகவாவது இராணுத்தை அகற்றுங்கள் என்று கேட்கின்றோம். இராணுவத்தில் இருந்து ஆணையிடும் ஒருவரால் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது. எனவே ஆளுநரை மாற்ற வேண்டும். இதனை வேறுவிதமாக வியாக்கியானம் செய்தால் அதனால் பாதிப்படைவது நாங்கேள" என மேலும் அவர் தெரிவித்தார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98428/language/ta-IN/article.aspx

அருமையான பேச்சு; அருமையான, உபயோகமான பதிவு கிருபன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சுக்களும், செயல்களும்...
புலம்பெயர் தமிழர் மத்தியில்... ஆச்சரியத்தையும், வரவேற்பையையும் பெற்றுள்ளதாக பரவலாக அறியப் படுகின்றது.
இதனைக் குழப்பும் வகையில்... சில விசம இணையத்தளங்கள், அவரின் பெயருக்கு... அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல், வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சின்னீர்கள் சிறி. இங்கே கூட ஒருவர் வருவார், புலன் என்று. தன்னை ஒரு அதி தீவிர தமிழ் தேசிய வாதியாக காட்டி கொள்வார். கூட்டமைப்பையும் விக்னேஸ்வரனையும் சகட்டு மேனிக்கு திட்டுவார்.

கேட்டால் கூட்டமைப்பும் விக்கியும் ஒட்டுக்குழுக்கள் தான் என்பார்.

இவரின் நோக்கம் எல்லாம் வெற்றிலை சின்னத்தில் கேட்பவர்களும், கூட்டமைப்பும் ஒன்றுதான் எனும் பிரைமையை ஏற்படுத்தி கூட்டமைப்பையும் தமிழரையும் பலவீனப்படுத்துதே.

போலி உதயன் அடித்த ஆக்கள் எல்லோ இவையள்?

ஆனந்த் சங்கரிக்கு தெரிந்து எடுத்து நாமம் போட்டவர்கள் நம் மக்கள். அவர்களிடம் இந்த பாச்சா பலிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சுக்களும், செயல்களும்...

புலம்பெயர் தமிழர் மத்தியில்... ஆச்சரியத்தையும், வரவேற்பையையும் பெற்றுள்ளதாக பரவலாக அறியப் படுகின்றது.

இதனைக் குழப்பும் வகையில்... சில விசம இணையத்தளங்கள், அவரின் பெயருக்கு... அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல், வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டும்.

சம்பந்தர் மாவை சுமந்திரனுக்கு வராத துணிவு

விக்னேஸ்வரனுக்கு வந்தது  ஆச்சரியம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்(விக்னேஷ்வரன்) இப்படி சொல்லவில்லை ஊடகங்கள் திரிவு படுத்தி செய்திகளை வெளியிடுகின்றன என்று மறுப்பு அறிக்கை வெகுவிரைவில் வரும்.

விக்னெஷ்வரனை ஊடகங்களே கவிழ்த்து விட ஏற்பாடு செய்கின்றன.....

அதை நம்பி சிலர் ஆகா ஓகோ என்ன துணிவு நம்ம முதல்வருக்கு என்று ஆனந்த கண்ணீர் மல்க :icon_mrgreen:  :lol:  :D  :icon_idea:

விக்கியை , சம்பந்தரும் ,சுமந்திரனும் பிடிவாதமாக அரசியலுக்கு இழுத்து வரும்போது பலர் ஒருமையிலும் பல்வேறுபட்ட வசைமாரி பொழிந்தார்கள் .தற்போது புகழுகிறார்களா ?எல்லாம் அவன் செயல்  :D  :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இப்பிடி விக்கி சொன்னார் எண்டதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? குளோபல் சும்மா தன்னோட இஷ்டத்துக்கு அள்ளி விடும்

இலங்கை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஷிராணிகே எத்தையோ உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஆபடிச்ச மகிந்தா க்கு விக்கி எல்லாம் வெறும் சுண்டக்கா

விக்கிக்கும் இப்பிடி எல்லாம் சீரியஸ்சா பேச வராது

இவரில் விஷயம் இருக்குது

அடுத்த இந்திய தேர்தலில் மலையாளி கூட்டம் வெளியீரிய பின்னர் இவரது உண்மையான முகம் தெரியும்

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன் - இது  உண்மை இல்லாத தலைப்பு

 

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது - இது யதார்த்த்மான பேச்சு.

 

இதற்கு ஜனாதிபதியோ அல்லது வேறுயாரும் தன்னுமோ ஏன் துள்ளி அடிக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் இப்பிடி விக்கி சொன்னார் எண்டதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? குளோபல் சும்மா தன்னோட இஷ்டத்துக்கு அள்ளி விடும்

இலங்கை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஷிராணிகே எத்தையோ உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஆபடிச்ச மகிந்தா க்கு விக்கி எல்லாம் வெறும் சுண்டக்கா

விக்கிக்கும் இப்பிடி எல்லாம் சீரியஸ்சா பேச வராது

சரியாக சொன்னீர்கள்....தமிழ் ஊடகங்கள் விக்னேஷ்வரனுக்கு ஏதோ ஆதரவாக போலி பிரச்சாரங்கள் செய்கின்றன..... இவர்கள் எல்லாம் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தது போல இந்த காலத்திலும் தங்கள் பிரச்சாரம் எடுபடும் என்று நினைக்கின்றார்கள்.. ஆனால் விக்னெஷ்வரன் வீட்டு நாய் குலைத்தாலே மறுசெக்கன் அது இணையதில் இருக்கும் தொழில் நுட்ப காலம் என்பதை மறந்துவிட்டார்கள்.. முதலில் இந்த முதியோர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைக்கனும்...

 

யாழில் அரசியல் கருத்து எழுதும் முதியோர்களே உங்களுக்கும் தான் இந்த வேண்டுதல் :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

புலன் - முதியோரை ஓய்வுபெற வச்சிட்டு, கொள்ளையிடும் இளையோர் கையில் ஆட்சியை கொடுக்கணும் அப்படித்தானே?

விக்கியரின் செல்வாக்கையும் உங்கள் கட்சியின் செல்வாக்கையும்தான் தேர்தலில் கண்டோமே?

இதென்ன திடீர் தமிழ்தேசிய வேடம்? தேர்தல் தந்த பாடமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலன் - முதியோரை ஓய்வுபெற வச்சிட்டு, கொள்ளையிடும் இளையோர் கையில் ஆட்சியை கொடுக்கணும் அப்படித்தானே?

விக்கியரின் செல்வாக்கையும் உங்கள் கட்சியின் செல்வாக்கையும்தான் தேர்தலில் கண்டோமே?

இதென்ன திடீர் தமிழ்தேசிய வேடம்? தேர்தல் தந்த பாடமோ?

இளையோர் கொள்ளையரா? மாவீரர்கள் எல்லோரும் கொள்ளையர்கள் அப்படித்தானே உங்கள் கூட்டணியின்  கருத்து. அவர்கள் எல்லாம் கொள்ளை அடித்தா தமது உயிரை தியாகம் செய்தார்கள்? அந்த இளம் வயதினரின் தியாக மன்ப்பான்மை உங்கள் கூட்டணியிரிடம் எள்ளவும் உள்ளதா?

 

விக்கி யார் இவர்? தமிழருக்காக என்ன செய்தார்? எப்போ தோன்றினார்?

மக்கள் வாக்கு மாவீரர்களுக்கு கிடைத்த வாக்கு. (கூ)குட்டணியினருக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி வாசுவின் சம்மந்தி மகிந்தவால் திட்டமிடப்பட்டு சம்மந்தன் மகிந்தவை ரகசியமா சந்திச்சிட்டு வரும் போது மகிந்தவால் கொடுக்கப்பட்ட assignment தான் விக்கியை களம் இறக்குவது......

விக்கியை வைத்து தன்னுடைய போர் குற்றவாளி இமேஜ் ஐ தூக்கி எறிய மகிந்தவால் அமர்தப்பட்டிருப்பவர் தான் விக்கி.... மன்மோகனை மாநாட்டுக்கு வருமாறு அழைப்பதில் இருந்து அமெரிக்கா தூதரை காணி விகாகாரம் உள்நாட்டு பிரச்சனை என்று சொல்ல வைத்தது வரை எல்லாமே மகிந்தவின் திட்டமிடல்...... வடக்கு தேர்தலில் பொதுவாக தாங்கள் சார்ந்தவர்களுக்கு கள்ள வாக்கு போட அனுமதிக்கும் இராணுவம் இந்த வடக்கு தேர்தலில் மகிந்தவின் உத்தரவுக்கு அமையை பேசாமல் இருந்ததாம்.....

ஆக மொத்தம் விக்கி சிங்களவர்களால் அலங்கரிக்கப்பட்டு சம்மந்தன் ஊடாக களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு பொம்மை......

இதை பலர் இப்பொழுது நம்பாமல் இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் நீங்கள் இதை நம்ப தொடங்கும் போது தமிழினம் இனியும் போராட முடியாதவாறு முடகப்படிருக்கும்

விக்கி வாசுவின் சம்மந்தி மகிந்தவால் திட்டமிடப்பட்டு சம்மந்தன் மகிந்தவை ரகசியமா சந்திச்சிட்டு வரும் போது மகிந்தவால் கொடுக்கப்பட்ட assignment தான் விக்கியை களம் இறக்குவது......

விக்கியை வைத்து தன்னுடைய போர் குற்றவாளி இமேஜ் ஐ தூக்கி எறிய மகிந்தவால் அமர்தப்பட்டிருப்பவர் தான் விக்கி.... மன்மோகனை மாநாட்டுக்கு வருமாறு அழைப்பதில் இருந்து அமெரிக்கா தூதரை காணி விகாகாரம் உள்நாட்டு பிரச்சனை என்று சொல்ல வைத்தது வரை எல்லாமே மகிந்தவின் திட்டமிடல்...... வடக்கு தேர்தலில் பொதுவாக தாங்கள் சார்ந்தவர்களுக்கு கள்ள வாக்கு போட அனுமதிக்கும் இராணுவம் இந்த வடக்கு தேர்தலில் மகிந்தவின் உத்தரவுக்கு அமையை பேசாமல் இருந்ததாம்.....

ஆக மொத்தம் விக்கி சிங்களவர்களால் அலங்கரிக்கப்பட்டு சம்மந்தன் ஊடாக களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு பொம்மை......

இதை பலர் இப்பொழுது நம்பாமல் இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் நீங்கள் இதை நம்ப தொடங்கும் போது தமிழினம் இனியும் போராட முடியாதவாறு முடகப்படிருக்கும்

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை ,காலம் செய்தகோலம்  :icon_mrgreen:

உடகவியாலார் மன்மோகன் சிங்கை பொதுநலவாயத்துக்கு வரும்படி விக்கினேஸ்வரன் தபால் எழுதினார் என்ற பொய்க்குற்றச்சாட்டை பற்றி அவரிடம் கேட்டபோது, இப்படி முடியும் என்று தெரிந்திருந்தால் தபாலையே எழுதாமல் விட்டிருப்பேன் என தன்னை நொந்த விக்கினேஸ்வரன் சம்பந்தரின் புத்திமதிகளை தூக்கி எறிந்துவிட்டு வாசுதேவாவுக்கு அடிமையாகிறார் என்று எழுதி தங்களைத் தாங்கள் ஏமாற்றுகிறார்கள். 

மிகவிரைவில் வட மாகாணசபையின் பிரதம செயலாளர் மாற்றப்படுவார் .இதைத்தொடர்ந்து படிப்படியாக மாற்றம் வரும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடகவியாலார் மன்மோகன் சிங்கை பொதுநலவாயத்துக்கு வரும்படி விக்கினேஸ்வரன் தபால் எழுதினார் என்ற பொய்க்குற்றச்சாட்டை பற்றி அவரிடம் கேட்டபோது, இப்படி முடியும் என்று தெரிந்திருந்தால் தபாலையே எழுதாமல் விட்டிருப்பேன் என தன்னை நொந்த விக்கினேஸ்வரன் சம்பந்தரின் புத்திமதிகளை தூக்கி எறிந்துவிட்டு வாசுதேவாவுக்கு அடிமையாகிறார் என்று எழுதி தங்களைத் தாங்கள் ஏமாற்றுகிறார்கள். 

சம்மந்தி எப்படி அடிமையாவார்?   ஆனால் இருவரும் ராஜபக்சவின் அடிமையாக இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.